பக்கங்கள்

புதன், 26 ஏப்ரல், 2017

வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை?

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி



ஜப்பானின் வளர்ச்சி - நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு - அக்கதிர் வீச்சுகளால் இன்றளவும் தாக்கும் விளைவுகள் - இவை எல்லாம் மனித குலம் தனக்குத்தானே அழுது புலம்பி, பாடம் பெறவேண்டிய அவலங்கள் ஆகும்!

அத்தகைய ஜப்பான் நாட்டின் மீட்டுருவாக்கம் எவ்வளவு வியக்கத்தக்கது!

இன்றும் அந்த நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள நாடு.

கட்டுப்பாடும், அடக்கமும், கடும் உழைப்பும் நாணயமும் தான் அவர்களை இவ்வளவு இடை யூறுகள், இயற்கை உபாதைகளான ‘சுனாமி’ என்னும் ஆழிப்பேரலைகள், புயல் - பூகம்பங்கள், எரிமலை வீச்சுகள் இப்படி எத்தனையோ சோத னைகள்

அம் மக்களை படாதபாடுபடுத்தினாலும் கூட, அவற்றைத் துணிவோடு சந்தித்து, துவண்டுவிழாமல் மீண்டும் தங்களது வழமையான அன்றாடப் பணி களை எவ்விதக் கிலேசமும் இன்றி சாதித்து மகிழ்கிறார்கள்!

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இரு நாடுகள் ஒன்று ஜெர்மனி, இன்னொன்று ஜப்பான்.

இருநாட்டு நாணயங்களின் மதிப்பும் ‘கெட்டி யாகவே’ - குறையாத அளவு நிலைநிறுத்தப்பட்டு வருகிறதே. இதற்கெல்லாம் மூலகாரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்பும்தானே!

ஜப்பானில் ‘ரோபோக்கள்’ மனிதர்களின் பணி அத்தனையும் செய்து கொள்ளும் அளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது!

இன்று வந்துள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் ஒரு சிறு செய்தி. எவ்வளவு பெரிய நம்பிக்கையை - உடல் நலம் குன்றியவர்களுக்குக் கூட - ஏற்படுத்திக் கொடுக்கிறது!

பக்கவாதத்தினால் உடலின் பகுதி பாதிக்கப்பட்டு கால்களைக் கொண்டு நடக்க முடியாமல் முடக் கப்பட்டுள்ளவர்கள் கூட, உடற்பயிற்சி செய்து நடந்து தங்களது சிந்தனையில் ‘வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை கேளுங்கள்’ என்பது போல ஒரு புதிய ‘ரோபோ’ ஒன்றைக் காலில் இணைத்துக் கொண்டு - உடை கால்சட்டை போல - டிரெட்மில்லில் (Tread Mill)நாள்தோறும் நடைபயிற்சி செய்தால் நலவாழ்வை மீட்டெடுக்க முடியும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது - நிரூபிக்கவும் பட்டுள்ளது.

டோக்கியோவின் டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனின் தலைமையகத்தில் இணைத்துக் கொள்ள ‘ரோபோ கால்களையே’ முட்டிக்குக் கீழே இணைத்து, இதற்கென பிரத்தியேகமாக உருவாக் கப்பட்ட டிரட்மில்லில் நடக்க வைக்கலாமாம்!

இந்த ‘வெல்வாக் ஷ்ஷ்-1000 ww-1000 (Wellwalk-ww1000 system)என்பது ஒரு மோட்டார் இணைந்த இயந்திர உறுப்பினை முட்டிக்கீழே இணைப்பதால் நோயாளிகள் இதனைக் கட்டிக் கொண்டு, ‘டிரட் மில்லில்’ நடக்கப் போதிய பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்!

இதற்கென தயாரிக்கப்பட்ட ‘டிரட்மில்’ கருவி இவர்களது எடையையும் தாங்கும் சக்தியை உள்ளடக்கியதாம்!

இத்தகைய வசதிகளை உள்ளடக்கிய ரோபோடிக் நடைபயிற்சி கருவிகள் முதலில் நூறு (100) தயாரித்து - மருத்துவ வசதிகளுடன் கூட இக்கருவிகளை - டெயோட்டோ கம்பனி வாடகைக்கு விடுகிறார் களாம்!

மனித அறிவின் மகத்தான வளர்ச்சிக்கு எல்லை தான் ஏது?

“எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்”, “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பறவை யாகுமா?”, “ஏதோ காலத்தை தள்ளிக்கொண்டு போகிறேன்”, “வெந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம்” ‘‘ஆண்டவன் விட்ட வழி!’’ என்று கூறும் மடமைக்கோ, சோம்பலுக்கோ சாக்குருதி வேதாந் தத்திற்கோ அங்கே இடமே இல்லை பார்த்தீர்களா?

எல்லாம் நன்நம்பிக்கையுடன் கூடிய ‘நம்மால் முடியும்’ என்ற திடசித்தமே!
-விடுதலை,13.4.17

திங்கள், 24 ஏப்ரல், 2017

பகுத்துண்டு வாழும் அறிவின் செறிவே புத்தகம்!



படிப்போம் - பரப்புவோம் - பயன்பெறுவோம்!எனவே, தனது எழுத்தை - தான் பெற்ற செல்வத்தை - தான் கற்றதை உலகப் பொதுவாக்கும் உயர்தனி முறையே புத்தகம் என்ற அறிவு வாய்க்கால்!க்ஷீக்ஷீக்ஷீமனிதனுக்கு மாண்பு தருவது!

’’மற்றவற்றினின்று மனிதனைப் பிரிப்பது;உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல்இம்மியும்கூட இல்லை என்றறிக!தனி ஒரு மேன்மை சற்றும் இல்லை;பிற உயிர்களிடம் பிரச்சாரம் செய்யும்என்பது, மனிதனிடத்தில் தானுண்டு!‘‘

உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல்’’கேளீர், அதனைக் கேளீர், கேளீரே!மானிடத்தில் வாய்த்த சிறப்பெது,உயிர்கட் கில்லாத தென்ன?முளைத்த விலங்கு முதற் சுள்ளான்வரை‘‘இனியோன்’’ ‘‘சிறந்தோன்’’ எனப் படுகின்றான்?மனிதன் ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில்குறிகள் உண்டு; நெறிகள் உண்டு!மனிதனுக்கு; மற்ற உயிர்கட்குக்மனிதன் அறிபவன்;

மற்றவும் அறிவன!துன்புறுவான் இவன்; துன்புறும் பிறவும்!இன்புறும் பிற உயிர்; இவனும் அங்ஙனே!மற்றவை உறங்கும்; மனிதனும் உறங்குவான்‘‘மனிதன் உண்போன்; மற்றவும் உண்பன!இதோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இக்கருத்தை கவிதை வடிவில் எவ்வளவு சுவை யாகத் தருகிறார் - படித்து, சுவைத்து இன்புறுங்கள்!இதுதான் மனிதனை, மிருகங்களிடமிருந்து பிரித்து உயர்த்திக் காட்டும் உன்னதப் பண்பு!பகுத்தறிவின் மேன்மை - பிறர்க்கு அதன் பயனைப் பரப்புதலே!மனித அறிவின் சிறப்பு - பகுத்தறிவு!‘‘மனிதப் பிறவிக்கு அடுத்தாற்போல், இவ்வுலகில் விந்தையான பொருள் புத்தகம்தான்;

ஏனெனில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களு டனும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்களுடனும் நாம் இன்னமும் உரையாடி இன்புற உதவும் அரிய சாதனம் புத்தகம்‘’ என்று கிங்ஸ்லி என்ற அறிஞர் கூறுவதில்தான் எவ்வளவு ஆழமான பொருள் புதைந்துள்ளது பார்த்தீர்களா?அதுபோலவே, பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லாத நிலையில், ‘ஜாலியாக’ - மாணவர் இளைஞர் பட்டாளம் உள்பட பல வயதினரும் - குடும்பம் குடும்பமாக வந்து குளுகுளு அறையில், ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவான’ புத்தகக் காட்சியகத்தில் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்குள் அறிவுத் தேடல் வேட்டையில் ஈடுபட்டு அகமகிழ்ச்சியுடன், அரை விலை (பாதி) வணிகத்தின் பயனை நுகர்ந்து, பை பையாக சிலர், மூட்டை மூட்டையாகப் பலர் இப்படி வாசக நேயர்கள் வாரிச் சென்ற காட்சி மிக்க மகிழ்ச்சி ஊற்றை இறைத்தது!அவர்களில் பலர் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்! நம்மிடம் இறுதி நாள் முடிந்தவுடன், ‘‘அய்யா, இம்முறைதான் நாங்கள் கொண்டு வந்து போட்ட புத்தகங்கள் - மற்ற விற்பனைக் கண்காட்சிகள் போல் இல்லாது - அத்தனையும் விற்றுத் தீர்ந்து பணப் பையுடன் மட்டும்தான் திரும்பச் செல்லுகிறோம்‘’ என்றார்கள் - மகிழ்ச்சி பொங்க!இந்த 50 விழுக்காடு தள்ளுபடி வாய்ப்பில் விற்பனைக்காக அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட வர்களும், மற்றவர்களும்கூட பங்கெடுத்தனர்.எவ்வளவோ கூக்குரலிட்டும்கூட அவர்களுக்கு அரசு தரப்பில் குறைந்தபட்ச நிதி உதவி - நட்ட ஈடாக - ஆறுதல் தொகையாகக் கூடத் தராதது வேதனை அளித்த ஒன்றுதான்!சென்ற ஆண்டு ஒரு தனித்த அனுபவம்! அதற்கு சில மாதங்கள் முன்பு டிசம்பரில் (2015) சென்னையில் பெய்த தொடர் மழை - வெள்ளம் முதலியவைகளால் வீடுகளில், குடோன்களில் இருப்பாக வைக்கப்பட்டி ருந்த பல பதிப்பகங்களின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், படிவங்கள் மழை வெள்ளத்தால் பாழ்ப்படுத்தப்பட்டு, பல ஆயிரம் - லட்சக்கணக்கில் ரூபாய் பதிப்பக உரிமையாளர்களான நண்பர்கள் பெருநட்டத்திற்கு ஆளானார்கள்.சென்னையில் பெரியார் திடலில் கடந்த சில ஆண்டுகளாகவே 50 விழுக்காடு தள்ளுபடி தந்து, புத்தகங்கள் பரவுவதை - படிப்பதை - ஊக்குவிக்கும் உயர் நோக்கத்தில் பல்வேறு பதிப்பாளர்கள் - குறைந்தபட்சம் 50 பதிப்பகத்தினர் பங்கேற்கும் புத்தக விற்பனை நிலையங்களை அமைத்து, புத்தக வாசிப்பை நேசிப்பாகவும், சுவாசிப்பாகவும் ஆக்கி டும் பழக்கத்தை - வழக்கமாக்கிடும் நற்றொண்டை பெரியார் அறக்கட்டளையான ‘‘பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம்‘’ செய்து வருகிறது!இந்த வாரம் உலகம் முழுவதும் புத்தக நாளாக (ஏப்ரல் 23) கொண்டாடும் வாரம்!

-விடுதலை ,21.4.17

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்சம்!

வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி



சென்ற 24.3.2017 அன்று தஞ்சை பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமும், குப்பத்தில் (ஆந்திர மாநிலம்) உள்ள திராவிடப் பல்கலைக் கழகமும் இணைந்து வல்லத்தில் நடத்திய மொழிப் பெயர்ப் பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

அப்போது, அங்கு பயிற்சியாளர்களுக்குப் பாடம் எடுத்த, பெரியார் உயராய்வு மய்யத்தின் வருகைப் பேராசிரியராக  உள்ள முனைவர் திருமதி மு.வளர்மதி அவர்கள், எனக்கொரு நூலை பரிசளித் தார்கள்!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய முனைவர் மு.வளர்மதி அவர்கள் எழுதி, அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் நூல். அற்புதமான - ஆழமான - செறிவான கருத்துக் கருவூலமான அந்நூல் முதற்பதிப்பு 1994 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும்!

‘‘காண்டேகரும் கா.ஸ்ரீ.ஸ்ரீயும்‘’ என்ற தலைப்பு மிகவும் சிறப்பான வகையில், மொழி பெயர்ப்பு கலை பயிலும் அத்துணை பேருக்கும் பாடம் புகட்டும் இலக்கணம் அமைந்துள்ள, அதேநேரத்தில், சிறந்த உழைப்பினால் உருவானதொரு நூல்!

காண்டேகர் மராத்திய மண்ணுக்குரியவர். தமிழ் நாட்டுக்குத் தத்துப்பிள்ளை - இலக்கிய உலகில்!

அவரை தமிழ் கூறும் நல்லுலக நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், மொழி பெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே கொஞ்சமும் எழாமல், மூலத்திற்கே மெருகு ஊட்டித் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள்.



அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார் ஆகியோர் நானறிந்த காண்டேகர் பிரியர்கள் ஆவர். நானும் பள்ளி பருவம், கல்லூரி, பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் காண்டேகர் வாசித்தேன். பிறகு நேசித்தேன். எனது தோழர் புலவர் கோ.இமயவரம்பனும், நானும் இவரது புதினங்களின் புரட்சிபற்றி படித்துவிட்டு விவாதிப்போம்!

காண்டேகரை கோல்காப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நாங்கள் பேசிக்கொண் டிருப்போம்!

வடநாட்டுச் சுற்றுப்பயணம் (உ.பி.) சென்றபோது,  தந்தை பெரியார் அவர்கள், எங்களது  வாகன ஓட்டுநரிடம், கோல்காப்பூர் வழி (திரும்பிடும் நிலை யில்) செல்லும்படி - அம்மாவின் விருப்பப்படி - ‘காண்டேகர் பூமி’யைக் காண்பதற்காக கூறினார்கள். நாங்கள் உறங்கிய நிலையில், ஓட்டுநர் கோல்காப்பூர் வழியை விட்டு, ஷோலாப்பூர் வழி சென்றார். அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் அப்படி!

எங்களுக்கு பொழுது புலர்ந்த நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே!

அவ்வளவு ஈர்ப்பு காண்டேகரின் கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்ச எழுத்துகளுக்கு!

அந்நூலை பல கோணங்களில் ஆய்ந்து எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி அவர்கள், அதில் காண்டேகர்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், தனது ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

‘‘வாழ்க்கைக் கீதத்தை விளக்கி விட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை காண் டேகர்; இன்றையச் சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை; இன்று சுகம் அனு பவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை; நொந்த மனதுடன் - நீங்களும் நானும் - வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ, அதனைக் காண்டேகர் அழகுபட ‘‘சுகம் என்பது ரசவாதிகளின் ரசக் குளிகையைப் போல் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். அது கேவலம் - கவியின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது. இவ்வுலகில், மனிதத் தன்மைக்கும் - சுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வுலகில்: சுகமாக இருக்க வேண்டுபவன், புலியைப் போல் மற்றவர்களின் இரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும். நியாயம் - தியாகம் - கடமை - மனிதத்தன்மை - நாணயம் - நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன், இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்லன்!’’ என்று கூறுகிறார். ஆகா, எவ்வளவு சரியான சவுக்கடி... பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு! வாழ்க்கை ஏழை மக்களுக்கு, பாட்டாளி குடும் பங்களுக்கு! எப்படி இனிப்பாக இருக்க முடியும்? எனக் காண்டேகரின் கருத்து வீச்சை அனுபவித்துப் பாராட்டுகிறார் அறிஞர் அண்ணா.’’

நாளை காண்டேகரின் கற்பனை படைப்பாற்ற லையும் பார்ப்போம்!

-விடுதலை,14.4.17

காண்டேகரின்

உருவகக்கதை

சமூகநிலை குறித்த பல சிக்கல்களையும், விடுவிக்க வேண்டிய முறைகளையும் விளக்க, உருவகக்கதை என்ற சிறிய இலக்கியவடிவை மராட்டியில் முதன்முதலில் படைத்தவர் காண் டேகர். இதற்குரிய இயல்புகளை, தனித்தன்மையை காண்டேகர் ‘கலிகர்’ (அரும்பு) என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். “சின்னஞ்சிறு கதை என்று சொல்லப்படும் இலக்கிய உருவத் துக்கும், இதற்கும் இயல்பில் வேற்றுமை உண்டு. சின்னஞ்சிறு கதையில் மிகவும் முக்கியமான அம்சம் அதன் ஆச்சரியகரமான முடிவு. அநேகமாக அந்தச் சமத்காரம் வெறும் அறிவுப்பயிற்சியோடு சரி? ஆனால் வெறும் அறிவுப் பயிற்சியினாலோ கற்பனைக் குவியலினாலோ உருவகக்கதையை நிறம்பெறச் செய்ய முடியாது. வேடிக்கைக் கதைகளைப் போலவே சின்னஞ்சிறு கதையும் பொழுதுபோக்குக்கு ஏற்றதாக இருந்துவிட்டால் போதும். உருவகக்கதையிலோ பொழுதுபோக்கு மட்டும் அன்றி சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்கவேண்டும். இழையும்படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி தேர்ந்தெடுத்த அதிசய மான கற்பனைகளினால் அழகைத் தெளிவுப்படுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும் உணர்ச்சி யையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும் வாழ்க்கை மதிப்புக்களையும் வாசகர்களுக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக்கதை என்னும் இலக்கிய உருவம் காவியத்துக்கு சம மானது” என்று உருவகக் கதையைப் பற்றிய தனது உயர்வான கருத்தை வெளியிட்டுள்ளார்.

காண்டேகரின் உருவகக்கதை உத்தியை விளக் கும் வகையில் சான்றாக ஒரு கதை இங்கு இடம்பெறுகிறது.

ஆகாயமும் பூமியும்

“ஆகாயம் பூமியை எப்போதும் துச்சமாக மதிப்பது வழக்கம். அருணோதயத்தின் செம்மை யைக் காண்பித்து இது காதலின் நிறம். உன்னிடம் இது எங்கே இருக்கப் போகிறது? என்று அது பூமியைக் கேட்கும்.

விதவிதமான வண்ணங்கள் கலந்த சாயங்கால மேகத்தைக் காண்பித்து இதோபார், என் விளை யாட்டுப் பொம்மை, உன்னிடம் இப்படிப்பட்ட பொம்மை இருக்கிறதா? என்று கேட்கும்.

இரவில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் பற்றியோ அதற்கு மிகமிக கர்வம். உன் பூக்கள் இன்று மலர்ந்து நாளைக்கு வாடிப்போகின்றனவே! இதோ பார் என் பூக்களை! இவை யுகயுகமாக மலர்ந்தவாறே இருக்கின்றன என்று அது பூமியைப் பரிகாசம் செய்யும்.

பூமி சாது. ஆகாயம் என்பது வெறும் தோற்றம் என்று அதற்குத் தெரியாது. தென்படுவது போலத் தான் ஆகாயம் உண்மையில் இருக்கிறது என்பது அதன் நினைப்பு. தன்னிடமிருந்து நீரைக் கொள் ளையடித்து ஆகாயம் மேகங்களை உண்டாக்கு வதையும், அவற்றைக் கொண்டு விளையாட்டுப் பொம்மைகள் ஆக்குவதையும் இந்தக் கடன் வாங்கிய நீரைத் திருப்பிக் கொடுக்கும் போது அது நன்றிகெட்டு வசைமொழிகளைக் கடகடவென்று முழக்கி, மின்னலாகிய சாட்டையை வீசுவதையும் பூமி நினைத்துகூடப் பார்க்கவில்லை. ஆகாயம் தண்ணீர் கொடுத்துத் தனக்கு உபகாரம் செய்த தாகவே அது நினைத்தது.

சோம்பேறியும். சுகானுபவியும் நன்றி கெட்டது மான ஆகாயத்தைக் கண்டு நட்சத்திரங்களுக் கெல்லாம் கோபம் வந்தது. அவை கோபத்தோடு, ‘‘நிறநிறமான மேக உடைகளையும், அருணனாகிய கள்ளையும் தவிர்த்து இந்த ஆகாயத்துக்கு வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அந்தப் பூமியும் இருக் கிறது பாருங்கள்! வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொண்டு எரிந்தால்கூட ஆகாயத்துக்கு வேண்டிய மட்டும் தண்ணீர் கொடுக்கிறது. தன் இருதயத்தில் அடிபட்டால்கூடத் தன் முதுகிலுள்ள பிராணிகளை அன்னையைப்போல அன்போடு பராமரிக்கிறது. நீங்கள் அதனிடம் ஒர் இனிய பேச்சுப் பேசுங்கள். உடனே அது பதிலுக்கு நூறு இனிய சொற்களை உங்களிடம் பேசுகிறது. அப்படிப்பட்ட பூமியை விட்டு இந்த ஆகாயத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால் பிரயோஜனம் என்ன? வாருங்கள் போவோம். இந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களாக இருப் பதை விட, பூமியில் போய்க் கற்களாக இருப்பது எவ்வளவு மேலானது” என்றன.

ஒரு நட்சத்திரம் அறுந்தது. ஒரு நட்சத்திரம் விழுந்தது. மற்றொரு நட்சத்திரம் அறுந்தது; மற்றொரு நட்சத்திரம் விழுந்தது.

பரபரவென்று நட்சத்திரங்கள் கீழே விழுந்தன. பொடி சூரணமாகும்போது கூட அவை சிரித்துக் கொண்டே இருந்தன. நட்சத்திரங்கள் யாவும் விழுந்துவிடவே, ஆகாயத்தின் சவுந்தரியம் அழிந்தது. அதற்குப் பைத்தியம் பிடித்தது, அந்தப் பைத்திய வேகத்தில் அதுவும் கீழே குதித்தது.

ஆகாயம் இடிந்து விழுந்தது.

அது இடிந்து விழுந்ததனால் யாருக்கும் ஒரு நஷ்டமும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையே மறைத்துக் கொண்டு இருந்த திரை இல்லாது ஒழிந்தது!

அந்தப் புரட்சியைச் செய்தது எது?

அந்த முதல் எரிநட்சத்திரம்!”

இச்சின்னஞ்சிறு கதையை முதலாளி, தொழி லாளி அல்லது ஏழை, பணக்காரன் இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளை விளக்கும் வகையில் ஒரு கருத்தோவியமாக வழங்கியுள்ளார் காண்டேகர். இவ்வாறு புரட்சிக் கருத்துக்களைப் புதுமையான முறையில் கூறும்பொழுது, இரத்தத்தை நீராக்கும் தொழிலாளிகள் இல்லாமற் போனால் உயர் வர்க் கத்தினரின் சுகபோகங்கள் ஏது? என்று படிக்கும் வாசகர்களைச் சிந்திக்க வைத்து விடுகிறார் காண்டேகர்.

இப்படிப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை இளைய தலைமுறை படிக்கவேண்டும்.

டாக்டர் மு.வ. என்ற மு.வரதராசனார், காண் டேகர் பாணியில் எழுதினார். மு.வ.வைத் தெரியுமா என்பது கேள்விக்குறி!

-விடுதலை,15.4.17


செவ்வாய், 28 மார்ச், 2017

மருத்துவர்களின் சரியான எச்சரிக்கை - "நா (சுவை) காக்க!"




நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் - இருதயம், மூளை போன்றே மிகவும் இன்றியமையாதவை. எப்போதும் நலமுடன் இயங்க வேண்டியவை.

நாம் எந்த உறுப்பின் நலத்தையும் குறைத்து மதிப்பிடவோ, சற்று அலட் சியமாகக் கருதி மருத்துவ ஆலோசனை பெறாமலிருப்பதோ விரும்பத்தக்கதல்ல.

விழிப்புணர்வை அத்தனை பேரிட மும் உருவாக்க வேண்டியது, சமூக நல விரும்பிகளின் தவிர்க்க இயலாத கடமையாகும்.

கடந்த சில நாள்களுக்குமுன் அமெரிக்காவின் பிரபல மருத்துவ மனையான 'மவுண்ட் சினாய்' என்பதும், சென்னை 'அப்போலோ மருத்துவமனை'யும் இணைந்து கல்லீரல் பற்றிய விழிப்புணர்வுபற்றி விரிவாக விவாதித்து பல பயனுள்ள அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி யுள்ளனர்!

கல்லீரல் நோய் சம்பந்தப்பட்ட அந்த இரு மருத்துவமனைகளின் பிரபல மருத்துவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ததோடு, நோயாளிகளுக்கு தக்க விழிப்புணர்வு  மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கான கருத்துரைகளையும் சிறப்பாகத் தந்துள்ளனர்.கல்லீரல் (Liver)  - நமது உடலில் மிகவும் சிறியதுதான் என்றாலும் அதனைக் காப்பது மிகவும் தேவையான ஒன்று.

மிக அதிகமான குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் வீக்கம் நோய்  (Cirrhosis)தாக்கி, கல்லீரல் சிதைந்து வயிறு பெருக்கம் அதிகம் என்பது "பீர் தொப்பையாளர்" ஆவது சர்வ சாதாரணம்!

அண்மையில் இந்த கல்லீரல் நோய்  - அழற்சி வீக்கம் - பாழ்படுதல் கடந்த 10 ஆண்டுகளில் 40 விழுக்காடு கூடியுள்ளதாம்!

குடிப் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட இந்த கல்லீரல் நோய் (சிரோசிஸ்) ஏன் வருகிறது? புரியவில்லையே! அவர் குடிப் பழக்கம் இல்லாதவராயிற்றே என்று நம்மில் பலர் இந்நோயினால் தாக்குண்டவர்களைப்பற்றி பேசி ஆயாசப்படுவதுண்டு.

வயிறு மற்றும் கல்லீரல் அழற்சி மருத்துவத்தில் சிறந்தவரான நமது பிரபல டாக்டர் கே. பழனிச்சாமி மற்றும் கல்லீரல் அழற்சி (Hepatologist)

மருத்துவரான டாக்டர் என். முருகன்  NAFLD (Non - alchoholic tally liver disease)

பற்றிய அரிய எச்சரிக்கை களைத் தந்துள்ளனர்.

உணவு முறையில் நாம் அனைவரும் விழிப்புடன் இல்லாததே, மதுப் பழக்கம் இல்லாமல் இருப்பவர்களும் கல்லீரல் நோயினால் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்தக் கல்லீரல் நோயினால் மரணத்தைத் தழுவும் பரிதாபம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறதாம்!  மது குடிப்பதால் இந்த நிலை என்பது ஒரு தகவல். ஹெபடிட்டிஸ்  B,C மற்றும் தொற்று (Viral infection)

போன்றவை இதற்கு மற்ற முக்கிய காரணிகள் ஆகும்.

இருதயம், சிறுநீரகம் மாற்றுச் சிகிச்சைப் போலவே  கல்லீரல் மாற்று பொருத்திடும் சிகிச்சையும் (Transplantation of Liver

நடைபெறு கின்றது என்றாலும் வருமுன்னர் காப்பது தானே அறிவுடமை?

ஆரோக்கிய உணவைத் தேர்ந்து அதனைச் சாப்பிடுங்கள்; அத்துடன் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத் துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு, நிறைய மாவுச் சத்துடன் பல சுவை தரும் உணவுப் பண்டங்களை கண்டபடி நாக்குக்கு அடிமையாகி சாப்பிடுவதால் இப்படி கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை என்று அறிவுறுத்துகின்றனர். புரதக் குறைவான உணவைச் சாப்பிடுவதும் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணம் - அதிலும் கவனஞ் செலுத்துங்கள்.

சர்க்கரை நோய், பெருத்த எடை இவைகளும் இந்நோயைத் துரிதப் படுத்தும் கருவிகளாகி விடுகின்றனவாம்!

எனவே வெறும் நாக்குக்கு அடிமையாகி அப்போதைய சுவைக்காக, எதிர்கால வாழ்வை இழக்காதீர்கள்!

"நா காக்க" என்று வள்ளுவர் சொன்ன நாவை அடக்குதல் என்பதற்கு விரிவான பொருள் காண்க. சுவைக்கு மட்டும் அடிமை ஆகாதீர்! இதனையும் புதுப் பொருளாகக் கொண்டு வாழுங்கள். நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம் - இல்லையா?
-விடுதலை,27.3.17

திங்கள், 13 மார்ச், 2017

அமைதியான திடீர் மாரடைப்புக்கு - ஒரு விடியல் நற்செய்தி!



அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள் ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack), மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

டாக்டர்களேகூட சிலர் இப்படிப் பட்ட இறப்புக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய செய்தி ஒன்றை பிரபல மருத்துவ நிபுணர் (பேராசிரியர்) டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் நமக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள் ளார்.

அதனை நீங்களும் படிப்பதும், பரப்புவதும் பலருக்கு புதிய தெளிவு - விழிப்புணர்வு ஏற்படக்கூடும் என்பதால், அதை அப்படியே வாச கர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிட்டுள்ளோம்.

படியுங்கள்! பயன் பெறுங்கள்!

எச்சரிக்கையை செயல்படுத்த முயலுவோமாக!

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாரா லும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழு வார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

சைலன்ட் அட்டாக் என்பார்கள். டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடி யாது. ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். எதிலாவது அறிகுறி தெரிந்தால் சொல்வார்கள்.

எந்த சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை.

நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன். உலகம் முழுவதும் நாளை அவன் படத்தோடு செய்தி வரப்போகிறது - நமது டாக்டர் வாசகர்களுக்கு இன்றே, இப்போதே!

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக் கியமாக இருந்தார். அவருக்கு டய பெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச் சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத் துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன் னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம் பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தி யன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அள வுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3    என்கிற ஒரு புரோட்டீன் அதிக மாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடை யாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக் கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித் தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங் களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3    இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க் கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக் கும் நிலையில்,

மனோஜின் சிந்தனை வேறு மாதிரி யாக இருக்கிறது.

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அது தான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித் திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!!

-விடுதலை,13.3.17

வியாழன், 2 மார்ச், 2017

பகுத்தறிவே சிறந்த வழிகாட்டி- மறவாதீர்!

மனித வாழ்க்கையில் - முற்றிலும் பகுத்தறிவையே பயன்படுத்தித்தான் வாழ்வார்கள்; வாழவேண்டும் என்பது இயற்கையான வாய்ப்பு என்றாலும் கூட, நம்மில் பலரும் அப்படி வாழ் வதில்லை; பெரும்பாலோர் அப்படி வாழ விரும்புவதே இல்லை.

காலங்காலமாக எப்படி மற்றவர்கள் வாழுகிறார்களோ அப்படியே ‘செக்கு மாட்டு வாழ்க்கையே’ வாழுகிறார்கள்!

இன்னும் பலர் பழைய பாதையே பாதுகாப்பானது என்ற பயத்தின் கார ணமாக, ஒருவகை அடிமை வாழ்க்கை யில் வாழுகிறார்கள்! அடிமைத்தனம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது மூளை அடிமைத்தனத்தைத்தான்!

சிலர் அதைப் பெருமையுடன் கூறி ‘கித்தாப்பு’ அடைகின்றனர்! தன் பெருமை, தன் சக்தி, தன் சாதனை என்று தம்பட்டம் அடித்து மகிழ்வது தான் அவர்கள் சிக்கிய போதையாகும்!

எடுத்துக்காட்டாக, கடை வீதியில் நடந்துகொண்டே வந்தவர், ஒன்று வாங்கினால் மேலும் இரண்டு ‘இலவசம்‘ என்ற விளம்பரம் கண்டு திகைத்தவராக, உடனே அவரது தேவையை உத்தேசித்தோ யோசிக் காமலே, அவரிடம் உள்ள கடன் (கிரெடிட் கார்டு) அட்டையைப் பயன்படுத்தி உடனே அக்கடையில் நுழைந்து வாங்கி வருகிறார். எந்தக் கடைக்காரரும் நட்டத்தில் வியாபாரம் செய்யமாட்டார்களே, இவர் மட்டும் ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார் என்று ஒருகணம்கூட பகுத்தறிவுக்கு வேலை தருவதில்லை; தான் ஏதோ மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பை இதன்மூலம் பெற்றுவிட் டோம் என்ற ஒருவகை போலிப் பெருமையில் (அதுவே ஒரு வகை போதைதான்) மிதந்து வருவார்!

மனித வாழ்வில் உணர்ச்சிகளின் திடீர் ஆக்கிரமிப்பு - படையெடுப்பு - பகுத்தறிவுக்கோ, தர்க்க ரீதியான சிந்தனைக்கோ இடம்பெறுவதில்லை!

கடைகளுக்குச் சென்று வாங்குவது என்பது பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால், கண்ணுக்கும், காதுக்கும், தமது பெருமைக்கும் இடம் தருவதற்கான கொள்முதலாக இருக் கக்கூடாது - பகுத்தறிவின்படி பார்த் தால்!

எது நமக்கு இன்றியமையாததோ, அதைக் குறித்து வைத்து, அதற்கான ‘பட்ஜெட்’ நமக்கு உள்ளதா என்று ஆராய்ந்து, கையில் உள்ள சேமிப் பையோ அல்லது சம்பாதனையின் கீழ்வரும் பட்ஜெட்டையோ பற்றி மட்டும் கவலை கொண்டால், நிச்சயம் நாம் ‘கடனாளி’யாகி விடமாட்டோம்!

ஆனால், ஆசையும், வீண் பெருமையும், பதவி ஆசையைவிட மிகவும் கொடுமையானது! சூதாட்டத் தில் வெற்றி பெற்றவனும் எழுவ தில்லை (சிலர் வேண்டுமானால் விதிவிலக்கு) தோற்றவனும் எளிதில் எழுவதில்லை. இருவரையும் ஒன்றே ஈர்த்து எல்லாவற்றையும் இழக்கச் செய்வது பற்றிய யோசனையே இல்லாது இருப்பது உலக இயல்பாகி விட்டது!

பகுத்தறிவு பலவிடங்களில் தோற்று ஒதுங்கிக் கொள்ளுகிறது; உணர்ச்சிகள் கோலோச்சத் தொடங் கிய இடத்தில்! அதன் விளைவு காலங்கடந்த ஞானோதயம்!

அளவுக்கு மீறிய சொத்து சேர்த்துக் கொண்டே செல்வதில் சுவை கண்ட வர்கள் - தங்களது மரண வாக்குமூலத் தில் எதைக் குறிப்பார்கள்?

யான்கண்ட சுகம் ஒன்றுமில்லை உண்மையே! இடையில் ஏற்பட்ட போதை - பண போதை - சொத்து போதையைத் தவிர என்பார்கள்!

எதற்கும் எல்லை உண்டு என்ப வர்கள் பகுத்தறிவைத் தாராளமாகப் பயன்படுத்தியவர்கள், இறுதியில் தொல்லை அடைவதில்லை - இடை யில் இடையூறுகளால் அலைக்கழிக் கப்பட்டாலும்கூட!

எனவே, பகுத்தறிவே சிறந்த வழி காட்டி என்பதை மறவாதீர்!

-விடுதலை,2.3.17