வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

புதன், 6 ஜூலை, 2022

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (1)


வாழ்வியல் சிந்தனைகள்- கி.வீரமணி
   April 29, 2022 • Viduthalai

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (1)

புரட்சிக் கவிஞர் என்ற சிங்கத்தை சந்தித்ததும், நான் பழகியதும், அவரிடம் கற்றவைகளும், பெற்றவைகளும்  ஏராளம்! ஏராளம்!!

அவை யான் பெற்ற பெரும்பேறுகளில் முக்கிய மானவை.

வேறு எவருக்கும் கிடைக்காத எனது எளிய வாழ்வின் பேறுகளில் முக்கியமானது.

10 வயதில் அறிஞர் அண்ணாவை

அறிவு ஆசான் தந்தை பெரியாரை

நமது ஒப்பற்ற புரட்சிக் கவிஞரை

அஞ்சா நெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி 

ஆகியோரைப் பார்த்தது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி, பால பாடத்தை கற்றுக் கொடுத்தது என்னே அரிய, பெரிய வாய்ப்பு! எவருக்கும் இப்படி ஒரு பெருத்த பெரும் வாய்ப்பு கிட்டியிருக்குமா என்பது அய்யம்தான்!

அதற்கு முழு முதற் காரணமான எனது கொள்கை ஆசான் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களுக்கு எனது வணக்கம் கலந்த கடன்பட்ட நன்றிகள்!

புரட்சிக் கவிஞரை - புதுச்சேரி மக்கள் - உள்ளூரில் அனைவருமே 'வாத்தியார்' என்று தான் அழைப்பர்.

அவரை நான் 13 வயது சிறுவனாக இருந்த போது புதுச்சேரியில் எனது ஆசான் ஆ. திராவிடமணியோடு, பிறகு எனது மூத்த அண்ணன் திராவிட இயக்க கொள்கைச் செம்மல் கடலூர் கோவிந்தராசன் அவர்களுடன், புதுவை சகுந்தலா சாயத்தொழிற்சாலை அதிபரும், புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவருமான பொன். இராமலிங்கம் அவர்களுடன் சென்று சந்தித்தபோது, அவர் என்னை வியந்து கூர்ந்து கவனித்து உரையாடியதெல்லாம் பின்னாளில்!

முதலில் அந்த 'கவிச் சிங்கத்தை' மிகுந்த அச்சத்துடன் தான் பார்த்தேன்.

புதுச்சேரியில் 'கெப்ளே' தியேட்டரில் நாகை திராவிடர் நடிகர் கழகம் சார்பில் ஆர்.வி. கோபால் ("ராயல்" சோடா பாக்டரி உரிமையாளர்) அவர் களின் உருவாக்கம் - அதன் பிரதான கதாநாயகர் எழுத்தாளர் நமது கலைஞர் - மாணவப் பருவம்  முடிந்த நிலையில் கலைஞர்  - புதுச்சேரியில் நாடகம்  - "போர்வாள்", "தூக்குமேடை".  அதற்கு முதலில் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்று அவர் எழுதி நடித்த நாடகங்கள் சுமார் 30 நாள் களுக்கு மேல் நடைபெற்றன. (1946 ஆக இருக்கும்).

அப்போது சேலத்தில் திராவிடர் கழகப் பெயர் மாற்றத்திற்குப்பின் புதுச்சேரி திராவிடர் கழகம் உதயமாகி,  ஒதியஞ் சாலைத் திடலில்  - ஹாலில் பந்தலிட்டு புதுச்சேரி திராவிடர் கழக மாநாடு - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்கள் வருகை தந்தனர்.

முதல் நாள் மாலையில்  மாநாடு சென்றபோது, கலைஞர் நாடகத்தில் வரும் சுயமரியாதை திருமண   (சீன்) காட்சி ஒன்று. அதில் முழுக்கால் சட்டை, ஜிப்பாவுடன் சென்ற என்னை கலைஞர் அழைத்து நாடகத்திலேயே அத்திருமணத் தலைவராக அறிவித்து, நானும் சில நிமிடங்கள் பேசி கைதட்டல் வாங்கி திருமணம் நடத்தி வைத்த காட்சியும் ஒன்று.

திரைக் கொட்டகை மேடையின் பின்புறம் நாடகத்தை ரசித்தவர் தளபதி அழகிரி - என்னை முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அடுத்த நாள்தான் காலை ஓதியஞ் சாலைத் திடலில் தந்தை பெரியார், அண்ணா உள்பட தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு, கவிஞர் புதுவை சிவம், பொன். ராமலிங்கம், புதுவை திராவிடர் கழக அந்நாள் தலைவர் காக்கேயர் - துப்ளே தெரு கடைவீதியில் அப்போது பெரிய, கடை அதிபர் - பிரபலமானவர், நமது 'வாத்தியார்' புரட்சிக்கவிஞர் உட்பட பலர்.

மாநாட்டிற்கு எனது ஆசிரியர், அண்ணா சகிதம் உள்ளே போவதற்குமுன் சற்று தொலைவில் வந்த கலைஞரை துரத்திச் சென்று தாக்குகின்றனர் - தள்ளி நின்ற சிறுவனான எனக்கு ஒன்றும் புரியவில்லை - "நீ மாநாட்டிற்குள் செல் - உள்ளே போகலாம்" என்றனர். சில நிகழ்வுகளுக்கு பின் காலிகளின் கலாட்டா, கலவரம் - ஆபாசப் பேச்சுகள் மழைபோல கொட்ட, பிரெஞ்சுப் போலீஸ் சரியான பாதுகாப்பை தரவில்லை. இதெல்லாம் ஏதோ திரைக்காட்சிபோல ...

தந்தை பெரியார், நமது தாய்மார்களை, பெண்களை பந்தலிலிருந்து பத்திரமாக வெளியேற அறிவுரை கூறுகிறார். மாநாடு அரை நாளிலேயே முற்பகல் முடியும் இக்கட்டான நிலை.

வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் பாரதிதாசனை ஒரு கை ரிக்ஷாவில் ஏற்றிவிட - துணிவுடன் திரும்புகிறார். சிலர் மறித்து நின்று அவர்மீது செருப்பை வீசி ஓடி ஒளிய ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லி, எழுந்து நின்று ஒரு சிங்க முக சீற்றப் பார்வையுடன் பார்க்கிறார். தூரத்தில் கண்ட அக்காட்சி என்னுள் பதிந்தது இன்று வரை அழியவே இல்லை. அதுதான் முதலில் அவரைக் கண்டு வியந்த இந்த சிறுவன் கற்ற அஞ்சாமைப் பாடம்.

(வளரும்)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:53 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: புரட்சிக் கவிஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ▼  2022 (22)
    • ▼  ஜூலை (15)
      • சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன...
      • சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! (1)(2)
      • சிங்கப்பூரின் புத்தகக் கடையின் "மறைவுக்குறிப்பு" (...
      • குறைந்த சுமை; நிறைந்த வாழ்வு - மறக்காதீர்!
      • "எது உங்கள் உலகம்?" நல்ல கேள்விதான்! (1)
      • மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (1)-(3)
      • புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (1)
      • முதுமை சுகமா? சுமையா?
      • இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (9)-(11)
      • வாழ்வியல் சிந்தனைகள் -இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணிய...
      • இவர்தான் அன்னை மணியம்மையார்! (3)-(5)
      • இவர்தான் அன்னை மணியம்மையார்! (1)(2)
      • மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (1)(2)
      • கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (1)-(3)
      • இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (1)-(3) உங்களில் ஒருவன்
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (51)
    • ►  டிசம்பர் (13)
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.