பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

இப்போதெல்லாம் இளைஞர்கள் பலருக்கு சிந்திக்கும் ஆற்றலும், அவற்றை எழுத்து வடிவத்தில் கட்டுரை களாக்கி சிறு புத்தகமாகவும் ஆக்கிப் பரப்புகிறார்கள்.
அப்படிப்பட்ட நடுத்தர வயதினரான திரு. வைகை ஆ. விசுவநாதன் என் னிடத்தில் திறன் பத்து என் சொத்து என்ற தலைப்பில் ஒரு கையடக்க நூலை அளித்துச் சென்றார்!
எளிய முறையில் கருத்தைச் சொல்லி கவனத்தைச் சுண்டி இழுத்து சிந்திக்க வைக்கும் திசை காட்டும் கருவிபோல் இருந்தது.
பாராட்டத்தக்க இதுபோன்றவர் களின் பணி - எழுத்துத் தொண்டு மிகவும் போற்றி வரவேற்கத்தக்கதாகும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாத அன்றன்றும் புதுமைகளை சுவைக்கவேண்டும் என்பார் புரட்சிக் கவிஞர்.
அதற்கேற்ப இச்சிறுநூல், பயணங் களின்போது படிக்கப் பயன்படும் வகை யில் அமைந்துள்ள, பயணக் களைப்ப கற்றும் பலே நண்பனாகவும் கூட அமையலாம் - சில பயணாளிகளுக்கு!
தம்பியண்ணா என்பது இவரது புனை பெயர்.
உங்கள்
பலங்களை
பலப்படுத்துங்கள்;
பலவீனங்களை
பலவீனப்படுத்துங்கள்
- என்ற வரிகளுடன் தொடங்கும் இச்சிறு வெளியீட்டில்,
மனிதாபிமானம்
மற்றவர்
+
நிறைவு
நிலை
+
தக்க செயல்
தனதாக
உணர்வு
எனப் போட்டு,
மற்றவர் நிலையை தனதாக உணர்தல் தன்னிலையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து, மற்றவர் நிலையை தனது என உணர்ந்து, அவருடைய
நெருக்கடியிலிருந்து அவரை விடுவித்தல் என்று கூறுகிறார்.
ஆம், ஆங்கிலத்தில் நுஅயீயவால என்ற சொல்லின் முழு விளக்கம் இது என்றால் மிகப் பொருத்தம் அது!
மனிதாபிமானமும், நிறைவும் கொண்ட ஒருவரே, மற்றவர் நிலையை தனதாக உணர்ந்து, தக்க செயல் செய்ய முடியும்; இது பிறர் மீது இரக்கம் காட்டுவதல்ல; (Sympathy என்பது இரக்கம் என்பதாகும்) தனது மேம்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவது.
யார் வெற்றி பெறவேண்டும் என்பதை விட யார் தோற்றுவிடக் கூடாது என்ற நிறைவான உணர்வு இது!
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்    (குறள் 214)
என்ற குறளுக்கு மிக அருமையான விளக்கமாக மேற்காட்டிய வரிகள், வந்து நிற்கின்றன!
இதுபோல பலப்பல
பயனுறும் கருத்து முத்துக்கள்!
மனம் திறந்து கேளுங்கள்,
சுவையாக, சுருக்கமாக
சூழலுக்கேற்பப் பேசுங்கள்....!
இதைக் கடைப்பிடிக்க கற்றுக் கொள் வோம், வாரீர்!
எனவே, இக்கட்டுரையும் சுருக்க மாகவே முடிவது நல்லதல்லவா?
- கி.வீரமணி
-விடுதலை,21.11.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக