பக்கங்கள்

புதன், 11 ஜனவரி, 2017

“குழந்தைகளின் சுதந்திரமே மனித சுதந்திரத்தின் தொடக்கம்!’’


‘திடீர் இடியோசை’ என்ற ‘ஓஷோ’வின் புத்தகத்தைப் படித்தேன்.

ஓஷோ ஒரு சுதந்திர சிந்தனையாளர்; தனித் தன்மையுடன் எதையும் கூறுபவர்.

மனிதர்களைப் பிணைத்துள்ள பல்வேறு சங்கிலிகள், தளைகள், விலங் குகளை அவர்கள் அறுத்தெறிந்திட தனித்த பாதை வகுத்தவர்.

வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் எப்போதும் பார்த்து, அதைப் பதிவு செய்தவர்!

குழந்தைகளை நாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்ற பழைய கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்குகிறார் ஓஷோ.

தனி மனிதச் சுதந்திரத்தின் தேவை - பெருமைகளையெல்லாம் பேசுபவர்கள், அச்சுதந்திரத்தை மனிதர்களின் குழந் தைப் பருவத்திலேயே பறித்துவிட்டேம் என்பதை ஏனோ மறந்தோம்? என்று ஒரு சொடுக்கு சொடுக்கிறார் ஓஷோ.

ஆழமாகச் சிந்தித்தால்தான் அவரது கருத்தை எவரும் ஏற்க முடியும்.

வழமையான - வாடிக்கையான சிந்தனையோடு, ‘பழைய எண்ணத்தில் ஊறிய ஊறுகாய்' போன்றோர் அவ் வளவு எளிதாக அக்கருத்தை ஏற்க மாட்டார்கள்!

அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டைப் பெற்றோர்கள் பிஞ்சுகளிடம் - குழந் தைகள் என்ற இளந்தளிர்களிடம் திணிக்கும்போது, தென்றலால்கூட கிழிக்கப்படும்தளிர்களாகவும்அவை கள் பற்பல நேரங்களில் மாறி விடு கின்றனவே! இல்லையா?

Spartan Decipline - Military Discipline என்பதெல்லாம் பற்றிப் பேசப்பணிதல் -  கட்டுப்பாட்டின் உச்சம் - கடுமை அவைகளுக்கு உண்டு. அந்தத் துறைக்கு இராணுவத்திற்கு அது தேவைதான். அங்கே கட்டுப்பாடு தான் முன்னுரிமைக்குரியதே தவிர, தன்னிச்சையான தலைவணங்காத் தன்மை நுழையக் கூடாத ஒன்று.

குழந்தைகள் பற்றி ஓஷோவின் புத்தொளிப் பாய்ச்சல் இதோ:

“ஜெர்மனியில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதனைப் பற்றி நான் கேள் விப்பட்டிருக்கிறேன். இன்றும் கூட அவரது சிலைகள் அங்கு உள்ளன. மேலும் சில தெருக்களுக்கும், சில சதுக்கங்களுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.டாக்டர் டேனியல் காட்லீப் ஸ்செரெபர் என்பது அவரது பெயர். பாசிஸ கொள் கையின் உண்மையான ஸ்தாபகன் அவர் தான். அவர் 1861இல் இறந்து விட்டார். ஆனால் அவரையும் அறியாமலேயே அடால்ப் ஹிட்லர் வருவதற்கான ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கிவிட்டார்.

இந்த மனிதர் குழந்தைகள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்கிற குறிப்பிடத்தக்க எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவர் அநேக புத்தகங்களை எழுதினார். இந்தப் புத்தகங்கள் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் சில அய்ம்பதாவது பதிப்புவரை சென்றுள்ளன. அவரது புத்தகங்கள் அபரிமிதமாகநேசிக்கப்பட்டன.அபரிமிதமாகமதிக்கப்பட்டன.ஏனெனில் அவரது கருத்துக்கள் விதிவிலக்கானவைஅல்ல. அவரது கருத்துக்கள் மிகவும் சாதாரணமானவையாக இருந்தன. பலநூற்றாண்டுகளாக ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கின்ற விஷயங் களை அவர் கூறினார். அவர் சாதாரண மனிதனைப்பற்றி பேசுகின்ற ஒரு மனிதராக இருந்தார்.

அவரதுகொள்கைகளை,அவ ரது சிந்தனைகளை என்றும் தொடர்ந்திருக்கசெய்வதற்காகநூற் றுக்கணக்கான சங்கங்களும், கிளப்களும் உருவாக்கப்பட்டன. அவர் இறந்த பிறகு அநேக கிளைகள் நிறுவப்பட்டன. அநேக தெருக்களுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு ஆறு மாதம் ஆகின்ற காலத்தில் இருந்தே அவர் களை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை கொண்டார், ஏனெனில் குழந்தை ஆறு மாதமாக இருக்கும்போது நீங்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை என்றால் அவனை உண்மையிலேயே ஒழுக்கத்துடன் வளர்க்கின்ற சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று அவர் கூறினார். ஒரு குழந்தையானது மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும் போதே, இந்த உலகின் வழிகள் குறித்து அறிவதற்கு முன்பே அவனுக்குள் ஒரு ஆழ்ந்த பதிவை உண்டாக்கி விடுங்கள். அதன் பின்னர் அவன் எப்போதுமே அந்தப் பதிவினை பின்பற்றி நடப்பான். மேலும் அப்படி அவன் ஆக்கப்பட்டிருப்பதும் கூட அவனுக்குத் தெரியாது. தனது சொந்த தீர்மானத்தின் படியே தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொண்டு இருப்பான். ஏனெனில் ஒரு குழந்தையானது ஆறு மாதம் ஆகின்ற நிலையில் இருக்கும் போது அவனுக்கென்று எந்த ஒரு தீர்மானமும் இன்னமும் அவனிடம் இருக்காது.தீர்மானங்கள் பின்னாளில்தான் வருகின்றன. எனவே ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது அவனது தீர்மானத்திற்கு முன்பே வந்து விடுகிறது. எனவே, இதுதான் எனது சொந்தக் கருத்து என்று அவனுடைய தீர்மானம் எப்போதும் நினைக்கும்.

இது ஒரு குழந்தையை களங் கப்படுத்துவதாகும். ஆனால் இந்த உலகில் உள்ள எல்லா மதங்களும், பெரும் பேச்சு வன்மை படைத்தவர்கள் எல்லாம், இந்த உலகின் சர்வாதிகார மக்கள் எல்லாம், குருக்கள், பாதிரி யார்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எல்லாம் இதைச் செய்வதில் தான் நம்பிக்கை கொண்டி ருந்தனர்.''

(‘‘திடீர் இடியோசை''- ஓஷோ நூலின் பக்கம் 273-274)

(மற்றவை நாளை )

-விடுதலை,11.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக