பக்கங்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வாழ்வின் இன்றியமையாத இரண்டு




நாம் அனைவரும் நமது உடல் நலனைப் பேணிக் காப்பதில் மிகுந்த அக்கறையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும். மனித உடல் அமைப்பு - உடல் நலனை இயல்பாக வளர்க்கும் தன்மையில்அமைந்துள்ளது; அதற்குச் செயற்கையாக கேடு செய்வது நம்முடைய தவறான பழக்கவழக்கங்களாலும், அலட்சியத் தினாலும்தான்!

நாம்உடற்பயிற்சிக்கெனநாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை விடாப் பிடியாக மேற்கொண்டால், பின்னால் நோய் வந்துபடுத்துக்கொள்ளவோ,மருத் துவமனைகளில்காலம்,பொருள் எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டிய அவசியமோ இராது.

(இதை மீறிய சுற்றுச்சூழல் காரண மாகவோ, அல்லது வேறு சில தவிர்க்க இயலாது தாக்கப்படும் நோய்க் கிருமிகள் காரணமாகவோ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் உதவியைத் தேடுவது நாமாக ஏற்படுத்திக் கொள் ளுவதல்ல; வந்ததை எதிர்கொள்ள வேண்டியவர்களாகி அதிலிருந்து விடு பட செல்லுகிறோம். அது வேறு).
உடற்பயிற்சி என்றால், ஏதோ உடற்பயிற்சிக் கூடத்திற்குச் (‘‘ஜிம்‘’) சென்று மணிக்கணக்கில் அங்கு செலவழிக்கவேண்டும் என்பதல்ல. அவரவர் வயது, வேலையின் தன்மை, சூழலுக்கு ஏற்ப அதை எவ்வளவு எளிமையாக அமைத்துக் கொள்ள முடியுமோ அப்படிச் செய்வதேயாகும்.

நல்ல நடைப்பயிற்சி குறைந்தது 30 மணித்துளிகள், வாரத்தில் ஏழு நாள்கள் இல்லையென்றாலும், அய்ந்து நாள்கள் செய்யலாம்; செய்யவேண்டும். காலையில் இயலவில்லையானால் - மாலையில் கூட செய்யலாமே!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பெருநகரங்களில் அலுவல கங்களில் பணிபுரிவோர் மதியம் உணவு இடைவேளையில்கூட, நடைப்பயிற்சி- ‘‘ஜாகிங்’’ என்ற மெல்ல ஓட்டம், வேக நடைப் பயிற்சியை அரை மணிநேரத்தில் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் செய்து முடித்து, அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள குளியல் அறைகளில் சென்று குளித்தோ, முகம் கழுவியோ, உடை மாற்றம் செய்தும்கூட திரும்பும் நிலையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது கண்டு மகிழ்ந்தேன்; வியந்தேன்.
‘டிரெட் மில்லில்’ (Tread mill) கூட நடைப்பயிற்சியை - வேக நடைப் பயிற்சியை வாய்ப்புக் கிடைக்கும்போது செய்து  முடிக்கலாம்.
ஆரோக்கியத்திற்காகவும், மகிழ்ச் சிக்காகவும் செலவழிக்கும் இந்தக் கால அளவு - செலவல்ல உண்மையில்; மாறாக, வாழ்க்கையினை நீட்ட உத விடும் அருமையான வழிமுறை என்றே சொல்லவேண்டும்!

சோம்பலுக்கு இடந்தராது இந்த உடற்பயிற்சி வயதுக்கேற்ற நிலையில் செய்து பழகி விட்டீர்களானால், பிறகு நீங்களே செய்யாமல் இருந்தால், ‘என்னமோ மாதிரி இருக்கு’ என்று மழை பெய்தாலும் குடைபிடித்துக் கொண்டு நடக்கப் புறப்பட்டு விடுவீர்கள்!

அதுபோலவே, நடக்க நேரத்தினை ஒதுக்கி, அதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கி, புத்துணர்ச்சியைப் பெற மற் றொரு வழி (கூட்டாளி போன்றது இது!) என்ன தெரியுமா?

அன்றாட வாழ்வில் கொஞ்ச நேரத்தை - அமைதியாக, சலனமின்றி செலவிடப்பழகி,அதைஒருபழக்க மாக்கி பிறகு வழக்கமாக்கிக் கொள்வ தாகும்!

‘வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த்’ William wordsworth) என்ற பிரபல கவிஞரின் அறிவுரை என்ன தெரியுமா?

“அதிவேகத்தில் இயங்கும் உலகம் அதன் அன்றாட நடப்புகளின்மீது வெறுப்பு, உலகாயுத இன்பங்களினால் ஏற்பட்ட சோர்வு ஆகியவற்றினால் நம்மின மேம்பட்ட, நம்மின் மேம்பட்ட அகநிலையிலிருந்து நாம் அதிக காலம் விலக்கி வைக்கப்பட்டபோது, தனிமை எவ்வளவு இனிமையானது, எவ்வளவு அழகானது, எவ்வளவு புத்துணர்வைப் புதுப்பிக்கும் வாய்ப்பு என்று உணர்ந்தால் அதன் நன்மை நமக்கு விளங்கும்!’’

கடைசியாக அமைதியாகவும், சலனமற்றும் நீங்கள் இருப்பதற்கு நேரம் எப்போது கொடுத்தீர்கள்; கணிசமான நேரம் ஒதுக்கியது எப்போது?

வேகமான மோட்டார்களில் நாம் அருமையான சிமெண்ட் சாலையில் பறந்து செல்லும்போதுகூட, இடையில் சூடான எஞ்சினை தணியச் செய்ய சிற்சில மணித்துளிகள் நிறுத்தி, ஓய்வெடுத்து, ஓட்டுநருக்கும் ஒரு ‘பிரேக்‘ கொடுப்பது (என்னிடம் இனி இருக்கவேண்டிய பழக்கம் இது) மிகவும் அவசியம்.

நீண்ட தூரப் பயணத்தில்கூட என் னிடம் எனது வாழ்விணையர் இடித்துச் சொல்லுவார் இதன் தேவையினை! எனக்கென்னவோ நேரம் வீணாகி விடுகிறதே என்ற தவறான கணக்கு. நான் செய்யும் தவறு அது!

அமைதியாக இருப்பதற்கு முன் னுரிமை கொடுத்து - மனதின் தனிமை பிறகு இனிமையாக மாறும்; சிந்தனைப் பூக்கள் பூத்து, காய்த்துக் கனியும். அவற்றை நாம் அருந்தலாம்!
கருத்தாளர் ராபின் சர்மா அவர்கள் தனது நூலில் ஒரு நல்ல உவமையைச் சொல்லியுள்ளார்!

முன்னுரிமைக்கு முக்கியத்துவம் எவ்வளவு தேவை; இன்றேல் விளையும் கேடு எப்படிப்பட்டது என்பதை நன்கு அதன்மூலம் விளக்குகிறார்!
கலங்கரை விளக்குக் காப்பாளர் ஒருவரின் கதையைச் சுட்டிக் காட்டு கிறார்:

‘‘பாறைகள் நிறைந்த கடற்கரையை தவிர்ப்பதற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கை எரிய விட சிறிதளவு எண்ணெய்வைத்திருந்தான் அந்த பணியாளன். (முன்பெல்லாம் இம்முறை தான்; பிறகுதான் மாற்றுமுறை வந் துள்ளது - இது பழைய கால கதைதான்).

ஓர் இரவு அண்டை வீட்டுக்காரன் தன் வீட்டில் விளக்கேற்ற, கடன் கேட்டதினால் சிறிது எண்ணெய் கொடுத்தான்.

மற்றொரு இரவு வழிப்போக்கன் ஒருவன், தன் பிரயாணத்திற்காக இரஞ்சிக் கேட்டதினால், அவனுக்கு சிறிது எண்ணெய் கொடுத்தான்.

மறு நாள் இரவும் கதவு தட்டப் பட்டதால், எழுந்த இந்த ஊழியன், பெண்மணிஒருத்தி,வீட்டிற்குஒளி யேற்றி தன் குடும்பத்தாருக்கு உணவு படைக்க சிறிது எண்ணெய் தரவேண்டினாள். அதற்கும் இசைந் தான், இந்தக் கலங்கரைக் காப்பாளன்.

கலங்கரை விளக்கோ, போதிய எண்ணெய் இன்றி ஒளி தர முடியாமல் அந்தப் பெரு விளக்கு அணைந்து போயிற்று.

கப்பல் பல, மணல் தட்டின; பல உயிர்கள் பலியாயின.

காரணம் என்ன? காப்பாளன் கடமை தவறியதே!

தன் முன்னுரிமை எதுவோ, அதன் மீது கவனம் செலுத்த மறந்த தேயாகும்.

அவனின் முதற்பணி எதுவோ அதன்மீது கவனம் செலுத்த அவன் மறந்ததால், இந்தப் பரிதாப விபத்துகள்!
பெரு விலை கொடுக்கவேண்டிய பேரிடர் நிகழ்ந்தது!

தன் முன்னுரிமை எதுவோ அதன் மீது கவனம் செலுத்த எவரும் மறக்கவே கூடாது!

தனிமையாக நாளில் சில மணித் துளிகளையாவது செலவழியுங்கள் - அது உங்கள் வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய உங்களை இட்டுச் செல்வது உறுதி!
முக்கியமாக இந்த ‘செல்போன்’ யுகத்தில் அதனை அலறவிடாதீர்!

மனதை அலைய விடாதீர்!

இன்பத்தைக் கலைய விடாதீர்கள்!
- கி.வீரமணி

-விடுதலை,24.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக