பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தமிழனே, இது கேளாய்! (பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் )

 

கடந்த ஒரு திங்களுக்கு முன் எனக்குக் கிடைத்த சிறப்பான நூல் "ஆற்றல் மிகு அருங்கவிஞர் வா.மு.சே." என்ற வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய நூல் அவரது நூற்றாண்டு விழா வெளியீடாகதமிழ்மணி புத்தகப் பண்ணையினர் பதிப்பித்துள்ள நூலாகும்.

வல்லிக்கண்ணன் முதுபெரும் எழுத்தாளர் மட்டுமல்லமுற்போக்குப் புரட்சிகர சிந்தனையாளர் ஆவார்அவர் எத்தகைய திறமைமிகு திறனாய்வு அறிஞர் என்பதை இந்நூல் உலகோர்க்கு புலப்படுத்துவதாக அமைந்துள்ளது!

பெருங்கவிக்கோ வா.முசேதுராமன் அவர்களைப் பற்றியதுதான் இந்நூல்.

வாழும் கவிஞர்களைஅறிஞர்களைதலைவர்களைவித்தகர்களை அவர்களது திறமைக்கும்ஆற்றலுக்கும்தமிழ்த் தொண்டுக்குமாக மனமுவந்துப் பாராட்ட முதலில் பலர் முன் வருவதில்லைநிறையைக் காணுவதைவிட குறையைப் பெரிதுபடுத்தியே தமிழ்ச் சமுதாயம் தன்னை வீழ்த்திக் கொண்டே உள்ளது.

பாராட்ட நல்ல மனம் வேண்டும்சிறந்த குணம் வேண்டும்பலருக்கு அது வருவதில்லைஅதிலும் விளம்பர வெளிச்சம் பட்டுவிட்டவர்கள் தங்களை மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதை ஒரு வழிப் பாதையாகவே ஆக்கிக் கொண்டு தாங்களே தங்களுக்குக் கூண்டு போட்டுக் கொள்வர்!

ஆனால் வல்லிக்கண்ணன் போன்றோர் எழுத்துப் பணிகள் நாட்டிற்கு நிறைய தேவை.

அதிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அதிகம் தேவை!

"பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள் அதுசரியான நோக்கு இல்லை

பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றி பேசுகிறவர்கள்கூட பாரதிதாசன்கண்ணதாசன்பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என சில பெயர்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்இதுவும் முழுமையான பார்வை ஆகாது!"

சரியான இலக்கிய சாட்டையின் சொடுக்கு இது!

ஆயிரம் மலர்கள் மலர்ந்தால்தான் தோட்டத்திற்குப் பெருமை - மணமும் வீசும்,

".. ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள்படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர்கள் எண்ணிக்கைக் குறைவுதான்கவிதைகளை அதிலும் மரபு வழி படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப் படித்து விட்டுத் தடாலடியாக அபிப்ராயம் சொல்கிற இயல்பு - ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிறபோக்கு வளர்ந்துள்ளதுஇந்நிலை மாற வேண்டும்."

இப்படி யதார்த்தத்தை உள்ளடக்கிய நூலின் முன்னுரையில் வல்லிக்கண்ணன் நல்ல அறிமுகத்துடன் தனது நூலை - திறனாய்வு போன்ற பெருங்கவிக்கோவின் படைப்புகளின் சுவடாய் நமக்குத் தருகிறார்!

அவரது நூற்றாண்டில் இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது!

அதில் உள்ளவற்றில் சில பருக்கைகள்நமது இலக்கிய பசியாற்ற கொள்ளை இன்பம் குலவும் கவிதைகள் என ஏராளம் உண்டு என்ற போதிலும் - இக்கட்டுரையை - வாசக நேயர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சம்மட்டி அடி கொடுக்கிறார் - தனது எழுதுகோலை அறிவாயுதமாக மக்களுக்குச் சூடு போட்டு சொரணை ஏற்ற சுயமரியாதை உணர்வுடன், 'எக்ஸ்ரேபார்வையோடுதமிழர்களில் பலரும் எப்படி இருக்கின்றனர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறார்!

"தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றைய தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப்பின் வாங்குவதில்லை.

தமிழனுக்குப் பகை யார் எனக் கேட்டு இந்தத் தமிழன்தான்தமிழன்தான்தமிழன்தான் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

"நன்றியைச் சொல்வதில்லை - அன்றாடமாச்சு

நம்பினபேருக்கு துரோகம் செய்வதே மூச்சு

பன்றிகள்போல் அலைந்து பணம் பற்றியே பேச்சு

படித்தவன்கூட அய்யோபண்பினை விடலாச்சு!

...............................

காட்டிக் கொடுப்பதிவன் கைவந்தகலை என்பான்

கண்மூடித் திறக்குமுன்னே காதகக் கொலைசெய்வான்

ஊட்டி வளர்த்த தமிழ் உயர்வுக்கு உலை வைப்பான்

உண்மையைத் துணிந்து செய ஊமஞ்சி சிலையாவான்"

என்று ஓங்கி அடிக்கிறார் பெருங்கவிக்கோ!

அது மட்டுமா?

வல்லிக்கண்ணன் தொடர்கிறார்.

"பெருக்கவிக்கோவின் புதிய பார்வைக்கும்,

புதிய சிந்தனைக்கும் சான்றாக,

"கோவிந்தன் கொடுங்கோலன் - கடவுள் எனக்குக் கடன்காரன்என்று அவர் பாடியுள்ள பாடல்களைக் குறிப்பிட வேண்டும்.

"கோவிந்தா கோவிந்தா என்றொருவன்

குரலெழுப்பிகொடும் வெய்யில்

சாலையிலே உருள்கின்றான் வயிற்றுக்காய்,

"கோவிந்தா கோவிந்தாஎன்றே மற்றொருவன்

கோபுரம்போல் மாளிகையில்  பணச் செருக்கில் புரள்கின்றான்

கும்பிட்ட இருவருக்கும் கொடுத்ததிலே வஞ்சமென்றால்

கும்பிட்ட ஒருவன் நீ கொடுங்கோலன் அன்றோசொல்!"

என்று திருப்பதி ஏழுமலையானைக் கேட்கிறார் கவிஞர்.

"வம்புக்குச் செல்லும் வடவேங்கடத்தானே வந்துகுவிகின்ற பொருள் உனக்கு ஏன்வறியார்க்கே தந்து விடுஎன்கிறார் பெருங்கவிக்கோ.

இப்படிப் பல அருமையான வகையில் பெருங்கவிக்கோ என்பதற்கு முழுப் பொருள்பருப்பொருள் - தருகிறார் வல்லிக்கண்ணன்.

நல்ல திறனாய்வு!  மனந்திறந்த பாராட்டுகள்!!

பெருங்கவிக்கோ‘ அவர் - எப்படிஎதனால்என்பதற்கு சான்றாவணம் இந்நூல்.  இதை வாங்கி படியுங்கள்!

சமூகநீதிக்கு - இதோ ஓர் அறிவாயுதம்!

 

கரோனா காலத்து இடர்ப்பாடுகளிலும்இன்னல் சூழ்நிலைகளிலும்கொள்கை உறவு களும்கொண்ட நட்புறவுகளும் பலர் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பரிதாபம் நம்மை வாட்டி வருந்த செய்கிறது.

என்ன செய்வதுஇது நம்மால் பரிகரிக்க முடியாத துன்பம்தான்துயரம்தான் என்றாலும் அதிலிருந்து மீளுவதற்கு ஒரு சிறந்த வழிமேலும் அதிகமாக உழைப்பில் கவனஞ் செலுத்திஉள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளல் என்பதே சரியான வழி முறை!

அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லுதல்சுற்றுப் பயணங்களில் ஈடுபடுவது இப்போது சாத்தியமில்லை என்பதால்சோம்பிக் கிடக்காமல்சுறுசுறுப்பான பணியில் நாட்டம் செலுத்துதல்நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி முறை என்பதை கரோனா கொடுந்தொற்று நம்மில் பலருக்குக் கற்றுக் கொடுத்து வருகிறது.

பயனடைந்தவர்களில் ஒருவன் யான்நிறைய படிக்கஎழுத வாய்ப்புகள் கிட்டியுள்ளன.

"நூலைப்படிநூலைப்படி

காலையில் படிமாலையில் படி

கடும்பகலில் படிஎன்று ஆணையிட்டு அறிவுரை வழங்கும் புரட்சிக் கவிஞரின் வாக்கு செயல்வடிவம் பெற்றுள்ளது என்னைப் பொருத்தவரை -

விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, 'The Modern Rationalist’ - புத்தகங்களை உருவாக் குதல்,  மற்ற நிர்வாகப் பணிகள்ஆறுதல் கூறும் ஒத்தறிவுக் கடமைகள் - இவைகளுக்கு பஞ்சமே இல்லைஎனவே நேரம் பறந்து சென்று விடுகிறது!

பல அரிய நூற்களை படிக்கிறேன்குறிப் புகளை எடுக்கிறேன்எழுதினால் கூட உடனே ‘விடுதலையில் (4 பக்கங்களாக குறுகி விட்ட தாலும்நானே அவைகளை ஆக்கிரமித்துக் கொண்ட குற்றத்தைச் செய்து விடக்கூடாது என்பதாலும் பல விஷயங்கள் நம் வேகத்திற்குத் தடைகளாகத்தான் அமைகின்றன.

தருமபுரி மேனாள் நாடாளுமன்ற உறுப் பினரும் சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவரும்சீரிய கொள்கையாளருமான டாக்டர் செந்தில் அவர்கள் சீரிய சிந்தனையுள்ள எழுத்தாளர் - பல நூல்கள் எழுதியுள்ளார்நான் அவைகளைப் பற்றி எழுதியுமுள்ளேன்.

அவர் நல்ல மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளார் என்பது அண்மையில் அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் இந்தியாவின் நிகர் நோக்கு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அஸ்வினி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நூல் ‘Affirmative Action in India’ என்ற நூல் ஆகும்.

அவர் அனுப்பியிருந்ததை படித்து முடித்து பல நாள் ஆனபோதிலும்வாழ்வியலை எழுதஅதன் வரிசை இப்போதுதான் வாய்த்தது போலும்காரணம் நேர நெருக்கடிஏட்டில் இட நெருக்கடிஇப்படிப் பல நெருக்கடி.

'மிக அருமையான நூல்என்று கூறுவதற்கு முன் நல்ல புரியும்படியான கருத்தமைவு கெடாத தமிழாக்கம் - அருவி நீரோடை போல!

'இடஒதுக்கீடுஆங்கிலத்தில் பல நாடுகளில் பல பெயர்களில் நடைமுறையில் உள்ளன.

நம்மில் பலருக்கும் Reservation (’இட ஒதுக்கீடு’) என்பது, ‘சமூகநீதி’ என்றும், 'வகுப் புரிமைஎன்றும் இப்படிப் பல பெயர்களில் அக்கொள்கை தலைப்பிடப்பட்டு விளக்கப் படுகிறது.

Affirmative Action  என்பது அமெரிக்க அரசு சார்பில் தரப்படும் இடஒதுக்கீட்டிற்கு அளிக்கப் படுகிற பெயர்.

அதன் கருத்தாக்கம் அப்படியே புரியும் வகையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாக்கம்தான் ‘நிகர்நோக்கு’ என்ற டாக்டர் செந்தில் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

சென்னை பாரதி பதிப்பகத்தார் வெளியிட்ட இந்த அருமையான தமிழ் நூல், 168 பக்கங்கள் கொண்டதுவிலை 175 ரூபாய்.

'இடஒதுக்கீடுபற்றி திட்டமிட்டே குழப்பும் வகையில் தங்களது ஆதிக்கச் சரிவு இதன் மூலம் ஏற்படுகிறதே என்ற பார்ப்பனர் மற்றும் மேலாண்மை ஜாதியினர் திட்டமிட்டுப் பரப்பும் பல பொய்யுரைகளுக்கு தெளிவான மறுப்புகளை அஸ்வினி தேஷ் பாண்டே ஆணியடித்ததுபோல கூறுகிறார்!

அதை நன்றாகஅனைவருக்கும் புரியும் தமிழில் வாசகர் மனதில் பதியும் வண்ணம் மொழியாக்கமாக்கித் தந்துள்ளார் நமது புத்தாக்க எழுத்தாளர் தருமபுரி டாக்டர் செந்தில் அவர்கள்.

இச்சிறிய நூல் சமூகவியலாளர்களை மட்டு மல்லாமல்அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும்,  இந்தியாவில் எடுக்கப்பட் டுள்ள நிகர்நோக்கு நடவடிக்கைகளுக்கான காரணங்களையும் விவரங்களையும் அறிந்து கொள்ளப் பயன்படும் கையேடு என்ற நூலாசிரியர் அஸ்வினி தேஷ் பாண்டே கூறுவது சரியானதே.

 பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில் முத்தாய்ப்பாக இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றி, “மருத்துவர் செந்தில் இம்மொழி பெயர்ப்பின் வாயிலாக சமூகநீதிக்கானப் போரில் கையிலேந்துவதற்காகதமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் அறிவாயுதத்தை அளித்துள்ளார்என்ற கூற்று ஓர் ஒப்பற்ற உண்மை!

  இதுபோன்ற பல நல்ல நூற்களை டாக்டர் செந்தில் மொழி பெயர்த்து தமிழுக்கும் தமிழ் கூரும் நல்லுலகத்திற்கும் தொண்டு செய்கவாழ்த்துகள்!!

தொண்டால் உயர்ந்திடும் எம் தோழர்கள்! ("போடிநாயக்கனூர் நகராட்சி - பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்")

 

பெரியார் தொண்டர்களாகிய நமது இயக்கப் பொறுப்பாளர்கள் பலரும் பற்பல ஊர்களில்அதிக விளம்பரங்கள் இல்லாமல் செய்யும் தொண்டறப் பணிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

'ஒரு ரூபாய் பணி - ஓராயிரம் ரூபாய் விளம்பரம்என்ற இந்த விளம்பர யுகத்தில்கூட, 'பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைஎன்று அமைதியான வழியில் நமது மகிழ்ச்சிக்கும்மனநிறைவுக்கும் நாம் முன்வந்து செய்யும் தொண்டு - பிறர் பாராட்டினாலும் - பாராட்டா விட்டாலும்ஏன் தூற்றினாலும்கூடதொடரும் என்ற தொண்டு  மனப்பான்மையுள்ள தோழர்கள் நமது இயக்கத்திற்கு அணிகலன்கள் போன்ற வர்கள்!

50ஆம் ஆண்டு திருமண நாள் கண்ட தேனி மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மானமிகு தோழர் இரகுநாகநாதன் - சாந்தா ஆகிய வாழ்விணையர்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் ஒரு அரிய தகவல் - இதோ அக்கடிதம்:

"மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

"போடிநாயக்கனூர் நகராட்சி - பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்பற்றிய தகவலுக்காக தங்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

12.12.2012இல் நகராட்சி நிருவாகம் - யாரும் எடுத்து நடத்தத் தயங்கும் எரிவாயு தகன மயானத்தை "பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்என்று என்னால் துவங்கப்பட்ட அறக் கட்டளை வசம் ஒப்படைத்தார்கள்தமிழ்நாட் டிலேயே தந்தை பெரியார் பெயரில் இயங்கும் - எரிவாயு தகன மயானம் இது ஒன்றுதான்.

ஆரம்பித்த ஒரு வருட காலம் மிகுந்த கஷ்டப் பட்டேன்பழைய முறையில் எரியூட்டுகின்ற வர்களைசுற்றுச்சூழல் பாதுக்காக்கக்கூடிய எரிவாயு தகன மயானத்தில் எரியூட்ட உடல் கிடைக்கவில்லைஇறந்தவர்களை இல்லம் சென்று மாலை மரியாதை செய்துவிட்டு "எரிவாயு தகன மயானத்தில் நாங்கள் எரியூட்டித் தருகின்றோம்என்று கேட்டாலும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லைநகராட்சி நிர்வாகமும் முயற்சி எடுத்து - பழைய முறையில் எரியூட் டினால் "இறப்பு சான்றுதரமாட்டோம் என்று சொல்லிஒருவழியாக கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம்.

மாதம் சராசரியாக 40 உடல்கள் எரியூட்டி வந்து கொண்டிருந்த வேளையில் - மே மாதம் மட்டும் 150 உடல்கள் எரியூட்டியுள்ளோம்தேனி மாவட்டத்தில் தேனிசின்னமனூர்கம்பம்கூடலூர்பெரியகுளம் பகுதிகளில் எரிவாயு தகன மயானம் இருந்தாலும் - இந்த கரோனா காலத்தில் இறந்தவர் உடலை வீட்டில் அதிக நேரம் வைத்துக் கொள்ளாமல் உடனே எரியூட்ட வேண்டும் என விரும்பும் வீட்டுக்காரர்கள்  மேற்சொன்ன எல்லா இடங்களுக்கும் போன் செய்தாலும்எந்த நேரத்திலும் எரியூட்டித் தரக்கூடிய இடம் போடி - பெரியார் சமத்துவம் மயானம் மட்டுமே என்று மாவட்டத்தில் உள்ள எல்லோரிடமும் நற்பெயர் எடுத்து வருகின்றது.

நகராட்சி நிருவாகமும், "எந்த நேரத்தில் வந் தாலும் காக்க வைக்காமல் எரியூட்டி விடுங்கள்என்று அறிவுறுத்தியதினால்இரவு - பகலாக மானமிகு சுருளிராஜ் அவர்களின்   மேற்பார் வையில்எனது கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

மே மாதம்

இயற்கை மரணம் - 77, மருத்துவமனை மரணம் - 34, கரோனா தொற்று மரணம் - 38

எம்மிடம்ஆம்புலஸ்-1, “பெரியார் சமத்துவம்சிறிய தேர் - 1, பெரிய தேர் - 1

Freezer Box-2 - இதைக் கொண்டு போடி நகர மக்களுக்கு மிக சிறந்த தொண்டாக செய்து வருகின்றோம்.

கடந்த 20 ஆண்டுகாலமாக தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மூலமாக முகாம் நடத்துகிறோம்அவசரத் தேவைக்கு தினமும் நம்மை நாடி குருதி கேட்டு வருகின்றார்கள்.

அத்துடன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடை வழங்கி வருகின்றோம்தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடை அளித்து வருகின்றோம்.

மேலும் எங்களின் பணி தொய்வின்றி தொடர தங்களின் வாழ்த்துகள் வேண்டுகின்றோம்."

அன்புடன்

இரகுநாகநாதன்

இடுகாடும்சுடுகாடும் தான் - பேதம் தழைத்துள்ள இந்த ஊளைச் சமூகத்தில் சமரசம் ஏற்படுத்துவதும்அதற்கு உதவுவதும் மரணம்  ஒன்றே!

ஏழைபணக்காரன்உயர்ந்தவன் - தாழ்ந் தவன்படித்தவன் - படிக்காதவன்பதவியாளன் - பதவி இல்லாதவன் என்ற பேதம் மரணத்தின் கண்களுக்குத் தெரியாதுஆனால் அவர்களை அடக்கம் செய்வதில்கூட நம் நாட்டில் எப்படி எப்படியோ பேதம்சிற்சில நேரங்களில் பற்பல இடங்களில் தலைநீட்டிமனித குலத்திற்கு தலைகுனிவை ஏற்படுகின்றன.

பகுத்தறிவாளர்களும்பெரியாரிஸ்டுகளும்  அதனைப் போக்கும் திறன் உள்ளவர்கள்  என்பதை தோழர்கள் இரகுநாகநாதன் - சாந்தாலெனின்சுருளிராஜ் ஆகிய ஒரே குடும்பத் தவர்கள்  அற்புதமான சாதனையை அடக்கமிகு அன்பர்களாகச் செய்துஅப்பகுதியில் மறைந்த வர்களுக்கு மரியாதைப் பணி செய்து கடமையாற் றுகின்றனர்!

இதுபோலவே அதே மாவட்டத் தோழர் ஸ்டார் நாகராஜன் - குருதிக் கொடை அளிப்பதில் பல முறை தனித்து உயர்ந்து நிற்கும் தொண்டறச் செம்மல்!

இயக்கம் இத்தகையோர் தொண்டால் பெருமைப்படுகிறது!

இவர்களோ என்றும் பெறாத இன்பம் பெற்று மகிழ்கின்றனர்!

வளர்க அவர்தம் தொண்டறம்!

பெருகட்டும் இதுபோன்ற நற்பணிகள்!!