வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 30 டிசம்பர், 2021

ஓடிக் கொண்டே இருப்போம் - இலக்கை நோக்கி!



    November 26, 2021 • Viduthalai

இன்னும் ஒரு சில நாள்களில் 89 வயது துவங்கு கிறது என்று எனது தோழர்கள் நினைவூட்டுவது போல பல நிகழ்வுகளை அவர்கள் ஏற்பாடு செய்யும் நிலையில், முதுமையால் யான் தாக்குண்டேன் என்று ஒப்புக் கொள்ளுவதிலிருந்து மாறுபட்டு, முதிர்ச்சியால் நான் மீட்புருவாக்கம் கொண்டேன் என்று திடசித்தம் கொண்டு மேலும் நாளும் வலிமை குன்றாமல் உழைப்பது எப்படி என்று எண்ணிக் கொண்டி ருந்தபோது, ஜப்பானில் வெளிவந்து, தமிழில் அருமை எழுத்தாளர் நண்பர், மும்பை PSV குமாரசாமி அவர்களால் சிறப்பான தமிழில் தரப்பட்டுள்ள 'இச்சிகோ, இச்சியே'

ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக அனுபவிப்பதற்கு உதவும் ஜப்பானியக் கலைபற்றி ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ் மிராயியஸ் ஆகியவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலினை தமிழில் தந்துள்ளதை மீண்டும் எடுத்துப் படித்தேன்.

அதில்...

"முதிய வயதில் இருக்கும் ஒருவரால்கூட முற்றிலும் புதிய வடிவத்தில் தன்னைப் புதுப்பித் துக் கொள்ள முடியும். ஏனெனில், அவர்களுக்கு முன்னாலும் வாழ்க்கை காத்திருக்கிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு வாழப் போகிறோம் என்பது முக்கியமல்ல; மீதமிருக்கும் காலத்தில் நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

நீங்கள் நேசிக்கின்ற ஒன்றைப் பின் தொடர்ந்து செல்லக் கூடிய துணிவு, உங்களிடமிருந்தால், ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக மிளிரும் என்பதை "இக்கிகய்" புத்தகத்தின் ஆய்வுக்காக நாங்கள் ஒக்கினாவோ  சென்றபோது, அங்கு நூறு ஆண்டுகளைக் கடந்தும் குதூகலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

"அறிவு நாம் இளமையாக இருக்கும்போது வளர்ந்து, நம்முடைய மத்திய வயதில் உச்சத்தை அடைந்து, அதற்குப் பின் கீழ்முகமாக இறங்கு கிறது" என்ற ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. ஆனால் ஒரு சிலர் தங்களுக்கு எத்தனை வயதாகி இருந்தாலும் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டும், இருக்கின்றனர். தாங்கள் ஏற்கெனவே கைவசப் படுத்திக் கொண்டுள்ள அறிவைப் பயன்படுத்தி புதிய சவால்களை எதிர் கொள்ள அவர்கள் துணிகின்றனர்.

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல - என்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளை நாம் இப்போது பார்ப்போம்.

முதலாவது, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மெல்ச்சோரா அக்கினோடி & ராமோஸ் என்ற பெண்மணி அவருக்கு எண்பத்து நான்கு வயது ஆகியிருந்தபோது, அந்நாட்டில் போராட்டம் வெடித்து, அந்நாட்டின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தது. அப்போராட்ட காலத்தின்போது அவர் தன்னுடைய சிறிய கடையை, போராட்ட காலத்தில் காயமடைந்தவர்களுக்கும், போராளி களுக்கும் தங்குமிடமாக ஆக்கினார். புரட்சி யாளர்கள் அங்கு ரகசியக் கூட்டங்களை நடத்திக் கொள்வதற்கும் அவர் அனுமதித்தார்.

"அரசுக்கு எதிரான அவருடைய நடவடிக் கைகள் பிலிப்பைன்ஸை அப்போது ஆக்கிரமித் திருந்த காலனி அரசின் கவனத்திற்கு வந்தன. அந்த அரசு அந்த முதிய பெண்மணியைச் சிறை பிடித்து, சித்திரவதை செய்தது. புரட்சி யாளர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு அவரை வற்புறுத் தியது. அவர்களுடைய பெயர்களைக் கூற அவர் மறுத்துவிட்டதால் அவர் மரியானா தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பின்னர் அமெரிக்கா பிலிப்பைன்ஸைத் தன் னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, தேசியக் கதாநாயகியாக அவர் நாடு திரும்பினார். 'புரட்சிப் பாட்டி' என்று அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு தன்னுடைய நாட்டுக்காக மேலும் இருபது ஆண்டுகள் அயராது உழைத்துவிட்டுத் தன்னுடைய 107 வயதில் மெல்சோரா காலமானார்.

காலம் கடந்து மலர்கின்ற நபர்களுக்குக் கலைத் துறை ஒரு செழிப்பான பூமியாக இருக் கிறது. ஆங்கிலேய எழுத்தாளரான ஹாரி பெர்ன்ஸ்டைன் தன்னுடைய இருபத்து நான் காவது வயதில் தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியபோதிலும், அவர் தொண்ணூற்று மூன்று வயதை எட்டும்வரை 'இன்விசிபிள் வால்' என்ற தன்னுடைய முதல் புதினத்தை எழுதத் தொடங்க வில்லை. அதை அவர் எழுதி முடித்து 2007ல் இங்கிலாந்தில் அது பிரசுரமானபோது அவருக்கு வயது தொண்ணூற்று ஆறு.

அவர் ஏன் இவ்வளவு முதிய வயதில் தன் னுடைய புதினத்தை எழுதினார் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அறுபத்தேழு ஆண்டுகாலம் தன்னுடன் வாழ்ந்த தன் மனைவி இறந்த பிறகு, தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்வதற் காகத் தான் எழுதத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

அவருடைய புதினத்திற்கு வாசகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்ததால், அவர் தன்னுடைய 101வது வயதில் இறப்பதற்கு முன்பு மேலும் மூன்று புதினங்களை எழுதினார். அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், “மக்கள் நூறு ஆண்டுகள்வரை உயிரோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளப் பட்டால், அவர்களிடம் எத்தகைய திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வரும்,” என்று கூறியிருந்தார்."

எனவே முதுமையை வென்ற முதிர்ச்சியைப் பெறுவோம் -  நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்போம்!

அதே துடிப்போடு! - இலக்கை நோக்கி...!!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:03 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இலக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2021 (51)
    • ▼  டிசம்பர் (13)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! ( 9 - ...
      • டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (1,2)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (5 - 8)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1-4)
      • முதுமை = எப்போது தொடங்குகிறது?
      • வலி, துக்கம், வேதனை, மகிழ்ச்சி பற்றிய புத்தரின் பு...
      • ஓடிக் கொண்டே இருப்போம் - இலக்கை நோக்கி!
      • சொரணை ஊட்டும் சுயமரியாதைக் கவிஞர் சுரதா வாழ்வார் எ...
      • இளமையை மீட்டெடுக்க - இதோ ஒரு வழி!
      • நம் பாதுகாப்புக்கான ஆறு ஆயுதங்கள் இதோ!
      • 'சிக்கனம் வேண்டவே வேண்டாம்' - எதில்?
      • அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்!
      • காணாமற் போன ஜாதி, மத பேதங்கள்!
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.