பக்கங்கள்

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (3)

ஜப்பானில் முதியவர்கள், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருப்பது, 'முதுமையை' விரட்டிடும் முழுமையானதோர் முறையாக அமைந்துள்ளது!

நம் நாட்டில் ஓய்வு பெற்ற முதியவர்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தே கிடக்கின்றனர்; 'காலாற' நடப்பதில்லை.

எவ்வளவுக்கெவ்வளவு நீண்ட நேரம் தொடர்ச்சியாக அமர்ந்தே வேலை செய்வது  (Sedentary Habits) அல்லது படிப்பது, எழுதுவது, கணினி முன்னே தொடர்பணி என்பவைகளின் முறைகளை 'இளையர்கள்' கூட சற்று மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவர்களை வருங்கால பல நோய்களினின்று காப்பாற்றும் தடுப்பு சக்திகளாக அமையும். இத்தகைய மிகச் சுவையான அரிய தகவல்களை 'இக்கிகை' ('Ikigai') புத்தகம் மூலம் அறிகிறோம்.

சிறு சிறு இடைவேளைகளில் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்து, மீண்டும் புத்தாக்கத்துடன் பணி புரிய அதன்மூலம் வாய்ப்புகள் ஏற்படு கின்றன.

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது என்ப தால், இரத்தக் கொதிப்பு, நீரழிவு நோய், இதய நோய்களும் வர வாய்ப்பு அதிகம் என்பது பல மருத்துவர்களின் கண்டுபிடிப்பும், கடுமையான அறிவுரையுமாகும். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வதால் - தொப்பை தொந்தியும், ஊளைச் சதை பெருக்கமும் (Obesity) உடலில் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்!

வயதாவதைத் தடுக்கும் 'தடுப்பான்களில்' ஒன்று குறைவற்ற தூக்கம் ஆகும்! அதற்காக சதா தூங்கிக் கிடக்க வேண்டும் என்று நாம் சொல்ல மாட்டோம்! 8 மணி நேரம் நல்ல தூக்கம் மிகச் சிறந்தது.

நமது முதுமையை மறைக்க யாரும் எவ் வளவு சாயம் அடித்துக் கொள்ளுதல், ஒப்பனைகள் ஏராளம் செய்து கொள்ளுதல் மூலம் முயன்றாலும் கூட நமது உடலின் தோல் - வயதைக் காட்டிக் கொடுப்பது உறுதி. தோலின் சுருக்கங்கள் மிகப் பெரிய முதுமை அறிவிப் பாளர்களாவர்!

மெலட்டானின் (Melatonin) என்ற ஹார்மோன் போதிய தூக்கத்தினால் நமக்குக் கிடைக்கும் அரிய ஒன்றாகும்!

இதுபற்றி உடற்கூறு மருத்துவர்கள் கூறுகை யில், இந்த சுரப்பி (Pineal gland) நீரோ டிரான்ஸ்மீட்டர் செரோட்டன் மூலம் இதனை உற்பத்தி செய்து தூக்கத்தை ஒழுங்குபடுத்தி, எப்போது தூக்கம் வருவது - தூங்குவது, எப்போது விழித்துக் கொள்ளுவது என்பதை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது!

இந்த சக்தி வாய்ந்த உடல் நலப் பாதுகாப்பான (anti-oxidant) 'மெலட்டானின்' நீண்ட காலம் நாம் வாழ்வதற்கு உதவி புரிகிறது.

அது மட்டுமா? மேலும் அது தரும் பலன்கள்:

1. நம்முடைய நோய் எதிர்ப்பு வன்மையைக் கூட்டுகிறது.

2. புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.

3. 'இன்சுலின்‘ இயல்பாகவே அதிகம் உடலில் உற்பத்தியாக உதவுகிறது!

4. “அல்ஷைமர்ஸ்‘ என்ற மறதி நோயைத் தடுப்பதற்கு உருவாகும் நிலையிலேயே அதை முளையில் கிள்ளி எறிதல் போன்ற வேலையைச் செய்கிறது!

5. உடலில் எலும்புகள் பலவீனமாவதையும் தடுத்து உடலில் இதய நோய் குறிப்பாக மார டைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

எனவே போதிய மருந்து, போதிய ஓய்வு, போதிய ஊட்டச்சத்து உணவு என்ற வரிசையில் போதிய தூக்கம் என்பதையும் இணைத்து நண் பர்களே, நல் வாழ்க்கையை ஆக்கிக் கொள்ளத் தவறாதீர்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு 25 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக