பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2015


உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்!
என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்!
இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்று டாக்டர் கூறினார் என்று சொல்பவர் களை பார்க்கிறோம்.
முதியவர்களைத்தான் இந்த மாரடைப்பு என்னும் இதய நோய் தாக்கும் என்பது அவசியமில்லை; இந்த துரித உணவு யுகத்தில் இளைஞர்கள், வாலிபர்கள் உட்பட பலரையும் இந்தக் கொடூர நோய், திடீர் பூகம்பம் ஏற்படுவதுபோல, அல்லது சுனாமிபோல தாக்கி உயிரைப் பறித்து விடுகின்ற கொடுமையில் நிராதரவான குடும்பங் கள் பல உண்டு.
எனவே இதுபற்றி மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். வந்த பின்பு சிகிச்சை தேடுவதைவிட வரும்முன்னர் காப்பதே அறிவுடைமையாகும்.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும் (குறள் -435)
வரும்முன்னர் காக்கத் தவறி விடுவது எப்படி எனில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதைப்போல ஆகிவிடும் என்று அற்புதமாக விளக்கினார்!
நமது இருதயம் நல்ல ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், சிறப்பாக அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டு மானால் கீழ்க்காணும் 10 கட்டளைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த 10 கட்டளைகள் மிகவும் எளிமை யானவை. மனஉறுதியும் சோம்பலின்றி இதைஅன்றாடம் நம் வாழ்வில் கடைப் பிடிப்பதுதான் இந்தவழிகள். மருத்துவரிடம் நம்மை விரட்டி, திடீர் மின்னல் தாக்குதல் போல் தாக்கிடாமல் தடுக்க வாய்ப்பை அது உருவாக்கித்தரும்.
முதல் கட்டளை
30 நிமிடங்கள் - அரை மணி நேரம். குறைந்தபட்ச நடைபயிற்சி அவசியம் தேவை. இது மாரடைப்பு நோயைத் தடுக்க 30 சதவிகிதம் உதவுகிறது என்பது இதய நோய் மருத்துவர்களின் கணிப்பு ஆகும்!
இப்படி ஒரு பழக்கத்தை அன்றாடம் செய்யப் பழகி விட்டோமேயானால், மற்ற விதிகளை நாம் சோம்பலுக்கு இடமின்றி தானே கடைப்பிடிக்கத் துவங்கி விடுவோம் என்பது உறுதி!
இன்றைக்கு ஒருநாள் தானே பரவாயில்லை என்று பழகி விட்டால் இந்த பழக்கம் பிறகு வழக்கமாகி விடுவது உறுதி!
உங்களுக்குப் பழக்கமான ஒரு நண்பர் அல்லது நிர்வாகத்திலோ, இயக்கத்திலோ உங்களோடு கலந்துரையாடும் நிலையில் உள்ளவரோ அல்லது வாழ்விணையரோ அன்றாடம் நடந்து பழகிக் கொள்ளுதல் மிகவும் பயனுடையதாகும்! (தஞ்சை வல்லத்திற்குப் போகும் போது நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடை பயிற்சிக்கு உறு துணையாக நமது துணைவேந்தருடன், அல்லது விவாதிக்க வேண்டிய பேராசிரி யர்களுடன் நடந்து செல்வோம்; கட்டடப் பணிகள் முதல் பலவற்றை ஆய்வு செய்து பார்வையிடும் பணியும் முடிந்து விடும் குறைந்த நேரத்தில் நிறைந்த பணிகள் என்று மன மகிழ்ச்சியும் பெறுவோம்)
தொண தொணப்பு நச்சரிக்கும் பெருங் கூட்டத்தோடு நடப்பது விரும்பத்தக்கதல்ல.
கட்டளை 2
உங்கள் இரத்த அழுத்த நிலையை தவறாமல் கண்காணித்து வாருங்கள். இந்த முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.
இரத்த அழுத்தம் (Blood pressure) அளவு 115 மேல் /கீழ் 75 (115/75) என்ற அளவில் இருப்பது மிகவும் நல்லது. நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள்.
இந்த இரத்த அழுத்தம் அறிதல் மிகாமல் பார்த்தல் என்பது, கொலஸ்ட்ரால் கட்டுப் பாட்டை விட மிக மிக முக்கியமானதாகும்.
உடற்பயிற்சிகள் மூலமும், வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறைத்தல் மூலமும் இரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பின் குறைக்க முடியும். இது கூடுத லானால் அது சீறுநீரகத்தை வெகுவாகப் பாதித்து, மாரடைப்புக்கு வித்திடுகிறது. எடை கூடுதலாக உள்ளவர்கள் அதைக் குறைக்க வழி செய்தல் வேண்டும். (Body Mass Index (BMI) என்பதை எளிதில்  அறிந்து அதற்கேற்ப டாக்டர்களின் ஆலோ சனை பெறுவதும், கடைப்பிடிப் பதும் அவசியமாகும்!
ரத்த அழுத்தம் 140/90 என்றால் உடனே மருத்துவரிடம் சென்று, அதைக் கட்டுக்குள் கொண்டுவர அவரது ஆலோசனைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, உப்புச் சத்துக் குறைத்தல், சர்க்கரை அளவை அல்லது உடனடியாக சர்க்கரை யாகும் உணவுகளை (Carbohydrates) குறைத்தோ, நல வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும்!
கட்டளை 3
ஒவ்வொரு நாளும் Nuts என்ற கொட்டைகள் - பருப்புக்களை - வால்நட், பாதாம் பருப்பு, போன்றவைகளை ஒரு அவுன்ஸ் அளவு அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள்.
இனிப்பான (ஸ்வீட்டுகளை) மிட்டாய் களை வாங்கிக் கொடுப்பதைவிட, மேற்காட்டிய கொட்டைகள், பருப்புகள் கொண்ட பாக்கெட்டுகளை வாங்கித் தாருங்கள். தினமும் தவறாமல் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நல்ல கொலஸ்ட்ரால் அளவு கூடுத லாகப் பெருக Wallnuts - வால்நட்டுகள், (வாதுமைக் கொட்டை) பெரிதும் உதவி செய்கின்றது என்பதை பல இதய நோய் சிகிச்சை மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்! ஒமேகா - 3 என்ற பயன் வால்நாட் டில் இந்த Fibre  என்ற நார்ச்சத்துமூலம் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆரோக்கிய அளவு புரது.  மூளையைப் போன்ற உருவம் படைத் தவை வாதுமைக் கொட்டை!
சிலருக்கு தனியே சாப்பிடத் தயக்க மானால் ரெய்சின் உலர்ந்த திராட்சை (சிலர் கிசுமுசு பழம் என்பர்)யுடன் இணைத்து உண்ணுங்கள்.
- (நாளை தொடரும்)

கட்டளை 4
நல்ல கொலஸ்ட்ரால் என்பது (தேவையான விரும்பத்தக்க கொழுப்புச் சத்து) மிகவும் நமக்குத் தேவை. அதிகம் இருப்பது நல்லது. 50 இருந்தால் மிகவும் விரும்பத்தக்க ஆரோக்கிய நிலையாகும்.
நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் ஆக வேண்டுமானால், அதற்குரிய வழிமுறை கள் (அ) உடற்பயிற்சி (அ) குடிக்கும் பானங்கள் ஒருமுறைதான். ஆரோக்கிய மான கொழுப்புச் சத்துக்களையே எடுத்துக்கொள்ளவும். ஆலிவ் எண் ணெய், சனோலா எண்ணெய் நேற்றைய கட்டுரையில் எழுதப்பட்ட கொட்டை, பருப்புகள்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று நியாசின்  (Niacin) மருந்தும் எடுக்கலாம்; (இது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்) அதுபோலவே மருத்துவரிடம் போண்டோதெனிக் ஆசிட்  (Pantothenic Acid) அல்லது வைட்டமின் பி-5 பற்றியும் கேளுங்கள் - இவைகள்  குறிப்பாக  (Statin drugs) கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவிடக் கூடும்!
கட்டளை 5
மாரடைப்பு நோய் தடுப்பான்களில் ஒன்று தக்காளி சாஸ் (Tomoto Sauce) 10 தேக்கரண்டி (Table Spoon) சாப்பிட்டு வரவேண்டும் - ஒரு வாரத்தில்!
இது ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப் பெரிதும் உதவி செய்யக் கூடியதாகும்! பொட்டாஷியம் என்பது இதில் மிகவும் அதிகம் என்பதால் அதற்கு அச்சக்தி உள்ளது.
உப்பு அல்லது கொழுப்பு கலந்த சாஸ் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். Pasta என்ற சுவையூட்டும் இவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்! முன் னதை எளிமையாக செய்து ஆரோக்கியம் கவனிக்கப்படல் வேண்டும்.
கட்டளை 6
பற்களுக்கு இடையே உள்ள அழுக்கு களை (Floss) நீக்கம் செய்வது மிகவும் பாதுகாப்பானது; பிரியோ பின்ட்டல் நோய் வந்து வெந்துவிடாமல் தடுத்து, அதன்மூலம் இருதய ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
வாய் பற்களுக்கும் - இருதய நோய்க்கும் என்ன தொடர்பு என்பதே பல பேர்களுக்கு - படித்தவர்கள் உள்பட - தெரியவே தெரி யாது. ரத்தக் குழாய் இருதயத்திற்குச் செல் வது வாய் பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால் கேடு விளைவிக்கும் என்பது மிகவும் தெரிந்து, செயல்படவேண்டிய செய்தியாகும்!
இருதய ரத்தக் குழாய்களுக்கு மட்டு மல்ல, பால் உறுப்புகள் (Sex Organs) இவைகளையும்கூட பாதித்து ஆண்மைக் குறைவு, பால் உணர்ச்சி, இன்ப நுகர்ச்சிக் குறைவை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
கட்டளை 7
கொழுப்புச் சத்து அறவே நீக்கப்படக் கூடாது - ஓரளவு தேவை. அதிலும் கொலஸ்ட்ரால் போல மூன்று வகை உண்டு.1. Saturated Fat 2. Unsaturated Fat 3. Gans Fat Saturated Fat (கெட்ட கொழுப்பு) Trans Fat இவை ரத்தக் குழாய்களில் வெந்து போகும்.
அளவு (Inflamation - வீக்கம் எரிச்சல்) உண்டாக்கும். 7 கிராம் அளவு saturated Fat பட்டை (லவங்கப் பட்டை)யில் உள்ளது. A 113 கிராம் கெட்ட கொழுப்பு வறுத்த பன்றிக் கறியில் உள்ளது. Jadalon 4 கிராம் அளவு உள்ளது. வறுத்த எண்ணெய், பொறித்தது இவைகள் எல்லாம் இந்த கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும் நிலை ஏற் படுத்தும். ஒரு நாளைக்கு 20 கிராமுக்குமேல் இந்த கெட்ட கொழுப்பு (Saturated Fat) மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கட்டளை 8
சில உணவுப் பொருள்களை நாம் வாங்கும்போது, அதில் அச்சிடப்பட்டுள்ள சத்துக்களின் அளவுபற்றிப் படித்துப் பார்த்து வாங்குகிறோம். (இந்தப் பழக்கம் மேலை நாட்டு இல்லத்தரசிகளிடம் மிகவும் அதிகம். நம் நாட்டிலும் பெண்கள் படித் துள்ளதால் ஓரளவு வளர்ந்து வருகிறது).
குறைந்த கொழுப்பு என்று போட்டிருப்பதைக் கண்டு ஏமாந்து விடுபவர் பலர்; அந்த வரிசையில் ஒவ்வொன்றின் சக்திபற்றி போட்டிருப்பதில் முதல் அய்ந்தில் சர்க்கரை முதலாவது  என்று போடப் பட்டிருந்தால் அதனை வாங்காமல் நிராகரிக்க வேண்டும் என்பது ஒரு பாதுகாப்பான ஏற்பாடு. சர்க்கரை தீமைபற்றி பலரும் அறிந்ததால் அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கிய மான கொழுப்பு சக்தி என்பது சர்க்கரை சத்தைவிட ஆரோக்கியமாகும், பழங்களில் உள்ள சர்க்கரை சத்து நல்லது என்பர் ஆய்வாளர்கள்.
கட்டளை 9
இதை நாம் கடைப்பிடிக்க வேண்டி யதில்லை. பீர் அல்லது ஒயின் ஒரு கிளாஸ் பருகலாம் என்ற அறிவுரை மேலைநாட்டுக் கண்ணோட்டம். இவை கள் சிறுநீரகத்தையும், இருதயத்தையும் தூய்மைப்படுத்த உதவுகிறது.
கட்டளை 10
பழங்கள் தவிர்க்கப்படவே கூடாது. நம் உணவில் ஒரு பகுதியாகவே அமைத்துக் கொள்வது மிகவும் அவசிய மாகும். இதய நோய் தடுப்பு மட்டுமல்ல, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள் உள்பட பலவும் தவிர்க்கப்பட, பழங்கள் நல்ல மாமருந்துகளை விட மேன்மை யானது! நார்சத்து (Fibre Content)  அதிக மாகும். இதனால், பழங்களைக் கழுவி அரிந்து உண்ணவேண்டும். கூடவே, அளவோடு காய்கறிகள் இணைந்த உணவு!
சீசன் பழங்களை சுவைப்பது அவசி யம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கப் படவேண்டிய பழங்கள், மாம்பழம், பலாப்பழம். (பப்பாளி மிகவும் நல்லது).
மறவாதீர்! இதில் முடிந்த அளவு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்!
(ஏப்ரல் 2012, ரீடைர்ஸ் டைஜஸ்ட் இதழில் வந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது இரண்டு வாழ்வியல் கட்டுரைகளும்)
-விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக