பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

தன்னை வென்றவன் தரணியை வெல்பவன்!


உளவியல்  அறிஞர்கள், நம்மில் பலருக்குள்ள குணாதிசயங்கள் - நடத்தைகள்பற்றி ஆய்வு செய்து கருத் தறிவித்துள்ளது நம்மில் பலருக்கும் நம்மைப்பற்றி ஒரு தன்னாய்வு - சுயபரிசோதனை செய்து கொள்ள மிகவும் பயன்படும்.
நம் சொந்த விஷயங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, ஆஹா, ஊஹு என்று துள்ளிக் குதிப்பதும், அல்லது உலகமே மூழ்கி விட்டது போல ஆர்ப்பரிப்பதும் உண்டு. அதே பிரச்சினை மற்றவர்களுக்கு ஏற்படும்போது, அதுதானே என்ற அலட்சியப் பார்வையோடும் பரவா யில்லை என்று எண்ணுவதும், அவர் களுக்கு அதைத் தாங்கியாக வேண் டிய நெறிப்பற்றி ஹிதோபதேசம் செய்வதும் உலக இயற்கை.
இதை உளவியல் அறிஞர்கள்; அடிப்படைப் பண்புப் பிழைகள் (Fundamental Attribution Error) என்று அழைக்கிறார்கள்!
தனக்கு ஏற்படும்போது, தனக்காக உலகமே ஓடோடி வர வேண்டும் என்பதுபோல ஓங்காரக் கூச்சல்; அதுவே மற்றவருக்கு வரும்போது அதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தான் சார்; இதைப்போய் பெரிதுபடுத்தலாமா? என்று தத்துவப் பேருரை - அருளுரை - வழங்குவார்கள்!
மற்றவர்களுக்கு வரும் நோய் - துன்பம் எதுவானாலும் அதை தனக்கே வந்ததுபோல, எண்ணி, அதனைப் போக்கிடத் தேவையான முயற்சிகளை எடுப்பதுதான் மனிதன் பெற்ற அறிவின் பயன் என்றார் வள்ளுவப் பெருந்தகை!
அறிவினால் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக்கடை   (குறள்)
மேற்காட்டிய அடிப்படைப் பண்புப் பிழைக்கு என்ன மூல காரணங்கள்?
1. மனோ தத்துவ அறிஞர்கள் இப்படிக் கூறுகிறார்கள். பார்வைகள் ஆயிரம்; தனி நபர்களை நாம் கூர்ந்து பார்க்கும்போது நம் கவனம் அந்த நபர்மீது விழுகிறது.
ஆனால் நாம் நம்மைக் கண்காணிக்கும் சூழலில் நம்மை மட்டும் பார்க்காமல் விட்டுவிட்டு, சுற்றியுள்ள சூழல்களில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம்.
2. அவனுக்கு அப்படித்தான் வேணும்; நம் சிந்தனைகள் பெரும்பாலும் ஆழ் மனதிலேயே இடம் பெறுகின்றன.
குறிப்பிட்ட நபர்மீது நம் மனதுக்கு அறிந்தோ அறியாமலோ வெறுப்பு ஏற்பட் டிருந்தால் அந்நபர் தடுக்கி விழும்போதே அவனுக்கு இது தேவைதான் என்று நினைப்பதோடு, அவர் தடுக்கி விழுவ தற்கான காரணங்கள்மீது நாம் கவனம் செலுத்தாமல் போயிருக்கலாம்.
சரி, இப்பிழையை சமாளிப்பது, சரி செய்வது - எப்படி?
புதிதாகப் பணியில்  அமர்த்தப்பட்ட, நபர் ஏதேனும் தவறு செய்யும்போது, நாமும் பணியில் சேர்ந்தபோது இப்படிப் பல தவறுகள் செய்துள்ளதை சற்று நினைவூட்டிக் கொண்டால் குறையோ, குற்றமோ பெரிதாகத் தெரியாது. கற்றுக் கொடுத்து அவர்கள் மேலும் ஊக்கப் படுத்தி வேலை வாங்க அது உதவும்!
அவர்களை கண்டிப்பதைவிட, தண் டிப்பதைவிட, இப்படி இதமான விளக்கத் தைக்கூறி, மீண்டும் அவர்கள் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்க, திருந்தியவர்களாக்கிட முடியும்!
அடக்குமுறைகள் பயன்படாத இடத்தில் அன்பும், பரிவும் பெரிதும் பயன்படும்.
புதுமண வாழ்விணையர்கள் விஷ யத்திலும்கூட இது பொருந்துமே!
பெருந்தன்மை காட்ட வேண்டிய சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாக மேலே இருக்கும் நிருவாகிகள் எண்ண வேண்டும். அதன்மூலம் அவர்களும் உயர முடியும்!
ஹாலோ எபெஃக்ட் (Halo Effect) என்பது கவனத்தை ஈர்க்கும் வியப் படை விளைவு ஆகும்!
உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை - தன்நம்பிக்கை அவசியம் தேவை. அது இருந்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது. உங்களை எதிர்வரும் பல சிக்கல்களையும் அறிவி யல், உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்குத் தன்னம் பிக்கை தானே வரும்; வளரும்.
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற அறிவுரை (அண்ணா வின் மேற்கோள் அறிவுரை இது) கை கொடுக்கும்; நம்மை கரை சேர்க்கும்.
- கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக