பக்கங்கள்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

குடி - "குடித்த" செல்வங்கள்!


இன்று (20.11.2014) - சுயமரியாதைத் தோட்டத்தில் பூத்த புரட்சி மலர்களில் ஒன்றான கவிஞர் பொன்னி வளவனின் நினைவு நாள் என்றபோது, எனது சிந்தனைகள் மிசா காலத்து சிறை வாயிலுக்குள் சென்றன!
கவிஞர் பொன்னி வளவன் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யால் பூத்த தஞ்சைத் தரணி தந்த ஒரு தனித்துவமான, நறுக்குத் தெறித்தாற் போல் எழுதி, எரிமலையைத் தனது எழுத்துள் கொண்டுவரும் ஈடற்ற கவிஞர்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பரம்பரை என்ற கவிஞர்கள் வரிசையில் இடம்பெற்று, மறைந்தும் மறையாத கொள்கைக் கோமான்!
தமிழாசிரியராகப் பணிபுரிந்த தகை மையாளர்; அறிஞர் அண்ணாவிடமும், கலைஞரிடமும், பெரியார் திடலுடனும் மிகுந்த பாசப் பொழிவைக் கொட்டியவர்!
பொடி போட்டுப் பழகிய இச்சுயமரி யாதைச் சுடரொளி, பொடி வைத்தும் கவிதை எழுதி புகழ்பெற்ற, தகுதியான சீரிய பேச்சாளர். தி.மு.க.வின் அணி மணிகளில் ஒன்றானவர். எனவேதான், காரணமறியாத சிறைக் கைதியான மிசா கைதியாக எங்களோடு (1976 இல்) பிடித்து வந்து அடைக்கப்பட்டார்.
அவரின் நகைச்சுவை உணர்வுக்கு அறையிலேயே நடந்த சம்பவமும், அதையொட்டிய ஒரு கவிதையும் சிறைவாசம் என்ற கோடை (பலருக்கு அப்படித்தான்)யைத் தணித்துக் குளிரூட் டிய நிகழ்வும் நல்ல எடுத்துக்காட்டாகும்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிஞர் அண்ணாவுக்கு, கலைஞருக்கு வேண்டிய தி.மு.க. தோழர் சொக்கலிங்கம்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்களுக் கும், நமக்கும்கூட நல்ல நண்பர்.
அவரும், மிசா கைதியாக சிறைவாசி யானார்; அவரால் எளிதில் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன தளவில் மிகவும் உளைச்சலுக்கு ஆளா னார். காரணமின்றி, எப்போது விடுதலை என்பதே தெரியாது என்பதால், பல ருக்கும் இப்படித்தான் (ஒரு சிலர்தான் அதை ஓய்வுக்கான வாய்ப்பு என்று கருதி, ஏற்ற பக்குவத்தினர்).
திரு.சொக்கலிங்கம் திடீரென்று பக்திப் பழமானார். நெற்றியில் பட்டை, குங்குமம் அடித்து, தாடி வளர்த்து, சிறைக்குள்ளே ஒரு சிறுபிள்ளையார் கோவிலில் கும்பிடத் தொடங்கி விட்டார்! அருட்பா பாடுவார்!!
கடவுள் பக்தி என்பது மனிதர்களின் பலவீனமான நேரத்தில் தாக்கும்; அல்லது அதிகரிக்கும் என்பதை நாங்கள் பலரும் உணர்ந்தோம் - இப்படிப்பட்ட அனுபவங்கள்மூலம்.
நானோ, கழகத் தோழர்களோ (மிசாவில்) இருந்த நிலையில் - யாரை யும் வெறுத்ததுமில்லை; கேலி பேசி யதும் இல்லை. அவர்கள் மனப்பக்குவ மின்மைக்காக இரங்கி, பரிதாபப்பட் டோம்!
இதனாலா சிறைக்கதவு திறக்கும்? இல்லை. புலவர் பொன்னி வள வனுக்குத் தீராத கோபம். எல்லோரும் பகல் உணவு வாங்கி கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில்,
தனது துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து, கவியரசர் பொன்னி வளவன் ஒரு ஏழு வரி கவிதையை சத்தமாகப் படித்தார்.
பட்டை யடித்தாலும் அதன் நடுவே நன்றாய்
பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்
பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்
விட்டுவிட முடியாது எனச் சிறைக்குள்
விடாப் பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்
பட்ட துயர்போதாதா? நாளைக்கும்
நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு?
எல்லோரும் கலகலவெனச் சிரித் தனர்.
சொக்கலிங்கமும் எங்களோடு சேர்ந்து சிரித்தார் - கொஞ்சம் வெட்கங் கலந்த நிலையில்!
அந்நாள் சிறைவாசக் கொடுமை என்ற பாலைவனத்துச் சோலைபோல இத்தகைய நிகழ்வுகள்!
இவ்வளவு இலக்கியச் செறிவுள்ள ஈரோட்டுக் கவிஞன் இன்று நம்முடன் இல்லாமற் போனார் - இலக்கியத்தில் எப்போதும் இருக்கிறவர் என்றாலும் கூட!
காரணம், நேற்று இனமானத் தலை வர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும், நானும் பேசிக் கொண்டிருந்தபோது, வருந்திப் பேசி னோம் - குடி எத்தனை அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வாழ்வு தொடங்கி, எண்ணற்றவர்களின் வாழ் வைக் குடித்த - குடிக்கும், குடி கெடுக்கும் மதுப்பழக்கம்பற்றி.
மூன்று வரிகளில் ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது.
(முதலில்) மனிதன் குடிக்கிறான்,
(அடுத்து) குடி குடிக்கிறது
(இறுதியில்) குடி மனிதனையே குடிக் கிறது.
என்றுதான் விடியலோ! ஏக்கத்தோடு எழுதுகிறேன்.

- கி.வீரமணி
விடுதலை,20.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக