பக்கங்கள்

வியாழன், 1 மார்ச், 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)

24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின்  தொடர்ச்சி வருமாறு:




4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்!

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.

நாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா? அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள்! இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக்குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்!

6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்!

ஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே!

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.

இது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும்! இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று! அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்!

8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார்? உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது! அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்!

10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது!

எதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்!

11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.

தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா? ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும்? நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா? உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே!

மகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம்  இவைகளால் ஏற்படுவது  அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா?

நம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே!

அவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

பசித்தவுடன் சாப்பிடுவதே நலம்!

பசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா?

‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்!

‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்!

வாழ்வில் வெற்றி பெறுங்கள்!!
- விடுதலை நாளேடு, 26.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக