பக்கங்கள்

சனி, 24 டிசம்பர், 2016

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 வாழ்க்கை ரகசியங்கள்! (3)


நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி...

11.   சமூக உறவுகளை ஏராளம் நிரம்ப ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

நிறைய நண்பர்களை உருவாக்கி, வயதான முதுமைக் காலத்தில் அருமையான நண்பர்களைப் பெற் றிருப்பதுபற்றி   ஆய்வு செய்தி - ஆரோக்கியத்திற்கான எடை எப்போதும் குறைந்துவிடாமலிருக்க ஒரே வழி நண்பர்களால்  ஏற்படும் மகிழ்ச்சி; மகிழ்ச்சியானதே!

நார்த் கரோலினாவில் உள்ள  Brigham Young University (Chapel Hill  அருகில் உள்ள ஒன்று), 148 சுதந்திரமான உரிமை பற்றி ஆய்வு ஒன்றை மேற் கொண்டுள்ளது!

அதில் முதுமைக்காளான 50 வயதுக் குமேல் உள்ளவர்கள் கதையை அது ஆய்வு செய்ததில், 50 சதவிகித நல்ல நட்பு உறவுகள், நண்பர்கள்மூலம் தாராளமாகக் கிடைக்கும். அன்பு, நட்புறவை மட்டும் கொண்டு வந்து சேர்க்கவில்லை; கூடு தலாக இளமையையும், முதுமையில்  தனித்து மூலையில் ஒதுங்குவதை விரட்டிடும் வாய்ப்புகளையும் தருவதாக அமைகிறது!

எவ்வளவுக்கெவ்வளவு முதுமை அடைகிறீர்களோ அவ்வளவுக்கு அவ் வளவு, நண்பர்களுடனோ அல்லது சமூக உறவுகளுடனோ அல்லது தொண்டறப் பணிகளில் ஈடுபாடோ கொண்டு உழைப்பை நிறுத்தாமல், வெறும் முதுமைப் புயலில் வேரோடு சாய்ந்துவிட்ட மரங்கள் போல் ஆகி விடாதீர்கள்!

பழைய அல்லது புது நண்பர்கள், உறவுகள், பணிகள் என்ற மகிழ்ச்சி அலைகளில் நீந்தி மகிழுங்கள்; சீர ளமைத் திறத்தினை அது சிறப்புடன் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்!

12. சாவை எண்ணிக் கலங்காதீர்! மகிழ்ச்சியோடு மரண பயமின்றி  எவ்வளவு நீண்ட காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் மக்களோடு மக்களாய், மனித குலத்திற்கு மாண்பு சேர்த்த மனிதம் பொங்கிய மனிதனாய் வாழ்ந்து, மனநிறைவுடன் சாவை அணைக்க எப்போதும் ஆயத்தமாகுங்கள்.

மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் (இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமானவர்) சொன்னதுபோல பிறப்பு ஒரு விபத்து என்றாலும், நம் இறப்பு சரித்திரம் ஆகவேண்டாமா?  எண்ணி உழைத்து, மகிழுங்கள்!

அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான கார்னல் பல் கலைக் கழகப் பேராசிரியரான கார்ல் பில்லிமெர் பிஎச்.டி., (அமெரிக்கா) நம் ஊரில் போடுவது போல டாக்டர் (ஆய்வு) பட்டத்தைப் பெயருக்கு முன்னால் போடும் பழக்கம் கிடையாது.  கூடாது! அவர் 65 வயது முதல் 108 வயது வரை வாழ்ந்த சுமார் 1000 பேர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதன்மூலம் அவர் அறிந்த உண்மைகள்:

(அ) மரண பயமும், வயது ஆவதும் இரண்டும் நேர் எதிர்மறையாக உள் ளன!  (மரண பயம் வந்தால் முதுமை எங்கோயிருந்து வந்து ஒருவரைப் பிடித்துக் கொண்டு, கிழட்டுத்தனத்தையும் மேலே போர்த்திவிடும் போல் இருக்கிறது!

(ஆ) எங்கே நாம் மாரடைப்பினால் இறந்துவிடுவோமோ என்ற பயத்தி னாலும், அடிப்படையற்ற அச்சத்தினாலும் பலர் அப்படிப்பட்ட இதய நோய்த் தாக்குதலால் இறந்தேவிடும் நிலையும் உள்ளது! பயமே பலருக்கு இதய நோயை உருவாக்கி உயிரிழக்கச் செய்கிறது!

எனவே, மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்! தேவையற்ற பயம்வேண்டாம்; ஏற்பாடுகளைச் செய்ய எண்ணுங்கள்.உடனடியாக செய்துவிட்டு, மற்றவர்களிட மிருந்து- பயனுறுவாழ்க்கைவாழ்ந் தேன்; மக்களிடம் இல்லறம், தொண் டறம் செய்தேன் - மகிழ்வுடன் விடை பெறுகிறேன் என்று இருந்தால் விரைவில் உங்களுக்கு விடை கிடைக்காது!

(நிறைவ)

-விடுதலை,24.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக