பக்கங்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

எதிரிகள் என்பவர்கள் நமக்குப் பாடம் எடுப்பவர்கள்


தன்னை வென்றால் தரணியை - இந்த உலகத்தையே நாம் வென்று விட்டோம் என்று மனநிறைவை அடைய முடியும்.

அது எளிதானதா என்று மலைக்காதீர்கள்ஒவ்வொரு தடையையும் நாம் வாழ்வின் துன்பங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாகவாழ்வில் இயற்கை நமக்கு எடுக்கும் பாடங்கள் என்று கருதி அவற்றை அணுக வேண்டும்பாடங்க ளைப் படித்துத்தானேதேர்வெழுதி வெற்றி பெற முயலுகின்றோம்அதுபோல எளிதானது என்றே எதையும் பற்றி முயன்றால் முடியாததல்ல என்ற முனைப்போடும்தன்னம்பிக்கையோடும் அணுகுங்கள்வெற்றி வாய்ப்பு நிச்சயம்தான்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ என்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றன் எத்தனை நூற் றாண்டுகளுக்கு முன் எளிய வரிகளில் விளக் கினார்படித்தோமே தவிர கற்கவில்லையேஅதன்படி நிற்க முயற்சிக்கவில்லையே!

மிகப்பெரிய துன்ப நிகழ்ச்சியை முன்பு சொன்னது போல்ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நமது உள்ளத் தின் நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொண்டால் மகிழ்ச்சி நம்மை விட்டு ஒருபோதும் விலகாது!

அந்த மகிழ்ச்சி பிறருக்கு உதவுவதில்தான் முதலிடம் பெறவேண்டும்முன்னுரிமைக்கு உரியதாக அமைய வேண்டும்.

விபத்தில் அடிபட்டு சிக்குண்டவரை விரைவாக மீட்பதும்உடனடியாக தேவையான சிகிச்சையைத் தந்து காப்பாற்றுவதும்தானே முக்கியம்அதை விட்டுவிபத்து எப்படி ஏற்பட்டதுஎப்போது ஏற்பட்டதுயாரால்ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை என்றால் அது பயனும் தராதுஅறி வார்ந்த அணுகு முறை - செயல்முறையுமாகாது.

பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முதலாவ தாகும்பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது அப்புறம் இருக்கட்டும் என்பதே சரியான நடைமுறையாக நம் வாழ்வில் அமைய வேண்டும்!

கருணைக்கே முதலிடம்கேள்விக்கல்லமறவாதீர்உடனடியாக மூச்சுக் காற்றுப்போல் முன்னோட்ட செயல்களைச் செய்துவிட்டு பிறகு நிதானமாக யோசிக்க வேண்டியவற்றிற்கு இடம் தாருங்கள்.

நம்முடைய எதிரிகளை நல்ல ஆசான்களைப் போல் கருத வேண்டும் என்கிறார் தலாய்லாமாவியப்பாக இருக்கிறதல்லவா?

பாடங்களை யார் கற்றுக் கொடுப்பார்கள்ஆசிரியர்கள் தானேஅதுபோல நமக்கு நம் எதிரிகள் கொடுக்கும் தொல்லைகளும்துன்பங் களும் ‘பாடங்களாகிவிட்டால் அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோமே தவிரஆத்திரப்பட மாட்டோம்.

எடுத்துக்காட்டாக ‘மிசா‘ என்ற சிறைவாசம் - சிறையில் கொடூரமாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் நாங்கள் "அர்ச்சிக்கப்பட்டு", பலமான தாக்குதல்களுக்கு ஆளாகிய அனுபவ பாடம் - எவ்வளவு செலவழித்தாலும் எளிதில் கிடைக்க முடியாத வாழ்க்கைப் பாடங்கள் - எங்களைப் பொறுத்தவரை - எப்படி என்கிறீர்களா?

அந்தத் துன்பத்தினை அனுபவித்து மீண்டு வந்ததால் இனி அவற்றைவிட பெரிய துன்ப இயல் நடப்புகள் எவை வந்தாலும் எதிர்கொள் வது எளிதாகப்பட்டு விட்டதல்லவா?

நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க வில்லைகொடுமை குணாளன் ஆகிய அச்சிறை யின் தலைமை அதிகாரி "நீங்கள் இனி எளிதில் வெளியே செல்ல முடியாதுஎத்தனை ஆண்டு களோ எங்களுக்கே தெரியாது?" என்று அச்சுறுத் திய வார்த்தைகளைஅனாயாசமாக எங்களிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சக சிறைவாசிகளான நம் தோழர்களிடம் "நாளை என்ன நடக்கும்?‘ என்று கணிக்கப்பட முடியாததுதான் அரசியல்கவலையை விட்டுகிடைத்த சிறை வாழ்க் கையை சிறப்பாக கழிப்பது எப்படி என்பதை யோசியுங்கள்என்று ஆறுதல் மொழியை நம்பிக்கையுடன் கூறியபோதுமிரண்டவர்கள்சுருண்டவர்கள் எல்லாம் எழுந்தவர்கள் ஆனதை இப்போது நான் நினைத்துப் பார்த்து மகிழவே செய்கிறேன்.

தலாய்லாமா கூறுவது உண்மைதானே?

(அடுத்தும் ஆய்வு செய்வோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக