பக்கங்கள்

ஞாயிறு, 22 மே, 2016

குப்பையிலிருந்து கோபுரம் ஏறிய கோமகள்!


வாழ்வியல் சிந்தனைகள்

குப்பைகளைக்கூட செல்வமாக்கலாம் - உழைப்பும், முயற்சியும் தன்னம் பிக்கையும் இருந்தால்!
தஞ்சை வல்லத்தில் உள்ள பெரி யார் - மணியம்மைப் பல்கலைக் கழ கத்தில் ஒரு  அனுபவக் கருத்துரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
‘Waste in Wealth’ -- கழிவையும் காசாக்குவோம்.
செல்வமாக்கி, செழிப்புறுவோம்’ என்பதே அது! சில கட்டுமானங்களே இதனை நடைமுறைப்படுத்திய நமக்கு சான்று பகிர்கின்றன!
மகாராஷ்டிர மாநிலம், புனேயில், குப்பைகளைப் பொறுக்கிய சுமன் என்ற அம்மையார் குப்பையை சேகரித்து, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் திரட்டுகிறார்; அது மட்டுமா?
சுவிஸ் நாட்டு ஜெனிவாவில் கருத்தரங்கிற்கு இவர் அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்.
குப்பையிலிருந்து கோபுரம் ஏறி நின்ற கோமகள் இந்த அம்மையார்.
‘தினமணி’ கதிரில் (24.1.2016) வந்த ஒரு கட்டுரை இதோ:
இவரது வருமானம் ஆண்டுக்கு
1 கோடி ரூபாய்!
“வாழ்ந்து ஆக வேண்டுமே என்று 34 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் குப்பைகள் பொறுக்கத் தொடங்கினார். குப்பைகளைப் பொறுக்கி விற்றால் அன்று கிடைத்தது ஐந்து ரூபாய்.
இன்றைய தினம் சுமன் இந்தக் குப்பைகள் மூலமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சுமன் வாழ்வது புனே நகரில். இன்று சுமன் விரல் அசைத்தால் தான் புனே நகரம் சுத்தமாகும். அன்றைக்கு சாக்கை விரித்து குப்பைகள் பொறுக்கிய சுமன், இன்று புனே நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் சக்தியாக மாறியிருக்கிறார். இந்த வேஸ்ட் மேனேஜ்மென்ட் யுக்தி, சென்ற ஆண்டு ஜெனிவா நகரில் சர்வதேச உழைப்பாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேச சுமனை சிறப்பு அழைப்பாளராக உயர்த்தியது. இந்த உயர்ச்சி சுமன் மட்டுமல்ல, வேறு யாரும் எதிர்பார்க்காதது. குப்பையில்தான் மாணிக்கம் கிடைக்கும். சுமன் குப்பை அள்ளியே மாணிக்கமாகிப் போனவர்.
சுமன் சாதனை செய்தது இப்படித் தான். ஒருவித நாணம் கலந்து தயங்கித் தயங்கிக் கூறுகிறார்.
“குப்பை அள்ளும் வேலைக்கு வந்து 37 ஆண்டுகள் ஆகின்றன. சமூகத்தில் குப்பைகளை அள்ளுபவர்களுக்கு என்ன மதிப்பு தரப்படுகிறது என்று நான் சொல்லத் தேவையில்லை. பெரும்பாலும் எங்களைத் திருடர்களாகத்தான் பார்க் கிறார்கள்.
வயிற்றுப் பிழைப்பிற்காக புனே வந்து சேர்ந்தோம். கணவர் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர். நான்கு குழந்தைகள். தினமும் ஒரு வேளை உணவு, எங்களுக்குப் பகல் கனவாக இருந்தது. எனக்கு படிப்பு இல்லை. வீடுகளில் பத்துப் பாத்திரம் கழுவக் கூட வேலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பழைய இரும்பு, காகிதம் என்று பொறுக்க ஆரம்பித்தேன். ஒன்பது மணி நேரம் தெருக்களில் சுற்றி அலைந்து, பொறுக்கியவற்றை விற்றால் இருபது ரூபாய் கிடைக்கும். அதை வைத்து இரவு உணவைத் தயாரிப்பேன். அடுத்த வேளை உணவு அடுத்த நாள் இரவுதான்.
வறுமை, பசி எங்களைச் சொந்த கிராமத்திலிருந்து விரட்டியது. புனே சென்றால் ஏதாவது வேலை செய்து பசியைத் தணிக்கலாம் என்றால்... புனேவிலும் அதே கதைதான். அதையே நினைத்து எத்தனை நாள் நொந்து கொள்வது? குப்பைகளைப் பொறுக்கி பொறுக்கி விற்றதில் ஒன்று புரிந்தது. சேகரிக்கும் குப்பைகளை தரம், இனம் வாரியாகப் பிரித்து விற்றால் அதிக விலை கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன்.
புனே நகரில் குப்பை பொறுக்குப வர்களை ஒன்று சேர்த்தேன். “புனே நகர துப்புரவு கூட்டுறவு சங்கம்‘ ஒன்றை ஆரம்பித்தேன். என்னை அதன் தலைவி ஆக்கி விட்டார்கள். இன்று எனது வருமானத்தை நலிவடைந்தவர் களுக்காகச் செலவு செய்கிறேன்.
குப்பை பொறுக்குபவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கச் செய்தேன். இதனால் போலீசின் தொந் தரவு குறைந்தது. பொது மக்களும் நாங்கள் பழைய பொருள்கள், குப்பைகளைப் பொறுக்குபவர்கள்... என்று நம்பத்தொடங்கினர். நகரின் சுத்தமாக்கும் வேலைகள் எந்தத் தாமதமும் இன்றி நடக்கின்றன. இந்த வேலையில் உள்ளவர்களுக்கும் வருவாய் அதிகமானது. கிட்டத்தட்ட இந்த வேலை பார்ப்பவர்களின் மொத்த வருவாய் ஆண்டிற்கு ஒரு கோடி. எனது ஆரம்ப நிலைமை என் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்பதில் படு தீவிரமாக இருந்தேன். எனது பிள்ளைகளை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தேன். அவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஒரு மகன் பத்திரிகையாளர். இன்னொருவர் ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறார். மருமகள் கல்லூரியில் வேலை பார்க்கிறார். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகிவிட்டது. சொந்தமாக பிளாட் வாங்கினாலும், பழைய குடிசையை மாற்றி கட்டிடம் கட்டி சேர்ந்து வாழ்கிறோம்.
திடீரென்று ஜெனிவா கருத்தரங்கத் திற்கு அழைப்பு வந்தது. கையும் ஓடலை. காலும் ஓடலை.. அங்கே போனபோது சேலை அணிந்த பெண் நான் மட்டும்தான். நமக்கு மட்டும்தான் பிரச்சினை என்றால், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். குளிரூட்டப்பட்ட அரங்கில் அமரச் செய்தார்கள். ஏசி எனக்கு பழக்கம் இல்லாததினால் , என்னால் இருக்க முடிய வில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டேன். நான் பேசியதைக் கேட்டு எல்லாரும் பாராட்டினார்கள். குப்பை அள்ளியும் கௌரவமாக வாழலாம் என்பதற்கு எங்கள் சங்கம் தான் ஓர் அழகான எடுத்துக் காட்டு’’ என்கிறார் சுமன்.”
நன்றி: ‘கதிர்’
‘நம்மால் முடியாதது
வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்’
என்ற மொழிக்கு இதைவிட நல்ல சான்று வேண்டுமா?
- கி.வீரமணி
-விடுதலை,28.5.16
°Š¬ðJL¼‰¶ «è£¹ó‹ ãPò «è£ñèœ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக