பக்கங்கள்

திங்கள், 27 ஜூன், 2016

சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்வூட்டும் செய்தி!

அமெரிக்கத் தலைநகர் வாஷிங் டன் நகரிலிருந்து இன்று (1.7.2014) வெளி வந்துள்ள ஓர் அருமையான செய்தி:
ஆஃபிரிசா Afrezza என்ற மூக்கு வழியாக இழுத்தே, உடலுக்குத் தேவையான இன்சூலின் மருந்தை உட் செலுத்தினால், Type II என்ற சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தச் சர்க்கரை யைக் கட்டுப்படுத்த அது உதவி செய் யும். தினமும் உடலில் ஊசி குத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்த உபாதை இல்லை.
(ஊசி குத்துவதில்கூட- ஆராய்ச்சி களின் பலனாக, அளவு எவ்வளவு தேவை என்பதை அதே கருவி நிர்ண யம் செய்து அதை உடலில் ஏற்றிடும் நவீன சிகிச்சை முறை செயற்பாட்டிற்கு வந்துள்ளது)
இந்த ஆஃபிரிசா என்ற மூக்கு அருகில் வைத்து உள்ளே இழுக்கும் (Inhale) மருந்தாக அமெரிக்காவின் மருந்து தர நிர்ணய, அங்கீகார அரசு அமைப்பான Food and Drug Administration (F.D.A.) இதனை அங்கீ கரித்துள்ளது; இனி நடைமுறையில், மக்களுக்கு பயன்படப் போகிறது - இந்த இன்சுலினைச் சுவாசிப்பது என்ற முறையின் மூலம்.
உணவு உட்கொள்ளத் துவங்குமுன் இதை மூக்கு அருகில் வைத்து (Inhaler)   மூச்சு இழுத்து விடுவதுபோல செய்துவிட வேண்டும். அல்லது உணவு உட்கொள் ளும் 20 நிமிடங்களுக்குள் உள்ளே இழுப்பது அவசியம்.
இப்படிச் செய்வதினால் சிலர் அள வுக்கு அதிகமாகக்கூட பற்பல நேரங்களில் - பயப்படும் ஊசியால் குத்தி இன்சூலினை உடலுக்குள் ஏற்றும் வலி - தொல்லை - பயம்  இல்லாத நிலை ஏற்படுவது நன்மை தானே!
ஆனால், எதிலும் மறுபக்கம் - எதிர் விளைவுகளும்கூட உண்டல்லவா? அதுபோல,
இந்த மூச்சு இழுப்பது போலே முகர்ந்து மூக்கினால் உறிஞ்சிடும் இந்த முறை யினால் இன்சூலின் நேரே, நமது சுவாசப் பை (Lungs)க்குள் செல்லும் நிலை உண்டு. இது சுவாசப் பையைப் பழுதாக்கிடவோ அல்லது வேறு விளைவுகளையோ ஏற்படுத்தக் கூடும் என்றாலும் போகப் போக இதைத் தவிர்க்கவும் அல் லது அதன் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஏதாவது புது வழியைக் கண்டுபிடிப் பார்கள் தொழில் நுட்ப விஞ்ஞானிகள் - நிபுணர்கள் என்பது உறுதி.
ஆஸ்த்துமா நோய் உள்ளவர்களும், நுரையீரல் வியாதி  உள்ளவர்களும், இம்முறையைக் கையாளுவது ஏற்கத் தக்கது அல்ல என்று கூறி மருத்துவர்கள் அத்தகையவர்கள் இதனைப் பயன்படுத் தக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.
பிரான்கோஸ்பாசம்ஸ் (Broncho- spasms) என்ற ஆபத்தான (மூச்சு விடாமல் இறுகி கட்டிக் கொள்ளுதல் - ஷிஜீணீனீ திடீர் அடைப்புகள் போன்றவை).
புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ள வர்கள் - ஏற்கெனவே இழுக்க இழுக்க இன்பம் என்ற தீவிர புகைப் பழக்கத்தை உடையவர்களோ அல்லது புதிதாகப் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளவர்களோ,  இந்த இன்சூலின் உறிஞ்சான் (Inhaler)  மூலம் உள்ளே இழுப்பதும் அனுமதிக்கத் தல்ல என்று மருத்துவர்கள் சொல் கிறார்கள்.
இந்த மருந்து - ஆஃபிரிசா எந்த அளவுக்கு பயனுறு மருந்தாக, சர்க் கரையைக் குறைக்கப் பயன்படுகிறது என்பதை அமெரிக்காவில் 3017 பேருக்குக் கொடுத்து - இழுப்பதுபற்றி ஆராய்ந்து பார்த்தனர்.
இதில் 1026 பேர்கள் Type I  ஊசி இல்லாமல் மருந்து மாத்திரை சர்க்கரை நோயாளிகள் ஆவர்
இதில் Type II  பிரிவினர் 1991 பேர்களுக்கு தந்து ஆய்வு செய்தனர். (24 வாரங்கள் தொடர் சோதனை நடந்தது)
இன்னொரு தகவல்: இந்த சர்க்கரை வியாதி நமது பாரம்பரிய மாக பெற்றோர்கள், தாத்தா, பாட்டிக்கு இருப்பது தொடரலாம்; மனிதர்களின் மரபணு மூலம். மற்ற நோய்களால் மரணம் ஏற்படுவது எவ்வளவு தெரியுமா?
அதில் இதய நோய் 40  முதல் 55 - 60 விழுக்காடு வரை - ரத்த கொதிப்பு  50% எனவே DNA வையும் 50க்குள் உள்ளவரை பரிசோதிப்பது அவசியம் ஆகும். (மரபு அணு சோதனை களுக்கான உடற்பரிசோதனை நிலையங்களும் நாட்டில் உள்ளன).
-விடுதலை,1.7.14

நம் வாழ்வைப் பாதுகாக்கும் 10 சிறப்பு உணவுகள்!



நாம் நமது ஆயுளைப் பாதுகாக்க வும், நீட்டிக்கவும் மருத்துவர், மருந்து, இவைகளை நாடுவதைவிட உடற் பயிற்சியும், பசித்து உண்ணும்போது கண்டதையெல்லாம் உண்ணாமல், நல்ல சத்தான சிறந்த உணவுகளைச் சாப்பிடுவதும் மிகவும் உதவக்கூடியன வாகும்.
அண்மைக்காலத்தில் வெளிநாட்டு உணவுகள் - வேக உணவுகள் (Fast Foods)
கடைகள் இறக்குமதியாகி விட்ட நிலையில், கொள்ளை விலை கொடுத்து அவற்றை வாங்கித்தின்று தங்களது பொருளையும், உடல் நலத் தையும் மிக வேகமாக இழந்து வருகின்றனர்!
ஒரு மருத்துவர் அம்மையார் என் னிடம் கூறினார். தங்களூரில் கொத்த னார் வேலை செய்யும் ஒருவர் டாஸ்மாக் சரக்கு வாங்கிக்கொண்டு, பக்கவாத்தியமாக முந்தைய பெரும் குடி மக்கள் முறுக்கு மற்றும் இறைச்சி வகையறாக்கள் - இவற்றைச் சாப்பிடு வதற்குப் பதிலாக அமெரிக்க பிட்சா (விலை ரூ.150, 200) வாங்கிச் சாப்பிட்டு தனது உடலைச் சீரழித்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனராம்! என்னே கொடுமை!
சிறந்த உணவுகள் என்று அமெ ரிக்காவின் சத்துணவு மய்யம் (Nutrition Centre) (இது தலைநகர் வாஷிங்டன் ஞி.சி.யில் உள்ளது) 10 சூப்பர் உயர்தர உணவு வகைகளைத் தேர்வு செய்து மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது!
1. இனிப்பு உருளைக் கிழங்குகள்
(Sweet Potatoes)
இது காய்கறிகளில் மிகவும் சத்தான நட்சத்திர உணவு என்று கூறலாம். கார்ட்டோனாய்டுஸ் என்று முக்கிய உடல்நலப் பாதுகாப்புச் சத்தும், சி வைட்டமின், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகளை ஏராளம் உற்பத்தி செய்து உடலுக்குத் தரும் உணவு ஆகும் இது!
இதை அவித்து கிழங்கை மசிய லாக்கி பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய் முதலிய வாசனைப் பொருள்களை (மசாலா பொருள்கள் அளவோடு) சேர்த்து சிறிது காரம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் முதலிய சேர்க்க வேண்டி யவைகளோடு சமைத்து உண்டால், அதுவே சிறப்பான உணவாக- சத்துக் களைத் தருவனவாக அமைந்துவிடும்.
2. மாங்காய்
ஒரு கப் மாங்காய் ஒரு நாளுக்கு உட லுக்குத் தேவையான சி வைட்டமின், ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதி தேவையான வைட்டமின் சத்தும் இதன் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. தேவை யான அளவு இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் பொட்டாசியம், 3 கிராம் நார்ச்சத்து (Fiber). போனஸ் தகவல்: மாம்பழங்களில்தான் குறைவான அளவு கிருமிநாசினி தங்கல் உள்ளது; எனவே, அது ஒருவகை உடல் பாதுகாப்பு.
3. இனிப்பாக்கப்படாத கீரிக் தயிர்
கொழுப்பு இல்லாத பிளைன் தயிர் (கீரிக் தயிர்) இத்துடன் பெர்ரீஸ், வாழைப்பழம் முதலியவைகளை - உலர்ந்த திராட்சைகளைக்கூட விருப்பத்திற்கேற்ப சேர்த்து, குழைத்து காலை உணவுத் தானியங்களோடு சாப்பிட்டால் மிகவும் அருமையான ஊட்டச்சத்தினை அது நமக்கு அளிக்கும். இதில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. (நல்ல பாக்டீரியாக்கள் நமது நோய் எதிர்ப்பைப் பெருக்கவும், உணவைச் செரிக்கச் செய்யவும் உதவக்கூடும்) சாதாரண தயிரில் உள்ள புரதச் சத்தைவிட இரு மடங்கு இதில் கூடுதலாக உள்ளது. 6 அவுன்ஸ் சாதாரண (Plain) தயிரில் உள்ளது என்றால், இவ்வகையில் மூன்று மடங்கு 18 அவுன்ஸ் அதிகம் உள்ளதாம்.
4. பிராக்கலி கீரை
(Broccoli)
அமெரிக்காவில் இக்கீரை சர்வ சாதாரணம். இந்தக் கீரைக்குப் பதில் பொன்னாங்கன்னி, சிறுகீரை போன்ற வைகளை நாம் நம் நாட்டு வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். இத்தனை கீரைகளில் இரும்புச்சத்துடன் காரட்னாய்டுஸ் (Carotenoids)   கே வைட்டமின். ஃபோலிக்  ஆசிட் (Folic Acid) என்ற (ரத்தச்சோகை நீக்குவது) இத்தோடு சிவப்பு மிளகு.
5. ஓயல்வலட் சால்மன் - மீன்
ஒமேகா - 3 மீன் கொழுப்பு என்பது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. தற்போது ஜெர்மனியில் நாங்கள் தங்கியிருந்தபோது காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் வெண் ணெய் தயாரிப்பில் இந்த ஒமேகா-3-ம், ஒமேகா-6-ம் இணைக்கப்பட்டதைக் கண்டு வியந்தோம்; காலை உணவுக்கு வெண்ணெய்யை (Butter) ரொட்டியில் தடவி உண்டோம். இது இதயநோய் தடுப்பானாகப் பயன்படுகிறது! பக்க வாதம் (strokes) வராமல் தடுக்கவும் இது உதவக்கூடும். சால்மன் என்ற அரிய மீன்வகையில் இது கிடைப்ப தால் இதையும் உணவாகப் பயன் படுத்துவது மிகவும் நல்லது.
- (நாளை தொடரும்)
விடுதலை,18.6.14
நம் வாழ்வைப் பாதுகாக்கும் 10 சிறப்பு உணவுகள் (2)
நேற்றைய வாழ்வியல் சிந்தனை யில் அமெரிக்க சத்துணவு ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஊட்டச்சத்துள்ள உயர்வான உணவு வகைகள் என்ற தலைப்பில் வெளி யிட்ட அறிக்கையில் 5 உணவு வகை களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சி வருமாறு:
6. முறுமுறு ரொட்டி -ரஸ்க் (Rusk) வகையறா...
Whole Grain  என்ற கோதுமையின் உமி நீக்காத முறுமுறு ரொட்டிகள் முழுச் சத்துள்ளவை (அமெரிக்காவில் வாசா, ரைகிரிஸ்ப், காவ்லி, ரிவிட்டா) அனைத்தும் நார்ச்சத்துள்ள கொழுப் பற்ற உணவுகளாக அமையும். தேன் சில சொட்டுக்கள் விட்டு, லவங்கப்பட் டையும் சேர்த்துக் கொண்டால், மிகவும் சுவையாக அது அமையும்.
7. கார்பன்சா பீன்ஸ் (Garbanzo Beans)
கொண்டைக்கடலை
கடலை வகையறாக்கள் எல்லாமே சிறப்பான ஊட்டச் சத்துள்ளவை - அதிலும் கொண்டைக் கடலை - நம் வீடுகளில் சென்னா என்றும் சொல் வார்கள். இதன்மூலம் புரதச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டா சியம், துத்தநாக சத்து (Zinc)
எல்லாம் இதில் ஏராளம் உள்ளன. பலதரப்பட்ட வைகள் உண்டு.
அந்தக் கொண்டைக் கடலையை ஊற வைத்து, குழைத்து (குழைக்காமலும் வசதிப்படி) பச்சைக் காய்கறிகள், கீரை களுடன் இணைத்து சாலட் (Salad) செய்வதுடன், காய்கறிகள் எல்லாம் ஸ்டூ (Stew) கறிகளை போட்டு சூப் தயாரித்து இத்துடன் காய்கறி, பழுப்பு அரிசி (Brown Rice) லெபனீஸ் ரொட்டி அதற்குப் பெயர் Couscous, Bulgcul போன்ற முழு தவிடு நீக்கா தானியமாக அமைந்துள்ள வைகளையெல்லாம் பயன்படுத்தலாம்.
8. தர்ப்பூசணி (Watermelon)
இது ஒரு நல்ல ஊட்டச் சத்து உணவு, நிறையச் சாப்பிட்டால், திரவமாகி, வயிற்றை அடைக்காது; நல்ல வெயில் காலத்தில் நமது நாட்டில் நமக்கு நல்ல பயன் தரும் உணவு இது. 2 கப் தர்ப் பூசணி, ஒரு நாளுக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் ஏ வைட்டமின், சி வைட்டமின், ஒரு குறிப்பிட்ட அளவுக் குப் பொட்டாசியம், அத்துடன் லைக் கோன்டீன் சத்து (இது தக்காளியிலும் ஏராளம் உண்டு - இருதயப் பாதுகாப் புக்கு இது மிகவும் அம்சமான சத்து) 85, உப்பு இல்லா, கொழுப்பு இல்லா 85 கலோரி அளவுள்ள மிகவும் குறைந்த தேவை அளவுள்ள கார்பன் (Food Print) இதில் அடக்கம்.
9. பரங்கிக்காய் வறுவல் அல்லது சூப் (Butternut Squash)
பரங்கிக்காயின் ஜூஸ் - அதைத் துண்டு துண்டாக வெட்டி, நறுக்கிய துண்டுகளை அடுப்பில் வைத்து, ஒரு வறுவலைப் போல் அல்லது சூப் ஆகத் தயாரித்து, உணவின் ஒரு பகுதியாக ஆக்கி உண்ணலாம். இதன்மூலம் ஏராளமான ஏ வைட்டமின், சி வைட்டமின், நார்ச் சத்துக்கள் ஏராளம் கிடைக்கும்.
10. பச்சைக் கீரைகள்
(அமெரிக்காவில் சக்தி வாய்ந்த கீரைகளான கேல், கொலாட்ரிஸ், ஸ்பீனாச்), முள்ளங்கி, கடுகு கீரை, ஸ்விஸ் சார்டு (Swiss Chard) போன்றவைகளை எப்போதும் விலக்கி விடாதீர்கள்!
நம் நாட்டில் உள்ள கீரைகள் எல்லாம் பல்வகையான ஊட்டச் சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் உள்ளடக்கி யவையாகும். நினைவு ஆற்றலைப் பெருக்குவதற்குக்கூட நம் நாட்டில் ஏராளமான கீரைகள் (வல்லாரைக்கீரை) போன்றவைகள் உண்டே!
இந்தக் கீரை வகையறாக்கள் மூலம் வைட்டமின்கள் ஏ, சி, கே, மற்றும் ஃபோலேட் (Folate) பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, லுயூடெயின், நார்ச் சத்துக்கள் இவை கள் எல்லாம் இதில் ஏராளம் உண்டு.
இதை பலவிடங்களில் எலுமிச் சைப் பழச்சாற்றுடன் கலந்தும், ரெட் ஒயின் (Red Wine) கலந்த வினிகர் (புளிப்புள்ள காடிச்சத்துடன் இணைந் தும் பரிமாறிடும் பழக்கம் உள்ளது!)
எனவே, தினம் தவறாது எது நம் நாட்டில் எளிமையாக - குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதனை வாங்கி, குடும்பத்துடன் சாப்பிட்டுப் பயன் அடையலாம்!
வெறும் நாக்கு ருசிக்காக மட்டும் சாப்பிடாதீர்கள் - வாழ்க்கையை நீட்டவே உண்ணுங்கள்! நீண்ட நாள் நன்றாக வாழுங்கள்!
இத்துடன் உங்கள் உடல்நலத் திற்கே பழங்களைக் கூடுதல் உண வின் ஒரு பகுதியாக - முக்கிய பகுதி யாக ஆக்கிக்கொண்டு நல வாழ்வு வாழுங்கள்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் இவைகளைத் தவிர்த்து, கொய்யாப் பழம், சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளை, நாவல் பழம், பாகற்காய் போன்றவை களைப் பயன்படுத்தி ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பருவப் பழங்களை உண்ணலாம் எப்போதோ ஒருமுறை.
உதாரணம், மாம்பழம், பலாச்சுளை - விதிவிலக்காக - ஒரு சில அளவு - மற்ற உணவைக் குறைத்துக்கொண்டு உண்பது தவறில்லை என்கிறார்கள் மருத்துவர்கள் - ஓகே!
- கி.வீரமணி
-விடுதலை,19.6.14

மூடக்கருத்துகளை ஓட விரட்டுங்கள்!


மக்களிடையே நோய் தீர்க்கும் அரிய மனிதநேயப் பணியாற்றும் மருத்து வர்களின் மற்றொரு முக்கிய கடமை அறியாமை (Ignorance) மூடநம்பிக்கைகள் - இவைகளைப் பற்றியும் நோயாளிகளிடமும், உடன்வரும் மற்றவர்களி டையேயும், அவசியம் எடுத்துரைத்து, அவர்களது மூட நம்பிக்கைகளுக்கு ஆதாரமான பயத்தை வெளியேற்றிட உதவ வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், வேதனைக்குரிய செய்தி மருத்துவர்கள் பலரும் கூட மூடநம்பிக்கைகளில் ஊறித்திளைப்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்!
மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம் என்ற அரிய தகவல் களஞ்சியமாக உள்ள ஒரு அருமையான நூலை இரண்டு பிரபல டாக்டர்கள் எழுதியுள்ளனர்! (இந்நூல் பற்றி நீண்ட நாளுக்கு முன்பு  வாழ்வியல் சிந்தனைகளில் கட்டுரை ஒன்றில் எழுதி யுள்ளேன்)
பிரபல சிறுநீரகத்துறை மருத்துவ நிபுணர் டாக்டர் அ. ராஜசேகரன் M.S., M.Ch., F.R.C.S., F.I.C.S., D.Sc., அவர்களும் கோவை டாக்டர் கே.இராமநாதன் M.D., F.C.C.P.அவர்களுமாக அருமையாக எழுதியுள்ளார்கள். 2010 இல் தமிழக அரசால் பரிசு பெற்ற நூல் இது (இளம் வயது மருத்துவ சிந்தனையாளர் இன்று வரலாறாக வாழ்கிறார்). அதில் 35 தவறான நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்து கின்றனர். படித்த பாமரர்களிலிருந்து படிக்காத பாமரர்கள் வரை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்திகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.  செய்திகளை படியுங்கள்; பயத்தை விரட்டி, பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கைதான் மூடநம்பிக்கையை விரட்டும் மருந்து.

புரிந்து, செயலாற்றி, வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
-விடுதலை,16.6.14

நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!



இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!
அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய  அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.
விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.
நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.
“Education is the most powerful weapon you can use to change the World”
-  Nelson Mandela
உலகை  நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா  என்பதே அதன் கருத்து.
இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.
பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!
நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.
உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!
அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.
தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?
தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
உணர்ச்சியூட்டும் அவரை
வழியனுப்பி இறுதி மரியாதை
செய்தஅவ் வீரமும்
உணர்வும் கொப்பளித்த
ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
(முழுவதும்கூட பிறகு வெளிவரும்)
“We will not forget you
We will not dishonor you
We will remember and be glad
That you lived among us.’’
உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!
“That you  taught us
And
That you loved us
All!”
நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!
மேலும்
நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!
நமது உணர்வுகள்:
(எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!
நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!
நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம்.  - நம் உணர்வு இது.
-விடுதலை,5.12.14

வெள்ளி, 17 ஜூன், 2016

தேவைக்கு மேல் தேவையா? தேவையா?


நம்மில் பலரும் ஆடம்பரமாக வாழ வேண்டும். எதுவும் மற்றவர்கள் பார்த்து வியப்பதாகவும், விசாரிப்பதாகவும் அமைய வேண்டும் என்ற போலிப்பெருமை என்ற பெரு வியாதிக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறோம்!

“பெரிய கார் வாங்க வேண்டும்“
“பெரிய வீடு வாங்க வேண்டும்“

“கைப்பேசி கூட லேட்டஸ்ட், ஆடம்பரமானதாக ஆப்பிள் போன்றதாக இருக்க வேண்டும்“

எதிலும் குறைந்த இலக்காக பலர் நிர்ணயிக்கும் இலக்கே 70 விழுக்காடு! 70 விழுக்காடு! என்னே ஆடம்பரமோகம்!

70% சதவிகித விலை உயர்ந்த - ஆடம்பர - கார்களை வாங்கும் எவரும் அதில் வாழ - பொருத்தப்பட்டுள்ள அத்தனையையும் அனுபவிப்பவர்களா என்றால் இல்லை. இல்லை!
‘பெரிய பங்களா’ வாங்கும் எவரும் எல்லா அறைகள் அவைகள் பொருத்தப்பட்டுள்ள எல்லா ஏசி, மற்ற வசதிக்கான கருவிகளை நுகர்ந்து இன்பம் - மகிழ்ச்சி அன்றாடம் அனுபவிப்பவர்களாகவே இருக்கிறார்களா? இல்லை, இல்லை.

பணத்தைச் சம்பாதிப்பதோடு, ஆடம்பர வெறிக்கு பலரும் பலியாகி விடுவதால் நாடும், சமூகமும் வெகுவாகக் கெட்டுப்போகும்.

நாம் வாங்கி பயன்படுத்தும் கைப்பேசி யில் எத்தனையோ வசதிகள் - உதவிடும் ஏதுக்கள் (நிணீபீரீமீts) நுண்கருவிகள் உள்ளன. அவைகளைப் பயன்படுத்தும் நாம் அனுபவிக்கிறோம் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

சாதாரணமாக நிற்காமல் ஓடும் எளிமையான காரை ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் மிக விலை உயர்ந்த மோட்டார் காரை ஓட்டும் போது யாராவது ‘உரசி விடுவார்களோ’, ‘கீறிவிடுவார்களோ’ என்ற கவலையே, சொந்தக்காரரின் கவலையாக இருக்கும்! அதனால் வரும் மகிழ்ச்சியைவிட கவலையே அதிகமாகும்! இல்லையா? யாராவது மோதிவிட்டால் நம் காரின் நிலை என்ன என்ற பயமே மேலோங்கும்!

பெரிய பங்களா கட்டிவிட்டு அதில் பல அறைகளை அமைப்பது தூசி தட்டி, சுத்தமாக பெருக்கி பாதுகாப்பதே பல மடங்கு பொறுப்புச் சுமையாகும். சுகங்களே பற்பல நேரங்களில் சுமைகளாக அதுவும் தூக்கிச் சுமக்க முடியாத சுமைகளாகி விடுகின்றன.

இன்னும் பலருக்கு ஏன் நாம் செல் வத்தைச் சேர்க்கிறோம். இது யாருக்குப் பயன்படப் போகிறது என்று கூட யோசிக்காமல், மிகக் கீழ்த்தரமான முறைகளில் கூட ஓய்வின்றி - உடல் நலத்தையும் கவனிக்காமல் பணம் சம்பாதித்து சேர்க்க அலைகிறார்கள்!

வாழ்நாள் எல்லாம் இந்த சேகரிப்பு, பாதுகாக்கும் கவலை. வருமானவரித்துறை மற்றும் திருட்டு பயம் எல்லாம் பகுத்தறி வுள்ள மனிதர்களை பாடாய் படுத்துகின்றது!
அய்ந்து அறிவுள்ள மிருகங்கள் - பிரசவித்தபின் இதில் எதைப் பற்றியாவது கவலை படுகின்றனவா?

கிடைத்ததைத் தின்று, உண்டு, உறங்கி இனப்பெருக்கத்துடன் அவைகளை ஓரளவு வரை ‘மட்டுமே’ பாதுகாத்து வளர்த்து பிறகு தனியே விட்டு விடுகின்றன!
ஆனால் மனிதர்களாகிய நாமோ...! எத்தனை தலைமுறைகள் கவலை - வாழ்நாள் கவலை - எவ்வளவு தேவை (ளிஜீtவீனீuனீ) அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பிறருக்கு தந்து மகிழலாம்! சமூகத்திற்கு நமது பங்களிப்பாக இருக்கட்டும் என்று விட்டுவிடலாமே!

அப்படி பணம் பணம் என்று சேர்க்கிறாரே என்ற குற்றம் சுமத்தப்பட்ட தந்தை பெரியார் இறுதியில் அத்தனை செல்வத்தையும் மக்களுக்காக விட்டுச் சென்ற தொண்டறத் தூயோனாக உயர்ந்தாரே!

நிறைய பணம் சேர்ப்பதைவிட, நிரம்ப பொறுப்புணர்வுடன் உங்கள் உடல் நலம் பேணுங்கள்,  அடிக்கடி நன்றாக இருக்கும்போதுகூட மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
‘தாகம் எடுத்த பிறகே தண்ணீர்’ என்று காத்திருக்காதீர்! அதற்கு முன்பே கூட தண்ணீர் அருந்துவது தவறல்ல, விரும்பத்தக்கதே!
வந்த பின் கவலைப்படுவதை விட வருமுன்னர் காப்பது பற்றி திட்டமிட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

ஈத்துவக்கும் இன்பம் தான்
எல்லை யற்ற இன்பம்!

சேர்த்து வைத்த வைக்கப்போர் குக்கல் ஆவது என்ற நிலையும் விரும்பத்தக்கதல்ல!

நமது தேவைக்கு மேல் உணவு - செரிமானமாகாமல் செரிமான கோளாறு உண்டாக்குகிறது அல்லவா?
அதே தத்துவத்தை பொருள் சேர்ப்பது, சொத்து சேர்ப்பதிலும் எண்ணுங்கள்

‘உண்பது நாழி
உடுப்பது நான்கு முழம்’

என்று எவ்வளவோ காலத்திற்கு முன்பே தமிழாய்ந்தோர் கூறியது. எத்தகைய அனுபவ அறிவுரை சிந்தித்து வாழுங்கள்! செயல்படுத்தி மகிழுங்கள்.
-விடுதலை,21.5.16

தலைமைத்துவம் என்பதன் தத்துவம் இதோ

மக்களை, கட்சிகளை, இயக்கங்களை, (குடும்பம் உட்பட) பல்வேறு அமைப்பு களை, தலைமை தாங்கி நடத்துவது ஆற்றல் மிகுந்த ஒரு சிறந்த கலை என்றே சொல்ல வேண்டும்.

பிறவித் தலைவர்கள் என்று எவரும் கிடையாது; காரணம் தலைமைத்துவம் பிறப்பினால் ஏற்படுவது அல்ல; உழைப் பினால் பழகும் பண்பு நலன்கள், மற்றவர் ஏற்க, பொறுப்புக்கு உயர்தல்.

பதவித் தலைமைகள் வேறு; புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்டும் தலைமை வேறு.

நடிகவேள்  M.R. ராதா அவர்கள் மேடையில் பேசும்போது, அவருக்கே உரிய நகைச்சுவை நளினத்தோடு ஒரு கூட்டத்தில் பேசினார். “நாட்டில் இப்போது எவனெவனோ தலைவர் என்று கூறிக் கொள்கிறான்; இந்த கூட்டத்திலேகூட தலைவர் அவர்களே’ன்னு கூப்பிட்டோம். அதனால் அவர் உண்மையாகவே தலைவர் ஆகிடுவாரா? இவர் (கூட்டம் முடியும்வரை) 3 hours  தலைவர்; இன்னும் சிலர் 2 hours அரைமணி (Half hour) தலைவர் எல்லாம் உண்டு! மக்களுக்கு எவர் உண்மையாகவே எந்தபிரதி பலனும் கருதாது தொண்டு செய்கிறார்களோ, அவர்கள்தான்யா சரியான தலைவர்; தந்தைபெரியார், பச்சைத் தமிழர் காமராசர்  இவர்களுக்கெல்லாம் என்ன புள்ளையா? குட்டியா? மக்கள்தான் அவங்க பிள்ளைங்க! நாட்டிலே இப்பவெல்லாம், ஆளுக்கொரு கட்சி, எவனவனோ தலைவர்னா என்ன செய்வது? ஏமாறதுக்கு மக்கள் இருக்கிறீர்கள்! நீங்க  இருக்கிறீர்கள். என்ற தைரியம்தான். நான் எச்சரிக்கை செய்றேன் கண்டவனை  தலைவன் தலைவன் சொல்லி நம்பி போனீங்கள்னா ஏமாந்திடுவீர்கள் தெரிஞ்சிக்கோ!”

இப்படி தடாலடியா கசப்பான உண்மையை தோலுரித்துக் காட்டினார் யதார்த்தவாதியான நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்கள்!

இன்று இதைப் பன் மடங்கு பெருக்க வேண்டும்போல் இருக்கிறது!

அண்மையில் திண்டுக்கல் பிரபல புத்தக விற்பனையாளர் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர்கள் மதிப்பிற்குரிய அய்யா பூவலிங்கம் (ஓய்வு பெற்ற B.D.O. இவர்) அவரது அன்புச்செல்வன் பூ.முத்துமாணிக்கம் அவர்களும்  ஒரு நூலினை எனக்கு அன்பளிப்பாக அளித்தனர். அமெரிக்கா வாழ் எழுத்தாளர் ராபின் ஷர்மாவர் உச்சகட்ட சாதனைக் காண வழிகாட்டி (The Mastery Manual) என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பு அது.

மும்பையில் வாழும் முத்தமிழ் கலாவித்துவரத்தினங்களான டி.கே.எஸ். பிரதர்ஸ் ஆகியவர்களின் உறவினரான நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மிக நேர்த்தியாக)

சுவைமிகுந்த பயனுறும் அந்த நூலில் உள்ள பல பகுதிகளும் நம் அனைவரின் சிந்தனைக்கும் செயலாக்கத்திற்கும் உரியவை. இதோ தலைமைத்துவம்பற்றி (31ஆவது அத்தியாயம்) எழுதப்பட்டுள்ள முக்கிய கருத்துக்கள் சில இதோ!

“என்னைப் பொறுத்தவரை, தலை மைத்துவம் என்பது விளைவுகளுக்கு தனிப்பட்ட பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்று நான் பொருள் கொள்கிறேன். தலைமைத்துவம் என்பது விஷயங்களை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று பொருள்படும். தலைமைத்துவம் என்பது நீங்கள் கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றியாக வேண்டும் என்று பொருள்படும்.

தலைமைத்துவம் என்பது மக்களிடமிருக்கும் சிறந்த விஷயங்களைக் கண்டு கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர்களைப் பயிற்றுவிப்பது என்று பொருள்படும். தலைமைத்துவம் என்பது உறவுகளை வளர்த்தெடுப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மிக நேர்மையான மனிதராக இருப்பது என்று பொருள்படும்.தலைமைத்துவம் என்பது நீங்கள் உங்கள் நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு உங்களால் இயன்ற பங்கை ஆற்றுவதன் மூலம் ஒரு சமூகப் பொறுப்புணர்வைக் கொண்டிருப்பது என்று அர்த்தப்படும். இறுதியாக, தலைமைத்துவம் என்பது இருளைத் தூற்றுவதற்கு பதிலாக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது என்று பொருள்படும்.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இயல்பான தலைமைத்துவத் திறன்களை வெளிப்படுத்தினால் இவ்வுலகம் எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மக்கள் தங்களைப் பலிகடாவாகப் பார்ப்பதை நிறுத்திவிடுவர்.”

எனவே தலைமைப் பதவிக்கு ஆசைப் பட  எல்லோருக்கும் உரிமை உண்டு; ஆனால் அதற்குரிய தலையாய பண்பு நலன்களை, பக்குவங்களை பயிற்சிகளைப் பெற வேண்டாமா? இல்லையேல் நடிகவேள் சொன்னதைப்போல் காலத்தால் கரைந்து விடும் செயற்கைத் தலைமைகள் - எச்சரிக்கை!
-viduthalai,16.4.16

புதன், 8 ஜூன், 2016

வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு


மக்களின் நல வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி, மாமருத்துவர்களையும், ஆய்வாளர்களையும், அதனை விளக்கும் அறிஞர்தம் அறிவுப் பொழிவுகளையும், கருத்துக் கோவைகளையும் நாமும் நாளும் நாடுகிறோம்.
என்றாலும், திருக்குறளை எடுத்து ‘மருந்து’ என்ற தலைப்பில் (அதிகாரம் 95) உள்ள 10 குறள்களைப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால், நம் வாழ்வின் நலம் மிகவும் மேம்படும்.
வள்ளுவர் தம் மருத்துவ அறிவு மிகவும் வியக்கத்தக்க தாகும்.
இதுபோன்ற பகுதிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் குறுகத் தரித்த குறளின் கருந்தாழம் எவ்வளவு என்று அவர்கள் உணர முடியும்.
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது டம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு   (குறள் - 943)
இதன் பொருள்: “ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்துகொண்டு, உண்ண வேண்டும். நல்ல உடம்பினைக் காப்பாற்றி வாழ வைக்கக் கூடிய வழியும் அதுவேயாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து           (குறள் - 944)
பொருள்: ஒருவன் தான் உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்!
‘ஒவ்வாமை’ என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளை உண்ணுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அதுவே உயிர்க் கொல்லியாகவும் சில நேரங்களில் மாறிவிடக் கூடும்.
இதை Allergy என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவரின் அறிவு கண்டறிந்து அதைப் பரப்ப வேண்டும் என்று எண்ணியுள்ளதால் எழுதப்பட்டதே இக்குறள்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு     (குறள்-945)
பொருள்: “உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்திச் செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கைக்கு நோய்களினால் துன்பம் ஏற்படுவது என்பது இல்லை.
‘ஒவ்வாத உணவு வகைகளைக் கண்டறிந்தேன்; ஒதுக்கி விட்டேன். எனவே ஒவ்வும் உணவை ஒரு ‘பிடி’ பிடித்தேன்’ என்று ஏராளம் சாப்பிடலாமா? கூடாது கூடவே கூடாது.
அந்த உணவைக்கூட அளவு மீறாமல் சாப்பிடுக என்கிறார். அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு வந்தால் அதுவே பல்வேறு நோய்களுக்கு அழைப்பு விடுத்ததாகி விடும் என்று நல்ல எச்சரிக்கையை விடுக்கிறார் வள்ளுவர்!
உண்ணுவதில் இன்பம் எது? அனுபவ அறிவை அப்படியே கொட்டி நம்மை ‘குட்டுகிறார்’ வள்ளுவர் என்ற மாமருத்துவர் நாளை பார்ப்போமா!
- கி.வீரமணி
-விடுதலை,31.3.16

பல நேரங்களில் பல மனிதர்கள்!


மனிதர் தம் பகுத்தறிவு, அவர்களைப் பக்குவப்படுத்தும் அனுபவப் பட்டறை யாகும்!
அந்த அனுபவப் பாடங்கள், வயதாலும் வரும்; பல்வேறு காலச் சூழ்நிலையாலும் வரும், நட்பாலும் வரும்.
செல்வமும், செல்வாக்கும் பதவியும், பதவியின்மையும்கூட பல்வேறு கசப்பான அனுபவப் பாடங்களுக்கு ஆசான்களாகத் திகழுவனவாகும்!
உலக வாழ்வில், செல்வம் சேர்த்தோர் பின் ஒரு ‘காக்காய் கூட்டம்‘ சுற்றுக் கோள்களாக வளைத்தே நிற்கும்! மற்றவர் களுக்கு எளிதில் புரியும் முகமன்கூட, தகுதியில்லாமல் வெறும் புகழுரை கேட்கும் புதுப் பணக்காரர்களுக்குப் புரிவதில்லை!
அதுபோலவே திடீர்ப் பதவிகள், ஏதோ லாட்டரிப் பரிசுகள் போல் சிலருக்கு வந்த நிலையில், அவர்கள் அதை நிரந்தரம் என்று எண்ணி ஆடும் ஆட்டமும், போடும் கூத்தும் பல காட்சிகள் நாட்டில் நடைபெறும் போது, உள்ளுக்குள் சிரிப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன?
பரிந்துரைக்காக வரும் பலரில், சிறந்தவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டார் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.
நான் அவரிடத்தில் சொன்னேன். (எனக்குள்ள பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்தி) அவர் விரும்பியது பரிந்துரையினால் கிடைத்த போது, அவர் வந்து உடனே நன்றி கூறினாரா இல்லையா என்று அளப்பதின் மூலம் அவர் சிறந்த மனிதர்தானா என்று கண்டு கொள்வதைவிட, மற்றொரு அளவுகோலே அதனினும் சரியான அளவுகோல்; அது என்னவெனில், அப்பதவி அவருக்கு - அவர் வேண்டி விரும்பியிருந்தும் கூட, தனக்குக் கிடைக்கவில்லை என்கிற போதும். முன்பு எப்படி சிபாரிசுக்கு வந்து காத்திருந்து வலியுறுத்தினாரோ அதே போன்று கிடைக்காத நிலையை அறிந்த பின்பும்கூட, வந்து நம்மைச் சந்தித்து, அய்யா அப்பதவி எனக்குக் கிடைக்கவில்லை; அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; என்றாலும் தாங்கள் எனக்குச் செய்த உதவிக்காக எனது ஆழ்ந்த நன்றியை தங்களுக்குத் தெரிவித்துச் செல்லவே வந்துள்ளேன் என்று கூறுபவர்களே! என்றேன்.
மூவகை மனிதர்களை நடைமுறையில் காண்கிறோம்.
1)     கிடைத்தாலும் திரும்பி வந்து நன்றி கூறாத ‘நல்லவர்கள்!’
2)     கிடைத்தவுடன் வந்து நன்றி சொல் லும் சிறந்த நண்பர்கள்!
3)     கிடைக்காதபோதும், வந்து நம்மைச் சந்தித்து, நன்றி கூறும் பண் பாளர்கள்.
எனக்கொரு அனுபவப் பாடம், அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் கற்றது.
தந்தை பெரியார்  குறிப்பிட்டு பரிந்துரை எழுதி, உரியோருக்கு சொல்லி முயற்சிக்க, கடிதம் கொடுத்து என்னை அனுப்புவார்கள்; நானும் அதை செயல் படுத்தி, அது குறிப்பிட்டவருக்குக் கிடைக்கும்படியான முயற்சிகளைச் செய்வேன்; அய்யாவிடம் உள்ள மிகுந்த நன்மதிப்பு காரணமாக அந்த பெருமகனார், கேட்டுக் கொண்டபடி உதவி  செய்து விட்டு, (சிலர்) என்னை அழைத்து, நீங்கள் வந்து சொன்னதால் தேர்வு செய்து விட்டோம்; அய்யா சொன்னால் மறுக்க முடியுமா? அய்யாவினால் தானே நானே இப்பெரிய பொறுப்பில் உள்ளேன். எனவே, தகுதி இருந்த பலரில் இவரும் ஒருவர் என்பதால் இவரையே தேர்வு செய்து விட்டோம். அய்யாவிடம் சொல்லி விடுங்கள் என்று மகிழ்ச்சியுடன் என்னை அழைத்துக் கூப்பிட்டுச் சொல்வர்.
பிறகு அய்யா சென்னை வரும்போது இதைச் சொல்வோம்; உடனே அய்யா அவர்கள் “மகிழ்ச்சி. ஆனால் வேலை பெற்ற அவர் அதுபற்றி என்னைவந்து சந்தித்து கிடைத்ததாகக் கூறவே இல்லை; பரவாயில்லை அதுதான் நம்ம மனிதர்களின் அதுவும் நம்மவர்களின் ஜீவசுபாவம் என்று கூறி விட்டு ஒன்று ‘நறுக்கென்று’ சொல்வார்கள்; கிடைத்திருக்காவிட்டால் உடனே என்னிடம் மீண்டும் வந்து, எப்படியும் இன்னொரு தடவையாவது சொல்லுங்கள் அய்யா என்று அழுத்தம் கொடுத்திருப்பாரே; அப்படி அவர் வராதிருந்தவுடனே நானே யூகித்துக் கொண்டேன் - அவருக்குப் பதவி கிடைத்து இருக்கும்; அதனால்தான் அவர் நம்மிடம் மீண்டும் வரவில்லை” என்று கூறுவார்.
உலகம் பலவிதம். அதில் ஒவ்வொரு வரும் ஒருவிதம் என்பது புரிந்தது!
பகுத்தறிவுள்ள மனிதர்களில்தான் எத்தனை வகை பார்த்தீர்களா?
- கி.வீரமணி
-விடுதலை,29.3.16

செவ்வாய், 7 ஜூன், 2016

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்


Empathy  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒரே தமிழ்ச் சொல்லைக் கண்டறிய பல மாதங்களாக முயலுகிறேன். காரணம்:  Sympathy என்றால் ‘இரங்குதல்’ பச்சாதாப உணர்வைக் காட்டுதல் என்று தெளிவாகிறது எளிதில்.
நம்மவர்கள் பலருக்கு இச்சொல் Empathy அதிக  புழக்கத்தில் - அச்சொல் போல் இல்லாததால்தான் இத்தொல்லை. மற்றபடி செம்மொழித் தமிழில் கூற முடியாதவை உண்டா? இல்லையே!
பாதிக்கப்பட்டவர் நெஞ்ச உணர்வை நமதாக்கிக் கொண்டு அதை உணர்ந்து ஆறுதல் தரும் அணுகுமுறைதான் Empathy
திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்              (குறள் 214)
என்பதை பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். அது மிகவும் பயனுறும் கருத்தாகும்.
மற்றவர் நோக்கில் நாம் அவரது துன்பத்தை உணர்தல்; வெறுமனே அனுதாபப்படுவது இரங்கல் உணர்வை வெளிப்படுத்துவது அல்ல.
துன்பம், துயரம் அனுபவிக்கும் ஒருவரது உணர்வு நிலையை நாம் அவர் நிலையில் நம்மை நிறுத்தி உணர்தலேயாகும்.
இதற்கொரு ஆங்கிலப் பழமொழி.
‘Before you criticize a man, Walk a mile in his shoes’.

“மற்றவரை நீங்கள் குறை சொல்லு முன்பு அவரது காலணியை நீங்கள் மாட்டிக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் தான் அவரது துன்பம் கஷ்டம் எப்படி என்று “உங்களால் உணர முடியும்’’  இதுதான் ‘பிறர்நிலை நின்று உணர்தல்’ (Empathy)
மகிழ்ச்சி, துன்பம், இரண்டு நிலைகளுக்குமே இது பொருந்தும்!
‘பயனுறு வாழ்க்கையாளர்களின் ஏழு பழக்கங்கள்’ Seven habits of the highly effective people என்பதை  ‘ஸ்டீபன் கோவி’ என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் மேலாண்மை நெறியாளர் வரிசைப்படுத்தினார்; எதையும் Proactive  ஆக்கபூர்வ பார்வையோடு அணுக வேண்டுமே தவிர, Reaction    எரிச்சல், அவசரம் - ஆத்திரம் கலந்ததோடு பார்க்கக்கூடாது.
மற்றவர்கள் சூழ்நிலை எப்படியோ நாம் அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, நம் சுயகவுரவத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துப் பேசுதல் முற்றிலும் முதிர்ச்சி இல்லா பகுத்தறிவுக்கு எதிரான தன்மை - தானே இழந்து கொள்ளும் பரிதாபம் ஆகும்!
ஸ்டீபன்கோவி ஒரு உவமை கூறுகிறார்:
அமெரிக்காவில் ஒரு விமான நிலையத்தில் விமான வருகைக்காக பல பயணிகளும் காத்திருக்கின்றனர்.
ஒருவர் தனது மூன்று சிறு குழந்தை களுடன் வந்துஅமர்கிறார்; அந்தப் பிள்ளைகள் ஒரே (காச்மூச்) என்ற சப்தம் போட்டு பேசுவது, ஓடுவது, ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளுதல் இப்படி இருப்பதை தந்தையார்  சற்றும் கண்டிக்காமல் அப்படியே சிலை போல் அமர்ந்துள்ளார் என்ற எரிச்சல் அங்கிருந்த பலருக்கு! ஒருவர், அடக்க முடியாமல் இருக்கிறீர்களே என ஆத்திரம் பொங்க அந்த பெற்றவரிடம் சப்தம் போட்டு கத்தி விட்டார்!
அதைக் கேட்ட அந்த பிள்ளைகளைப் பெற்றவர் ‘அய்யா, என் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் கஷ்டப்பட்டு நேற்று இறந்து விட்டார். அவளை அடக்கம் செய்து விட்டு ஊர் திரும்புகிறேன். பிள்ளைகள் இப்படியிருக்கும் நிலையை என்னால் கண்டிக்க முடியவில்லை, மன்னிக்கவும் என்று கூறினார்;  அத்தனைப் பேரும் இவரது நிலையை எண்ணி ஆறுதல்கூறி, தங்களது அவசரம் அநியாயமானது என்று எண்ணி வருந்தினர்  - திருந்தினர்.
ஏன், நமது திருமண வீடுகளில்கூட நமக்கு முக்கியமானவருக்கு - கடைசி யாகவே திருமண அழைப்புக் கொடுப் பதுண்டு - உரிமை, உறவு அவருக்கும் நமக்கு அதிகம் உண்டு என்று நினைத்து!
அதை வாங்கிக் கொண்ட  அந்த உறவுக்காரர் - “இப்போதுதான் நான் இருப்பது கண்ணுக்குத் தெரிந்ததா?” என்று பேசி, எனது  சுயமரியாதையை நான் நிலை நிறுத்தியே தீருவேன் என்று அழைப்பிதழ் கொணர்ந்தவரிடம் - தபால்காரர்  போன்றவர்களிடம் பொரிந்து தள்ளினால், அவரைப் பற்றி ‘தபால்காரர்’ என்ன நினைப்பார்? திருமண விட்டார்  நினைப்பது அப்புறமிருக்கட்டும்!
ஒரு திருமணம் நடத்துவது என்பது எளிதா? -
திருமண வீடுகளுக்கு இது பொருந்தக் கூடும்;
இவ்வுதாரணம் பொது நிகழ்ச்சிக்குப் பொருந்தாது! காரணம் அது ‘தன்மானம்‘ சுயமரியாதை பார்க்க வேண்டிய இட மில்லை, இனமானம் தெறித்து விழ வேண் டியதல்லவா என்கிறார் என் அருகில் இதை  அச்சிடுவதற்கு முன் படித்த ஒரு பெரியார் மாணாக்கர்.
அவர் கூறியதையும் இணைத்து விட்டு, பிறன் நிலை உணர்ந்தது (Empathy) பற்றிக் கவலைப்படுவோம்.
-விடுதலை,24.3.16

சர்க்கரை நோயும் உண்ணும் முறைகளும்


சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளே டான ‘The Straits Times’ ஏட்டில் 6.6.2016 அன்று ஒரு மருத்துவ இயல் பற்றி அருமை யான தகவல் வெளியாகி உள்ளது.,
சிங்கப்பூரின் பிரபல தேசிய பல்கலைக் கழகத்தின் சத்தான உணவைப் பற்றிய மருத்துவ ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் ஜெயகுமார் ஹென்றி அவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான அந்த அரிய ஆய்வு முடிவினைத் தெரிவித்துள்ளார்.

எவ்வளவுஉணவு உண்ணவேண்டும்; எதனுடன் அதனை இணைத்து உண்ணு தல், எப்படி உண்ணுதல் நல்லது, முறை களில் கூட ரத்தச் சர்க்கரை  அளவு எப்போது எப்படி உண்டால் கூடுகிறது, குறைகிறது என்பது பற்றி அறிய ஆய்வின் முடிவை அங்கேயே மக்களுக்கு அறிவித்தார்.

சிங்கப்பூரில் பலரும் விரும்பிச் சாப் பிடும் உணவு, கோழிக்கறியுடன் இணைந்த சோறு (Chicken Rice)

அய்ரோப்பிய சத்தான உணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி ஏட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது,

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை(Blood Sugar Level) பற்றி அளவீடு Glycemic index (G.I) வெறும் அரிசி சோற்றை முதலில் சாப்பிட்டால், அதன் அளவு 96 ஆகவும், அதே அரிசி சோற்றை, கோழிக் கறி குறிப்பாக மார்புப் பகுதி கோழிக் கறியோடு கலந்து சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை  அளவு  (இத்துடன் மணிலா எண்ணெய், காய்கறி களுடன் இணைத்து சாப்பிட்டால்), எவ்வளவு தெரியுமா? வெறும் 50 தான்!

நாம் உண்ணும் உணவில் இந்த அளவீடு (G.I) 55 என்பது குறைவானது. 70 என்பது மிக அதிகம் என்பது உணவின் சர்க்கரை அளவீடு Glycemic index)
கோழிக்கறிச் சோற்றை உண்ணும்போது முதலில் அத்துடன் தரப்படும்  கோழி சூப்பை முதலில் அருந்தி விட்டு சோற்றைப் பிறகு சாப்பிட்டால் அதிக சர்க்கரை ஏறாதாம்!
ஏனெனில் கோழி சூப் அல்லது (மட்டன்) ஆட்டிறைச்சி சூப்  -போலவே சூப்புகளில் உள்ள அமினோ அமிலம் (Amino Acids)  நம் உடலில் இன்சூலின் அதிகம் சுரக்கச் செய்கிறதாம்!
இதை N.G.S. (National University of Singapore) பல்கலைக்கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையின் கீழ் இயங்கும் யாங் லூலின் ஸ்கூல் ஆப் மெடிசன் - Yong Loo lin School of Medicine) அமைப்பின் ஆய்வுக் கூடத்தில் சூப்பை ஆய்வு செய்ய பைராசிஸ்ஹென்றி ஏற்பாடு செய்தார்.
பிராண்ட் சிக்கன் எஸ்சென்சில் இந்த அமினோ ஆசிட் அதிகம் உள்ளது என் பதை உறுதி செய்து கொண்டார். எனவே மேற்சொன்னது சரியானது என்பதை இச்சோதனையும் உறுதிப்படுத்தியது.

இதனடிப்படையில் சிக்கன் எசன்ஸ் முதலில் குடித்து பிறகு சாப்பாடு சாப்பிடும் போது ரத்தத்தில் ஏறும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தார்.
அது போலவே சோயா பாலையும் அல்லது வெறும் பாலை (பசு, எருமை, டின்பால்)யும் சாப்பிட்ட நிலையில் இருந் தால் ரத்தச் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைகிறது.
கடந்த 2 ஆண்டுகளில், பிரபலமான ஆய்வேடுகளில் அப்பேராசிரியர் ஹென்றி குறிப்பிட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதால், சிறுநீரகம் (கிட்னிகள்) பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, மாரடைப்பு போன்றவை வரக்கூடும் என்பதால், நாம் உண்ணும் உணவில் மிகவும் எச்சரிக்கை யாக இருப்பதோடு, இது போன்ற தகவல் களைப் படிப்பதோடு மறந்து விடாமல், நடைமுறையில் அன்றாடப் பழக்க வழக் கங்களை கடைப்பிடித்தல் அவசர அவசிய மாகும்!
- கி.வீரமணி
விடுதலை,7.6.16

ஞாயிறு, 5 ஜூன், 2016

மூளையை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்



நமது மூளையின் சக்தியும், உழைப்பும் மிக மிக முக்கியமானதல்லவா?
மூளையின் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகள், நோய்கள்கூட நம்மை எளிதில் அண்டாது விரட்டி விடலாம்!
அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது, நமது உடல் நலத்திற்கு மிகவும் உதவிடும் அரண் ஆகும்!
எந்த ஆபத்து நம் உடலின் எப்பகுதிக்கு வருவதாக இருப்பினும் முதலில் அபாய மணி ஒலியை அடித்து நம்மை எச்சரிக்கை செய்வது அதுதானே!
அது மட்டுமா பாலியல் உணர்வுக்கும் அங்கிருந்துதான் ஆணையும், ஆயத் தமும் பிறக்கிறது என்பதை பல பாலியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையைச் சரிவர இயங்க விடா மல் பாதிக்கச் செய்யக் கூடிய - நாம் கவனமாக, தவிர்க்க வேண்டிய 10 செய்திகளை, இணையத்தின் வழி, நமது அருமை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
(இதுபோன்ற பல்வேறு பயனுள்ள சுவையுள்ள செய்திகளை நம்மைப் போன்ற நண்பர்கள் வட்டத்திற்கு தவறாது அனுப்பி மகிழ்பவர் அவர்!)
அந்த 10 செய்திகள் இதோ: படிப்ப தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். நடை முறைப்படுத்தி, நலம் காப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் நண்பர்களே.
1. முதலாவது தவறு
காலைச் சிற்றுண்டியைப் புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது.
நமது வீட்டிலுள்ள பல வயது வந்த மாணவர்கள் - பிள்ளைகள்கூட இதில் - தவிர்ப் பதில் குறியாய் இருக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று அவசர அவசரமாக “அரக்கப் பறக்க” ஓடுவதினால், காலைச் சிற்றுண்டியை அலட்சியப்படுத்தி, பட்டினியோடு வகுப்பிற்கு அல்லது வேலைக்குச் செல்லுவது, மூளையை கெடச் செய்யும், (ரத்த  ஓட்டத்தைக் குறைத்து சோர்வைப் பெருக்கச் செய்யும் - அதனால் கவனக் குறைவும், குறிப்பாக கவனக் குவிப்பைச் (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtமீ) செய்ய இயலாமல் போய் விடும்.
ஆங்கிலத்தில் ‘ஙிக்ஷீமீணீளீ திணீst’ என்பது சரியான காரணப் பெயர் ஆகும். இரவு உணவு முடித்து பட்டினியாக இருந்தால், வயிற்றின் செரிமான உறுப்புக்கள் உணவுக்காக ஏங்கும் நிலையும் திரவம் சுரக்கும் தன்மையும் வயிற்றின் பல பாகங்களில் நாளா வட்டத்தில் புண்கள் - ‘அல்சர்’கள் ஏற்படவும், சோர்வு ஏற்படவும் வழி வரும்.
மேலை நாட்டவர் கணக்குப்படி, காலைச் சிற்றுண்டி போதிய அளவில் எடுத்துக் கொள்வது பல வகையிலும் சக்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.
2. அதற்காக உணவை எப்போதும் அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் கூடாது கூடவே கூடாது!
எவ்வளவு பெரிய விருந்து, சுவையுள்ள உணவு வகைகள் என்றாலும்  ஒரு 25 விழுக்காடு - இல்லை 10 முதல் 15 விழுக் காடு இடத்தையாவது காலி வைத்து சாப்பாட்டை முடிப்பது மிக நல்ல வாழ் வுக்கு உதவக் கூடியதாகும்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும்போதே, கட்டாயமாக திணிக்காமல் உடனே - சபலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு - எழுந்துவிடுதல் மிக அருமையான முறையாகும்!
‘மீதூண் விரும்பேல்’ என்ற மூதுரைதான் எவ்வளவு அருமையான ஒன்று. அதிகம் சாப்பிடுவது உடலை மட்டும் கெடுக்காமல், மூளையையும் கெடுக்கும் என்பது இதன் மூலம் பெறப் படும் மற்றொரு எச்சரிக்கையாகும்.
3. இரவில் நேரங் கடந்து தூங்குவது மிகப் பெரிய கேடு ஆகும்!
உடலுக்கு உணவு எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும் ஆகும்! உரிய நேரத்தில் தூங்கும் பழக்கம், உரிய நேரத்தில் விழிக்கும் பழக்கம், நம் ஆயுளை வளர்க்கும் வழி முறைகளில் ஒன்று!
உணவு, தூக்கம், போதிய ஓய்வு, (தூக்கம் என்பதன் மூலம் ஓய்வு கிடைக்கிறது). வெகு நேரங் கழித்து படுக்கைக்குச் செல்லுவது விரும்பத்தக்கதல்ல. இளமையில் இது ஒரு பழக்கமாகி விட்டால், முதுமையில் அதுவே வழக்கமாகி விடக் கூடும். எனவே இதிலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.
4. நம் உடலுக்கு சர்க்கரை தேவைதான். எதுவும் அளவோடு இருத்தல் எல்லா விதிகளிலும் தலையாய விதியாகும்.
பலருக்கு ‘மீதூண் விரும்பல்’ காரண மாகவும், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனியை கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, போன்ற பலவும் - எல்லா மாவுச் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates)
சர்க்கரையாக மாறி நமது உடலில் சேரு கின்றன. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை.
நிறைய சர்க்கரையை உருவாக்கிடும் உணவுகள் எவையாயினும் (இனிப்பு மட்டுமே என்று எண்ணாதீர்!) அது நமது கணையத்தை மட்டும் பாதிப்பதில்லை; மூளையின் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது எச்சரிக்கை, என்று இதன் மூலம் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
- கி.வீரமணி
(தொடரும்)

5. சதா தூங்கிக் கொண்டே இருக்கும் ‘தூங்கு மூஞ்சிகள்’ பலரை நாம் பார்த்துள்ளோம்; ஓய்வுதானே - விடுமுறைதானே என்று சமாதானம் கூறி, படுக்கையையே இருப்பாகக் கொண்டு தூங்கிடும் நபர்களும் இந்த மூளை பாதிப்புக்கு ஆளாகக் கூடும்!
பலர் ஓய்வு - “இளைப்பாறுதல்” (Relaxation) என்பதை சதா தூங்குவது என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
‘நல்ல பொழுதையெல்லாம் நாளும் தூங்கிக் கழித்த சோம்பேறிகளைப்’ பற்றிதான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பட்டுக்கோட்டை கவிஞர் கல் யாண சுந்தரம் பாடி எச்சரித்தாரே அது நினைவிற்கு வருகிறதா?
6. சாப்பிடும்போது, தொலைக் காட்சியில் படம் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, கணினியில்  வேலை செய்து கொண்டே சாப்பிடுவது என்பது மிகப் பெரிய கேடு. இது கட்டாயம் தவிர்க்கப்பட்டாக வேண்டும்!
உணவை நாம் உட்கொள்வது அடிப்படை உடல் நலப் பாதுகாப்பு - இன்றியாமையாக் கடமை. மற்ற வேலைகளை உணவினை முடித்து விட்டு செய்தால் என்ன குடியா மூழ்கிப் போகும்! எனவே இந்தத் தவறை செய்வதை நாம் அனைவருமே தவிர்த்தல் அவசியம்! அவசியம்!!
7. தூங்கும்போது தலைக்குல்லாயுடன் தூங்குவது, காலில் (உறை) சாக்ஸ் Socks) அணிந்து கொண்டே தூங்குவதும் மூளையின் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இயங்கும் சக்தியையும் பாதிக்கும் என்பது மற்றொரு முக்கிய எச்சரிக்கையாகும்.
8. எட்டாவது எச்சரிக்கை - கவனத்தில் கொள்ள வேண்டியது. (மூளையின் ரத்த ஒட்ட பாதிப்பைத் தடுக்க)
பல்வேறு காரணங்களால் நாம் உடல் நலக் குறைவுடன் உள்ளபோது, (படுக்கையில் இருந்து கொண்டே) மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் ஈடுபடுதல் கூடாது. இழுக்க முடியாத சுமையை என்ஜினுக்கு அளிப்பதுபோல.
9.  அதிகம் - சதா பேசிக்  கொண்டே இருப்பது , சிலர்  சளசளவென்று சதா - Non Stop  எஞ்ஜின் மாதிரி பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களைப் பேசவிடாமலும், மற்றவர்கள் நாம் பேசுவதை விரும்புகிறார்களா? கேட்கிறார்களா? கவனிக்கிறார்களா? முகச் சுளிப்பை மிக நாசூக்காக வெளிப்படுத்துகின்றனரா? என்பது பற்றியெல்லாம்கூட சிறிதும் கவலைப்படாமல் பொத்தானை அழுத்திய டேப்ரிக்கார்டரைப்போல் பேசிக் கொண்டே இருப்பது மூளைக்குக் கேடு செய்வதாகும்! (அதற்காக எல்லோரும் மவுன சாமியாராக மாறி விட வேண்டும் என்பது பொருளல்ல - அளவுக்கு அதிகமாகப் பேசுவோர் தேவைக்கு அதிகமாகப் பேசும் ‘தொணதொணப்பை’ நிறுத்துவது நல்லது. சிலர் தொலைபேசியையே இப்படிப்பட்ட பேச்சுகள் மூலம் ‘தொல்லைப் பேசியாகவும்’  ஆக்கி விடுகிறார்கள். அது தவிர்க்கப்படல் நன்று.
10. ‘சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போது, அதனை தவிர்த்தலோ, தள்ளிப் போடுதலோ கூடாது’
சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் இது பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் மறுப்பதிற்கில்லை. அதிலும் வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் மூத்திரத்தை அடக்கக் கூடாது; அது விரும்பத்தக்கதல்ல. பலரால் அடக்க முடியாது அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவது உண்டு. இது சிறுநீரகத்தில் கற்களை (Stones)
உருவாக்கக்கூடும், இதற்குக் காரணம் இப்படி மூத்திரத்தை அடக்குவது என்றுதான் பலரும் - மருத்துவர்கள்கூட - கூறக் கேட்டதுண்டு.
ஆனால், இப்போது மூளைப் பாதுகாப்பு சம்பந்தமாக வந்துள்ள எச்சரிக்கைகளில், இப்படி அடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது மற்ற உறுப்புகளைவிட மூளையை  - அதன் சக்தியளித்தலை - அதன் பணிகளை வெகுவாகப் பாதிக்கும் என்றும் பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டுள்ளது!
சாதாரண நமது வெகு மக்கள் எளிய பழமொழியைக் கூறுவார்களே, “ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது’ என்று அது எவ்வளவு நூற்றுக்கு நூறு பெரிய மருத்துவ உண்மை அடங்கியுள்ள அனுபவக் கருத்து பார்த்தீர்களா?
எனவே, நாம் அனைவரும் கவனத்துடன் இந்த 10 தவறுகளையும் தவிர்த்து நல்வாழ்வு வாழ முயலுவோமாக!
- கி.வீரமணி
-விடுதலை,1,2.3.16