பக்கங்கள்

சனி, 3 டிசம்பர், 2016

வீகேஎன் என்னும் மாமனிதம்!


மனிதர்கள் எத்தனையோ பேர் பிறக் கிறார்கள்; இறக்கிறார்கள்.
உயிருடன் இருப்பவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் அல்லர்! - வள்ளுவரின் கணக்குப்படி - மனிதநேயத்தில் யார் உயர்ந்து காணப்படுகிறார்களோ அவர் களே வாழும் மனிதர்கள்; மற்றவர்கள் இருக்கும் மனிதர்கள்கூட அல்லர். செத்தாருள் வைக்கப்படுபவர்கள்! ஆம் நடை பிணங்களே.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - (குறள் 214)
இந்த இலக்கணத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்ட மாமனிதர் களில் ஒருவர்தான் திருச்சியின் கல்வி வள்ளல் - தொழிலதிபர் - அடக்கத்தின் திருஉருவம் - வற்றாத அன்பின் - பண்பின் பெருஉருவம் நமது அருமைச் சகோதரர் வீகேஎன் கண்ணப்பன் பி.இ. அவர்கள்!
அவரது தயாள சிந்தையும், பிறர் துன்பம் போக்கி இன்பம் காணும் இயல்பும் கொண்டு வாழ்ந்தவர்தான் அவரது அன்பு வாழ்விணையர் திருமதி கண்ணாத்தாள் ஆச்சி அவர்கள்.
தனது தலைவனின் மனமறிந்து, குணநலன் பெருக பெரிதும் ஒத்துழைத்த வர் அவர். சிறிது காலமாக உடல் நோய்க் காளான நிலையிலும் கண்ணை இமை காப்பதைப் போல், காலம், பொருள், எதுபற்றியும் கவலை கொள்ளாது, தம் விருப்பக் கோட்டைத் தாண்டாத மூன்று அருமையான பிள்ளைகளுடன் பெரு ஒத்துழைப்போடு கவனித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஆச்சி யார் மறைந்தார். மறைந்தார் என்பதைவிட அனைவர் உள்ளத்திலும் நிறைந்தார். வீகேஎன் அவர்கள் நெஞ்சில் நிரந்தரமாக உறைந்தார்! உயர்ந்தார்!!
அவர்தம் கண்மணிகளும் குடும்பத் தாரும் அவர்தம் குடும்பத்து நிழல்போன்ற பாண்டியன் போன்ற நண்பர்களும் துக்கத்தின் கடலில் வீழ்ந்து மீளாது தவிக்கின்றனர்!
துக்கத்தை அடக்கிப் பார்க்கும் அரிய பண்புடன் சகோதரர் வீகேஎன் அவர்களே முயன்றாலும் விழிகளோ, குற்றாலம் அருவியென வழிந்து கொண்டே உள்ளன!
நாங்கள் அவருக்கு உற்றவர்கள் எனும் உறவுமுறையில் தேற்றினோம். எப்போதும் எனது வாழ்விணையருடன் மனந்திறந்து பேசுவார் ஆச்சியார்! மன பாரத்தை இறக்கி வைக்க இவர் உதவுவார்; இவரும் நானும் தொலைப்பேசியில் ஆறுதல் மொழி கூறித் தேற்ற முடிந்த அளவு தேற்றினோம்.
கழகச் சார்பில், கல்வி நிறுவனங்கள் சார்பில் நமது பொதுச்செயலாளர் அன்பு ராஜ், துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், திருச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கல்வி நிலையத் தலைவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் தோழர்கள், கழகப் பொறுப் பாளர்கள் ஒருபுறமும், மறுபுறம் சென்னை யிலிருந்து தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினும், மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவும், தி.மு.க.வினரும், அனைத்துக் கட்சியினரும் ஆறுதல் கூறினர்.
துயர வீட்டிலும் வீகேஎன் பண்பு, தணலில் இட்டத் தங்கமாய் ஜொலித்ததை, இரண்டு நாளுக்கு முன் என்னிடம் உரையாடிய தளபதி ஸ்டாலின் சொல்லிச் சொல்லி வியந்தார்!
அம்மையாரின் உடல் கிடத்தப்பட்ட இல்லத்தில் அனைவரும் இறுதி மரியாதை செலுத்த வந்தபோது அழுது புலம்பிக் கொண்டே அம்மா, அம்மா நீங்கள் மறைந்துவிட்டீர்களே என்று கதறிக் கண் ணீர் வடித்து மாலை வைத்து மரியாதை செய்த ஒரு எளிய பாட்டாளித் தோழர் வந்தார்.
அவரை வீகேஎன் அருகில் வந்தவுடன் வீகேஎன் அந்த துக்க நேரத்தில், தம்பி உன் வீட்டுத் திருமணத்திற்கு (இரண்டு நாள் முன்பு) வர இயலவில்லை; ஆச்சி உடல்நிலை காரணமாக. திருமணம் நன்றாக நடந்ததா? என்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மணமக்களுக்குப் பரிசாக அளித்தார். எங்களையும் கார் வரை வந்தே, வழமைபோல் வழி அனுப்பி வைத்தார். இந்தப் பண்பை, அன்பை எங்கே எவரிடத்தில் நாம் பார்க்க முடியும் என்று கூறினார்!
ஆம். வீகேஎன் கண்ணப்பன் ஒரு மாமனிதர். பல மனிதர்களிடம் காண இயலாத மனிதம், மாமனிதம், ஒத்தது அறியும் பண்பு! எல்லா மனிதர்களிடமும் காண முடியாதுதான்!
வீகேஎன் என்ற பெயரே தலையெ ழுத்து - முன்னெழுத்துகூட உயர்ந்திடக் காரணமாக நெருக்கடியில் உதவிய நண்பரை மறக்காத நன்றியின் அடையா ளமாக, தந்தை, தாய் இடத்தில் உத வியவரை உயர்த்தி வைத்த உயர்தனிச் செம்மலின் அருங்குணம் - உலகில் எங்கும் காணாத பெரும் செயல்!
அத்தகையவருக்கு ஏற்பட்ட துக்கமும், துயரமும் அவரது தொண்டால் - மலை யென வந்தது - பனியென விலகும் என்று நம்புவோம்!
அவரது மூன்று அருஞ்செல்வங்கள் அக்குடும்பத்தின் புகழ் பூத்த வாழ்வைக் கட்டிக் காத்து, தாயார் இடத்தை நிரப்பி வாழ்வர் என்பது நமது ஏக்கம் அல்ல; நன்னம்பிக்கை!
- கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,4.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக