பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

கைத்தொலைபேசிகளும், கரோனா தொற்றும் ஓர் எச்சரிக்கை மணி!


May 16, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் (எய்ம்ஸ்) கிளை - மருத்துவமனை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது. அங்கே பணிபுரியும் குடும்ப மருத்துவத் துறை மருத்துவர் கள் அய்ந்து பேர், ஒரு பன்னாட்டு மருத்துவப் பத்திரிக்கை ஒன்றில் (International Medical Journal) கரோனா தொற்றுப் பரவல் பற்றி - எச்சரிக்கை மணியடிப்பது போல் ஒரு முக்கிய தகவலை எழுதியுள்ளனர்.

நாம் பயன்படுத்தும் கைத்தொலைப்பேசி (Cell Phone) மேற்பரப்பு, கரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. செல்போன் பேசும் போது நமது முகம், கண், காது, வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்துப் பேசுகிறோம்; இதனால் கரோனா எளிதில் பரவ அதிக வாய்ப்பு உண்டு.

எவ்வளவு தரம் கைகளை முறையாக சோப்புப் போட்டுக் கழுவினாலும் செல்போன் - கைத்தொலை பேசி - கரோனா பரவலுக்கு வழி வகுக்கக் கூடி யதே - கவனமாக இருங்கள்.

ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய் வில் - 15 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை சுகாதாரப் பணியாளர்கள் செல் போனைப் பயன்படுத்துகின்றனராம்!

சுமார் 100 சதவிகிதம் பேரும் கைத்தொலைப் பேசிகளைப் பயன்படுத்தினாலும் அதில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே அவ்வப்போது தங்களது செல்போன்களைத் துடைக்கின்றனராம்!

சுகாதாரப் பணியாளர்களின் முகக்கவசம், தொப்பி ஆகியவை போல், செல்போனும் உடலு டன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முகக்கவசம், தொப்பி ஆகியவற்றைத் துவைப்பது போல் செல் போன்களை துவைக்க முடியாதே! கையின் நீட்சி யாக செல்போன் இருப்பதால் செல்போனில் இருக் கும் எல்லாமே கைக்கு மாறும் வாய்ப்பு அதிகம்.

 மேலும் செல்போன்கள், பாக்டீரியாக்கள் - தொற்றுக் கிருமிகள் - குடியிருக்க வாய்ப்புள்ளவை - கை சுத்தத்தாலும் அவற்றைத் தடுக்க முடியாது.

எனவே, மருத்துவமனைகளில் தகவல் பரிமாற் றத்துக்கு கூடுமான வரை செல்போன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அறி வுறுத்தியுள்ளனர் அந்த ஆய்வுக் கட்டுரையில்!

மேலும் செல்போன்களை நாம் பல இடங் களுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதைப் பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்க்கவும் வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் மற்றொரு முக்கிய எச்சரிக்கை. தயவு செய்து உங்கள் செல்போன் கருவியை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கூடுமானவரை மற்றவர் கள் தரும் செல்போனை வாங்கிப் பேசுவதையும், எவ்வளவு அதிகமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தவிர்த்துவிட முயலுங்கள்! அதே எண்ணை வாங்கி உங்கள் போனிலிருந்து பேசுங்கள்!

சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், கவனக்குறைவு வேண்டாம் - காரணம் சின்னச் சின்னக் கிருமிதானே கரோனா தொற்று கிருமி - உலகை எப்படி ஆட்டி வதைக்கிறது பார்த்தீர்களா?

கையில் கயிறு - மாந்திரிகம், பக்தி என்பதற்கா கக் பல கயிறுகளை வடகயிறுகள்போல், கட்டியி ருப்பவர்களும் இதன் மூலம் பெற வேண்டிய முக்கியப் பாடம் உண்டே!

ஏற்கெனவே நாம் Microbilogy Department மூலம் - ஆய்வு செய்து - கையில் கட்டியுள்ள கயிறுகளில் கிருமிகள் எப்படி எளிதில் புகுந்து, தங்கி வாசம் செய்து நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு விஞ்ஞானப்படி அதிகம் என்பதை  குழந் தைகள் முகாமில் (தஞ்சையில்) விளக்கியுள்ளோம்!

குழந்தைகள் கேட்டனர்; ஆனால், பெரிய வர்களின் (மூட) நம்பிக்கை அவர்களைத் தொற்றி யுள்ள கிருமிகளாக நின்று தடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்?

குதிரையை குளத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் - ‘குடி தண்ணீரை என்று'  அதன் தலையை முக்கியா, தண்ணீர் குடிக்க வைக்க முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக