பக்கங்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

நல்ல தூக்கத்திற்கான அய்ந்து சீலங்கள்!

மாத்யூ வாக்கர் என்ற பேராசிரியர் "நல்ல தூக்கம்" பற்றி ஆய்வு செய்து அருமையான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.! "நாம் ஏன் தூங்கு கிறோம்?" என்ற தலைப்புள்ள நூல்! கலிபோர் னியா - பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்.

இவர் நரம்பியல் தத்துவப் பேராசிரியர், அவர் கூறுவது ஒரு சிறு 'வீடியோ' - காணொலி காட்சி யாக வந்துள்ளதை டாக்டர் எம்.எஸ்.இராமச் சந்திரன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிக்க மகிழ்ச்சி.

முதலாவது,

"குறிப்பிட்ட நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று உறங்கத்துவங்கும் பழக்கத்தைப் ஏற் படுத்திக் கொள்ளுங்கள். சில நாட்களுக்கு அப்படிப் பழகி விட்டால் தானே நமது உடம்பின் கடிகார முள்ளே உங்களை அதற்குச் சரியாக பழக்கி விடும்.

இரவு 10.30 மணி அல்லது 11 மணி  தூக்கத்திற்குச் செல்லும் நேரம் என்று ஒழுங்குப் படுத்திக் கொள்ளுங்கள்.

அதே போல் விழித்தெழும் நேரமும் குறிப்பிட்ட நேரமாகவே அமைதலும் மிகவும் அவசியம் ஆகும். காலை 5.30 மணி, 6 மணி அல்லது 7 மணி என்றால் அந்த முறையைத் தவறாது கடைப்பிடிக்கும் பழக்கம் வரவேண்டும்.

இரவு நேரம் எவ்வளவு தள்ளிக்கூட படுக் கைக்குப் போய் தூங்கினாலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் எழுவது என்ற முறையை நாம் எப்போதும் உருவாக்கி கொள்ளுதல் நல்லது.

மூளைக்குப் பயன்படும் "மெலட்டானின்" (melatonin) என்ற அந்த சத்து பாதிப்பின்றி கிடைத்திட அது வெகுவாக வழிவகுக்கும்" என்கிறார் அந்தப் பேராசிரியர்!

இதில் சமரசமே செய்து கொள்வது கூடாது. அது வார நாட்களானாலும் சரி, அல்லது விடு முறை நாளாக இருந்தாலும் சரி ஒரே சீரான நேர முறைதான் உறங்கப்போவதிலும், விழித்தெழுவ திலும் கூட கடைப்பிடிக்கப்படல் வேண்டும். 8 மணி நேர தூக்கமும், சீர்மையும் முக்கியம்.

இரண்டாவது,

"உங்களின் படுக்கை அறையின் தட்ப வெட்பச்சூழல் மிகவும் சரியானதாக இருப்பது நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்!. இருட்டு மிகவும் தேவை - இருட்டில் தூங்குவது தான் "மெலட்டானின்" சத்து மூளையை அடைந்து சுறுசுறுப்பாக்கி களைப்பு நீங்க உதவிடக்கூடும்.

எனவே சரியான அறையின் வெப்பம் என்பதும் நல்லத்தூக்கத்தைக் கொடுக்கும் சரியான வாய்ப்பாகும். வெளிச்சத்தில் தூங்கா தீர்கள்! விளக்குகளை மங்கலாக்குங்கள் - நிறைய வெளிச்சம் நமக்குக் கிடைக்க வேண்டிய "மெலட்டானை" பறித்து விடும்.

மிகவும் சூடான - மிதச் சூடான (Warm) தட்பவெட்பமும் கூடாது; மிகவும் குளிர்ந்த அறையிலும் உறங்கக்கூடாது."- நடுநிலை விரும்பத்தக்கது.

பல நண்பர்கள் தங்கள் படுக்கை அறையின் ஏசியை (A/C) மேலே திருகி விட்டு பிறகு கம்பளிப் போர்வையைத் தேடுகிறார்கள்!

எனக்கே முதல் வகுப்பு ஏ.சி. "பெரும் தண்டனை" போல பலநேரங்களில் தூக்கத்தை விரட்டுவதற்கே பயன்படுகிறது.

மூன்றாவதாக,

படுக்கப் போகுமுன் தொலைக்காட்சிப் பார்ப்பதை, திரைப்படங்கள் பார்ப்பது (Home Theatre - என்ற வீட்டுத்திரையரங்குகள் கூட வீடுகளில் உள்ளது,  ஒரு மணிநேரம் முன்பே-  படுப்பதற்கு முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

ஏதாவது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து விட்டு பிறகு தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அரசியல் ஏடுகளைத் தவிர்ப்பது நல்லது.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு 13 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக