பக்கங்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2019

தூங்குங்கள் தோழர்களே, தூங்குங்கள்!

உடல் நலம் சீராக இருப்பதற்கு தூக்கம் என்பது மிக மிக அவசியம்.

தூக்கமின்மை - போதிய தூக்கமின்மை - பல்வகை நோய்களுக்கு மூலவித்தாக அமையும் அபாயத்தின் துவக்கம் என்பதை நம்மில் பலர் ஏனோ உணர மறுக்கிறோம் அல்லது மறக்கிறோம்!

குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது. குறித்த நேரத்தில் தூங்கச் செல்ல படுக்கைக்குப் போவதையும், விடியற் காலை எழுதலையும் தொடர்ந்து ஒருவாரம் தவ றாமல் செய்து பாருங்கள். பிறகு உங்களது உடலே கடிகாரமாக மாறி அதே நேரத்திற்குத் தூக்கத்தை வரவழைக்கும்; விடியற்காலை அதே நேரத்தில் உங்களை "அலாரம்"  அலறல் இல்லாமலேயே அது உங்களை எழுப்பி விடும் என்பது உறுதி!

உடலைப் படியுங்கள், பின்பற்றுங்கள்!

எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து பழகுதலுக்கு உடல் பெரிதும் ஒத்துழைப்பதோடு, எதிர்பார்க்கவும் கூடச் செய்கிறது!

காலை உணவு, பகல் உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு என்று இப்படி பகுத்துப் பார்த்து உண்ணும் பழக்கம் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிதும் உதவுகிறது என்பது உடல்கூறு அறிந்து கூறும் மருத்துவ மாமணிகளது முக்கிய கருத்து ஆகும்!

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் (D.C.) மனோ தத்துவ ஆய்வு ஏடு ஒன்று அறிவியல் அமைப்பால் வெளியிடப்படுகிறது.

அதன் பெயர் 'PLOS ONE'

NSU's College of  Psychology  யின் பேராசிரியர் ஜெய்யம் எல் டார்ட்டர்  (Jaime L Tartar) ஓர் கூட்டு ஆராய்ச்சியாளர்.

சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் இருக்கும் பகுதி நமது செரிமானத்திற்கு உதவும் முக்கிய பகுதி. அதற்கு உதவிட முடியாமல் போதிய தூக்கமின்மையால் அந்த குடற்பகுதி (Gut Microbiome) உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் புதிய பிரச்சினைகளைக் கிளப்பி விடக் கூடும்!

இந்த ஆய்வாளர்கள் தந்துள்ள ஆய்வறிக் கைப்படி, தூக்கம் குறைவு ஏற்படுத்தும் பிரச் சினையானது பெரிதும் குடற்பகுதி செரிமானப் பகுதியையே வெகுவாகப் பாதிக்கிறது என்றே கூறுகின்றனர்!

அதே நேரத்தில் போதிய அளவு தூங்கி எழுப வர்களின் குடற்பகுதி நலம் நன்றாக அமைந்து, அவதியுடன் மலங்கழிக்கவோ, அஜீரணக் கோளாறுக்கோ இடம் அளிப்பதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மனிய இளம் பெண், "மருத்துவர்கள் பலரும் இதயம், மூளை, சிறுநீரகம்  - இவைகளைப் பற்றியே ஆய்வுகள் செய்து புத்தகங்களை எழுதிக் குவிக் கிறார்களே, இந்த Gut  என்ற குடல் பகுதியைப் பற்றி ஏன் அலட்சியப்படுத்துகின்றனர்?  நாம் ஏன் அப்படி ஒரு புத்தகம் எழுதக் கூடாது?" என்பதை ஒரு சவாலாகக் கருதி, தன் ஆற்றல், அனுபவத் தினைக் கொண்டு எழுதி முடித்தார்!

மலச்சிக்கல் வந்தால் பல உடல் உபாதைகள், தலைவலி, பசியின்மை  வாந்தி, செரிமானமின்மை எல்லாம் ஏற்படுதல் மாறி மாறி வரும்.

இதற்கு மூலகாரணம் போதிய தூக்கமின் மையே; எனவே இளைஞர்களே, கணினி முன்னால் பல மணி நேரத்தை செலவழித்து தூக்கத்தைக் குறைப்பதன் பார தூர விளைவு வயது வளர வளர மேலும் சிக்கலாகக் கூடும் என்பதால் 'இளமையில் கல்' என்பதுடன் இதனை யும் இணைத்துக் கொள்ளல் நல்லது!

என்ன.........! நேரம் ஆகிவிட்டதே!

தூங்குங்கள் தோழர்களே!

போதிய அளவு தூங்குங்கள்!

- விடுதலை நாளேடு 31 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக