பக்கங்கள்

திங்கள், 9 டிசம்பர், 2019

வாழ்வியல் சிந்தனைகள்...

முதல் பாகம் ஈகையால் வரும் புகழையும், பகிர்ந்துண்ணு வதால் பெறும் பயன்களையும், கோபத்தால் விளையும் பேராபத்தையும், அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழி வகைகளையும், மருந்துகளால் வரும் தீங்குகளையும், அறி வியல் சிந்தனைகளால் நிகழும் அதிசயங்களையும் கூறிடும் அரிய களஞ்சியமாகும்.

இரண்டாம் பாகம் முதிர்ச்சியின் இலக்கணத்தையும், புகைப் பழக்கத்தால் வரும் கேடுகளையும், குழந்தை வளர்ப்பு முறைகளையும், கூடி வாழும் கோட்பாடுகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகளையும், மருந்துக்கு மாற்றான மாமருந்தையும், நயத்தக்க நாகரிகத்தை யும், பொல்லாத நோய் பற்றிச் சொல்லாத உண்மைகளையும் கொண்ட அரிய களஞ்சியமாகும்.

மூன்றாம் பாகம் அறிவியல் கொடையையும், மரங்களால் மலர்ந்த மனிதத்தையும், சீனத்துப் பெரியாரின் சீலங்களையும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மாமலையையும், பிண மேடையாகும் மணமேடையைத் தவிர்க்கச் சில யோசனை களையும், மனத்தின் செயல்தான் எல்லாமென்பதையும் உணர்த்திடும் உயரிய நூல்.

நான்காம் பாகம் அறியாமையைப் போக்கும் முறைகளும், மன அழுத்தத்திற்கான மாற்றுப் பாதையும், சிரிப்பால் வரும் பயன்களும், மருத்துவப் பரிசோதனையின் அவசியமும், முதுமை உணர்த்தும் எச்சரிக்கைகளும், பண்பால் மலரும் பாசங்களும், அறிவார்ந்தவர்களின் அடக்கங்களும், உள் ளத்தை உருக்கும் நோயை மாய்க்கும் முறைகளும் கூறப் பட்டுள்ளன.

அய்ந்தாம் பாகம் உயர்ந்த மனிதராக உன்னத வழிகளையும், சோதிடத்தை வெல்லும் மனோதிடத்தையும், தற்கொலைச் சிந்தனையைத் தவிர்க்கும் முறைகளையும், சில நேரங்களில் சில மனிதர்களையும் பற்றி எடுத்துரைக்கிறது.

ஆறாம் பாகம் தொலைக்காட்சியின் தொல்லைகளைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், ஆசிரியர் - மாணவர் களின் உறவுப் பாலத்தையும், வளர் இளம் பருவத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும், இதயம் காக்கும் முறை களையும், நாளும் சிந்திக்க நல்ல வழிகளையும், நல்வாழ்வுக்கு உரியவைகளையும்  கூறுகிறது.

ஏழாம் பாகம் நடைப்பயிற்சியின் லாபங்களைப் பற்றியும், காலை உணவே நமது காவலனாக உள்ளதை விளக்கியும், தூக்கம் என்பது எவ்வாறு மருந்தாக விளங்குகிறது என்பதை யும் விளக்குகிறது. மற்றும், அண்ணா அவர்களைப்பற்றி அரிய தகவல்களைக் கொண்டுள்ள சில நூல்களைப் பற்றி யும், கிரேக்கத் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் அவர்களைப் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கண்ட ஏழு தொகுதிகளும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்து வருகின்றன. தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசக பெருமக்களுக்குப் பதிப்பகத்தாரின் நன்றிகள்!

எட்டாம் பாகம் மாரடைப்பு வருமுன் காக்க எளிய வழியைப் பற்றியும், உண்டபின் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பலன் பற்றியும், ஓய்வறியா உழைப்பாளியாய் நம் உடலில் இயங்கும் இதயத்தைக் காக்கும் வழிகளைப் பற்றியும் குறிப் பிடப்பட்டுள்ளன. மற்றும், சிங்கப்பூர் புத்தக விழா உள்ளிட்ட தகவல்களும், கன்பூசியஸ், அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ஒன்பதாம் பாகம் புதுமையான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேனீர் மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகளின் நன்மைகள் குறித்தும், சுறுசுறுப்புடன் இருக்க உதவும் உணவு வகைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் இடம் பெற்றுள் ளன. மற்றும் சிக்கனம், தொண்டறம், தாயன்பின் தனித் தன்மை, காலத்தின் முக்கியத்துவம் போன்ற வெற்றிக்கு வழிகாட்டும் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் புரட்சிக் கவிஞர், பெருஞ்சித்திரனார், கலைவாணர் என்.எஸ்.கே., மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கருப்பினத் தாய் ஹன்ரிட்டாலாக்ஸ், கடமை வீரர் மனோகரன் உள்ளிட்ட வர்களைப் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

பத்தாம் பாகம் ஏராளமான கருத்துப் பதிவுகளைக் கொண்ட தாக வெளிவருகிறது. இதில், கடமை தவறாது நமக்குப் பாடமாக விளங்கும் மறைந்த ஓட்டுநர்கள் சக்திவேல், சிவக்குமார் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காலத்தின் அருமையை உணர்த்தும் கட்டுரைகளும், நீரிழிவு பற்றிய புதிய செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன. நம் உடலைப் பாதுகாக்கும் உணவு முறைகள் பற்றிய செய்திகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

பதினொன்றாம் பாகம் நட்பு, மகிழ்ச்சி, எளிமை, தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்றவைப் பற்றிய அறிவார்ந்த கருத்துகளும் சர்க்கரை நோய், மறதிநோய், மனநலம், இதயம், மூளை உள்ளிட்ட நோய்கள் பற்றிய மருத்துவத் தகவல்களும், இங்கர்சால், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, வி.ஸ.காண்டேகர் போன்ற தலைவர்கள்  - சிந்தனையாளர்களின் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கட்டுரைகளும் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

பன்னிரண்டாம் பாகம் மூளையைப் பாதுகாக்கத் தவிர்க்க வேண்டிய தவறுகள், வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் ஊட்டச்சத்து, நடைப்பயிற்சி, குறித்த விழிப்புணர்வு கட்டுரை கள். துக்கம், கவலை போன்றவற்றிலிருந்து வெளிவருவது எப்படி?

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 ரகசியங்கள் எனப் பல்துறைத் தகவல்களைக் கொண்டது.

பதின்மூன்றாம் பாகம் பழைய வாலிபர்கள் தம் கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இல்லாமல் சுதந்திர வாழ்வு வாழும் வழிமுறைகளை பற்றியும், வாழ்க்கையில் துயருற்ற காலத்தில் நமக்கு கை கொடுப்பதும், மனந்திறந்து கொட்டி மனதை இலகுவாக ஆக்கி ஆறுதல் தருவதுமான நட்பைப் பற்றியும், நம் உடலில் நோய்களினால் நாம் தாக்கப்படும் போதுதான் உடலின் எல்லா உறுப்புகளுமே உயிர் வாழ்க் கைக்கு இன்றியமையாதவை என்பதை உணருகிறோம். அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் பகுதி சிறுநீரகமும், இதயமும் ஆதலால் இதயப் பாதுகாப்பு பற்றியும் சிறுநீரகப் பாதுகாப்பு பற்றியும் அவை பாதிப்படையாமல் செய்யவேண்டியவை பற்றியும் தடுக்க வேண்டியவை பற்றியும் பல்வேறு தகவல் கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வரிசையில் பதினான்காம் தொகுதியாகும். திராவிடர் கழகத்தின் பவளவிழா ஆண்டை நினைவில் நிறுத்தும் வகையில் 75 கட்டுரைகளை கொண்ட தொகுப்பாக வெளி வருகிறது. இத்தொகுதியில் சேமிப்புப் பற்றிய கட்டுரையில் தொடங்கி சேமிப்பு பற்றிய கட்டுரையில் நிறைவடைகிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோ ருடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவ பகிர்வு கள் கணினி உலகம் பற்றிய தகவல்கள், புத்தரின் பகுத்தறிவு பற்றிய வாழ்க்கை நெறிகள், தூக்கம் பற்றிய அரிய தகவல் கள், ஆசிரியர் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் வாங்கிய அரிய நூல்கள், நெல்சன் மண்டேலாவின் சிறைக்கடிதங்கள் குறித்த ஏராளமான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மனித குலத்தின் சிந்தனையையும், வாழ்வை மேம்படுத் தும் வாழ்வியல் தகவல்களையும் வாரி வழங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் ஆதரவளிக்கும் வாச கர் பெருமக்களுக்கும் நன்றி! நன்றி!!

இத்தொகுப்புகளில் சில கட்டுரைகள் பல்கலைக்கழகங் களில் பாடத் திட்டமாக உள்ளது ஓர் அங்கீகாரமாகும்.

-  விடுதலை நாளேடு, 1.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக