பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மறதி என்னும் கொடு நோய்

மனித வாழ்வில் ஆறாம் அறி வாகிய பகுத்தறிவின் பயன் ஏராளம்; ஏராளம்.
மனித மூளை என்ற அந்த கண்ட்ரோல் ரூம் எப்படி எப்போது மிகவும் கவனத்துடன் (Alert) துடிப் புடன் இயங்குகிறது என்பது நமது உடலின் பல்வேறு எச்சரிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, ஆய்ந்து அறியாத வர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த மூளைக்கு இதயத்திலிருந்து இரத்த ஓட்டம் எவ்வளவு சீராக மூளைக்குச் சென்றடைகிறதோ, அவ்வளவும் செயல்திறன் சிறப்பாக அமையத் திறக்கும் கதவு ஆகும்.
இன்னமும் அம்மூளையின் 80 விழுக்காடு  பயன்படுத்தாத (பகுதி) நஞ்சை நிலம் போலதான் உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறு கிறார்கள்.
மனிதனின் நினைவாற்றல் - ஏன் மிருகங்களுக்குக்கூட இது உண்டு என்று கூறுகின்றார்களே, யானை தனக்குக் கேடு செய்தவர்களை ஒரு போதும் மறக்காது; யானையின் நினைவாற்றல் அவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்களே என்பது ஒரு புறமிருக்கட்டும்; எப்போது குறை கிறதோ, அது ஒரு பெருங் குறையாகி, அதுவே பெரும் அளவில் வளர்ந்து விட்டால் நோயாக மாறி விடுகிறது என்று நரம்பியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
மறதியே இல்லாத வாழ்வாக மனித வாழ்வு இயற்கையில் அமைந் திருந்தால், அதைவிடக் கொடுமை மனி தனின் வாழ்வில் வேறு இருக்க முடியுமா? நினைத்துப் பாருங்கள்
பிறர் நமக்குச் செய்த தீங்கு - தீமை கொடுமைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்தலே சாலச் சிறந்தது என்று நமக்கு அறிவார்ந்த பெரு மக்களும் அவர்தம் சிந்தனைப் பூக்களான அறநூல்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன.
ஆனால் வாழ்க்கையில் நம்மில் சில ருக்கு மறக்க முடியவில்லை  - மன்னிக்க முடிந்தாலும்கூட. வேறு பலரோ, மறக்கத் தயாராகிறார்கள்; ஆனால் மன்னிக்கத் தயாராகவில்லை.
ஒரு சிலரே மறக்கவும், மன்னிக் கவும் ஆயத்தமாக இருக்கும் பெருங் குணம் கொண்ட பெருந்தகைகளாக இருக்கிறார்கள்!
முத்தமிழ் கலாவித்வ ரத்தினங்கள் என்று சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் போற்றப்பட்ட தமிழ் இனவுணர்வாளர்களான டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப் பெற்ற டிகே.எஸ். நாடக சபையினரால் மனிதன் என்னும் ஒரு நாடகம் பல மாதங்களாக நடைபெற்றது. அதன் மய்யக் கருத்து - மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன் என்பதை வலியுறுத்தி, மக்களுக்குப் போதித்த நாடகம் அது!
இந்த மறதியே மனிதனுக்கு இல்லா திருந்தால் நினைவு ஆற்றலுக்காக எவரையாவது நாம் புகழ, பாராட்ட முடியுமா? யோசித்துப் பாருங்கள்.
சிலவற்றை மனதுக்குள்ளேயே புகுத்தி .. புழுங்கிக் கொண்டே இருக்காது, தன் வாழ்விணையரிடமோ, உயிர் நண்பர்களிடமோ, அல்லது தனக்கு உகந்த மதி உரைஞர்களிடமோ, கொட்டி, பிறகு அதனை மறந்து விடுவது மனிதர்களை புத்துணர்ச்சியும் லேசான இதயத்தையும் பெற வாய்ப்பேற்படுத்தும் நிகழ்வாகும்!
ஆனால், நினைவு ஆற்றலின் முற்பகுதி - பழையன - புதிதாக நடப் பவை புதியன அப்போதைய நிகழ்வுகள் என்று பிரித்துப் பார்த்தல் என்ற இரண்டு வகைகளில், நமது மூளையின் செல்கள் (Cells)
பழையன அழியாது இருத்தலும், புதியன பதிவாக மீண்டும் மீண்டும் நாம், அந்த மறதி நோயி (Dementia) னால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் போது நாம் பரிதாபமும் மனவேத னையும் துயரமும் அடைகிறோம். அதிலும் குடும்பத்து உறுப்பினர்கள் - நெருங்கிய நண்பர்கள்  என்பவர் களுக்கு அப்படி ஏற்படுள்ள நிலை கண்டு அளவற்ற மனவேதனை அடைகிறோம்.
அரசியலில் மத்திய அமைச்சராக இருந்து, பலருக்கும் உதவிய, எளிய தோழராக நடந்து கொண்ட ஒரு அறிஞர் பெரு மகனார் இன்று நினைவு இழந்த நிலையில் இருக் கிறார் என்று எண்ணுகையில் நான் விழியோரத்தில் தளும்பும் கண் ணீரைத் துடைத்துக் கொண்டே எழத வேண்டியுள்ளது.
இந்த மறதி நோய் பல கட்டங் களில் அதிகமாகி விடுகிறது.
இதற்குப் பொது அறிகுறிகள் (Common Symptoms) என்ன தெரி யுமா?
முதல் கட்டம்
(1) மறதி (Forgetfulness)

(2) நேரத்தை மறந்து எப்போது என்ற நினைவற்ற நிலை Loosing Lack of time)
(3) பழகிய இடங்களையேகூட மறந்துவிட்ட நிலை (Becoming lost in familiar places)
(மேலும் நாளை சந்திப்போம்)

- கி.வீரமணி

முதல் கட்ட மறதி நோய் பற்றி நேற்றைய வாழ்வியலில் பார்த்தோம்.
அதன் அடுத்த கட்டம். மத்திய கட் டத்தின் முக்கிய பொது அறிகுறிகள்.
(I) அண்மை நிகழ்வுகளையும், நாம் அறிந்தவர்களின்  பெயர்களை மறத்தல்.
(ii) நம் வீடுபற்றி நமக்கே நினைவு இன்மை - மறதி.
(iii) பேச, எழுத மிகவும் சிரமப்படல்.
(iv) இவர்களைப் பார்த்துக் கொள்ள, இவர்களது அன்றாடத் தேவை களைக் கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டிய அவசியம்.
(v) திரும்பத் திரும்ப கேட்ட கேள் வியையே (பாதிக்கப்பட்ட)  அவர்கள் கேட்பார்கள்.
எடுத்துக்காட்டாக எப்போ வந்தீங்க பதில் சொல்லி முடித்து, வேறு சில மணித்துளிகள் ஓடிய பின்னும் அதே கேள்வியை நம்மிடம் கேட்பார்கள்.
மூன்றாவது  இறுதி கட்டம்
பொது அறிகுறிகள்
(அ) கால நேரம் அறியாத நிலை; தாம் எங்கே இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ளாத நிலை.
(ஆ)    உற்றார், உறவினர், நண்பர் களைக்கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத (வேதனை மிக்க) நிலை.
(இ) ஒரு குழந்தையை நாம் எப்படி பராமரிக்க வேண்டிய அவசியம் - மற்றவர்களின் உதவியை நம்பி அக்குழந்தை எப்படி இருக்குமோ அந்நிலைக்கு பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஆகி விடுவார்கள்.
(ஈ) நடப்பதற்கும் முடியாத நிலை - கஷ்டப்பட்டுதான் நடக்க வைக்கும் நிலை.
(உ) மிகவும் தீவிரமான தாக்குதல் - என்ன செய்கிறோம் - என்ன செய் கிறார்கள் என்பது எதுவும் அவர்கள் அறியாத நிலை (Aggression).
உலகம் முழுவதிலும் 4 கோடியே 75 லட்சம் மக்கள் இந்த கொடும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 77 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, மேற் காட்டிய பட்டியலில் சேரும் நிலை உள்ளது!
4 மணித் துளிகளுக்கு ஒரு மறதி நோயாளி சேர்ந்து கொண்டுள்ள பரிதாப நிலை. இது வருங்காலத்தில் எப்படி யெல்லாம் பெருகும் அபாயம் உள்ளது என்பதைக் கீழ்வரும் புள்ளி விவரம் உலகத்தோரை அச்சமூட்டுகிறது!
உலகம் முழுவதும் மொத்தமாக
2030-இல்    756 லட்சம் மக்கள்
2050-இல்    13 கோடியே 55 லட்சம் பேர்.
என்றாலும்கூட  139 நாடுகளில் தேசிய மறதி நோய் தடுப்புத் திட்டங்கள் தீவிரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
நம்முடைய இந்திய நாட்டில் 40 லட்சம் பேர் இந்த மறதி நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்!
இது மேலும் 1 கோடியே 20 லட்சமாக ஆகக் கூடும் என்ற மதிப்பீடு நம்மைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கிறது.
வாஸ்குலர் டெமென்ஷியா (Vascular Dementia) என்பதும் 30 சதவிகிதம் பேருக்கு மற்ற 70 விழுக்காடு அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் உலக, நல்வாழ்வு அமைப்புகள் புள்ளி விவரங்களைச் சேகரித்துள்ளன.
(இது எக்னாமிக் டைம்ஸ் நாளேட் டின் 8.8.2015 தகவல்கள் அடிப்படையில் திரட்டி எழுதப்படுகிறது).
இதனைத் தடுப்பது எப்படி என்பது நியாயமான கேள்வி அல்லவா?
விமானங்களில் வெளி நாட்டவர் பயணம் செய்யும்போது நான் கவனித்த துண்டு. Crossword Puzzles என்ற குறுக்கெழுத்துப் போட்டி, சொடுக்கு ‘Soduku’ என்ற கணக்குப் போட்டியை வெளியிட்ட நாளேட்டின் பகுதியை எடுத்து வைத்து அதற்கு விடை எழுதி தமது நினைவாற்றலை நிலை நிறுத்தி, மறதியை வயது - முதுமை காரணமாக விரட்டும் நிலை சர்வ சாதாரணம்.
மிக முக்கியமான தடுப்பு முறை மன உளைச்சல் காரணமாகவோ அல்லது வேறு காரணங்கள் ஏற்படும் (Depression)  மனச் சோர்வு - ஏற்படா மல் எப்போதும் உற்சாகமாக இருத்தல்.
நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசி சிரித்து கலகலப்பாக  உள்ள வர்கள். நாமே நேற்று மணிக்கணக்கில், நிமிடங்கள், மணித்துளிகள் என்ன என்ன நிகழ்வுகள் என்று வரிசைப்படி எழுத முயல வேண்டும் - அது நல்ல மனவளப் பயிற்சியாகும்.
படித்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் - மனத் திரையில் ஓட விட்டுப் பார்த்தல் - பிறகு சரி பார்த்தல் ஒப்பீடு மூலம் செய்தல் நல்லது.
சிக்கலான பிரச்சினைகளை நாம் நம் வாழ்வில் சந்திக்கும்போது, அவை களைத் தீர்ப்பதற்கு நம் மூளைக்கு சரியான வேலை கொடுப்பது மூளைக்கு நாம் கொடுக்கும் சரியான பயிற்சி, உடற்பயிற்சி, நடைப் பயிற்சியைப் போல.
எதையும் மனதில் பதிய வைத்து  திரும்ப மறுமுறை நினைவூட்டிக் கொள்ளுதல். இது ஓரளவு பயனளிக்கும் எல்லாவற்றையும்விட கலகலப்பாக பலருடன் பழகுதல் என்பது மறதி நோயிலிருந்து காக்கும் தடுப்புச் சுவர் ஆகும்.

- கி.வீரமனி
விடுதலை,14,15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக