பக்கங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2016

கூசும்படியான ஆடம்பர வெளிச்சம்!


1976 ஆம் ஆண்டு - 50 ஆண்டு களுக்கு முன்பு - எனது நினைவுகள் பறந்தோடிக் கொண்டிருந்தது.

‘நெருக்கடிகாலம்' என்ற ஒரு கொடுமையான சுதந்திர பறிப்புக் கால நினைவுகள் என்னுள் நிழலாடியது!

அப்போது பல அதீதமான அதிரடி நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டன என்றாலும், அவைகளில் நாட்டுக்குத் தேவையான நல்லவைகளும் நடந்தன என்பதை மறுப்பதற்கில்லை!

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் காரணம் காட்டப்படாமல் கைது செய்யப்பட்டு, ‘மிசா’ கைதிகளாக  சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களைப் போன்றோர் சிறை யில் அடைக்கப்பட்டது மட்டுமா? அடிக்கவும் பட்டனர்! (மற்றச் சிறைகளில் இம்மாதிரி மிருகத்தன நடவடிக்கைகள் நடக்கவில்லை என்று கேள்விப்பட்டு சென்னை ‘மிசா’ கைதிகளான நாங்கள் நிம்மதி அடைந்தோம்!).

‘மிசா’ கைதியின் கொடுமையான விசித்திரம் என்ன தெரியுமா?

அவன் - அவள் - எப்போது விடுத லையாவோம் என்று தெரியாமல் இருக்கும் மனநிலையில் தொடர்ந்து வைத்திருக்கும் மனோதத்துவ ரீதி யான ஒரு தண்டனை.

தூக்குத் தண்டனைக் கைதியை தவிர மற்ற அத்துணை  தண்டனைக் கைதிகளும் தண்டனை அடைந்து சிறைச்சாலைக்குள் சென்றால், விடுத லையாகும் அந்த காலத்தினை பித் தளை வில்லையில் அடித்து அவன் கழுத்திலோ, மேல் சட்டையிலோ குத்திக்கொண்டு, ‘ஒரு நாள் ஒரு பொழுது கழிந்தது!' என்று கணக் கிட்டுக் கொள்வார்கள்.

துவக்கத்தில் துயரமும், துன் பமும்வழிந்தாலும்‘போகப்போகப் பழகிவிடும்;’ மனமும் ஏற்றுக்கொள் ளும். சிறை அதிகாரிகளுக்கு, ‘நல்ல பிள்ளையாய்’ நடந்து, தண்டனை காலக் குறைவு என்ற ‘பரிசினை’ப் பெறுவது எப்படி என்ற நினைப்பும் மிஞ்சும்!

இந்த ‘மிசா’ கைதிகளுக்கு அப்படி ஒரு கணிப்பு என்றும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை.

நாளையே விடுதலை என்று சொன்னாலும்,சொல்லுவார்கள்;இன் றேல் இங்கேயே நம் வாழ்வு முடிந்து விட்டாலும் விடும். எதுவும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக் கலாம்.

துவக்கத்தில் நாங்கள் சிலர் அடி பட்டு,அவமானப்பட்டு, சட்டப் படியாக தரப்படவேண்டிய பல்வித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக ஆனாலும், கேவலப்படுத்தப்பட்டவர்களாக, இருண்ட காலமே நம் வாழ்க்கை என்று எண்ணி பலர் வருந்தும் வாழ்வாக அமைந்தது என்றாலும், சில ஆண்டுகளுக்குமுன் என்னை அமெரிக்காவில் பேட்டி கண்டு உரையாடிய டாக்டர் கனிமொழி இளங்கோவன் அவர்களிடம் நான் கூறியது, ‘அது தான் என் வாழ்வில் கிடைத்தற்கரிய வாய்ப்பு' என்றேன். காரணமும் கூறினேன். துன்பத்தின் எல்லைக்கே சென்று திரும்பியதால், இனி வாழ்வில் எவ்வித மோசமான துன்பம் வரினும், ஏற்கும் பக்குவம் அதன் நற்பயன் என்றேன். எதற்காக இந்த பழைய மிசா புராணம் என் கிறீர்களா?

அத்தகைய தனி மனிதர்களுக்கு எல்லையற்ற, சுதந்திர பறிப்பு என்ற பெருநட்டம் - பெருங்கொடுமை என் றாலும்,

அதிலும்நன்மைகள்பலகிடைக் காமல் இல்லை என்றும் சொல்லப் பட்டது. அதன் மறுபக்கம் அது!

“ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடின! அரசு அலுவலகங்களுக்குத் தாமதமின்றி வந்து சரியாகப் பணி யாற்றிடும் ஊழியர்களை முதலும் கடைசியுமாகக் கண்டது!

அரட்டைக் கச்சேரியோ, குறட்டைத் தூக்கமோ தலைகாட்டவில்லை!’’

- இவை எல்லாவற்றையும்விட முக்கியம் ஆடம்பரத் திருமணங் களை அறவே பார்க்க முடியாத நல்ல வாய்ப்பு!

50 இலைகள் அதிகபட்சம் போதும் - அனுமதி வாங்கி 100 இலைகள் - திருமண விருந்தில்; வருமான வரி அதிகாரி இலையை எண்ணி தண்டனை விதிப்பார் என்ற அச்சம் உலுக்கியது.

அன்று ஆடம்பரம் விடை பெற்றது - விலை மதிப்பற்ற கருத்து, எழுத்து, பத்திரிகை சுதந்திரத்துடன், இன்று...?

தீயவற்றில் கூட சில நன்மைகள் - மற்றவை சொல்லக் கூசுகிறது.
-விடுதலை,12.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக