பக்கங்கள்

வியாழன், 25 ஜூன், 2015

இடுக்கண் வருங்கால் நகுக - மிசாவில் நிகழ்வுகள்!

வியாழன், 25 ஜூன் 2015   -  விடுதலை


இந்திய வரலாற்றின் இருண்ட காலம்  என்று வர்ணிக்கப்படும் நெரு டிக்கடி காலம் (Emergency Period) என்பது எத்தனையோ உள் அடக்கங் களையும் வெளிப்புற ஆகா, ஊகா பாராட்டுகளையும் பெற்ற இரு புறத் தோற்றங்களைக் கொண்டது!
எண்ணற்ற பதினாயிரக்கணக்கில் இந்தியாவின் பல்வேறு கட்சி, அமைப் புகளின் தலைவர்கள் கைது - காரணம் காட்டப்படாமலேயே, எப்போது அவர்கள் வெளி வருவார்கள் என்று கைதானவர்களுக்கோ சிறை நிர் வாகிகளுக்கோ கூடத் தெரியாத - தெரிந்து கொள்ள முடியாத விசித்திர நிலை. (ஆயுள் தண்டனைக் குற்ற வாளிகளுக்குக்கூட ஒரு இரும்பு பித்தளை அட்டை பெயர், எண், விடுதலையாகும் நாள் - 20 ஆண்டு கழித்து, என்று உண்டு. மிசா என்ற நெருக்கடி கால கைதிகளுக்கு எது வுமே தெரியாது!
இப்படிப்பட்ட இருண்ட, இறுக்க மான சூழ்நிலைகள் கவ்விய நேரத்தில், நாங்கள் மிகவும் கலகலப்பாகவே சிறை வாழ்க்கையை அனுபவித்தோம் - ஆரம்பக் கொடு மைகளையும்  தாண்டி!
இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர்தம் குறளின் பொருளை பல நேரங்களில் சுவைத்து மகிழ்ந்தோம்!
1976 ஜனவரி 31ஆம் தேதி இரவு தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டு, மாலையே குடிஅரசுத் தலைவர் ஆட்சிஅமுலுக்கு வந்தது. எங்களை நள்ளிரவு 1 மணி அளவில் கைது செய்து சென்னை நகர போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டோம்!
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இவர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியி லிருந்தும் கைது செய்து அங்கு (போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு)க் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டி ருந்தனர்.
இரவெல்லாம் அங்குள்ள ஹாலில்(Press Room) உட்கார்ந்திருந்தோம்.
அந்த நள்ளிரவில் நடிகவேள் M.R.  ராதா அவர்களைக் கைது செய்து எங்களுடன் அமர வைத்தனர்.
சில நிமிடங்கள் கழித்து நடிகவேள் அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மாட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பழைய அய்.ஜி.கள், சிட்டி போலீஸ் கமிஷனர்கள் படங்கள்பற்றி கேட்டுக் கொண்டே வந்தார். நான் பெயரைப் படித்து இது சஞ்சீவிப் பிள்ளை, இது  F.V. அருள் இப்படி வரிசையாக  நான் ஒவ்வொரு படத்தையும் பற்றி விளக்கி வந்தேன். அங்கே ஒரிடத்தில் மய்யப்பகுதியில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தது.  உடனே என்னைப் பார்த்து ராதா அண்ணன் அவருக்கே உரிய குரலில், சத்தமாக - ஏம்பா, திருவள்ளுவர் எப்பப்பா நம் நாட்டிலே அய்.ஜி.யா இருந்தார்? என்று ஒரு போடு போட்டார்!
உடனே மிகுந்த அதிர்ச்சி கலந்த சோகத்துடன் உட்கார்ந்திருந்த அத் தனைப் பேரும் கலகலப்பாக சத்தம் போட்டுச் சிரித்தனர்!
நிலவிய இறுக்கச் சூழ்நிலை திடீரென மறைந்தது!
இடுக்கண் வருங்கால் நகுக இதுதானோ?
****
வாரம் ஒரு முறை சிறையில் நேர் காணல் இரண்டு மிசா கைதிகளை தனித்தனியாக உட்கார வைத்து, அவர்கள் வீட்டுக் குடும்ப உறுப்பினர்கள் - மனைவி - மக்கள் - நெருங்கிய உறவினர்கள் அமர வைத்து நலம் விசாரித்து உரையாட அனுமதிப்பர் சிறை அதிகாரிகள்.
அந்த இடத்திற்கு முன்னால் சிறை அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பார்.
ஒரு சி.அய்.டி இன்ஸ்பெக்டர்  (Intelligence Inspector) சுருக்கெழுத்தில் கைதிகளின் மனைவி மற்றும் சொந்தக் காரர்களிடம் பேசுவதைக்கூட ஒருவரி விடாமல் எழுதுவார். திரைக்குப்பின்னால் இதே போன்று மற்றொரு அதிகாரி துப்பறியும் இன்ஸ்பெக்டர் (CID) அமர்ந்து குறிப்பெடுப்பார்.
இப்படிப்பட்ட ரத, கஜ, துரகபதாதி களுடன் எங்களின் தனிப்பட்ட சுதந்தரம் காவு கொடுக்கப்பட்டு -  ஏதோ ஒப்புக்கு பார்த்தும், பேசியதுமாக நேர்காணல் முடிந்து விடும்.
நடிகவேள் ராதா அவர்களின் நேர் காணலுக்கு அவரது மனைவி திருமதி தனலட்சுமி அம்மாள் வந்து பேசிக் கொண்டு, எப்ப மாமா நீங்க வீட்டுக்கு வருவீங்க? என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.
விட்டா நான் இங்கேயா இருப்பேன்? உடனே வந்துர மாட்டேனா? நான் என்ன இங்கேயே தங்கி குடும்பம் நடத்தப் போறேனா?  என்றார்.
ஒரே சிரிப்பு அதிகாரிகளாலும் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த கட்டம் தான் மிகவும் சுவையானது!
ஏன் மாமா வெளியே சொல் றாங்க; என்னவோ நீங்க எழுதிக் கொடுத்தா உட்டுடுவாங்க வீட்டுக்கு வந்துடலாம் என்று. அப்படி எழுதிக் கொடுத்துட்டு வாங்களேன் என்றார்.
என்னான்னு எழுதித் தர்றது?  - M.R. ராதா; அந்த அம்மா இனிமே இந்த தப்பைச் செய்ய மாட் டேன்ண்ணு எழுதிக் கொடுங்க என்றார்.
ஏம்மா, நான் என்ன தப்புப் பண்ணி இங்கே கூட்டியாந்திருக் காங்க... இன்னமும் புரியலையே யாருக்கும்!
நான் வீட்டிலே படுத்து தூங்கிக் கிட்டு இருந்தேன். எழுப்பிக் கூட்டி யாந்துட்டாங்க,
இனிமே இப்படி செய்ய மாட் டேன்னு என்னை எழுதிக் கொடுக் கச் சொல்றே.
இனி நான் ராத்திரிலே தூங்க மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்றியா? என்று பட்டென்று பதில் சொன்னார்.
ஒரே சிரிப்பு - எழுதிய சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவைக் கீழே போட்டு விட்டு சிரித்தார். சிறை அதிகாரி களின் சிரிப்பு அடங்க நேரமாகியது.
பக்கத்தில் நேர் காணலில் இருந்த எங்களுக்கு அவரது  - பதிலை நையாண்டி நகைச்சுவைக் குரலில் கேட்டு சிரித்துச் சிரித்து மகிழ்ந்தோம். இப்போதும் இது நல்ல காமெடி  பீஸ் அல்லவா!
இடுக்கண் வருங்கால் நகுக! - துன்பம் போயிற்று - மகிழ்ச்சி மின்னிற்று!


மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?




முதுமை அடைந்தவர்கள் நோய் களினால் தாக்குண்டு அவதியுறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று என்றாலும், நியாயப்படுத்தக் கூடியதுதான்.

ஆனால், இளைய தலைமுறையினர் பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக் கப்பட்டு, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளுவது அநியாயமான கொடுமை யாகும்!

எதுவும் நம் கையில் இல்லை என்று சாக்குருவி வேதாந்தம் பேசுவது, செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கத் தெரியாத, அல்லது பொறுப்பின்மை யின் அடையாளமேயாகும்.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, குறிக்கோள், உணவுப் பழக்கவழக் கங்கள் தொடங்கி, மது, சிகரெட் போன் றவைகளை நண்பர்களுடன் விளை யாட்டு, வேடிக்கையாகத் தொடங்கி, பிறகு அது விபரீதமாகிவிட்டதோடு, முதலில் வரவேற்றவர்களே, அவற்றை வழியனுப்பத் துடித்தாலும் விடமாட் டேன் உன்னை, விடமாட்டேன் என்று கெட்டியாய் முதலைப் பிடியுடன் பிடித்துக் கொள்வது இளைஞர் உலகின் இன்றைய வாழ்வின் அலங்கோல மாகும்!

எடுத்துக்காட்டாக சில ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

1. இயந்திர வாழ்க்கையாக சுழலும் நம் இளைஞர்கள் - மாணவர்கள் பலர் - வீடுகளிலிருந்து கல்விக் கூடம், தொழில் பணிமனைகளுக்குக் கிளம்பும் நேரத்தில், காலைச் சிற்றுண்டியைப் புறக்கணித்து, வெறும் வயிற்றுடன் ஓடுகிறார்கள்!
இதன் விளைவு...?

அவர்களது உடலில் சர்க்கரை அளவு (காலை நேரத்தில்) குறைகிறது; மூளைக்குத் தேவையான இரத்த ஓட்ட மும் குறைகிறது; மூளை பாதிப்படை கிறது; இதனால் வேலையில் சுணக்கம். உடலில் கலக்கம், மயக்கம்! சிற்சில நேரங்களில் சோர்வுடன் கூடிய தூக்கம்!

‘Break Fast’  என்பது ஆங்கிலச் சொல், காரணப் பெயர்தான் - பட்டினி யைத் தவிர்க்கும் உணவு முறை இது. இதைத் தவிர்த்தல் அறிவுடைமை ஆகாது - உடல்நலக் கேடு செய்யும். எனவே, இதனை மாற்றிக் கொள்ளுங் கள்.

2. அதிகமான உணவை உண்டு, வயிற்றில் திணிக்காதீர்; அதிகமாக பலூனை ஊதினால், அது வெடித்து விடு கிறது; உடலோ அதனைச் செரிமானம் செய்ய இயலாது தவிர்த்து, பல வகையில் உடலுக்கு எச்சரிக்கை மணி அடித்து, உடலின் செரிமான இயந்திரப் பகுதியை பழுதாக்குகிறது - வயிறு குப்பைத் தொட்டியல்ல, வடிகால் பெறவேண்டிய பயிர், வளரும் கழனி - மறவாதீர்!

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணும்போதே, உடனடியாக இலையை விட்டு எழுந்துவிடுங்கள். அது உங்கள் ஆயுளைக் கூட்டும்.

3. புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!

புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?

இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது.

4. அதுபோலவே, அதிகமான சர்க் கரை - இனிப்பு பொருள்களை உண் ணுதல்மூலம், நாம் உண்ணும் மற்ற உணவில் உள்ள புரதச் சத்துகளும், ஊட்டச் சத்துக்களும் நம் உடலில் சேர்வதற்குப் பெரிதும் தடையாக இது அமைந்து விடுகிறது.

இதுவும் மூளையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

5. காற்றுத் தூய்மைக்கேடு. நமது உடலின் மூச்சுக் காற்றான உயிர்க் காற்று (பிராண வாயு) மூளைக்கு அதிகம் தேவை. கெட்ட காற்று - கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் - மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயு குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் - ஆற்றல் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்!

6. தூக்கம் என்பதின் முக்கியத்துவம், தேவைபற்றி நம்மில்பலர் அறிந்தவர் கள் அல்லர்.

நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வைத் தரும். நீண்ட நேரம் தூங் காமல் இருந்தால், அத்தூக்கக் குறைவும் நமது மூளையின் ஆற்றலை வெகு வாகப் பாதிக்கிறது.

உணவுக்கு என்ன விதியோ அதே விதிதான் தூக்கத்திற்கும் (The Same Formula)

(அ) அளவும் குறைதல் கூடாது

(ஆ) அளவும் கூடவும் கூடாது

(இ) குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக் கத்தை நமது உடற் கடிகாரத்திற்கு ஏற்படுத்தி விட்டால், அது நம் வாழ்வை நீட்டும்!

7. தூங்கும்போது சிலர் தலை யணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.

இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!

அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.

8. எதையும் பயன்படுத்தாமலேயே வைத்தால், அது துருப் பிடித்து விடும்; பயனற்றதாகி விடும். பயன்பாட்டுத் தகுதியை இழக்கும்.

அதுபோலத்தான் மூளையும்கூட! எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது விரியும் - தெளிவாக ஆணை பிறப் பிக்கும்.

பயன்படுத்தாவிட்டால், அது சுருக்க மடைந்து, செயல்திறனை இழக்கவே செய்யும். எப்பொருளையும் பயன் பாட்டில் வைத்திருக்கத் தவறாதீர்!

9. மிகவும் குறைவாகப் பேசுவது, மூளைக்குப் பாதுகாப்பு என்கின்றனர் அத்துறை மருத்துவர்கள்! அதற்காக அறிவுப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்து விடாதீர்கள்! பெரிதும் கேட் பாளராக இருங்கள்; பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்குங்கள்!

இவை நம் மூளைப் பாதுகாப்பு அரண்கள் ஆகும்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

புதன், 24 ஜூன், 2015

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!

      

                         


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!
இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.
மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.
பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!
இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:
1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.
உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)
இருதயம்:
எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.
நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.
கணையம்:
உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.
செரிமான உறுப்புகள்:
உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.
உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!
எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.
இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.
அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?
1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)
2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise
3. உடற்பருமன் - Obesity
4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்
இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

 -விடுதலை,24.6.15

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)

      



எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.
மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.
இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.
எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!
உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!
உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.
குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?
இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!
சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.
‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.
நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)
பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.
இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)
பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.
எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!
அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)
பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.
குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?
அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!
கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.
அப்போது விளங்கி யாருக்குப் பயன்?
“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”
ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!
எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!
 
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

-விடுதலை,22.6.15

ஞாயிறு, 21 ஜூன், 2015

எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!



வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.
எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)
எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.
அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.
மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!
நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும்அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!
பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!
நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?
வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்)  எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாதுஅஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!
வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்!  இருக்கிறது!
உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?
அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?
அதில் சற்று நயத்தக்க  நாகரிகம் ததும்ப வேண்டாமா?
உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!
அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?
பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!
அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?
அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!
புகழேகூட  போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.
புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!
(எஞ்சியது  நாளை)
 -விடுதலை,20.6.15
-

கண்ணாடியும் - நண்பர்களும்


காலத்தை வென்ற மேல்நாட்டுக் கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள் வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச் சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.
அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு ஏற்பட்டதுண்டு!
மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத் தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத் தவறவில்லை!
அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும் பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக் காட்டிடத் தவறவில்லை!
முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!
நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன் கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.
நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித் தொழுகுவதை அறியாதவர்கள்.
காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில் ஏராளம்!
ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!
இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு கூறினார்கள் தெரியுமா?
துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள் கூறுவதுண்டு.
நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதில்லை.
எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக இருப்பினும்கூடவெப்பம் போல் அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை) தயாராக இருப்பதில்லை.
எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்தள்ளுவதைத்  தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் - வாழலாம்.
அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்!
மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள் பகைவரா?
ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?
உடைந்த எலும்பை படமாகக் காட்டும்  எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா கருதுகிறோம்?
அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?
எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம். ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை  அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை எறிந்துவிடுங்கள்.
சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்.
அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன்  கணியுங்கள்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

-விடுதலை,19.6.15

திங்கள், 8 ஜூன், 2015

ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்குரிய ஒரே வழி!

      


இந்த ஏமாற்றம் பல நேரங்களில் மனி தர்களை மிருகங்களாக மாற்றி விடு கின்றன.
அறநெறிகளையும், நியதிகளையும், நியாயங்களையும்கூட புறந்தள்ளி, அந்த ஏமாற்றுத்தினவுக்கு, ஏற்ற வழி, ரத்தம் வழிந்தாலும் அதை மேலும் மேலும் சொரிந்து கொண்டே அதில் ஒரு வகைச் சுகம் காண்பது!
இந்த ஏமாற்றம் பலரை உணர்ச்சி மீறலால் கொலைகாரர்களாகக்கூட மாற்றிவிடும் கொடுமையும் நடைபெறு கின்றது!
நான் மிசா கைதியாக ஓராண்டு சென்னை மத்திய சிறையில் (1976-1977) இருந்தபோது, பிற்பகுதி வாழ்க்கை பாடம் மிகவும் கற்றுக்கொண்ட பயனுறு வாழ்க்கையாகவே அமைந்தது!
தனி வகுப்பின் வசதிகள் எங் களுக்கு மிசா கைதிகளுக்கு - ஏறத்தாழ 4, 5 மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டன. அதில் ஒன்று - எங்களுக்குப் பணி உதவிகள் செய்ய ஆயுள் கைதியாளர் களில் சிலரை அனுப்பி வைக்கும் சிறை நிர்வாகம். அதில் ஒரு பெரியவர் - மிகப் பெரும் அளவில் முகத்தில் திருநீறு பட்டைகள், குங்குமப் பொட்டு எல்லாம் வைத்துக்கொண்டுள்ள உருவத்தோடு, மிகுந்த அடக்கத்தோடு உதவிப் பணி களில் ஈடுபடுவார். அன்புடன் உதவுவார் எங்களுக்கு.
அவர் வரலாற்றை நான் கேட்டேன். திருக்குறள் ஏராளம் படிப்பவர்; அவரைப் பார்த்து நான் கேட்டேன், இவ்வளவு நல்லவராக உள்ள நீங்கள், எப்படி அய்யா இந்த சிறைக்குள் ஆயுள் கைதியாக வந்துள்ளீர்கள்? என்று.
அவர் கண்ணீர் மல்க கூறினார்: எல்லாம் க்ஷணநேர கோபம் - ஆத் திரம் தான் என்னைச் சற்றும் எதிர்பாராத கொலைகாரனாக ஆக்கிவிட்டது!
என் மனைவியின் தவறான நட வடிக்கை பற்றி நான் கேள்விபட்ட போதெல்லாம்கூட, நான் அதை நம்பவே இல்லை. உறுதியாக என் உள்ளம் மறுத்தது, காரணம் எங்களது பாசம் எப்போதும் மாறாதது என்று எண்ணியிருந்தேன். எப்படியோ என் மனைவியின் தவறான நடத்தை பற்றி அறிந்து வருந்தினேன்; நேரில் பார்த்து விட்டேன். நான் அக்கணம் மிருகமாகி விட்டேன் - அதன் விளைவு - கொலை - பிறகு இப்படி ஆயுள் தண்டனை என் றெல்லாம் ஆயிற்று.
சினம் காக்கத் தெரிய வில்லை. என் மனைவியை நான் மனித உருவமாகக் கருதாமல், ஒரு விலைக்கு வாங்கப்பட்ட, எனக்கு மட்டுமே சொந்தமான ஏகபோகப் பொருளாகவே கருதியதால், அவளது இந்த நடத்தை என்னை ஏமாற்றத்தின் எல்லைக்கே கொண்டு சென்று தள்ளி விட்டது!
அதன் விளைவு எனது நம்பிக்கை நிர்மூலமாகிவிட்டதனால், அந்த ஏமாற் றம் என்னைக் கொலைகாரனாக்கியது. எனது முன் வாழ்க்கை முறையினை அறிந்து கருணை மிக்க நீதிபதி எனக்குத் தூக்குத் தண்டனை தராமல் ஆயுள் தண்டனை தந்தார் என்றார்.
அவ்வளவு நம்பிய எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் என்னை இந்த நிலைக் குத் தள்ளி விட்டது; காரணம் இதை அவளிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்!
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் என் பவை சில அளவோடு கூடியது; மற்றவை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது.
எதனையும் அளவுக்கு மீறி, தகுதிக்கு மீறி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதும், பிறகு பொறாமை, சூழ்ச்சி, சதிவலை என்ற பல்வேறு அவதாரங் கள் எடுப்பதும்; மற்றொரு வகை  எதிர்பார்த்து ஏமாற்றமடைதல். நம் பிள்ளைகளைக் கூட தேர்வு எழுதி முடித்தவுடன் பெற்றோர்களில் பலர், அவன் நூற்றுக்கு நூறு எளிதில் வாங்குவான் - ஆஹா, ஊஹூ என்று புகழ்வர். ஊக்கப்படுத்துவது தேர்வுக்கு முன் - தவறல்ல. முடிவுக்காகக் காத் திருந்து - எதிர்பார்ப்புகளுடன் நாளை ‘Count down’ என்று கீழே நோக்கி, நாளை - நேரத்தை குறைய குறைய எண்ணிக்கொண்டே வரும்போது, எதிர்பார்ப்பு என்பதை பலூனில் சதா ஊதிக்கொண்டே இருப்பதைப் போல செய்து, சற்று குறைந்து 99 மார்க் (100-க்கு) வாங்கியபோது இதை சாதனை என்று பெருமிதம் - பெருமகிழ்ச்சி கொள்ளவேண்டிய மாணவன், மாணவி யின் பெற்றோர்கள் அல்லது ஆசிரியர் கள், நண்பர்கள் பெருத்த ஏமாற்ற மடைவர் - இந்த ஏமாற்றம் உண்மை யில் ஏமாற்றமே அல்ல - அது ஒரு வகையான மாயத்தோற்றம் - அவ் வளவு தான்.
எதிர்பார்ப்பது ஓரளவு தேவைதான்; அறவே கூடாது என்பது இயற்கைக்கு மாறானது; உள்ள இயல்புக்கு - மனித வாழ்க்கையில் முற்றிலும் மாறானது.
எவர் பதவியை எதிர்பார்க்கவில் லையோ, அவரே அப்பதவிக்கு வர முழுத் தகுதி பெற்றவர் என்றார் கிரேக்க அறிஞர் பிளாட்டோ!
நியாயமான - அளவான - காரண காரியங்களில் எதிர்பார்ப்பு தவறினால், நம்மை சமாதானப்படுத்திக் கொள் ளுதல் எளிது.
பேராசை என்பதே பெரும் நட்டம் தானே!
எனவே எல்லையற்ற எதிர்பார்ப்பு வேண்டாம்! ஏமாற்றத்தைத் தவிர்க்க இதுவே எளிய வழி.


Read more: http://www.viduthalai.in/page1/102186.html#ixzz3cUFHrT6B