வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

புதன், 6 ஜூலை, 2022

"எது உங்கள் உலகம்?" நல்ல கேள்விதான்! (1)


வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
  June 06, 2022 • Viduthalai

 "எது உங்கள் உலகம்?"  நல்ல கேள்விதான்! (1)

வாழ்க்கையில் பலரும் மனக்கவலையோடு வாழ்ந்து கொண்டிருப்பது, நியாயமான காரணங் களை விட கற்பனையாக நாமே தேவையற்று வரவழைத்துக் கொள்ளும் கவலைகளே - கற்பனைகளும், ஊகங்களும் கலந்து முளைத்துத் துளிர்விட்டு மிரட்டும் கவலைகளே அதிகம் என்கிறார் ஜென் (Zen) புத்தநெறி அறிஞர் ஒருவர்.

புதிதாக ஜப்பானிலிருந்து எழுதி வெளி யாகியுள்ள 'Don't worry' என்ற தலைப்பில் 'ஷண்மியோமாசூனோ' என்ற பவுத்த சிந்தனை யாளரின் நூல் பல்வேறு சிறந்த அனுபவ உரைகளை சிறு சிறு தேன் துளிகளாக 48 கட்டுரைகளைக் கொண்டதாக உள்ளது!

'இளைப்பாறிட' மிகவும் நல்ல நூல். படித்த பிறகு சிந்தித்து அசைபோட்டு மனதில் இருத்தி, வாழ்வில் பயன்படுத்திப் பார்த்துப் பயன் பெற வேண்டிய கருத்துரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது!

"நாம் மூன்று உலகில் வாழ்கிறோம்" என்கிறது  புத்த ஜென்நெறி என்னும் நன்னெறி. 

முதல் உலகம் கடந்த காலம்   (Past) 

இரண்டாவது எதிர்காலம் (Future)

மூன்றாவது நடைமுறையில் உள்ள நிகழ்காலம் (Present)

இவற்றில் மிகவும் உண்மையாக நாம் வாழ்வது நிகழ்காலத்தில்தான். ஏனோ நம்மில் பலரும்  மற்ற இரு வேறு உலகைப் பற்றியே சிந்தித்து - வருந்தியும், பயந்தும், கற்பனை பீதி களில் ஈடுபட்டு - அச்சத்தின் மடியில் தேவையற்று விழுந்து அழுது புரளும் அவலம் உள்ளது

தற்போது கையில் உள்ளவற்றை எதிர் கொள்வது, பயன் பெறுவது பற்றியே சிந்தித்து செயலாற்றுவதே சரியான அணுகுமுறை. வரு முன் காப்பது தான் தேவையே ஒழிய, வருவ தெல்லாம் ஆபத்து என்று அதிக பயத்தில் தேவையற்ற மனக் குழப்பத்திற்கு ஆளாகக் கூடாது!

நடந்தவற்றிலிருந்து பாடம் பெறலாமே தவிர, அவற்றை எண்ணி, மீண்டும் அப்படி ஒன்று நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சி சாவதில் அர்த்தமே இல்லை!

பல பேருக்கு கடந்தகாலம் என்பது - என்றும் அச்சுறுத்தி நிகழ்கால இன்பத்தைப் பறிக்கும் மின்னலாகவும் ஆகி விடுகிறது!

எதிர்காலம் என்பதை எண்ணி ஏதோ பாம்புப் புற்றில் கையை விடுவது போன்ற பயந்தாங் கொள்ளித் தனத்தையும் உருவாக்கிக் கொண்டு அச்சத்திலிருந்து வெளிவர முடியாதபடி ஆக்கி மகிழ்ச்சியை விரட்டி அடிக்கிறது. 

'ஜென்' பவுத்தத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.

"உன் மூச்சில் நீ எப்போதும் வாழ்ந்து கொள்"

மேல் எழுந்த வாரியாகப் படித்தால் வெகுச் சாதாரணமாய் இது தோன்றும்!

ஆனால், நிகழ்காலம் மட்டுமே உனக்கு உரிமையான கைக்குள் இருக்கும் பறவை என்பதை விளக்கவே இது!

மற்றவை பறந்து போனது அல்லது இறந்து போனது; வேறொன்றை எதிர்பார்ப்பது - பறந்து வராதா என்று ஏக்கத்துடன் பார்க்க வைக்கும்!

ஆனால் 'மூச்சில் வாழ்ந்திரு' என்பது நிகழ் காலம் உனக்கு முக்கியம் என்பதைப் புரிய வைக்கும் புத்தாக்க அனுபவ அறிவுரையாகும்!

கடத்துபோன - பழையதை பற்றி இப்போது சிந்தித்து  பயனில்லை - (வேண்டுமானால் அது உரத்திற்குப் பயன்பட முடியும் -  உணவாக எப்போதும் பயன்பட முடியாதே!)

எதிர்காலம் பிறக்காத  - கருவுறாத நிலையில் கற்பனைக் குதிரை சவாரிதானே!

எனவே, நிகழ் காலத்தைக் கெட்டியாகப் பிடித்து, - திமிறிப் போக முடியாமல் காளையின் திமிலைப்பிடித்து அடக்கும் நம் இளைய காளையர்களைப் போல  - நிகழ்காலத்தைச் சிறப்பாகப் பிடித்து மிகுபயன் அனுபவிக்க அதை சாறாகப் பிழிந்து பருகி, பயன் பெற முயற்சியுங்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:04 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நிகழ்காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ▼  2022 (22)
    • ▼  ஜூலை (15)
      • சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன...
      • சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! (1)(2)
      • சிங்கப்பூரின் புத்தகக் கடையின் "மறைவுக்குறிப்பு" (...
      • குறைந்த சுமை; நிறைந்த வாழ்வு - மறக்காதீர்!
      • "எது உங்கள் உலகம்?" நல்ல கேள்விதான்! (1)
      • மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (1)-(3)
      • புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (1)
      • முதுமை சுகமா? சுமையா?
      • இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (9)-(11)
      • வாழ்வியல் சிந்தனைகள் -இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணிய...
      • இவர்தான் அன்னை மணியம்மையார்! (3)-(5)
      • இவர்தான் அன்னை மணியம்மையார்! (1)(2)
      • மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (1)(2)
      • கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (1)-(3)
      • இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (1)-(3) உங்களில் ஒருவன்
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (51)
    • ►  டிசம்பர் (13)
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.