பக்கங்கள்

வியாழன், 26 ஜூலை, 2018

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!



தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இன்று இளைஞர், மாணவர் உலகத்தால் பெரிதும் காதலிக்கப் பட்டு ஈர்ப்புக்கு உள்ளான புவி ஈர்ப்பு சக்திகள்!

'ஈரோட்டுப் பெரியாராகி' - தமிழ் நாட்டுத் தந்தையாகி, திராவிடர்களின் இன முரசாகி, இந்திய சமூக நீதிப் பேரொளியாய் ஆகி, இன்று உலகம் தொழும் மண்டைச் சுரப்புக்குச் சொந் தக்காரர் ஆவார் உலகத் தலைவர் பெரியார்.

சில விளம்பரந்தேடிகளும், வியாக்யான கர்த்தாக் களான ஒரு சில ஏடுகள் - பெரியார் கருத்தின் கொள் கைகளில் எதிரிகளின் 'அபார' விளம்பர 'சடகோபம்' கிட்டும் என்ற எண்ணியவர்கள், தந்தை பெரியார் பற்றி தாழ்த்தப்பட்ட சமுதாய நம் சகோதரர்களின் குறிப்பாக புதிதாக வரும் மாணவர், இளைஞர்களிடையே ஒரு தவறான புரிதலை திட்டமிட்டு ஏற்படுத்த உண்மை யல்லாத குற்றச் சாற்றுகளை உலக விட்டார்கள்!

சருகுகள் மரத்தின்மீது விழுந்தாலோ, மரங்கொத் திகளாலோ எந்த மரமும் சாய்ந்து விடாது என்ற கருத்தியலால் நாம் (தி.க.வினர்) அவர்களுக்குப் பதில் சொல்வதில்லை.

ஒருபொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மைபோல் மக்களிடம் வலம் வந்து நிலை பெறும் என்று இன்றும் சில பொய் - புனைவு - புரட்டு வியாபாரம் செய்வோர் பற்றி, தந்தை பெரியார் அலட்டிக் கொண்டதே இல்லை; அலட்சியப்படுத்தியே தனது பணியைத் தொடர்ந்தார்.

முன்புபோல இல்லை - அறிவியலின் அருங் கொடையான இணையம் வந்த பிறகு தொற்றுநோய்க் கிருமிகளைவிட, இந்த புரட்டுக் கிருமிகள் வேகமாக ஒரு ரவுண்டு உலகை வலம் வரத் தொடங்குகின்றன. பிறகு அற்ப ஆயுள் என்பதால் இருக்குமிடம் தெரியாமல்   முடங்குகின்றன!

என்றாலும் இந்த தொற்றுநோய் கிருமிகளால் நம் இளையர்களின் மூளைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு விடக் கூடாது என்ற மருத்துவ நோக்கு போல் தமிழ்நாட்டின் தலை சிறந்த பத்திரிக்கையாளர் - எழுத்தாளர் - ஆசிரியத் தகுதியாளர்  ஆகிய சிந்தனையாளர் ப. திருமாவேலன் அவர்கள் ஒரு அரிய கருத்துக் கரு வூலப் பேழையை, கடுமையான உழைப்பின் மூலம் 'பிரசவித்துள்ளார்'.

அது 'இயற்கைப் பிரசவம்'  - செயற் கையான அறுவை சிகிச்சையைப் போன்றதல்ல. சிந்தனையும், உழைப் பும் ஈன்றெடுத்த அரியதோர் நூல் - அற்புதப் படைப்பு.

"ஆதிக்க சாதிகளுக்கு' மட்டுமே அவர் பெரியாரா?" என்ற கேள்விக் கணையால், பொய்மையை, ஆயிரம் ஆதாரச் சான்றுகளால் சல்லடைக் கண்ணாகத் துளைத்து புரட்டர்களின் பொல்லாங் கினை பொடிப் பொடி யாக ஆக்கியுள்ளார்!

நாம் புளகாங்கிதம் அடைந்து பூரிப்பால் மகிழ் கிறோம். தோழர் ப. திருமாவேலன் அவர்கள் பெரியார் திடலின் விளைச்சல்! வீரிய விதைகள்  ஒரு போதும் வீண் போகாது; பாதுகாக்கப்பட்டு உழவாரத்திற்குப் பின் உயர் தனி ரகம் என்று உயரத்தை, ஒப்புக் கொள்ளாத வர்களே இல்லை என்ற அளவுக்கு எந்தப் பிரச் சினைபற்றி அவர் எழுதினாலும் அதை மறுப்போர் வெற்றி பெற இயலாது; காரணம் சரக்கு அவ்வளவு உயர்ந்தது - உண்மைகளின் தொகுப்பே!

தந்தை பெரியாரை விமர்சித்தால், தங்களுக்கு தனி விளம்பரம் எளிதில் கிடைக்கும் என்ற சில தலையில்லாத தகைமையாளர்கள் எழுதியது எத்தகைய புரட்டு - இமாலயப் புரட்டு என்பதை இவர் எதிர் கொள்ள முயன்றது எழுத்துலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டு!

இந்நூல் தந்தை பெரியார் அவர்களின் உரைகள், எழுத்துகள் - தக்க தரவுகளாகி ஆவ ணங்களால் அறைந்து உலுக்கு கின் றன. பொய் மூட்டைகள் பொல பொலவென, கலகலகத்து காணாமற் போகும்!

எப்போதும் உண்மைக்கு ஒரு முகம்தான் ஆனால் ஒப்பனைக்கோ ஆயிரமாயிரம் பொய் முகங்கள்! போலித்தனப் பொலிவுகள்!! இவரது எழுத்தின் வெப்பத்தால்  சாம்பலாகிக் கரைந்தோடி கலக்க வேண்டிய இடத்தில் கலந்து விட்டன.

இந்நூல் தந்தை பெரியார்பற்றிய புரிதலுக்கு இது ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சம்! நுண்ணாடி! பொய்க் கிருமிகளின் நெஞ்சத்தை நெற்றியடி வாதங்கள் மூலம் தவிடு பொடியாக்கும் தகத்தகாய முயற்சி!

நன்றி மறந்த மக்கள் மத்தியில் நன்றிக்குத் திருவிழா எடுக்கும் நன்றிக்கொத்து சாசனம்.

இது அவரது எழுத்துச் செல்வங்களில் பதினைந் தாவது இந்த புதுமைப் படைப்பில் பதினாறு தலைப் புகளில் பலமுள்ள தரவுகளைக் கொண்ட காலத்தை வெல்லும் கருத்து ஆவணம்!

ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பதுடன் தங்களின் வீட்டு நூலகத்தின் கருத்து ஒளி வீச்சாக்கிட வேண்டும்!

இந்நூல் முழுவதும் பக்கத்துக்குப் பக்கம் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின், காரிருள் விரட்டும் கதிரொளி.

அவர்தாம் பெரியார்!

அவர் அனைவர்க்கும் உரியார்!

நரியார் இதை அறியார்!

உரியாரை உணரவைக்கும் மாமருந்து இந்நூல்!

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!

- விடுதலை நாளேடு, 26.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

இளைஞர்களே, இன்ப வாழ்வு வாழ இதோ வழிகள்! (2)


6. இளைஞர்களே - உங்களுக்குப் பிடித்தமான ஒரு பணியை - உங்கள் அறையை அலங்கரிப்பதோ, நீங்கள் தங்கியுள்ள வீட்டில் ஒளிவிளக்கு அலங்காரம் செய்தலோ அல்லது தனியே இருப்பவர்கள் தாங்களே அடுப்பைப் பற்ற வைத்து, சமைக்க முயற்சித்து 'சமையல் எனக்கும் தெரியும்' என்ற பெருமிதம் கொள்ளவோ, எஞ்சிய நேரத்தில் நடைபயிற்சி செய்து - இயற்கையழ கினை ரசித்தோ - வாழ்க்கையின் பிற இன்பங்களையும் அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.

7. உங்கள் மனதிற்குள் ஆயிரம் பிரச்சினைகள் ஏற்பட்டு உங்கள் மூளையைக் குடையலாம்; அதனால் நீங்கள் மன இறுக்கத்திற்குக்கூட ஆளாகக் கூடும். அதனைத் தவிர்ப்பதற்கும், மனதை லேசாக ஆக்கிக் கொள்ளும் வகையில், மனம்விட்டு உங்களுக்கு வேண்டியவர்களிடம் அல்லது உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவிழ்த்துக் கொட்டி விட்டால், மனபாரம் குறையும். மகிழ்ச்சி  ஊற்று தடைபடாது! இதய நோய்க்கு விடை கொடுத்து அதைத் துரத்திடவும் முடியும்! தேவைப்பட்டால் மதியுரைஞர்களை ஆலோச னைக்கு (சிஷீuஸீsமீறீறீவீஸீரீ ஷிமீssவீஷீஸீ)  அணுகுவதில்கூட தவறில்லை. அதற்காக அச்சமோ, கூச்சமோ படத் தேவையே இல்லை.

8. எல்லா நேரங்களிலும் மன உறுதி குலையாதிருப்பது வாழ்க்கையில் எளிதான செயல் அல்ல. உபதேசிப்பது சுலபம்; ஆனால் அதை நடைமுறையில் கொண்டு வந்து நிலை நிறுத்திட நிறைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். நம்மில் பலரும் பிரச்சினைகள் ஏற்படும் போது அதிகமான கவலையையும், பயத்தை - பீதியைத் தான் பெறுகிறோமேயன்றி, தீர்வு  நோக்கி நமது சிந்தனைகளை ஓட்டுவதில்லை.

கவலையோ (ஷ்ஷீக்ஷீக்ஷீஹ்வீஸீரீ),  பயமோ (திமீணீக்ஷீ)  பிரச் சினைகளைத் தீர்த்து விடாது ஒருபோதும்! மாறாக, அது பற்பல நேரங்களில் உடல் நிலையையும்கூட பாதிக்கும் நிலை தான் ஏற்படக் கூடும்.

எல்லா நேரமும் நாளில் 'இருட்டு' கிடையாது. இருட்டின் விடியல் வெளிச்சத்தில் துவங்குகிறது என்று நன் நம்பிக்கையுடனும், துணிவுடனும் தீர்வைத் தேடுங்கள், சரியான விடை கிடைக்கவே செய்யும்!

பயிற்சி காரணமாக இது படிப்படியாக வருமே தவிர, ஒரே நாளில் - எடுத்த எடுப்பிலே வந்துவிடாது இளையர்களே!

'ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு அனுபவம்' என்று கருதி எதிர் கொண்டால் வெற்றி என்ற வெள்ளி முளைப்பது தெரியும்.

9. நமது உறவுக்காரர்கள்கூட சில நேரங்களில் சரியான காரணமில்லாமல் நம்மிடம் குற்றங் காணும் வகையில் நம் உறவில் விரிசல் ஏற்படும்  வண்ணம் புண்படுத்திடும் நேரத்தில் இனி இந்த உறவே கூடாது என்று அதை முறித்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்குக் கோபம் 'பொத்துக் கொண்டு வரக் கூடும்!'

அதைப் பின்னுக்குத் தள்ளிட இளமையிலிருந்தே பழகுங்கள் - 'பட்டிமன்றங்கள் நடத்தி, வாதாடி வெற்றி பெறுவதால்' நமக்கு  கணநேர இன்பம் மட்டுமே; எஞ்சிய வாழ்நாள் முழுதும் இழப்பே என்பதை எண்ணி பொறுத்துப் பழகுங்கள்; உறுத்துப் பார்க்க நினைக்காதீர்கள்!

'ஒருவர் பொறை; இருவர் நட்பு' என்ற முது மொழியினை நடைமுறைப்படுத்தி, உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்; அதன் மூலம் உங்கள் உறவையும் நட்பை - தோழமையையும் வைப்பு நிதியாகவே வளர விடுங்கள்! புரிகிறதா? கவிழ்ப்பது நொடிப் பொழுது; கட்டுவது சேர்ப்பது பல நாள் - பல ஆண்டு!

பல நாள் - பல மணி நேரம் நெய்த ஆடையை சில மணித்துளிகளிலே கிழித்து விட முடியுமே! மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா? யோசியுங்கள்!

10. எல்லாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைமைகளிலும் சரியாகவே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அப்போது நாம் அந்த உலகியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விட்டுக் கொடுத்துப் பழகிட பாடம் கற்றுக் கொள்ளுதல் வாழ்வின் வெற்றிக்கு மிகவும் தேவை.

'எந்த சூழ்நிலையிலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்' என்பதை இளமையிலிருந்து பயிற்சி பெற்ற வாழ்வாக உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் நமக்குத் தரும் பிச்சை அல்ல. மாறாக நம் உள்ளம் நமக்கு வழங்கும் கொடை! அதை ஊற்றாக ஆக்கிக் கொள்ள இடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி விட்டு ஊற்றுத் தண்ணீரை, அதன் சுவையை நீங்கள் ருசித்திட வேண்டாமா? இளைஞர்களே, 'இளமையிற்கல்' என்பது இதுவும்தான், மறவாதீர்!

- விடுதலை நாளேடு, 2.7.18

ஞாயிறு, 1 ஜூலை, 2018

இளைஞர்களே, இன்ப வாழ்வு வாழ இதோ வழிகள்! (1)



அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளரும் இந்நாட்களில் சராசரி ஆயுளும் முன்பைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பெருகியுள்ளது.

அதுபோலவே புதுப்புது வகை தொற்றுநோய்களும் ஒரு நாட்டிலிருந்து கிளம்பி, மற்ற நாடுகளுக்குப் பரவி, எளிதில் படையெடுப்பை வெற்றிகரமாக ஆக்கி மருத்துவ உலகிற்குச் சவால் விடுகிறது!

முன்பு காற்று, நீர், நில வெளி எல்லாம் தூய்மையாகவே இருந்தன. சுற்றுச்சூழல் மாசுபடவில்லை; இன்றோ வெப்ப சலனம் ஒரு பக்கம் - காடுகளை அழித்த மனிதர்களின் கொடுஞ் செயல் மற்றொரு பக்கம்! இவைகளால் புதிய நோய்களும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இளம் வயதுக்காரர்கள்கூட இதய நோயால் தாக்குண்டு இறந்து விடும் நிகழ்வுகள் இப்போது மிகச் சர்வ சாதாரணமாகியுள்ளது!

இளையவர்கள் இதிலிருந்து தங்களைக் காப்பாற்ற நல வாழ்வு வாழ; மிகுந்த அக்கறையும், கவனமும் உடல் நலத்திற்காக காட்டிட முன் வருதல் அவசியமாகும்!

இளையர்களுக்குக்கூட இதோ ஒரு 10 வழிகள்: இதனை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் நலவாழ்வு நீண்ட வாழ்வாக ஆக முடியும்.

1. முதலில் நீங்கள் 'தனிக்காட்டு ராஜா'வாக இல்லாமல், நல்ல, கலகலப்பாகப் பேசிப் பழகும் நண்பர்கள் குழாத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அவசியம். அதுவே உயிர்க் காப்பான் தோழன் என்ற உண்மையை உங்கள் வாழ்க்கையுடன் அமைத்துத் தரும்.  இளவயதினருக்கும்கூட மன அழுத்தம் - இறுக்கம் - பணிச் சுமையினாலோ  அல்லது எதிர்பார்த்த வேலை கிட்டாததாலோ, கிட்டிய வேலையும் முழு மன நிறைவைத் தராததாலோ, அல்லது நிரந்தரமல்ல என்ற பயம் காரணத்தாலோ, அந்த அழுத்தம் கூடக் கூடும்.

அதற்குச் சரியான மருந்து, நல்ல நண்பர்கள் வட்டம்தான். நகைச்சுவை உணர்வு வாழ்க்கைச் சாப்பாட்டின் உப்புப் போன்றது. அவ்வுணர்வுடன் சில நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; வாய்விட்டுச் சிரியுங்கள். மன அழுத்தம் மலையென வந்தாலும் பணியென உருகிக் கரைந்தோடி  விடும். அவர்கள் நீங்கள் விரும்புபவர்களாகவும், உங்களை அவர்கள் நேசிப்பவர் களாகவும் இருப்பதே முதல் தகுதி அதற்கு.

2. அண்மைக் காலத்தில் விஞ்ஞான விந்தையான தகவல் தொழில் நுட்பப் புரட்சியினால் விளைந்த மின்னணுவியல் கருவிகள், அவைகளை வைத்து சமூக ஊடகங்களில் (Social Media)  அதிகமான நேரம் செலவழித்து, உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் தேவையான அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களுக்கு அது கட்டுப்பட்டதாக வேண்டும். அதற்கு நீங்கள் கட்டுப்பட்டவராக மாறிட வேண்டாம்!

3. உங்களின் நலத்தில் நீங்கள்தான் தனி அக்கறை எடுத்துக் கவனிக்க வேண்டும்; உடல் நலத்தைப் பேண 'வாய்தா' வாங்கும் முறை - 'நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போட்டு தன்னையே இழந்து   விடாதீர்கள். அவ்வப்போது உடனுக்குடன் அதனைச் சரி செய்து கொள்ளுங்கள். பழுதடைந்த வாகனங்களைக்கூட உடனே சரி செய்தால்  பயணத்தை மேலும் தொடர முடியும்? தள்ளிப் போட்டால் பயணம் இல்லை என்றாகிவிடாதா? - சிந்தியுங்கள். மேலும் 'நாளை' என்பது நம் திட்டப்படி சரியாக வருமா? அவசர நிகழ்வுகளின் குறுக்கீடு வருமா? யாரும் கூற முடியாது!

'இன்று' என்பது முழுக்க நம் கைகளில் மட்டுமே உள்ளது!  எனவே விரைந்து காலதாமதம் இன்றி உடல் நலம் பேணுங்கள்.

4. இளைஞர்கள் முதல் முதியோர்வரை அவரவர் உடலுக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப உடற்பயிற்சி செய்ய - உணவு உண்ணுதலைப் போலவே நேரம் ஒதுக்கி செய்யப் பழகிக் கொள்ளுங்கள்!

நாளும் தவறாமல் செய்யும் பழக்கம் உடலைப் பாதுகாக்கும். பழக்கம் பிறகு வழக்கமாகி சோம்பலை அதுவே விரட்டி விடுவதில் தனி வெற்றி காணும்.

5. கடினமாக உள்ளது நாம் செய்யும் வேலை என்று கருதி ஒதுக்காதீர்; தள்ளிப் போடாதீர்!

முதலில் எதுவும் கடினமாகவே தோன்றும்; பிறகு செய்யச் செய்ய அது உங்களுக்கு எளிமையாகி விடுவது உறுதி! கடின வேலையைத் தேடுங்கள். இலகுவான வேலை வேலையே அல்ல என்று மனதில் உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிக்கலைத் தீர்ப்பது தான் சிறந்த அறிவின் வெளிப்பாடு. கடினமான பணி மூளைக்கும், உடலுக்கும் - இரண்டுக்குமே நல்லதொரு பயிற்சிக் களம், மறவாதீர்!

(திங்கள் தொடரும்)

-  விடுதலை நாளேடு, 30.6.18