பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அரிஸ்ட்டாட்டிலின் அறிவுரை - அனுபவ மொழிகள்


கிரேக்கத்தின் தலைசிறந்த தத் துவ ஞானியான அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் மாணவர்; பிளாட்டோ கிரேக்க மேதை, பேரறிவாளர் சாக்ரட் டீசின் மாணவர்.
அரிஸ்டாட்டில்தான் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர்.
அவருடைய அறிவுரைக் கொத்து மலர்களைப் பறித்த அமெரிக்காவில் தற்போதுள்ள நமது நண்பர் செல்லா அவர்கள் (வயது 90 நெருங்குகிறவர்) பிரபல வேலூர் டாக்டர் ஏ.சி.ஜான்சனின் வாழ்விணையர் டாக்டர் சத்திய பாபமாவின் அண்ணனார்; டாக்டர் ஜான்சனின் தங்கை டாக்டர் வசந்தாவின் வாழ்விணையர்.
அவர் உற்ற நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதோடு, முக்கிய அறிவு மலர்களைப் பறித்து மாலையாகக் கோர்த்து அனுப்பி உதவிடுவதில் கொள்ளை இன்பம் கொள்ளும் பெருந் தகையாளர்; மனித நேயர். எங்கள் குடும்ப உறவு என்றே சொல்லி நாங்கள்
பெருமைப்படுவதுண்டு.
அவர் அனுப்பிய கருத்து மலர்களின் மணம் இதோ:
1. எவ்வளவுதான் பலவகைப் பொருள் - செல்வம், சொத்து பெற்றிருந் தாலும், நண்பர் இல்லாத வாழ்க்கையை எவரும் விரும்பவே மாட்டார்கள்; (அது ஒரு சிறப்பான வாழ்க்கையே அல்ல).
2. கற்றறிந்த மனம் உடையவர் என்பதன் அடையாளம் என்ன தெரியுமா?
ஏற்காத சிந்தனைகளைக்கூட ரசித்து வரவேற்கும் பண்பேயாகும்.
3. ஒரு மனிதன் எப்போது புத்திசாலியாகிறான் தெரியுமா? தன்னை அறிந்து, உணர்ந்து கொண்ட பின்புதான்!
4. பொறையுடைமை - பொறுமை காத்தல் முதலில் கசப்பாக இருக்கும்; பிறகு அதன் கனிகள் மிகவும் இனிக்கும்!
5. நியாயமான செயல்களைச் செய்யும்போது நாம் நியாயமாக, நீதியாக நடப்பவர்கள். வெறும் ஆத்திரம் கொப்பளிக்க கோபத்துடன் செய்யும் செயல்கள் நம்மை ஆத்திரக்காரனாகவே காட்டும். துணிச்சலான செயல்களால் நாம் துணிவுள்ள மனிதர்களாக மாறுவோம்!
6.மிகுந்தஇருள்சூழ்ந்த கால கட்டத்தில்தான் வாழ்வில் வெளிச் சங்களைத் தேடிக் கண்டுபிடிக்க இலக்கு நோக்கிச் செல்ல முயலவேண்டும்.
7. தொல்லை வரும்போது அதை எதிர்கொள்ளாது ஓடுபவன் கோழை. தற்கொலை செய்துகொள்பவன் மரணத்தினை ஏற்கத் துணிந்தவன் என்றாலும்கூட, அவன் ஒன்றும் பெரிய இலட்சியங்களுக்காக உயிரைத் தியாகம் செய்தவன் அல்ல; மாறாக, தொல்லைகளை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஓடியவனே!
8. நாம் செய்யும் பணியில் நமக்கு இன்பம் இருந்தாலே அது செம்மையான முழுமையாக அமைவது உறுதி.
9. அறிந்தவர்கள் செயலில் செய் கிறார்கள்! புரிந்தவர்கள் போதிக்கிறார்கள்!
10. சிறந்த புத்திசாலி என்பவன் தன்னைத் தேவையின்றி அபாயத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளமாட்டான். காரணம், அதுபோன்றவைகளுக்கு எதிரான போதிய பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுவான்; ஆனால்,  அம்மாதிரி நெருக்கடியான உச்சகட்டத்தில் சில சூழ்நிலையில் வாழ்வது அர்த்தமற்றது என்று உணர்ந்து விட்டால், உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கமாட்டான்.
11. மிகப்பெரிய உயர்வான திறமை (ணிஜ்நீமீறீறீமீஸீநீமீ) என்பது எதிர்பாராது வரும் விபத்து போன்ற நிகழ்வல்ல. உயர் உள்ளிலின் விளைவு! அதோடு, இடையறா உண்மை முயற்சி, சரியான முறையில் சரியானபடிச் செய்யும் நேர்த்தி - இவைகளின் கூட்டுப் பலன் ஆகும்!
உங்கள் தேர்வு (சிலீஷீவீநீமீ) தான் உங்களை உயர்த்துமே தவிர, உங்கள் வாய்ப்பு (சிலீணீஸீநீமீ) ஒருபோதும் உயர்த் தாது!
பைத்தியக்காரத்தனம் கலவாத மேதைகளே உலகில் இருக்க முடியாது!
12. எதைச் செய்யும் அதிகாரம் நமக்குள்ளதோ அதைச் செய்யாமல் இருக்கச் செய்யும் அதிகாரமும் நம்முள் உள்ளது என்பதை மறவாதீர்!
13. மிக மோசமான சமத்துவமின்மை என்பது எது தெரியுமா?
சமமாக இல்லாதவர்களோடு போட்டி போட சம வாய்ப்பு அளிக்கும் மோசடி.
14. விமர்சனமோ - நம்மைப்பற்றி வரக்கூடாது என்று ஒருவன் கருதினால், அவன் எதையும் பேசக்கூடாது; எதையும் செய்யக்கூடாது; எதுவாகவும் இருக்கக்கூடாது! (மண் புழு வாழ்க்கை மனித வாழ்க்கை அல்ல).
என்னே நேர்த்திய அனுபவப் பாடங்கள் இவை.
முழுமையாகவோ அல்லது  முடிந்த வரையோ பின்பற்றிட முயலுங்கள்; பிறகு நீங்கள் வாழ்வில் தானே உயர்வீர்கள்!
-விடுதலை,15.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக