பக்கங்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2016

மணமாகா இருபால் இளைஞர்களே, கேரளத்தைப் பாருங்கள்!


நேற்று (12.9.2016) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில், திருச்சி பதிப்பில் 6ஆம் பக்கத்தில் ஒரு செய்தி! நம் சமூக பழக்கவழக்கங்களையே புரட்டிப் போட்ட பயனுறு மாற்றத்தின் மலர்ச்சி அது!

திருமணங்களை - ஜாதி மறுப்பு, மதமறுப்புதிருமணங்களாக (Inter- caste, Inter-religion) கேரள இருபால் இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏரா ளமாக நடத்திக் கொள்ளுகிறார்களாம்!

புதிய தலைமுறை இளைஞர்கள் பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் தூக்கி வீசியெறிந்து விட்டு துணிவுடன் (சிறப்பு திருமணச் சட்டப்படி 1954) எளியமுறையில், பதிவுத் திருமணமாக ரூ.1000 செலவோடு மட்டும் நடத்திக் கொள்கிறார்களாம்!

சுயமரியாதைத் திருமணத்தின் மற்றொரு வடிவம்தான் அது. 30 நாள் நோட்டீஸ் மட்டும்தான் தேவை.

2015 - 2016 நிதி ஆண்டில் இத்தகைய பதிவுத் திருமணங்கள் (ஜாதி, மதம் பார்க்காதவை) 13,198ஆகும். 2014- 2015 இல் இந்த எண்ணிக்கை வெறும் 2,136 மட்டுமே.
அதாவது 6.17 சதவீதம் (ஆறு மடங்குக்குமேல்) இவ்வகைத் திரு மணங்கள் ஓராண்டில் பல மடங்காகப் பெருகிவிட்டன!

இதில் வடக்குக் கேரளப் பகுதி வாழ்விணையர்களே முன்னணியில் இருக்கிறார்களாம்!

ஆறு மடங்காக பெருகிய இத்த கைய பதிவுத் திருமணங்களில் பெரிதும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களேயாகும்! என்னே மாறுதல்! எத்தகைய தெளிவு! எத்தகைய முன்னேற்றம்.
பழைய சடங்கு, சம்பிரதாயங்களுக்கு விடை கொடுத்து விரட்டியதோடு, அசைக்க முடியாத சட்ட சாட்சியப் பதிவு. செலவோ மிகமிகக் குறைவு வெறும் 1000 ரூபாய் மட்டுமே!
இப்போது நமது இருபால் இளை ஞர்கள் ஆடம்பரத்தை வெறுத்து, சிக்கனமான வகையில் இப்படி எளிமையாகவே தமது திருமணங்களை நடத்திக்கொள்ளதுணிவுடனும்,தெளி வுடனும் அவர்களாகவே முன்வந் துள்ளனர்.

வழமையான சடங்காச்சார திரு மணம் ஆடம்பரம், செலவுகள் அதிகம்.

எங்கள் உறவினர்கள் என்ன சொல்லுவார்கள்என்பதைப்பற்றி கவலைப்படாமல்,நாங்கள்இப்படி சிக்கனமான, சடங்கு சம்பிரதாயங் களுக்கு இடமே இல்லாத இந்த திருமணங்களுக்கு நாங்கள் செலவழித்த தொகை (நண்பர்கள் உறவினர்களுக்கு சாப்பாட்டுக்கான செலவு உள்பட) வெறும் 5000 ரூபாய்க்குள்தான் என்று ஒரு மணப்பெண்ணே கூறினார் என்பது செய்தி
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற வாசகங்கள் இன்று மாறிவிட்டன! பெரும்பாலான திருமணங்கள் ரொக்கத்தில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற அவலம்.
‘வரன்-தட்சணை’என்றதங் களை விற்றுக் கொள்ளும் மானங் கெட்ட முறையை வற்புறுத்தும் பெற்றோரும், அதில் அவர்களுக்கு அடிமையாகிவிட்ட மணமகன்கள்-மாப்பிள்ளைகள் நமது தேசிய அவ மானங்கள் அல்லவா?

அதற்கு சிறிதும் இடமின்றி 1000ரூபாய்துவங்கி5000ரூபாய்க் குள் முடியும் செலவுடன் மண விழாவை நடத்திக் கொள்ளும் இம்முறையை, இணையத்தையும், வலைதளங்களையும் “வாட்ஸ் அப்புக்கள், பேஸ்புக்குகள், டிவிட்டர்கள்’’ என்று பார்த்து பார்த்து காலம் கழிக்கும் இளைய தலைமுறையே இந்த நல்லதைக் கற்று, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை - சேமித்த செல்வத்தை ஒருநாள் ஆடம்பரக் கூத்துக்கு செலவழித்து பின் கடன்காரனாகி கவலைப்படுவானேன்?

யோசியுங்கள்! சுயமரியாதை உள்ள வராக மாறுங்கள்!

எளிய திருமண முறை இன்று இன்றியமையாத் தேவை அல்லவா?
-விடுதலை,13.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக