வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 9 டிசம்பர், 2021

நம் பாதுகாப்புக்கான ஆறு ஆயுதங்கள் இதோ!



   November 16, 2021 • Viduthalai

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் ஒன்று 'சக்ரவர்த்தி திருமகள்' என்ற எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த திரைப்படம்.

அதில் ஒரு காட்சி.

'புரட்சி நடிகராக' அப்போது அழைக்கப்பட்ட வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களும், நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் லாவணி என்ற டேப்பிசை கச்சேரியில் ஒருவரை ஒருவர் வெல்லுவதற்குப் பாடும் போட்டிக் காட்சி ஒன்று வரும். பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி அவர்களால் எழுதப்பட்ட அப்பாட்டினை எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கே.வும் மாறி மாறிக் கேள்வியாக கேட்டுப் பாட்டுப் பாடுவார்கள். கேட்கக் கேட்க இன்பமாக இருக்கும்.

"உலகத்திலேயே பயங்கரமான (ஆபத்தான) ஆயுதம் எது? என்று எம்.ஜி.ஆர். கேட்டுப் பாடுவார்.

அதற்கு என்.எஸ்.கே. 'கத்தி', என பதிலாக கூற, 'இல்லே' என எம்.ஜி.ஆர். மறுத்திட, என்.எஸ்.கே.  மற்ற வெவ்வேறு ஆயுதங்களைக் கூறிய போதும் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டு, நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!" என்ற பதிலை டேப் அடித்துக் கொண்டே பாடுவார்!

பகுத்தறிவு மணம் வீசும் அப்பாடலை அப்படியே தருகிறேன். படித்து மகிழுங்கள்.

என்.எஸ்.கே.: சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாக்கினும்

சிரமீது வைத்துப் போற்றி

ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடிபறக்கவிடும்

தீரப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கத் தோழா பொற்பதக்கம்

வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்

எனக்கிங்கில்லை ஈடெனச்சொல்லிக் களித்தார்

இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்ட பாரா தீரர்

சீரெடுத்துப்  பாடி வாரேன் பேரே அதற்கு

ஓரேழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்.

எம்.ஜி.ஆர்.:  யானையைப் பிடித்து,

யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க

ஆத்திரப்படுபவர் போல அல்லவா 

யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்துவைக்க

ஆத்திரப்படுபவர் போல அல்லவா

உமது ஆரம்பக் கவி சொல்லுதே புலவா

வீட்டுப்பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்ன

புறப்பட்ட கதைபோல அல்லவா தற்புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா  

என்.எஸ்.கே.: அப்புறம் ஓ ஒ  சரிதான்

பூதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், அன்னதானம்,

கோதானம் உண்டு பற்பல தானங்கள்

இதற்கு மேலான தானமிருந்தா சொல்லுங்கள்

ஏய் கேள்விக்கு பதிலைக் கொண்டா, டேப்பை ஒடைச்சி எறிவேன் ரெண்டா

உன்ன ஜெயிச்சுக் கட்டுவேன் முண்டா, அப்புறம் பறக்க விடுவேன் ஜெண்டா

ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

எம்.ஜி.ஆர்.: எந்தனை தானம் தந்தாலும் எந்தலோகம் புகழ்ந்தாலும்

தானத்தில் சிறந்தது நிதானம் தான்.. நிதானம் தான்

எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்

தானத்தில் சிறந்தது நிதானம் தான்

நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்,

நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்

என்.எஸ்.கே.: சொல்லிட்டன், கோயிலைக்கட்டி வைப்ப தெதனாலே?

இதற்கு பதில் சொல்ல முடியாது தம்பி...

கோவிலை கட்டி வைப்பது எதனாலே?

எம்.ஜி.ஆர்.: சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே

அன்னசத்திரம் இருப்பதெதனாலே? 

என்.எஸ்.கே.: அன்னசத்திரம், என்ன சொன்ன? 

எம்.ஜி.ஆர்.: அன்னசத்திரம் இருப்பதெதனாலே?

என்.எஸ்.கே.:  பல திண்ணை தூங்கிப் பசங்க இருப்பதாலே, எப்படி?

எம்.ஜி.ஆர்.: பரதேசியாய்த் திரிவதெதனாலே? 

பரதேசியாய் திரிவதெதனாலே? 

என்.எஸ்.கே.: அவன் பத்துவீட்டு, அவன் பத்துவீட்டு சோறுருசி கண்டதாலே...

தம்பி இங்க கவனி, காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

தம்பி இங்க கவனி, காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

எம்.ஜி.ஆர்.: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகதிலே

அண்ணே,கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

என்.எஸ்.கே.: சொல்லிப்புட்டையே,

எம்.ஜி.ஆர்.:  புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

என்.எஸ்.கே.:  புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

எம்.ஜி.ஆர்.:  நான் சொல்லட்டுமா?

என்.எஸ்.கே.: சொல்லு

எம்.ஜி.ஆர்.: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

பசித்து வாடும் மக்கள் வயிறு அது

பசித்து வாடும் மக்கள் வயிறு அது

என்.எஸ்.கே.: சரிதான் சரிதான்

எம்.ஜி.ஆர்.: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

என்.எஸ்.கே.: கத்தி

எம்.ஜி.ஆர்.: இல்ல

என்.எஸ்.கே.: கோடாலி

எம்.ஜி.ஆர்.: இல்ல

என்.எஸ்.கே.: ஈட்டி

எம்.ஜி.ஆர்.: இல்ல

என்.எஸ்.கே.: கடப்பாரை

எம்.ஜி.ஆர்.: இல்ல

என்.எஸ்.கே.: அதுவும் இல்லையா, அப்புறம் பயங்கர மான ஆயுதம், அக்கினி திராவகமா இருக்குமோ

அது ஆயுதமில்லையே

அடே நீயே சொல்லுப்பா

எம்.ஜி.ஆர்.: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நிலைக்கெட்டுப்  போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது

என்.எஸ்.கே.: ஆஹா

எம்.ஜி.ஆர்.: நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!

ஆனால், மனிதர்களாகிய நமக்கு மிகவும் பாதுகாப்பாகவும், வழி தவறாமலும் முறையான வாழ்க்கை வாழுவதற்கு என்றும் நம் வாழ்வில் நமக்குப் பயன்படக் கூடிய ஆயுதம் அல்லது ஆயுதங்கள் எவை தெரியுமா?

கத்தி அல்ல; ஏ.கே.47 துப்பாக்கி அல்ல; பின் எவை என்று கேட்கிறீர்களா?

அதுபோல மொத்தம் ஆறு.

அவை வெறும் ஆயுதங்கள் அல்ல....!

அறிவாயுதங்கள்!

கூர்முனை மழுங்காத - எந்நாளும் அறிவுப் போர் முனையில், வாழ்க்கைத் தளத்தில் நம்மை பாதை நழுவாமல் பாதுகாப்புடன் நடத்திச் செல்லுபவை.

அதைச் சரியாகப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அவற்றைச் சாதனைகளாக்கி சரித்திரம் படைக்கலாம்.

நம்பிக்கையோடு வெற்றி பெறலாம்!

புத்தரும், வள்ளுவரும், தந்தை பெரியாரும் தந்த ஆயுதங்கள்:

(1)          ஏன்? எதற்கு?  Why?

(2)          என்ன?    What?

(3)          எப்போது?   When?

(4)          யார்?  Who?

(5)          எங்கே?   Where?

இந்த 'ய'களும் 'ஏ'க்களையும் தாண்டி ஆறாவதாக எப்படி? How?- என்ற கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டு பிரச்சினைகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்த்து, முடிவு எடுத்தால் வெற்றிக்கனி நம் மடியில் தானே வந்து விழுவது உறுதி! - ஒரே சொல் அதற்கு என்ன பொருள்? பகுத்தறிவு.

சில நேரங்களில் தோல்விகள் ஏற்படும்போதுகூட இதே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு சிந்தித்தால் மறுமுறை வெற்றிக்கான விடைதானே வந்து கதவுகளைத் தட்டுவது உறுதி! உறுதி!!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:29 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாதுகாப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2021 (51)
    • ▼  டிசம்பர் (13)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! ( 9 - ...
      • டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (1,2)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (5 - 8)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1-4)
      • முதுமை = எப்போது தொடங்குகிறது?
      • வலி, துக்கம், வேதனை, மகிழ்ச்சி பற்றிய புத்தரின் பு...
      • ஓடிக் கொண்டே இருப்போம் - இலக்கை நோக்கி!
      • சொரணை ஊட்டும் சுயமரியாதைக் கவிஞர் சுரதா வாழ்வார் எ...
      • இளமையை மீட்டெடுக்க - இதோ ஒரு வழி!
      • நம் பாதுகாப்புக்கான ஆறு ஆயுதங்கள் இதோ!
      • 'சிக்கனம் வேண்டவே வேண்டாம்' - எதில்?
      • அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்!
      • காணாமற் போன ஜாதி, மத பேதங்கள்!
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.