பக்கங்கள்

ஞாயிறு, 22 மே, 2016

உணவில் கவனிக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு!


இன்றைய (23.1.2016) ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில், மக்கள் நல்வாழ்வு பகுதியில் பல்வேறு முக்கிய உடல் நலக் குறிப்புகள் பற்றிய அறிவுறுத்தல் வெளி வந்துள்ளன. அவற்றை நாமும் பகிர்ந்துண்டு பயன் பெறலாமே!
சாக்கரை நோய் உள்ளவர்களில் பலருக்கு கண் பார்வையைப் பறிக்கும் ‘குளுகோமா’ என்ற கண் அழுத்த நோய், திடீர் கண் பார்வை பறிக்கும் நோய் தடுப்புக்கும் மிக அவசியமானது பச்சைக் கீரைகளும், அவை சார்ந்த காய்கறிகளும் நாம் உணவில் உட்கொள்வது ஆகும்.
காரணம் இந்த பச்சைக் கீரை காய்கறி (Green Leafy vegetables) வகையறாக்கள், ‘நைட்டிரேட்’ என்ற ஒரு வித சத்துக்களை ஏராளம் கொண்டவை ஆதலின் அவை கண்ணைப் பாதுகாக்க உதவுகின்றன.
இதற்காக அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, முடிவு கண்டறிந் தனர்; 21 சதவிகிதம் பேர் இவ்வகை பயனாளிகளாகவும், இப்படி பச்சைக் கீரை, காய்கறி வகைகளை உண்ணாத வர்கள் நைட்டிரேட் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளார்கள்! அப்படி உண் ணாதவர்களை, குறிப்பாக 60 வயது - 70 வயதுள்ளவர்களை ‘Open angle Glaucoma’ தாக்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ‘Open - angle glaucoma’  என்பது, கண்களைச் சுற்றியுள்ள உள் பகுதியில் திரவங்கள் சேர்வதினால் அது முக்கிய நரம்பான ‘‘Optic nerve’ ’வைத் தாக்கி அதை பழுதடையச் செய்து, பார்வையைப் பறிக்கிறது!
எளிய கீரை - காய்கறியைச் சாப்பிடுவதினால் எவ்வளவு நன்மை என்று யோசித்தீர்களா?
மருத்துவச் செலவும், நோய் வலியும் - உபாதையும் மன உளைச்சலும் இன்மை மிச்சம் அல்லவா?
வருமுன்னர் காக்க கற்றுக் கொள் ளுதல் அவசியம்.
****
சிலர் வாரம் முழுவதும் நான் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறேன்; முறையான ஆரோக்கிய உணவையே உட்கொள்ளுகிறேன். என்றெல்லாம் கூறி விட்டு, இறுதியில் வாரத்தின் இறுதியில் ஓரிரு நாட்களில் (சனி, ஞாயிறு, என்று உதாரணத்திற்குச் சொல்லுவோமே) தான் பர்கர், Burgers, Chips, சிலீவீஜீs போன்றவைகளைச் சாப்பிடுவேன் என்று கூறுவதுண்டு.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழக மருந்தியல் துறையின் தலைவர் ஓர் ஆய்வு நடத்தியுள்ளார்.அதன் மூலம் அவர்கள் கண்டறிந்த முடிவு என்ன தெரியுமா?
மனிதர்களின் குடற்பகுதி நிuts பல கோடி மில்லியன் (100 Trillion) மைக்ரோபியல் செல்களை கொண்டதாக உள்ளதால், மெட்டபாலிசத்தில் அவை தான் பாதிப்பு ஏற்படுத்த காரணமாகின்றன.
குடற் புண்கள் - மலக் குழாய் புண்கள்(linked with gastro intestinal conditions such as inflamatory bowel disease and obesity)
வயிறு பெருத்தல் உட்பட ஏற்பட வழி வகுக்கின்றன.
மோரீஸ் என்ற அந்த பேராசிரியர் தான் இப்படி முதன் முதலாக ஒப்பீடு செய்து சுகாதாரமற்ற உணவு எப்படி உணவுக் குழாய் முதல் மலக்குடல் வரை பல வகை தாக்குதல்களை (Microbiota) உருவாக்குகிறது என்று அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
எனவே உணவுப் பழக்கத்தில் ஒரு சீர்மையைக் கடைப் பிடியுங்கள் அது அவசியம்.
- கி.வீரமணி
-விடுதலை,23.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக