பக்கங்கள்

சனி, 19 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 1. அறிவியல் அறிவோமே!

தற்போது அறிவியல் கண்டு பிடித்துள்ள உண்மைகளின் அடிப் படையில், நமக்குத் தெரியும் தகவல் களின்படி, உயிரினம் இந்த பூமியில் மட்டும்தான் வாழுகிறது.

சூரியனுக்குஅருகில்உள்ள கோள்களிலோ, அல்லது தொலை தூரத்தில் நட்சத்திரங்களாகத் தெரி யும்அவைகளிலோ,உயிரினம்இருக் கிறதா என்பது இப்போது தெரியா விட்டாலும் போகப் போக கண்டு பிடிக்கப்படக்கூடும் என்கிற நம் பிக்கை நமக்கு வலுவடைகிறது. ஏனெனில் பிற கோள்களிலும் உயிரி னம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தும்ஆதாரங்கள்அறிவி யலார்க்கு அண்மையில் கிடைத்துள் ளன. எனவேதான் உயிரினம் எப்படி உருவாகியது என்பதை நன்கு தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பூமிப்பந்தின் துவக்க கால கட்டம் வெறும் மீத்தேன், அமோனியா, அய்ட்ரஜன் (விமீtலீணீஸீமீ, கினீனீஷீஸீவீணீ, பிஹ்பீக்ஷீஷீரீமீஸீ) போன்ற வாயுக்களாலும், தண்ணீராலுமே நிறைந்து இருந்துள்ளது.

அலெக்சாண்டர் ஒப்பாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி, காணப்பட்ட வாயுக்கள், நீர் இவைகள் மீது மின் னல்கள் தாக்கியதன் விளைவாகவே உயிரினம் தோன்றும் சூழ்நிலை உருவாகியிருக்கக்கூடும் என்று குறிப் பிட்டுள்ளார்!

மில்லர் என்ற மற்றொரு விஞ்ஞானி இந்தக் கருத்தினைப் பரிசோதிக்க முன்வந்தார். ஒரு கிளாஸ் பாத்திரத்தில், அத்தகைய வாயுக்கள், நீர் இவைகள் கலந்து ஒரு சூப்பை (றிக்ஷீவீனீஷீக்ஷீபீவீணீறீ ஷிஷீuஜீ) நிரப்பி, அதில் மின்னல் ஒளியைப் பாய்ச்சினார். உடனே ‘அமினோ ஆசிட்’ (கினீமீஸீஷீ கிநீவீபீ) திரவங்கள் உருவாவதைக் கண்டார். இவைகளிலிருந்து பிறகு புரதங்கள் (றிக்ஷீஷீtமீவீஸீs), அவைகளிலிருந்து ஓர் உயிரணு உள்ள (ஷிவீஸீரீறீமீ சிமீறீறீமீபீ லிவீயீமீ திஷீக்ஷீனீs) உயிர்கள்உருவாகி, பிறகு உயிரினம் தற்போதுள்ளவை போல வளரத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானி மில்லர் அறிந்தார். அதற்குப் பிறகு, மூளை, மூளையின் அறிவுக்கூர்மை (மிஸீtமீறீறீவீரீமீஸீநீமீ) இவை எல்லாம் வளர்ந்துவிட்டன என்பதை நிறுவிட வாய்ப்புப் பெற்றார்கள்.

எனவே, மில்லரின் பரிசோதனை-ஆய்வு என்பது, மனிதகுல உற்பத்தி வரலாற்றில் ஒரு தலை சிறந்த மைல் கல் அல்லவா?

இதில் பிரபஞ்சத்தை கடவுள் படைத்தார் (சிக்ஷீமீணீtவீஷீஸீ) என்ற மதவாதி களின் கருத்தே அடிபட்டுப் போகிறது பார்த்தீர்களா?

அறிவியல் ரீதியாக மனித உற்பத் தியை ஆய்வு செய்து நிலை நிறுத்திய டார்வினின் முடிவு- குரங்கி லிருந்து மனிதன் தோன்றினான் என்ற அறிவி யல் ஆய்வு-மிகப் பெரிய அறிவுத் தொண்டு.

முதலில் மதம் இதனை ஏற்க மறுத் தது. ஆனால் பிறகு போப் அவர்களே இதனை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்கிறபோது, மதம் எப்போதும், அறிவியல் முன்பு மண்டியிட்டே தீர வேண்டிய ஒன்று என்பது புரியவில்லையா?
-விடுதலை,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக