வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 30 டிசம்பர், 2021

வலி, துக்கம், வேதனை, மகிழ்ச்சி பற்றிய புத்தரின் புத்தொளி!



    November 27, 2021 • Viduthalai

2500 ஆண்டுகளுக்குமுன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சி னைகளையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் எப்படி எதிர் கொள்ளுவது என்பதை புத்தர் கூறியதை (ஜப்பானின்) 'இச்சிகோ இச்சியே' நூலில் குறிப்பிடும் பகுதி நமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள என்றென்றும் வழிகாட்டும்; துணை நிற்கும் என்பதால் அப் படியே தருகிறோம் - 'கற்க அதன்பின் நிற்க அதற்குத் தக' -

"புத்த மார்க்கத்தில் கூறப்படுகின்ற துக்கம் என்ற வார்த்தை, வேதனை என்று தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. நாம் எல்லோரும் எப்போதும் நமக்குள் உணர்கின்ற பதற்றமான மற்றும் அதிருப்தியான உணர்வுதான் துக்கம் என்று அதை அர்த்தப்படுத்துவதுதான் பொருத்த மானதாக இருக்கும். ஏனெனில், மாற்றம் தவிர்க்கப்பட முடியாதது என்பதை எல்லோரும் அறிவர்.

இதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக இதிலிருந்து தப்பிப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். மது, போதை மருந்துகள் போன்ற ஏதாவது ஒன்றுக்கு அடிமையாதல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

நவீனச் சமுதாயம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்கப் பல வழிகளை முன்மொழிகிறது. நம்மை முழுமையாகத் தொலைத்துக் கொள்வ தற்கு வழி வகுக்கின்ற கணினி விளையாட்டுகள், இணையத்தளப் பொழுதுபோக்குகள், போதை மருந்துகள், மது வகைகள் மற்றும் இன்னும் பிற குறிப்பாக, நாம் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் போதோ அல்லது இழப்பை எதிர்கொள்ளும் போதோ, வாழ்க்கையின் நிலையாமையிலிருந்து விலகியிருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நாம் விழைகிறோம்.

எதுவுமே நீடித்து நிற்பதில்லை , அது நல்லதாக இருந்தாலும் சரி, மோசமானதாக இருந்தாலும் சரி! இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதுதான், வாழ்க்கை நமக்கு வழங்குகின்ற மேலான கணங்களை முழுமையாக அரவணைத்துக் கொள்வதற்கும், நெருக்கடியான நிலைகளை எதிர்கொள்ளும்போது நம்பிக்கை இழக்காதி ருப்பதற்குமான சிறந்த வழி.

இரண்டாம் அம்பு

நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாகத் தலைதூக்குகின்ற துக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு புத்தர் தன் சீடர் ஒருவருக்கு ஒரு வழியைக் கற்றுக் கொடுத்தார். அக்கதை இப்படிச் செல்கிறது: -

புத்தர் தன் சீடனிடம், ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவனை ஓர் அம்பு தாக்குகிறது. அது அவனுக்கு வலி ஏற்படுத்துமா? என்று கேட்டார்.

இதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக வலி ஏற்படுத்தும், என்று அவன் பதிலளித்தான்.

அதற்கடுத்து அவன் இரண்டாவது அம்பு ஒன்றால் தாக்கப்பட்டால் அவனுடைய வலி அதிகரிக்குமா? என்று புத்தர் கேட்டார்.

"கண்டிப்பாக. முதலாவது அம்பு ஏற்படுத்தி யிருந்ததைவிட அது அதிகமாக வலிக்கும்.   முதலாவது அம்பு நமக்கு நடக்கும் மோசமான விஷயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. அவற்றின்மீது நமக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் இரண்டாவது அம்பை விடுவது நாம்தான். அப்படிச் செய்வதன் மூலம் நமக்கு நாமே தேவையற்ற பாதிப்பை உண்டாக்கிக் கொள்கிறோம்," என்று புத்தர் கூறி முடித்தார்.

நாம் என்ன உணர்ந்தோம் என்பது குறித்து நாம் உணர்வதுதான் அந்த இரண்டாவது அம்பு.

நமக்கு மோசமான விஷயங்கள் நிகழும்போது நாம் வலியை உணர்கிறோம். ஆனால் கெட்டவாய்ப்பான அத்தாக்கத்திற்குப் பிறகு, நமக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து நாம் மருகுகிறோம். அது குறித்து நாம் அதிகமாகச் சிந்திக்கச் சிந்திக்க நம்முடைய வலி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதுதான் அந்த இரண்டாவது அம்பு.

நம்மால் முதல் அம்பைக் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது. ஏனெனில், வாழ்க்கை என்பது ஆபத்துகளை உள்ளடக்கிய ஒரு சாகசப் பயணம். ஆனால் நம்மை நோக்கி இரண்டாவது அம்பு ஒன்றை எய்வதை நம்மால் தவிர்க்க முடியும். முதலாவது நிகழ்வு குறித்து நாம் கொண்டிருக்கும் பதற்றமும் அது குறித்து நாம் கொள்கின்ற கவலையும்தான் அது.

இதை புத்தர் தன்னுடைய மிகப் பிரபலமான கூற்றின் மூலம் சிறப்பாகத் தொகுத்தளிக்கிறார்: "வலி தவிர்க்கப்பட முடியாதது. ஆனால் வேதனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒன்று."

இரண்டாவது அம்பால் விளையக்கூடிய வேதனையைத் தவிர்ப்பதற்கான உத்திகள் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.

* வாழ்க்கை என்பது இன்னல்கள், திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்று என்பதை புரிந்து வைத்திருத்தல்

முதலாவது இல்லாமல் இரண்டாவதை நம்மால் அனுபவிக்க முடியாது. ஏனெனில், மாற்று என்ற ஒன்று இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாகத்திற்குப் பிறகு கிடைக்கும் நீர்தான் அதிகச் சுவையானதாக இருக்கிறது. வருத்தமாகவும் தனிமையாகவும் இருந்த பிறகு கிடைக்கின்ற அன்பு கொண்டாடப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது.

* வலி என்பது ஒரு தற்காலிகமான உணர்ச்சிதான் என்பதை அறிந்து வைத்திருத்தல்

நம்மைக் காயப்படுத்தும் எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதில்லை - அவற்றின் எதி ரொலியை நீட்டிக்க நாம் பிடிவாதமாக இருந்தா லொழிய! வலியில் உழன்று கொண்டிருக்காமல், அதை வெறுமனே அனுபவித்துவிட்டுக் கடந்து செல்ல நாம் முடிவு செய்தால், அந்த வலி மெது வாக மறைந்துவிடும், நாமும் ஓர் அருமையான படிப்பினையைச் சம்பாதித்திருப்போம்.

* கெட்ட வாய்ப்புகளை ஈடு கட்டுவதற்காக இச்சிகோ இச்சியே கணங்களைக் கொண்டாடுதல்

நாம் தனியாக இருந்தாலும் சரி, நாம் நேசிக்கும் நபர்கள் சூழ இருந்தாலும் சரி, இன்னல்களிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழி வாழ்க்கையின் ஒளிமயமான பக்கத்தைக் காட்டுகின்ற ஓர் அழகான அனுபவத்தை நமக்கு நாமே பரிசளித்துக் கொள்வதுதான். இது குறித்து மேலும் பல எடுத்துக்காட்டுகளை பின்னர் நாம் பார்க்கலாம்.

இதைச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வலியெனும் முதலாவது அம்பை ஏற்றுக் கொண்டு, அது குறித்த நம்முடைய உணர்வு களிலேயே மூழ்கிக் கிடப்பதால் உருவாகின்ற வேதனையெனும் இரண்டாவது அம்பால் நம்மை நாமே வதைத்துக் கொள்ளாமல் இருந்தால், நமக்கு நாமே சுயதண்டனை கொடுத்துக் கொள்வதை நம்மால் தவிர்க்க முடியும், வாழ்க்கை நமக்கு அளிக்கின்ற அனைத்து நல்ல விஷயங்களையும் நம்மால் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.

ஒரு தேநீர் விருந்துக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுதல், நாம் ஆழமாக நேசிக்கின்ற ஒரு விளையாட்டை விளையாடுதல், நமக்குப் பிடித்த இசையைக் கேட்டல், ஒரு நல்ல பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளுதல், நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை இனிமை யாகச் செலவழித்தல் போன்றவற்றில் நூறு சதவீத இச்சிகோ இச்சியே மனப்போக்குடன் ஈடுபட்டால், நாம் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு சோத னைகளையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண் டாலும், வாழ்க்கையோடு ஒரு செம்மையான பிணைப்பை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாதீர்! தவிர்க்க இயலாததை ஏற்கத் தயாராகி "வலியைக் குறைத்து, வேதனையை விரட்டியடியுங்கள் - மகிழ்ச்சியை அரவணையுங்கள் - எல்லாம் நம் மனதில்தான் முடிவில்தான் உள்ளது" - புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:06 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: புத்தர், மகிழ்ச்சி, வலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2021 (51)
    • ▼  டிசம்பர் (13)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! ( 9 - ...
      • டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (1,2)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (5 - 8)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1-4)
      • முதுமை = எப்போது தொடங்குகிறது?
      • வலி, துக்கம், வேதனை, மகிழ்ச்சி பற்றிய புத்தரின் பு...
      • ஓடிக் கொண்டே இருப்போம் - இலக்கை நோக்கி!
      • சொரணை ஊட்டும் சுயமரியாதைக் கவிஞர் சுரதா வாழ்வார் எ...
      • இளமையை மீட்டெடுக்க - இதோ ஒரு வழி!
      • நம் பாதுகாப்புக்கான ஆறு ஆயுதங்கள் இதோ!
      • 'சிக்கனம் வேண்டவே வேண்டாம்' - எதில்?
      • அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்!
      • காணாமற் போன ஜாதி, மத பேதங்கள்!
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.