பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

எளிமையால் உயர்ந்த எடுத்துக்காட்டான சாதனை விஞ்ஞானிகள்!



கோவிட் 19 நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு  ஃபிஷர்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்த ஜெர்மானிய-துருக்கி இணையரி டம் முன்பு ஒரு கார் கூட சொந்தமாக இருக்க வில்லை.


தொற்று நோய்களையும், புற்று நோயையும் குணப்படுத்துதற்கான மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியிலேயே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அறிவியலாளர்கள் ஊகுர் ஸஹின் (Ugur Sahin) மற்றும் ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci) இணையர்,  கோவிட் - 19 நோய்த் தடுப்பு  மருந்தை ஃபைஸர் (Pfizer) நிறுவனம் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி களை மேற்கொண்டு உதவியுள்ளனர்.


பையோஎன்டெக் BioNTech மற்றும் அமெ ரிக்க நாட்டு ஃபைஸர் (Pfizer Inc‘s) நிறுவனமும் பங்குதாரர்களாக விளங்கும் அந்த நிறுவனம் கோவிட் -19 நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கபூர்வமான புள்ளி விவரங் கள், ஜெர்மானிய உயிரியல் தொழில்நுட்ப நிறு வனத்தில் பணியாற்றி வரும்  கணவன்-மனைவி யான ஓர் இணையர்  ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த புள்ளி விவரங்களாகும்.  புற்று நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒரு நடைமுறையைக் கண்டுபிடிப்பதற் காகவே தங்களது வாழ்க்கையையே அர்ப் பணித்த இணையர்கள் அவர்கள். தங்களது பரிசோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட கோவிட்-19 நோய்த் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் அளவுக்கும் மேல் பயனளிப்பதாக இருப்பதாக இதுபற்றி  மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய் வின் தொடக்க கால புள்ளி விவரங்கள் தெரி விப்பதாக ஃபைசர்ஸ் (Pfizer Inc’s) நிறுவனம் கடந்த திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது.


கரோனா நோய்த் தடுப்பு ஊசிமருந்து கண்டு பிடிப்பது பற்றி ஒரு மிகப்பெரிய சோதனைச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியி லிருந்து கிடைத்துள்ள வெற்றிகரமான புள்ளி விவரங்கள், அந்த மருந்தை முதன்முதலாகக் கண்டுபிடித்த நிறுவனம் பையோஎன்டெக் மற்றும் அமரிக்க நாட்டு ஃபைஸர் நிறுவனம்தான் என்பதைக் காட்டுகிறது. இதுவரை மேற்கொள் ளப்பட்ட சோதனைகளில் இருந்து, எந்தவித தீவிரமான பாதுகாப்புக் கவலைகளும் எழ வில்லை என்று கூறும் அந்த நிறுவனங்கள் அந்த மருந்தை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க நாட்டின் அனுமதியை இந்த மாத இறுதியில் பெற உள்ள தாகவும்  கூறியுள்ளன.


கொலக்னியில் உள்ள ஃபோர்டு நிறுவன தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி, துருக்கி நாட்டில் இருந்து வந்து ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒரு துருக்கியரின் மகன் என்ற ஒரு சாதாரணமான பாரம்பரியத்தை மட்டுமே பெற் றுள்ள  ஊகுர் ஸஹின் (Ugur Sahin), BioNTech  நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தனது 55 ஆம் வயதில் இப்போது விளங்குகிறார்! அவரும், அவரது வாழ்விணையரும், அவரது நிறுவனத் தின் சக நிர்வாக உறுப்பினருமான ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci) இருவரும் இன்று ஜெர் மனி நாட்டின் மிகப் பெரிய 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக ‘Wel Tam Sonntag' என்ற வார இதழ் பட்டியலிடுகிறது!


இந்த இணையர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய, BioNTech என்று நாஸ்டாக்கில் பதிவு செய்துள்ள   நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு முன்னர் 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது,  கடந்த வெள்ளிக் கிழமை இறுதியில் 21 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. கரோனா நோய்ப் பரவலுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தும் ஒரு வெகுஜன இயக்கத்தின் முன்னணியில் செயல்படுவதற்கு தன்னைத் தானே இந்த நிறு வனம் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.


“மிகப் பெரிய சாதனைகளுக்குப் பின்னரும், அடக்கம் மிகுந்தவராகவும், அனைவருடனும் இனிமையாகப் பழகுபவராகவும் இருந்த அவர் தன்னை எப்போதுமே மாற்றிக் கொள்ளவில்லை” என்று மத்தியாஸ் க்ரோமேயர் என்ற தொழில் முனைவோருக்கு முதலீட்டு உதவி செய்யும் MIGAG நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கூறுகிறார்! இந்த நிறுவனத்தின் நிதி உதவிதான்  2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் BioNTech நிறுவனத்துக்கு நிதி ஆதார பின்பல மாக இருந்தது.


சாதாரணமான ஜீன்ஸ் உடைகளைப் போட்டுக் கொண்டும், கையில் தனது சைக்கிள் தலைக் கவசத்தை எடுத்துக் கொண்டும், தனது முதுகில் தனது பையை மாட்டிக் கொண்டும்தான் வியாபாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொள் வார் என்றும் அவர் கூறினார்! என்னே எளிமை!!


மருத்துவம் பயின்று பிற்காலத்தில் ஒரு மருத் துவராக வரவேண்டும் என்ற தனது இளமைக் காலக் கனவினால் உந்தப்பட்ட அவர் கொலக்னி மற்றும் ஹோம்பர்க் என்னும் தென்மேற்கு நகரங் களின் மருத்துவமனைகளில்  பாடம் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். தனது கல்விப் பணியின் தொடக்க காலத்தில் ஹோம்பர்க் நகரில்தான் தனது மனைவி ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci)யை சந்தித்தார்.


மருத்துவ ஆராய்ச்சியும், உயிரியல் பாடம் கற்பிப்பதும் (oncology) அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக ஆயின.


ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒரு துருக்கி நாட்டைச் சேர்ந்த மருத்துவரான ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci)யின் தந்தை அவர்களது திருமண நாளன்று கூட அவர்கள் இருவரும் சோதனைக்கூட பரிசோதனைகளை மேற்கொள் வதற்கான நேரத்தை ஒதுக்கினார்கள் என்று ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் என்றால் அவர்கள் இருவரின் விடாமுயற்சி, பணி ஆர்வம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?


புற்று நோய்க்கு எதிரான போரில் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய இயன்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலில் அவர்கள் இரு வரும்  மிகுந்த நம்பிக்கையுடன் அத்துறையில் தங்களது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர்.  உட லின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள ஈடு இணை யற்ற மரபணு உருவாக்கத்தையும், அதற்கான தீர்வுகளையும் காண்பதற்கு அவர்கள் முயன் றனர்.


புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டி பயாடிக் மருந்துகளைத் தயாரிக்கும் தங்களது (Ganymed Pharmaceuticals) என்ற  நிறுவனத் தைத் தொடங்கியதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோராக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால், அப்போது மெயின்ஸ் (Mainz) பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக இருந்த அவர் மருத்துவக் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளையும், பாட கற்பிப்புப் பணியை யும் எப்போதுமே விட்டு விடவில்லை. மிக் ஏஜியில் (MIG AG) இருந்து நிதி முதலீடுகளைப் பெற்றது போலவே தாமஸ், ஆண்டிரியாஸ்ஸ்டு ரெங்க்மேன் (Ganymed Pharmaceuticals) நிறு வனத்திடமிருந்தும் அவர்கள் நிதி முதலீடுக ளைப் பெற்றனர். அவர்கள் தங்களது Hexal மரபணு மருந்து வியாபாரத்தை 2005 நவம்பரில் நோவார்டிஸ் (Novartis) என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டனர்.


இந்த நிறுவனம் 1.4 அமெரிக்க டாலர் விலைக்கு ஜப்பான் நாட்டின் ஆஸ்டெல்லாஸ் (Astellas) நிறுவனத்துக்கு  விற்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் கேணிமெட் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பக்கபலமாக இருந்த இந்த இணையர் குழு, 2008 ஆம் ஆண்டில் BioNTech    நிறுவனத்தின் கட்டுமானப் பணியில் மிகவும் மும்முரமாக இருந்தனர். புற்றுநோய்க்கான மனி தரின் இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்திகளையும், அதற்கான கருவிகளையும் அதிக அளவில் ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.


இதில்  மரபணு ஆணைகளை உடலின் செல் களுக்கு அனுப்பும் செய்தியாளர் போன்ற (mRNA) என்ற கருவியும் இதில் அடங்கும்.


சீனாவின் வூஹான் நகரில் ஒரு புதுமாதிரி யான கரோனா தொற்று நோய் பரவி வருவதைப் பற்றி   அறிவியல் இதழில் வெளியான  கட்டுரை ஒன்றை சாஹின் படிக்க நேர்ந்தபோது, BioNTech   நிறுவனத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புற்று நோய்க்கான எதிர்ப்பு மருந்துகள் (mRNA) தயாரிக்கும் நடைமுறையில் இருந்து சாதாரண மான  ஒரு படி தொலைவிலேயே, தொற்று நோய்களுக்கான (mRNA) அடிப்படையிலான தொற்று நோய்த் தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிப்பும் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.


தொற்றுநோய் தடுப்புக்கான ஊசி மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் பல வகையிலான மருந்துக் கலவைகள்பற்றி விரைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்று 500 சோதனையாளர்கள் நியமனத்தின் மூலம் BioNTech  நிறுவனம் உடனடியாக மேற் கொண்டது. மாபெரும் மருந்து தயாரிப்பு நிறு வனமான ஃபைசர் மற்றும் சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபோசனும் பங்குதாரர்களாக இந்த ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினர்.


சாஹினுடன் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பணியாற்றி வந்தவரும், அவரது சக ஆன்காலஜி புற்று நோய் பேராசிரியருமான மத்தியாஸ் தியோ போல்ட், “எதனையும் குறைத்து மதிப்பிட்டு சாஹின் கூறுவது, மருத்துவத் துறையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அவரது இடைவிடாத, சோர்வில்லாத, பெருவிருப்பத்தை வெளிப்படுத்துவதாகவே இருப்பதாகும். இந்த நம்பிக்கையில் இருந்து, கோவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கான கண்டுபிடிப்புக்குத் தாவியிருப்பதே அதை மெய்ப்பிப்பதாக இருப்பதாகும்“ என்று கூறினார்.


'பிசினஸ் இன்சைடர்' பத்திரிகையின் ஓர் அறிக்கையின்படி, BioNTech நிறுவனம் ஃபைச ருடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பங்குதாரராக சேர்ந்ததுடன், தங்கள் கண்டுபிடிப்பான ஊசி மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வ தைத் தொடங்கி விட்டனர். செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள மிகப்பெரிய 100 பணக் காரர்களின் பட்டியலில்  இந்த இணையர்கள் இடம் பெற்றுள்ளனர்! இப்போது  உலகப் பெரும் பணக்காரர்களாக ஆகியுள்ள இந்த இணைய ருக்குச் சொந்தமான ஒரு கார் கூட முன்னம் இருக்கவில்லை என்று “வாஷிங்டன் போஸ்ட்” இதழ் கூறுகிறது!


“சாதாரணமான தோற்றம் கொண்ட அடக்கம் நிறைந்த மனிதர் அவர். தனது தோற்றத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஆனால், தனது எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் நிறைவேற்ற இயன்ற  கட்டுமானங்களை உரு வாக்க அவர் விரும்புகிறார்.  இந்த விஷயத்தில் அவரது எதிர்பார்ப்புகள் சாதாரணமாகவோ, அடக்கமாகவே இருப்பவை அல்ல” என்று தியோபால்ட் கூறுகிறார்.


தனது இந்த முயற்சி ஓர் அசாதாரணமாக வெற்றியைத் தந்திருப்பதாகக் கூறும் சாஹின், இதுபற்றிய ஒட்டுமொத்தமான பணி இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.


"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்


மலையினும் மாணப் பெரிது"


(குறள் 124).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக