பக்கங்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

நீண்ட ஆயுளா? நல்ல உடல்நலமா? எதற்கு முன்னுரிமை?

நீண்ட காலம் மனித ஆயுள் நீள வேண்டும் என்று ஆசைப்படுவது, பகுத் தறிவு - மனிதநேய - சுயமரியாதைக் கண்ணோட்டத்தில்எவ்வளவுதூரம் விரும்பத்தக்கது என்பது விவாதத்திற் குரியதாகும்.

நீண்டகால முதுமை வாழ்க்கை நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள மற்றவர் களுக்கும் சுமையாக ஆகி, ஒருவகை ‘வேண்டாவெறுப்புத்தன்மை’க்குமுதி யோர்களை ஆளாக்குவது, சுயமரி யாதைக் கண்ணோட்டத்தில் எவ்வளவு தூரம் சரியானது?

முன்பெல்லாம்‘‘ஆதரவற்றகுழந் தைகளுக்கான விடுதி''கள்தான் தேவைப்பட்டன.

ஆனால்,இப்போதோ,‘‘ஆதரவு மறுக்கப்பட்ட அல்லது அலட்சியப் படுத்தப்பட்ட பெற்றோர் - மற்றோர் எல்லோருக்கும் உரிய முதியோர் இல் லங்கள்’’ தேவைப்படும் நிலை உள்ளது!

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடு களில் முதுகுடி மக்களைக் (Senior Citizens) காப்பாற்ற போதுமான மனித நேய ஏற்பாடுகள் உள்ளன! ஆனால், நம்நாட்டில்... கேள்விக்குறியே!

நம் நாட்டில் குறைந்தபட்சம் முது குடி மக்களுக்கு ரொக்கப் பணம் தேவைப்படும்போது, அதை அவர்கள் வாழும் இடத்திற்கே, வங்கியோ, கருவூலத் துறையின் ஊழியர்களோ நேரில் கொண்டு போய் கொடுத்து, போதிய சான்றுகள் பெற்றுத் திரும்பும் ஏற்பாடு செய்வது என்ன பெரிய முடியாத ஒன்றா?

இல்லை; இல்லவே இல்லை! மன மிருந்தால் மார்க்கம் உண்டு.

முதுமை ஓங்கிடும் நிலையில், அவர்கள் உடல் தளர்வு - ஏற்பட்டு எப்படி அது முதுமையில், மிகப்பெரிய கேட்டில் முடிகிறது என்பதை அண் மையில் வெளியிடப்பட்ட ஒரு நூலை எனது மருத்துவ நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் கொடுத்தார்.

அவரது மாணவர் - தற்போது அமெரிக்காவில் மருத்துவராகப் பணி புரிபவர் டாக்டர் வெங்கட் சீனுவாசன் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு என்னிடம் கொடுத்துப் படித்துப் பயனடையச் சொன்னார்.

அந்நூலைப் படித்தேன். அதில் மருத்துவத் துறையில் எத்தனைக் கோணத்தில் நோய் தீர்க்க வேண் டிய பொறுப்பும், கடமையும் மருத்து வர்களுக்கு உள்ளது என்பதை ஒரு புது வெளிச்சம் பாய்ந்த நிலையை விளக்குகிறது அந்நூல்!

‘Bio-psychosocial Model’ என்ற தலைப்பில்,

மூன்று கோணங்களில் நோயாளியை மருத்துவர்கள் - மருத்துவம் பார்த்து சிகிச்சை அளிப்பதில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அந்நூல்!

முன்பு மருந்து கொடுத்தாலோ அல்லது ஊசி போட்டுவிட்டுச் செல் வதாலோ முடியும் என்று கருதிவிடக் கூடாது.

1. உடற்கூறு  ((Biological)

2. மனோதத்துவ ரீதியில் ஆய்வு (Psychological)

3. சமூக உறவு - தோழமை  அடிப் படை (Social aspects to patients)

70 வயது நிறைந்த ஒரு நண்பர் அவருக்கு ஏற்கெனவே இதய நோய் உண்டு. இதய நோயாளியாயினும் அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல அவர் மகிழ்ச்சியாக இல்லை; காரணம் அவர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, வழமையான பணி செய்ய முடியாத அளவுக்கு, வீட்டில் முடக்கம். வீட்டில் முடக்கம் காரணமாக நண்பர்களைக்கூட சந் தித்து அளவளாவிட முடியவில்லை; அவரையும் தொற்றுநோய்க் கிருமிகளி டமிருந்து காப்பாற்றிட வேண்டுமே!

இதனால் அவருக்கு மன அழுத்தம் (Stress) அதிகமாகி, அவரைத் தன்னை மறந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது!

எனவே, நீண்ட காலம் வாழுகிறார். மேலும் வாழவேண்டும் என்று ஆசைப்படுவது அவர்களுக்கே ஒரு சுமைபோல ஆகிவிடுகிறதே!

தந்தை பெரியார் எப்போதும் கசப் பான உண்மையையே பேசக்கூடியவர்.

அவர் கூட்டங்களில் கூறுவார்,

‘‘என்னை நூறாண்டு வாழவேண்டும்; அதற்குமேலும் வாழவேண்டும் என் றெல்லாம் வாழ்த்தினீர்கள்!

உங்களுக்கென்ன? கூறிவிட்டுச் செல்வதன்மூலம் உங்கள் வேலை - ஆசை முடிந்துவிட்டது!

வாழுகின்ற என்னைப் போன்ற வனுக்கு அல்லவா அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பது புரியும்‘’ என்று நகைச்சுவையோடு கூறுவார்.

எனவே, நல்ல உடல்நலம் முக்கியம்; நீண்ட ஆயுளைவிட என்பதே யதார்த்தம்!

- கி.வீரமணி
-விடுதலை,6.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக