பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி எப்படி வந்தது தெரியுமா


தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி எப்படி வந்தது தெரியுமா?



தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யும் அருமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.


சிறப்பான வகையில் வளர்ந்தோங்கியுள்ள அந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவப் பணி யும், தொண்டும் செய்யும் ஆற்றல்மிகு மருத்துவ மாமணிகள் பலர் உள்ளனர். சிலரை நாம் நன்கறி வோம்!


சென்னைக்கு சுமார் 180 மைல்களுக்கு அப்பால் உள்ள காவிரி டெல்டா விவசாயப் பகுதியில் அமைந்து, அன்று பல மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு நோய் தீர்க்கும் - குறிப்பாக அருகில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் முதலியவர்களில் நோயாளிக ளுக்குத் தொலைதூரம் சென்று சிகிச்சை தேட வேண்டிய அவசியத்தைக் குறைத்தவை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியும், அதன் மருத்துவ மனையுமாகும். அக்கல்லூரி ஏற்பட்டதனால் எளிய, நடுத்தர குடும்பத்து கிராம மக்களின் பிள்ளைகளும், தத்தம் மருத்துவக் கனவை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.


அங்கு படித்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பற்பல நாடுகளில் உள்ள பழைய மருத்துவ பட்டதாரிகளான டாக்டர்கள் பல முறை குடும்பத்துடன் சந்தித்து மகிழ்வதோடு, தங் களுடைய பங்களிப்பாக வழங்கிடும் பழைய மாண வர்களது - நிதி - நன்கொடையால் மருத்துவமனைக் கும், மருத்துவக் கல்லூரிக்கும் புதிய கட்டடங்களும் கூடக் கிடைத்துள்ளன!


அவர்களது நன்றி உணர்ச்சியும், அவர்களை வளர்த்த ‘கல்வித் தொட்டிலுக்கும்' காட்டிடும் நன்றியும் மிகவும் நேர்த்தியானது மட்டுமல்ல, மற்றவர் பின் பற்றத்தக்க எடுத்துக்காட்டானதும் ஆகும்.


அப்படி அவை உருவானதற்கு மூலகாரணம் அன்றைய முதலமைச்சரும், கல்வி வள்ளலுமான ‘படிக்காத' காமராசர்! அதுபற்றி அண்மையில் சமூக வலை தளத்தில் வந்த தகவலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் சுவையாக இருக்கும் அல்லவா?


“ஒருநாள் காமராசரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர்,


கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க 20 லட்ச ரூபாய் தருவதாகக் கூறினார்.


அத்திட்டத்திற்கு (அப்போது) ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், மீதி ரூபாய் 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்த செல்வந்தர் கேட்டுக் கொண்டார்.


அந்த மருத்துவக் கல்லூரி தனியார் நிர்வாகத்தில் இருக்குமென்றும் கூறினார்.


இதற்கு சம்பந்தப்பட்ட துறையான சுகாதாரத்துறை அமைச்சரின் ஆதரவும் இருந்தது!


சிறிது காலத்திற்குப் பிறகு இத்திட்டம் சம்பந்த மான கோப்பு அனுமதிக்காக முதல்வர் காமராசரின் பார்வைக்கு வந்தது.


சம்பந்தப்பட்ட அமைச்சரை (சுகாதாரத் துறை அமைச்சரை) முதல்வர் காமராசர் அழைத்து, “80 லட்ச ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்து வக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் கூடுத லாக ஒரு 20 லட்ச ரூபாய் செலவிட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்கலாமே!


தனியாரை மருத்துவக் கல்லூரித் தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் “தொழிலாக்கி” விடு வார்கள்! லாபம் சம்பாதிப்பது தான் அவர்களது நோக் கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது” என்றார்! சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிப் போனார்!


கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தெடங்க அனுமதி மறுத்த முதலமைச்சர் காமராசர், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே ‘செஸ்'வரியாக வசூ லித்தத் தொகையில் 1.30 கோடி ரூபாய் இருப்பதைக் கேள்விப்பட்டு, அதைப் பயன்படுத்தி அங்கே (தஞ் சையில்) மருத்துவக் கல்லூரி அரசு சார்பில் தொடங்க, செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டால் அரசு (தமிழ்நாடு) கொடுப்ப தற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்!"


இவ்வாறு தஞ்சையில் ஒரு கோடிக்கு மேல் (அன்று) செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார்.


அதோடு கல்வி வள்ளல் காமராசரை எப்படி நினைவு கூர்வது, நன்றி காட்டுவது முக்கியமோ அந்த அளவுக்கு என்றென்றும் நினைவுகூர்ந்து, நன்றி கூறிட வேண்டிய மற்றொரு அருட்கொடை யாளர் யார் தெரியுமா?


89 ஏக்கர் நிலத்தினைத் தானமாகக் கொடுத்த வள்ளல் A.Y.S.பரிசுத்த நாடார் அவர்கள் ஆவார் கள்! தஞ்சையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய தொண்டறச் செம்மல் அவர்!


கல்வி வள்ளல் காமராசரின் பொது நோக்கு, தொலை நோக்கு எவ்வளவு சிறப்பானது பார்த்தீர் களா? பல மெத்தப் படித்த “முதல்வர்களுக்கு” வராத யோசனை ‘படிக்காத' காமராசருக்கு வந்ததால்தான் அவர் ‘படிக்காத மேதை' என்று வரலாற்றில் வைர மாக ஒளி வீசுகிறார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக