பக்கங்கள்

திங்கள், 9 டிசம்பர், 2019

நாய் - பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்போரின் முக்கிய கவனத்துக்கு

அமெரிக்க வாஷிங்டனில் 63 வயதே நிறைந்த ஒருவர் இடது காலில் ஒரு எரிச்சல் உள்ளது என்பதற்காகவும், தசை வலி (Muscle Pain)   இரண்டு உறுப்புகளில் என்பதற்காகவும் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு திறீu புளூ காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாகத் தெரிந்தன.  கடந்த மூன்று நாட் களாக அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் தொல்லைப்பட்டார்.

அவரது தோலில் Rashes  ராஷ் போன்ற அறிகுறிகளும் வட்ட வட்டமான உருக்கள் தசையில் தெரியும்  றிமீtமீநீலீவீணீமீ என்பதும் ஏற் பட்டது; அதன் காரணமாக ரத்தக்  குழாய்களி லிருந்து ரத்தம் வடிந்ததோடு அவரது கால்களின் நிறமே மாறியது போன்ற தோற்றம்!

அவரது இதயத் துடிப்பு சீராகவே இருந்தது. அவரது உடல் வெப்பச் சூடு 38.9 டிகிரி செல் ஷியஸ் ஆக இருந்தது!

கஷ்டப்பட்டு சுவாசித்தார்; காரணம் போது மான பிராண வாயு அவர் தசைகளுக்குக் கிடைக்கவில்லை; அவரது சிறுநீரகங்களோ சரியாக வேலை செய்யவில்லை; விளைவு சரியாக சிறுநீர் கழிக்க இயலவில்லை; ஆய்வா ளர்கள் முயற்சித்தனர் இதன் மூலக்காரணத்தை அறிவதற்கு.

ஆனால் டாக்டர்களுக்கோ இந்த நோய் எதனால் ஏன் என்பதுபற்றி ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் இது ஏதோ ஒரு வகை கிருமிகளின் தொற்று காரணமாகவே இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள். காயங்கள் ஏதும் இல்லை. 'மெனிங்கிட்டிஸ்' Meningitis என்ற மூளை நரம்புக் காய்ச்சல் மாதிரியும் தெரியவில்லை.

இந்த ஜெர்மனியர் இறந்ததற்குக் காரணம் இவரை இவர் வளர்த்த நாய் நக்கியதே என்று கண்டறிந்தனர்!

அய்ரோப்பிய ஆய்வு ஏடான 'European Journal of Case Reports'  என்பதில் 'Internal Medicine' பற்றிய விவரங்களை இதுபற்றி விரிவாகத் தந்துள்ளனர். ஆரோக்கியமுள்ள ஒரு மனிதர் (வளர்ப்பு) நாயின் எச்சில் - உமிழ் நீர் (Saliva)
மூலம் சில வாரங்களில் உயிரை இழக்க வாய்ப்புண்டு. எப்படி....? அதிலிருந்த கிருமிகள் மனித உடலுக்குள் நுழைந்த காரணத்தால் என்று விளக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அவருக்கு பல்வகை நோய்கள் 'Multiple Serious Ailments' உள்ளன என்றும் முடிவு செய்தனர்.

சீறு நீரகப் பழுது, கல்லீரல் (Liver) வேலை செய்யாமை 'Dysfunction' மற்றும் 'Rhabdo- myolysis' தசைகளின் கீழிறக்கம் 'Muscle tissues deterioration' ரத்தக் கட்டு'Blood Clot' இதனால் சிறுநீரகம் வேலை செய்யாமை 'Lactic Acid' என்ற திரவம் ரத்தத்தில் கலந்துள்ள நிலை ஆகியவை தோல் வியாதி எல்லாம் கூட்டாகச் சேர்ந்து விட்டன என்பதை இந்த நோயாளியை, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, பரிசோதித்த நிலையில் கண்டறியப்பட்டது.

முதலில் மாரடைப்பு - இதய நிறுத்தம் - மறுபடியும் அதை இயங்கச் செய்யும் முயற்சியும் வெற்றி பெற்றது.

பிறகு அவரை 'Intubated' செய்து, மூச்சுவிட உதவிடும் கருவியையும் பொருத்தி உதவி னார்கள்.

சிவப்பு ரத்த அணுக்களையும் 'Transfused Platelets' மேலும் புதிதாக தருவித்த (Frozen Plasma) ஃபிரோசன் பிளாஸ்மாவையும்கூட இவருக்குள் செலுத்தினர்.

இவருக்கு சிறுநீரக 'டயாலிசிஸ்' தரப்பட்டது. 'Antibiotic' மருந்தும்,(Anti  Fungal) பூஞ்சைக்கு எதிரான மருந்துகளும்கூட இந்த நோயாளிக்கு அளிக்கத் தவறவில்லை.

இறுதியில் இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு (Gangrene) காங்கிரின் ஏற்பட்டது.

C.T.  ஸ்கேன் செய்ததில் மூளையில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது; பிராண வாயு மூளைக்குச் செல்ல இயலவில்லை.

ஆராய்ச்சியாளர், செல்லப் பிராணிகளாக வீடுகளில் நாய், பூனை வளர்ப்பவர்கள் இதில் மிகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்; நாய், பூனையின் எச்சில், உமிழ் நீர் - இப்படி மிகப் பெரிய உடல் நலக் கேடுகளையும் இறுதியாக மரணத்தையும் ஏற்படுத்தி விடக் கூடும் என்பதால்  நாய், பூனைகளை மிகவும் கொஞ்சுவதும், எச்சில் மேலே பட்டாலே போதும், கிருமிகள் நம்மை தொற்றிக் கொள்ள, அவற்றை நக்க விடவே கூடாது. உயிர் மூப்பு என்பதைவிட உயிரின் வாதை நோய்களின் தொற்றும் ஏற்படும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

(சிங்கப்பூர் 'ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ்' ஆங்கில நாளேட்டின் செய்தி (28.11.2019)

வந்ததை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)

 - விடுதலை நாளேடு 29 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக