பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

அறிதல், தெரிதல், புரிதல் அவசியமே!


உல்லாசக் கப்பல் ஒன்றில் வாழ் விணையர்களான ஒரு கணவனும், மனைவியும் பயணம் செய்து கொண் டிருந்தார்கள்; திடீரென்று ஒரு நெருக்கடி பேரிடர்!

இருவரில் ஒருவர், கப்பலை விட்டுக் குதித்தே ஆகவேண்டும் என்பது கப்பல் தலைவரின் தவிர்க்க இயலாத கட்டளை போன்ற வேண்டுகோள்!

வேறு வழியில்லை; இருவரும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய அளவுக்குக்கூட அவகாசமில்லை.

மனைவியைத் தள்ளிவிட்டு, சோகத்தோடு வீடு திரும்பிய கணவன், இனி நமக்கு ஒரே ஆறுதல் கடமை, தமது ஒரே பெண் குழந்தையை நன்கு வளர்த்து ஆளாக்கி, மகிழ்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தோடு, அப்பெண் குழந் தையை நன்கு வளர்த்தார். அந்தப் பெண் கல்வி கற்று, பெரிய பெண்ணானாள். தந்தையும், முதுமையை அடைந்த நிலையில், இறந்து போனார்.

அந்தச் சொல்லொணா சோகத் திற்கிடையில்,  அடக்கமெல்லாம் முடிந்த பிறகு, வீட்டில் தந்தையின் அறையைப் பெருக்கித் தூய்மைப்படுத்திய நேரத்தில், படுக்கையில் உள்ள  தலையணையின் கீழிருந்து ஒரு பழைய டைரி - தந்தை நாளும் எழுதிய நாட்குறிப்பு - விழுந்தது! வியப்புடன் அந்த டைரியில் ஒவ்வொரு நாளும் தன் தந்தை எழுதியிருந்ததை இந்தப் பெண் - மகள் படித்தாள்! அதிர்ந்தாள்!!

அப்போது அதற்குமுன்பு எப் போதும் கேட்டிராத, தெரிந்திராத, அறிந்திராத ஒரு செய்தி அவளது கண்ணில் தென்பட்டது!

படித்துக் கண்ணீர் விட்டு ‘ஓ’வென்று கதறி அழுதாள்.

தனது தாய்க்கு ‘மீளாநோய்’ ஒன்று இருந்த காரணத்தால், அவர் களுக்குள்ளேயே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்போல, கப்பலில் இருந்த தன்னை கணவன் தள்ளிவிட்டு, குழந்தையான தனது அருமை மகளை வளர்த்து ஆளாக்கிடும் கடமையைச் செய்தலே தலையாய கடமை; எனவே, மனைவி கடலில் தள்ளிவிடப்படல் தவிர்க்க முடியாததாகி விட்டது!

அதுவரை இந்தச் சம்பவத்தின் பின்னணியை அறியாத, தெரியாத நிலையில் இந்த இளம் பெண்ணின் ஆழ்மனதில், தனது தாய் இல்லை; தந்தை மட்டும் தப்பித்து வந்தாரே, இது அவரது ஆண் வர்க்க சுயநல ஆதிக்கத்தினால் ஏற்பட்ட முடிவாக இருக்குமோ என்றே நினைத்திருந்தாள். என்றாலும் தந்தை, தந்தைதானே! தன் னிடம் பாசம் காட்டுபவர் அவர் தானே என்று  ஆறுதல் கொண்டிருந்தாள், புரிந்துகொண்டாள்.

அந்த ‘டைரி’யின் வாசகங்களும், அதில் புதைந்திருந்த  உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தவுடன், தன் தந் தையின் திட சித்தம், தாயின் தியாகம் - தன்னை ஆளாக்கிட அவர்கள் எத்தகைய நெருக்கடியில், எப்படிப்பட்ட கசப்பான முடிவினை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்பதைப் புரிந்து - அழுது தீர்த்துவிட்டு சலனமற்று சாய்ந்தாள்!

தோழர்களே, இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ளவேண்டிய பாடங்கள் பல உள்ளன - இல்லையா?

1. எதையும் மேலெழுந்தவாரியாக, ஒரு நிகழ்வை மட்டும் வைத்து முடிவுக்கு வந்து - அவசரத் தீர்ப்பு வழங்கிடுவது உண்மையைக் குழிதோண்டிப் புதைப் பதாகும் என்பதும்,
2.அவரவரதுசூழ்நிலையும்,நிர்ப் பந்தம், அடிப்படை, நியாயமான செயலைச் செய்த செயல்கள், புறப்பார் வையில், பிறர் கண்ணோட்டத்தில் சரியானதல்ல; கொடுமையானது என்று கூடத் தோன்றும்.

ஆனால், சரியான புரிதலே உண் மையை உள்ளிருந்து உரக்கக் குரல் கொடுத்து, நம்மை உயர்த்தும்.
எனவே, மேலெழுந்தவாரியான முடிவோ - அவசரமோ வேண்டாம்!
-விடுதலை,10.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக