பக்கங்கள்

வெள்ளி, 8 அக்டோபர், 2021

இப்படி ஒரு புத்தகமா? - (1)&(2)

 இப்படி ஒரு புத்தகமா? - (1)

பிரேசில் நாட்டைச் சார்ந்த பாலோ கொயலோ என்ற பிரபல எழுத்தாளர் - (இந்த நூல் மூலம்தான் பிரபலமானவர்எழுதிய 'ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் தன்கனவைப் பற்றிச் சொல்லும்ஓர் எளிய கதையாக எழுதிமுதலில் வரவேற்பின்றிபிறகு விற்பனையில் சிகரம் தொட்டு சாதனை படைத்த நூல் (ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பு The Alchemist என்றும்) "ரசவாதிஎன்று திருமிகு நாகலட்சுமி சண்முகம் அவர்களால் சிறந்த முறையில் மொழிபெயர்த்து, 'மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ்பதிப்பகத்தாரால் வெளி வந்துள்ள தமிழ்ப் புதினம் - இது!

இன்றும் வாழும் இந்த பிரபல எழுத்தாளரின் இந்த நூல், 170  நாடுகளில், 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையைப் பெறும் நூல் இந்த "ரசவாதி".

இதுவரை 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகி யுள்ளனவாம்வியப்பின் உச்சமல்லவா?

'பிரேசிலின் அக்காடமி ஆஃப் லெட்ரோஅமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அவர்செவாலியே விருது பெற்றவர்.

2007இல் அய்.நாசபையின் அமைதித் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டவர்.

இந்த நூலில் மதம் பற்றிய குறிப்புகள்கருத்துக்கள் இருப்பினும் (நம்மைப் போன்றவருக்கு மாறுபட்ட  நிலை இருப் பினும்அடிப்படையாக சொல்ல வரும் கருத்துபொக்கிஷத்தை எங்கெங்கோ தேடி அலுத்த நிலையில் அது (ஆற்றலும் - திறமையும்அவனுக் குள்ளே இருக்கிறது.  அதை வெளிக்கொணர ஏனோ பலரும் மறக்கின்றனர் என் பதே இந்நூலின் மூலம் பெற வேண்டிய பாடமாகும்!

நூலாசிரியரின் (போர்த்து கிசீய மொழியில் மூலத்தின் முன்னுரையை மட்டும் தருகிறோம்)

பிறகு இந்நூல் ஏன்எப்படி இப்படி உலகத்தவரை தன்னுள்ள ஈர்த்த கருத்துக் காந்தமாக மாறியது என்பது உங்க ளுக்கே புரியும்!

தோல்வியால் துவளுவதோமுயற்சிகளை இடையில்  கைவிடுவதோ கூடாதுகடும் உழைப் பின் பலன் நிச்சயம் நல்ல விளைச்சலை காலந் தாழ்ந்தாவது தரும் என்பதையும் நாம் அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க்கைப் பயணத்திற்கு இத்தகைய நூல்கள் தன்னம்பிக்கையை விதைத்துவெற்றிக் கான விளைச்சல் அறுவடையை நிச்சயம் தரும்.

படித்துப் புரிந்து கொள் ளுங்கள்நூலாசிரியரின் முன் னுரை:

'ரசவாதிஎன்ற இந்நூல் 1988இல் என்னுடைய தாய் நாடான பிரேசிலில்என்னுடைய தாய்மொழியான போர்ச்சுகீஸில் முதன்முதலாக வெளியிடப்பட்ட போதுயாருமே அதைக் கண்டு கொள்ளவில்லைமுதல் வாரத் தில் ஒரே ஒருவர் மட்டுமே ஒரு பிரதியை வாங்கிச் சென்றதாக பிரேசிலின் வடகிழக்குப் பகு தியைச் சேர்ந்த புத்தக வியாபாரி ஒருவர் என்னிடம் கூறினார்இரண்டாவது பிரதி விற்பனையாவதற்கு இன்னுமோர் ஆறு மாதங்கள் ஆயினமுதல் பிரதியை வாங்கிய வர்தான் இதையும் வாங்கினார்..! மூன்றாவது பிரதி விற்பனையாவதற்கு இன்னும் எத்தனைக் காலம் ஆயிற்று என்று யாருக்குத் தெரியும்.

அந்த ஆண்டின் இறுதியில்அந்நூல் சரியாக விற்பனையாகவில்லை என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுஅந்நூலைப் பிரசுரித்த என்னுடைய முதல் பதிப்பாளர் எங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்அவர் என்னுடைய புத்தகத்தை என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுஅந்த ஒட்டுமொத்தப் பணித்திட்டத்தையும் கைவிட்டுவிட்டார்எனக்கு அப்போது நாற்பத்தோரு வயதுநான் ஏதேனும் செய் தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

ஆனால் நான் அந்நூலின் மீது நம்பிக்கை இழக்க வில்லைநான் கொண்டிருந்த முன்னோக்கிலிருந்தும் நான் பிறழவில்லை . ஏன்ஏனெ னில்என்னுடைய இதயம்ஆன்மா ஆகியவை உட்பட என்னுடைய ஒட்டுமொத்த இருத்தலும் அந்தப் புத்தகத் தில் இருந்ததுநான் அந்நூலில் பயன்படுத்திய உருவகத்தை நடைமுறையில் என் சொந்த வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்தேன்ஒருவன் ஏதோ ஒரு பொக்கிஷத்தைத் தேடிஓர் அழகான அல்லது மாயாஜாலமான இடத்தைப் பற்றிக் கனவு கண்டபடி ஒரு பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கிறான்தான் தேடிய பொக்கிஷம் அந்த ஒட்டுமொத்த நேரமும் தன்னுடன்தான் இருந்தது என்பதை அப்பயணத் தின் முடிவில் அவன் உணருகிறான்நான் என்னுடைய பிறவி நோக்கத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன்எழுதுவதற்கான என் னுடைய திறன்தான் என்னுடைய பொக்கிஷம்.

நான் அந்நூலில் எழுதியுள் ளதைப்போலநீங்கள் ஒன்றை விரும்பும்போதுஉங்களுக்கு உதவுவதற்காக இந்த ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும் உங்க ளுக்குச் சாதகமாகக் காய்களை நகர்த்துகிறதுநான் பிற பதிப்பாளர்களின் கதவு களைத் தட்டத் தொடங்கினேன்ஒரு கதவு திறந்ததுகதவுக்கு அந்தப் பக்கம் இருந்தவர் என்மீதும் என்னுடைய புத்தகத் தின்மீதும் நம்பிக்கை கொண்டு, 'ரசவாதி'க்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்புக் கொடுக்க முன்வந்தார்வாய் வார்த்தை வழியாகஅந்நூல் மெல்ல மெல்ல விற்பனையாகத் தொடங்கியதுமூவாயிரம்பிறகு ஆறாயிரம்பத்தாயிரம் என்று அந்த ஆண்டு நெடுகிலும் அது பல ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனை யாகியது.

எட்டு மாதங்களுக்குப் பிறகுபிரேசிலுக்கு வருகை தந்த அமெரிக்கர் ஒருவர்உள்ளூர்ப் புத்தகக் கடை ஒன்றில் அந்நூலின் பிரதி ஒன்றை வாங்கினார்அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்அதை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு அமெரிக்காவில் ஒரு பதிப்பாளரைக் கண்டுபிடிக்கவும் அவர் எனக்கு உதவ விரும் பினார்அமெரிக்க வாசகர்களுக்கு அந்நூலைக் கொண்டுவருவதற்கு ஹார்ப்பர்காலின்ஸ் பதிப் பகம் ஒப்புக் கொண்டதுஅதன்படிமிகவும் கோலாகலமாக அது அந்நூலை வெளியிட்டதுநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும் இன்னும் பல பிரபலமான பத்திரிகைகளிலும் அந்நூல் பற்றி அது விளம்பரம் செய்ததுவானொலிப் பேட்டிகளுக்கும் தொலைக்காட்சி நேர்காணல் களுக்கும் ஏற்பாடு செய்ததுஆனால் அந்நூல் மெதுவாகத்தான் விற்பனையாகியதுபிரேசிலில் நிகழ்ந்ததைப்போலவேவாய் வார்த்தை வழியாக அமெரிக்கர்களிடையே அது படிப்படியாகப் பிரபலமாகத் தொடங்கியதுபிறகு ஒருநாள்பில் கிளிண்டன் தன் கையில் அந்நூலின் ஒரு பிரதி யுடன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது போன்ற ஒரு புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாயிற்றுபிறகு ஒருநாள்மடோனா அந்நூலைப் பற்றி 'வேனிட்டி ஃபேர்இதழில் புகழ்ந்து தள்ளினார்பின்னர்ரஷ் லிம்பாக் மற்றும் வில் ஸ்மித்தில் தொடங்கிகல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்வரைவாழ்வின் பல்வேறு தளங்களைச் சேர்ந்த மக்கள் திடீரென்று 'ரசவாதிநூலைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தனர்.

(தொடரும்)

இப்படி ஒரு புத்தகமா? - (2)

(முன்னுரையின் தொடர்ச்சி இது)

"அந்நூலின் விற்பனையும் வீச்சும் விசுவ ரூபம் எடுத்தனநியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகின்ற 'மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள்பட்டியலில் அந்நூல் இடம் பிடித்ததுஇது எந்தவொரு நூலாசிரியருக்கும் ஒரு முக்கியமான மைல்கல் என்றால் அது மிகையல்லசுமார் 400 வாரங்களுக்கு மேல் அந்நூல் அப்பட் டியலில் நிலை கொண்டிருந்ததுஇன்றுவரை எண்பது வெவ்வேறு மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுஇன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூலாசிரியர்களுடைய நூல் களில் அந்நூல்தான் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஇருபதாம் நூற் றாண்டின் தலைசிறந்த பத்துப் புத்தகங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

'ரசவாதிபுத்தகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதை நான் அறிந்திருந்தேனா என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட் கின்றனர்இல்லை என்பதுதான் அதற்கான நேர்மையான பதில்எனக்கு எந்த யோசனையும் இருக்கவில்லைரசவாதி மிகவும் பிரபலமாகும் என்பது எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? 'ரசவாதிநூலை நான் எழுத உட்கார்ந்தபோதுநான் என்னுடைய ஆன் மாவைப் பற்றி எழுத விரும் பினேன் என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்ததுஎன்னு டைய பொக்கிஷத்தைக் கண்டுபிடிப்பதற்கான என் னுடைய தேடலைப் பற்றி நான் எழுத விரும்பினேன்நான் சகுனங்களைப் பின் தொடர்ந்து செல்ல விரும் பினேன்ஏனெனில்சகு னங்கள் கடவுளின் மொழி என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன்.

'ரசவாதிநூல் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இருந்தாலும்அது ஜீவனற்றுப் போய்விடவில்லைஅந்நூல் இன்றும் உயிர்த்துடிப்போடு இருக்கிறதுஎன்னுடைய இதயத் தையும் ஆன்மாவையும் போலவேஅது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறதுஏனெனில்என் இதயமும் ஆன் மாவும் அதில் இருக்கின்றனமேலும்என்னுடைய இதயமும் ஆன்மாவும்தான் உங்களுடைய இதயமும் ஆன்மாவும்கூடசான்டியாகோ என்ற அந்த இடையன் நான்தான்நான் என்னுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்நீங்களும் அந்த இடையன் சான்டியாகோதான்நீங்கள் உங்க ளுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்ஒருவருடைய கதைதான் எல்லோருடைய கதையுமாகும்ஒரு நபரின் தேடல்தான் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் தேடலுமாகும்இக்காரணத்தால் தான்இத்தனை ஆண்டுகளாக உலகம் நெடுகிலும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் அந் நூலுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்துள்ளதுஎந்தப் பாரபட்சமும் இன்றி அந்நூல் உணர்ச்சிரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர்களைத் தொட்டுள்ளது.

'ரசவாதிநூலை நான் மீண்டும் மீண்டும் படிக்கி றேன்நான் அதை முதன் முதலில் எழுதியபோது என்னுள் எத்தகைய உணர் வுகளை நான் உணர்ந்தேனோஅதே உணர்வுகளை இப் போது நான் அந்நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு முறை யும் நான் அனுபவிக்கிறேன்நான் மகிழ்ச்சியை உணரு கிறேன்ஏனெனில்நீங்களும் நானும் அதில் ஒன்றுகலந்து இருக்கிறோம்நான் இனி ஒருபோதும் தனியாக இருக்க மாட்டேன் என்ற அறிதலும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக் கிறதுநான் எங்கு சென்றாலும் மக்கள் என்னைப் புரிந்து கொள்ளுகின்றனர்அவர்கள் என்னுடைய ஆன்மாவைப் புரிந்து கொள்ளுகின்றனர்இது தொடர்ந்து எனக்கு நம்பிக் கையூட்டுகிறதுஉலகம் நெடு கிலும் நிகழ்ந்து கொண்டிருக் கின்ற அரசியல்ரீதியான மோதல்கள்பொருளாதார ரீதியான மோதல்கள்மற்றும் கலாச்சாரரீதியான மோதல்களைப் பற்றி நான் படிக்கும் போதுஓர் இணைப்புப் பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி நமக்குள் இருக்கிறது என்பது எனக்கு நினைவு படுத்தப்படுகிறதுஎன்னுடைய அண்டை வீட்டுக்காரரால் என்னுடைய மதத்தையோ அல்லது என்னுடைய அரசியலையோ புரிந்து கொள்ள முடியாவிட்டால்கூடஎன்னு டைய கதையை அவரால் புரிந்து கொள்ள முடியும்அவர் என்னுடைய கதையைப் புரிந்து கொண்டால்அவர் என்னிடமிருந்து வெகுதூரம் தள்ளி இல்லை என்று அர்த்தம்ஒரு பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி எப்போதும் எனக்குள் இருக்கிறதுகருத்து வேறுபாடுகள் நீங்கப் பெற்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுவதற்கு எப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறதுஎன்றேனும் ஒருநாள் நானும் அவரும் ஒரு மேசையைச் சுற்றி ஒன்றாக அமர்ந்துஎங்களுடைய மோதல்களுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கான ஒரு வாய்ப்பு எப்போதும் இருக்கிறதுஅந்த நாளன்றுஅவர் தன்னுடைய கதையை என்னிடம் கூறுவார்நான் என்னுடைய கதையை அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன்.

பாலோ கொயலோ

(இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்கள் எமக்கு உடன்பாடில்லாதவை என்றாலும் நூலா சிரியர் கருத்து என்பதால் அதை நீக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளோம் - அது எனது ஒப்புதல் ஆகாது).

சனி, 2 அக்டோபர், 2021

மனமது செம்மையானால்...!

 

'அகம் - புறம்என்ற சொற்றொடர்கள் தமிழில் எவ்வளவு அழகான சொற்கள்!

அழகான சொற்கள் மாத்திரமாஆழமானஅகலமானபொருள் பொதிந்த சொற்களும் ஆகும்!

தமிழ் இலக்கியத்தில் சங்ககால இலக்கியங் களில் அகநானூறுபுறநானூறு என்று புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்த நிலையில்அழி யாப் புகழ் பெற்றவைகளாக - செம்மொழியான எம் மொழியாம் எம் தமிழ்மொழிக்கு அணி சேர்க்கின்றவைகளாக  உருவாக்கப்படுகின்றன. (இதிலேகூட ஊடுருவல்பண்பாட்டுப் படை யெடுப்புக்கு முந்தியவைபிந்தியவை என்று இனம் பிரித்து உண்மைகளை உணர வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் ஆர்வலர்களுக்கும் உண்டு)

அறிஞர் அண்ணாவுடன் கவிஞர் கண்ண தாசன் அவர்கள் மகிழுந்தில் பயணிக்கிறார்அப்போது கவிஞர் அறிஞரைப் பார்த்துக் கேட்கிறார்!

"என்ன அண்ணாஅகநானூறுக்கும் புற நானூறுக்கும் உள்ள வேறுபாடு பற்றி எப்படி எளிமையாகச் சொல்வதுஎன்று.

அண்ணா சிரித்துக் கொண்டே அமைதியாக பதிலளிக்கிறார்:

'புறம்', மற்ற பலருடன் பகிர்ந்து கொள்வது.

'அகம்மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதது என்று!

இதை நாமும் பலமுறை கேட்டிருந்தாலும்கூட 'அகத்தைஅகநானூறு பாட்டுகள் காதல் சுவைபற்றிய பாட்டுகள் என்று பிரித்தும், 'புறம்என்பதை வீரத்தை விளக்கும் பாட்டுகள் என்று பிரித்தும் புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் மனித வாழ்வில் அதை இன்னும் ஆழங்கால் பதித்து ஆராய்வோம் எனில்அது வெளியில் உள்ள ஒரு மனிதனின் தோற்றம்நடைஉடைபாவனைசொல்செயல்கள் எல்லாவற்றையும் பற்றியது புறம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்!

'அகம்என்பது அவனுடைய உள்ளம்மனம் மட்டுமல்ல ஆழ் மனம் - அடி மன ஓட்டம் - இவைகளை உள்ளே வைத்திருப்பது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" - எளிமையான பழமொழிதான்;  அதனை ஆழ்ந்துப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால் - உளவியல் படி ஒரு மனிதன் என்னதான் தன் மன நிலையை மறைத்தாலும்கூடஅவனது முகம் அதனை மறைத்துக் கொள்வதற்கு முழு வாய்ப்புத் தரவே தராது என்பதே அந்தப் பழமொழியின் முழுப் பொருள் ஆகும்.

முகம் காட்டிக் கொடுத்துவிடும்முகத்துக்கு நேரே மனிதர்களைப் புகழ்வதைக் கேட்டு மயங்காதவர்களும்மகிழாதவர்களும் எத்தனை விழுக்காடு இருப்பர்?

'முகமன்' (Flattery) - (Cajolery) - ஆங்கிலத்தில் என்பதுகூட தமிழ்ச் சொல்லின் பளிச்சென்று 'முகமன்என்ற சொல் பொருள் உணர்த்துவது போல இல்லைஇருக்காது! 'அகநக நட்புஎன்பதே உயர்ந்த நட்புஅது பற்பல நேரங்களில் வெளிப்படுத்தாமல்கூட (Fixed Depositவங்கியில் செய்த முதலீடுபோல மனிதர்களின் நட்பு புகழில் உயர்ந்தோர் மாட்டு இருப்பது உண்டு.

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்

உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

என்றார் வடலூர் வள்ளலார் பெருமான்இதன்படி மனித சமூகத்தில் உண்மையான நண்பர்களையோஉறவுகளையோகண்டறிந்து அவ்வளவு எளிதாக பழக முடிகிறதா?

மணமக்களை 'உற்ற நண்பர்களாக வாழுங்கள்என்று வாழ்த்துவார் தந்தை பெரியார்!

'ஒரு மனதாயினர் தோழி

இத்திருமண மக்கள் நன்கு வாழி!' என்ற புரட்சிக் கவிஞர் இரண்டு மனங்கள் இணைவதே உண்மை மகிழ்ச்சிக்குரிய இணையேற்பு என்று இலக்கணம் கூறிகளங்கமற்ற - கபடமற்ற ஒரே மனம் படைத்து வாழுவதே சிறந்த சீரிய வாழ்க்கை என்றார்!

உள்ளும் புறமும் ஒத்த வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பதையும்பூஜை புனஸ்கார மந்திரங்களால் அதனை அடைய முடியாது என்பதால்தான் அருமையான இரண்டு வரி கவிதையின் மூலம் சித்தர்கள் பாடியுள்ளனர்.

"மனமது செம்மையானால்

மந்திரம் ஜெபிக்க வேண்டாம்!"

எனவேமனமும் (அகமும்நடத்தையும் (புறம்ஒன்றினால் உயர்ந்த வாழ்க்கை - சிறந்த வாழ்க்கை.