பக்கங்கள்

புதன், 30 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 9. மருத்துவத்தில் தெய்வீகமா? சிறுநீரக எச்சரிக்கை

செயற்கைச் சிறுநீரகம் (டயாலி ஸிஸ்) ஒரு தற்காலிக மாற்று ஏற்பாடாக செயல்பட்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உதவ முடியும். அதுவேகூட, பல ஆண்டுகளுக்குத் தகுந்த சிறுநீரகம் கொடையாகக் கிடைக்கும்வரை உதவ முடியும்.

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் அறுவைச் சிகிச்சை மட்டும்தான் ஒரு நிரந்தரமான உயிர்காக்கும் சிகிச் சையாக அமைய முடியும்.

தெய்வீக மருத்துவம் பயன்படுத்தும் காசினிக்கீரை உட்பட எந்தக் கீரை யும், எந்த மூலிகையும் இரண்டு சிறு நீரகங்களும் முழுவதுமாக செயலிழந்த பிறகு அவற்றைச் செயல்பட வைக்க முடியாது.

தெய்வீக மூலிகை மருத்துவத்தை மட்டுமே நம்பி முறையான மருத்துவச் சோதனைகளைச் செய்து கொள்ளாமல், சரியான சிகிச்சைகளை மேற்கொள்ளத் தவறினால், உங்கள் பணத்தைப் பறி கொடுப்பதோடு சிறுநீரகச்செயல் இழப்பு (கிட்னி ஃபெய்லியரும்) முற்றிப் போய் அந்த நிலையில் ‘டயாலிஸிஸ்’ தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகி விடுவீர்கள். பத்திரிகை, டி.வி. விளம்பரங்களை நம்பி உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

சிறுநீரக மருத்துவக் கோளாறுகள் இருந்தால் சிறுநீரக மருத்துவர்களான ‘நெஃப்ராலஜிஸ்ட்’களும், ‘சிறுநீரகம்‘ உட்பட சிறுநீர்ப் பாதை கோளா றுகளுக்கு, ‘நியூராலஜிஸ்ட்’களும்தான் உங்களுக்கு முறையான சோதனைகள் செய்து சரியான சிகிச்சை அளித்து உங்கள் சிறுநீரகங்களையும், உயிரையும் காப்பாற்ற முடியும்.

செலவு குறைவான சிகிச்சை, ஏழை மக்களுக்கு ஏற்ற சிகிச்சை என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களாகும்.

உலகம் முழுவதும் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான மாற்றுசிறுநீரக அறுவைச்சிகிச்சைகள்செய்யும்மருத் துவர்களும்லட்சக்கணக்கானபேர்க ளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை செய்து கொள்கிறவர்களும் முட்டாள்களா?

உணவுக் கட்டுப்பாடுமூலம் மட்டுமே சிகிச்சையளிக்கக் கூடிய ஆரம்ப நிலை (தற்காலிக) கிட்னி ஃபெய்லியர் நோயாளிகளுக்கும், மருந்தே தேவையில்லாத நோயாளிகளுக்கும் மட்டுமே,  இலை, தழைகளைக் கொடுத்து குணப்படுத்திவிட்டதாகத் தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாறச் செய்வது அறியாமையினாலா? அல்லது மோசடியா? அல்லது மூட நம்பிக்கையா?

- கி.வீரமணி
-விடுதலை,30.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக