பக்கங்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

பில்கேட்சின் கூற்று மெய்யா? பொய்யா?

இந்திய நாட்டு மக்களாகிய நம் மக்களைப் பற்றிய பிரபல தொழிலதிபரும் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவரும், சிறந்த கொடையாளி யுமாகிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் அவர்கள் என்ன அபிப்பிராயம் வைத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? தயவு செய்து இதைப் படியுங்கள் - கற்க முடிந்தால் கற்று அதன்படி நிற்க முயலுங்கள்.

"உலகிலேயே இந்தியா மிகப் பெரிய பணக்கார நாடு (ஏழை நாடல்ல..!)

இந்தியாவில் உள்ள கோவில்கள், தேவால யங்கள், மசூதிகள் இவைகளில் உள்ள செல் வங்களை விற்றால் அது உலகின் மிகப் பெரிய (பொருளாதார) வல்லரசாக Super Power ஆகி விட முடியும்!"

இதில் மிகவும் சிரிப்புக்கிடமான ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்திய மக்கள் தாங்கள் வேலைக்காரர்களைப் போல இருக் கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பதே யாகும்.

அதன் காரணமாகவே அங்கே (இந்தியாவில்) ஏராளமான விவசாயிகள் தங்கள் வறுமைக்கும் துரஷ்டி நிலைக்குமான நிலைக்காக கடவுளைச் சாடி தற்கொலை செய்து  கொள்கிறார்கள்.

நாட்டில் வாழும் ஏழைகள் - ஏழ்மைக்கு உண்மையான காரணமான குற்றவாளிகள் யார் என்பதை சரி வர அடையாளம் காணத் தவறு கின்றனர்!

தங்களுக்கு வேலை கிட்டாமைக்கு உண் மையான காரணஸ்தர்கள், மக்கள், யார் எவர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை!

கடவுளுக்கு உங்களது தலைமுடி காணிக்கை தருவதன் மூலமோ, பணத்தை உண்டியலில் போடுவதாலேயோ "புண்ணியத்தைத் தேடிக் கொள்ளலாம்" என்று கூற முடியுமா?

தேங்காய் உடைத்தும், முடி, பணம் இவை களை கடவுள், கடவுளச்சிகளுக்கு காணிக்கை யாகத் தருவதால் சுபிட்சம் வந்து விடும் உங்கள் நாட்டுக்கு என்று நம்புகிறீர்களா?

உண்மையில் (மயிர்) முடி காணிக்கையும், பணமும் தருவது ஒரு தொழிலாகவே மாறி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தங்கம், வெள்ளி....?? இவைகளைக் காணிக் கையாகக் கொடுப்பதனால் ஏற்பட்ட பலன் தான் என்ன?

அவைகள் ஏலம் விடப்படுகின்றன.

இதனால் எந்த தர்ம - அறப்பணியாகி, எந்த ஏழைகள் - வறுமையாளர்கள் பயன் பெறு கிறார்கள்?

இத்தகைய "தர்மங்களால்" யாருக்கு என்ன பயன்?

ஆக்க ரீதியாகச் சிந்தித்தோமானால் உருப் படியாக எதைச் செய்ய வேண்டும்?

(1) விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குங்கள்.

(2) ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முயலுங்கள். அவர்களது திருமணத்திற்கு நிதி உதவி செய்யுங்கள்.

(3) "அனாதைக் குழந்தைகளை" தத்து எடுத்து வளர்த்து ஆளாக்குங்கள்.

(4) பசித்த வாய்க்கு - வயிற்றுக்கு சோறிடுங்கள்.

(5) மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட முன் வாருங்கள்.

(6) கிராமத்துப் பள்ளிக் கூடங்களுக்கு நூலக உதவி செய்யுங்கள் - நூலகங்கள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள நூலகங்களுக்கு நூல்களை  தாருங்கள்.

(7) முதியோர் இல்லங்களுக்கு உதவுங்கள்.

(8) கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மேற்கூரை இல்லை; ஆனால், கோயில்களுக்கு மார்பிள் தரைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன!

(9) 200 ரூபாய் கொடுப்பதற்கு ஆயிரம் கேள்விகளை (கிராமப்பள்ளி நன்கொடைக்காக) கேட்கும் நபர்கள், கோயில்களுக்கு எவ்வித மறுப்பும் இன்றி வாரிவாரி வழங்குகிறார்கள்!

இப்படிப்பட்ட நாடு எப்படி, 'சூப்பர் பவர்' உண்மைப் பொருளில் வல்லரசு நாடாக ஆகிட முடியுமா?

(10) 'விவசாய நாடு' என்று அழைத்துக் கொள்ளும் நாட்டில் விவசாயிகள்தற்கொலைகள் நடக்கலாமா?

எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலைகள் மலிந்து வருவது நல்லதா?

இதைப் படிப்பதோடு நிறுத்தி விடாதீர்! பரப்பி சிந்தித்து செயலாற்றி நாட்டையும், சமுதாயத் தையும் மாற்றிட உங்கள் பங்களிப்பைச் செய் யுங்கள்.

படித்தேன் - கண்களில் நீர் கசிந்தோடியது.  இதைத் தானே தந்தை பெரியார் ஒரு வாக்கியத்தில் சொன்னார்.

"கடவுளை மற

மனிதனை நினை"

புரிகிறதா? பெரியாரின் தேவை!

(இது இணையத்தில் ஒரு முக்கிய நண்பரால் அனுப்பப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது).

-  விடுதலை நாளேடு 12 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக