
ஒரு முக்கிய உணவுப் பழக்கம், உணவை நாம் எடுத்துக் கொள்ளுவதில் – சத்துக்காக புரதத்தை – ‘Protein’ அதிகமாக சேர்ப்பது முக்கியம் என்றாலும் ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி எப்படி அதை ஒழுங்குபடுத்துவது என்பதை அறிந்து, குறிப்பாக முதுமையாளர்களும் அக்கறையோடு கடைப்பிடித்தொழுக வேண்டிய அறிவுரை ஒன்று.
‘‘ஒரு நாளின் மூன்று வேளை உணவில் பெரும்பாலோர், காலைச் சிற்றுண்டியின்போது புரதத்தினை தவிர்த்து விடுவது, மதியம் அதை கூடுதலாக எடுத்துக் கொள்வது, இரவு உணவில் – மலை நாட்டில் இரவு உணவு Diningதான் பொதுவாக 6 மணி – 6.30 மணிக்குள் முக்கிய உணவாகப் பழகிப் போன ஒன்று. ஆதலால், அதிகமாக மற்ற இரண்டு வேளைகளில் சேர்க்காத புரதச் சத்தினை (Protein) கூடுதலாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது!
நமது உடலுக்கு 1.2லிருந்து 1.6g வரை அல்லாமல் அதைவிட கூடுதல் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தில் இருக்குமானால் நல்லது. அதை மூன்று வேளைகளில் சமமாக நிரவி உணவில் அமைத்துக் கொண்டு உணவை எடுப்பது அவசியம் (Equal Distribution) என்று மருத்துவ நிபுணர் டாக்டர் ராபின் பெர்சின் (Dr. Robin Berzin M.D.) குறிப்பிடுகிறார். அந்த அம்மையார் மேலும் கூறுவதாவது: ஒவ்வொரு உணவிலும் ஓர் உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொண்டு 30 முதல் 35 கிராம் புரதச் சத்தினை சேர்த்து, சம விநியோகமாக்கி விடுவது அவசியம் என்கிறார்!
இரவிலேயே பெரும் அளவுக்கு, புரதச் சத்து மிகுந்த இரவு சாப்பாட்டை (Dinner) மற்ற இரண்டில் சமமற்று கூடுதலாகவும், குறைவாகவும் சாப்பிடுவது விரும்பத்தக்கதல்ல; காரணம் இது நமது தசைகளுக்கும், ‘மெட்டபாலிசம்’ என்ற உடலின் வளர்ச்சிக்குமான கெமிஸ்ட்டிரிக்கு – செரிமானத்திற்கு சரியானதாக அமைய முடியாது என்று நம்மை எச்சரிக்கை செய்து ‘ஜெர்னல் ஆஃப் நியூட்டிரிஷன்’ (Journal of Nutrition) என்ற ஆய்வு ஏட்டில் 2014லேயே எழுதியுள்ளது – சுட்டிக் காட்டப்படுகிறது.
மற்றொரு முக்கியச் செய்தியையும் டாக்டர் பெர்சின் அம்மையார் குறிப்பிடுகிறார், ‘‘‘மெனோபாஸ்’ என்ற ஒரு பருவம், பெண்களுக்கு (நடு வயதில் அல்லது சற்று கூடுதலான வயதில்) மிக முக்கியம். அப்போது அவர்கள் உடலால் இளைத்து, மனதால் களைத்து, சிற்சில திடீர் கோபதாபங்கள் உருவாவது தவிர்க்க முடியாத நிலை என்பதால், அப்போது அவர்கள் மூன்று வேளை உணவில் இந்த புரதச் சத்தினை சம நிலையில் எடுத்துக் கொள்ளுவது முக்கியம்’’ என்று அறிவுறுத்துகிறார்! ஏனென்றால் அந்தப் பருவத்தில் ஈஸ்ரோஜன் (Estrogen) மாற்றம் அடையும் கால கட்டமாகும்.
அந்த வயது அளவு வருகின்ற (அதாவது ‘மெனோபாஸ்’ – மாத விடாய் நிரந்தரமாக நின்று போகும்) உடல் பருவம் – இளமைக்கும், முதுமைக்கும் இடைப்பட்ட வாழ்வின் ஒரு கால கட்டம் என்பதாகும். இதில் மகளிர் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது முக்கியம் என்கிறார் டாக்டர் பெர்சின் அவர்கள்!
எனவே ‘‘ஒவ்வொரு வேளையும் 30 கிராம் புரதச் சத்து விதி (’30 Gram Rule’) என்பதை நிரவி உணவை அமைத்துக் கொள்ளுவது சிறப்பு’’ என்று அறிவுறுத்துகிறார் அவர்!
மேலை நாட்டு வழமைப்படி அவர்கள் உணவை மய்யப்படுத்திய கருத்துப்படி,
காலை ‘கிரீக் தயிர்’ (Greek yogurt), முட்டைகள் (இரண்டுகூட), மதிய உணவுக்கு கோழிக் கறியோடு, அதுபோல இரவு உணவு மூன்றாவது வரிசைக் கட்டமாகட்டும் என்கிறார்.
III. அடுத்து பொதுவாக நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் என்ற இலக்கு (இது வயதுக்கு ஏற்ப மாறக் கூடும் – மூத்த முதியவர்களுக்கு இதுபொருந்தாது!)
(இம்மாதிரி சில விதிகள் பெரிதும் வணிக நோக்கத்தில் செய்யப்பட்டது என்பது இப்போது பரவிடும் புதிய சிந்தனையாகும்).
‘‘உணவுக்குப்பின் ஒரு பத்து 10 நிமிட பொடி நடையால் உணவில் – செரிமானமுண்டாகும் – ரத்தத்தில் சர்க்கரை அதிகம் (Blood Sugar) ஏற்படுவதைத் தடுக்க உதவும்’’ என்கிறார் மருத்துவ ஆய்வாளர்.
அந்தப் படிக்காக நடைப்பயிற்சி (அதிவேகம் தேவையில்லை) உணவில் ஏற்படும் குளுக்கோஸ் – சர்க்கரையாக மாறும் நிலைக்கு இந்த 10 நிமிட நேர இரவு சிறு நடைப் பயிற்சி (உணவு முடித்தபின்) பெரிதும் உதவும்.
‘‘உணவு முடித்து, நேரம் கழித்து 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதைவிட, உடனடியாக நடக்கும் 10 நிமிட நேர நடைப் பயிற்சி பெரிதும் பலனளிக்கும்’’ என்றார் டாக்டர் பெர்சின் அவர்கள்.
களைப்பையும், சோர்வையும் நீக்க உதவிகரமாக இருக்கும். இன்சுலின் சுரப்பதற்கும் இந்த சிறுநடை பெரிதும் தூண்டுவதாகவும் அமையும். நாளா வட்டத்தில், வெளி நோய்த் தடுப்பாற்றலையும் நமது உடல் பெற்றுக் கொள்ளப் பெரிதும் அது உதவும் என்ற கருத்தும் அதனுடன் வழங்கப்படுகிறது! ‘‘Short post – Meal’’ இதன் மூலம் நற்பலன் விளையும்!
- தட்டைக் காலிசெய்யுங்கள்…!
- உங்கள் பார்க்கைச் சுற்றி நடந்து செல்லுங்கள் (10 நிமிடம்)
- வீடு திரும்பி உங்கள் பணியில்கேளிக்கை சாதனையாளராகத் திகழ்ந்து இளைப் பாருங்கள்!
7000 அடிகள் நடப்பதுஎன்பது ஒரு நல்ல இலக்கு என்றார்!
முதியவர்களும் முடிந்தவரையில் – அவரது உடல் நிலையைப் பொறுத்து!
உடல் என்ன உத்தரவிடுகிறது – அது முக்கியம் என்பதை மறவாதீர்!
(தொடரும்)
-விடுதலை நாளேடு,4.08.06









