பக்கங்கள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இதோ ஒரு வாழ்க்கைப் பாட நூல்!


உலகப் புத்தக நாள் - உலகப் புத்தக வாரம் - இவற்றை இவ்வாண்டு சிங்கப்பூர் நாட்டின் சிறந்த புத்தகக் கடைகளுக்குப் படையெடுத்து நல்ல - அல்லது எனக்குப் பிடித்த, அறிந்துகொண்டு மேலும் பக்குவப்படக் கூடிய பல நூல்களை வாங்கினேன் - சில நாட்களுக்கு முன்பே! ஒரு சில நூல்களைப் படித்துப் பயன் பெற்றேன் - பாடம் கற்றேன்.

எடுத்துக்காட்டாக 'Man's  Search For Meaning' என்னும் நூலின் ஆசிரியர் Viktor E. Frankl 
மனநலம் மற்றும் நரம்பியல் துறைகளில் டாக்டர் ஆகி, பல மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் பேராசிரியராக வியன்னா, ஜெர்மனி நாடுகளில் பல ஆண்டு காலம் பணிபுரிந்தவர். இவர் ஒரு யூதர்; அந்தக் காரணத்தால் ஹிட்லர் ஆண்ட காலத்தில் இரண்டாம் உலகப் போரில் அந்த சர்வாதிகாரியின் வெற்றிக் கொடி பறந்தபோது - வரலாற்றின் மிகப் பெரிய கறுப்பு அத்தியாயம் ஒன்று படைக்கப்பட்டு இணைக்கப்பட்டது.

Holo caust  என்ற யூத இன அழித்தல் என்பதுதான் அது. பல லட்சக்கணக்கான யூத இருபாலரையும் கைது செய்து, அவர்களை கடும் பனி, குளிர் உறைப் பிரதேசங்களுக்குப் பல லட்சக்கணக்கில் சிறைச்சாலை (Concentration Camps  Prisons) 
அமைத்து அடைத்தும், அரைப் பட்டினி, கால் பட்டினி உணவு மட்டுமே தந்து மிருகங்களை எப்படி, மனிதர்கள் அடித்து, ஓட்டி வேலை வாங்குகிறார்களோ அப்படிச் செய்த சிறைச் சாலை என்ற சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு, வலிவிழந்த, கடுமையான வேலைக்கு ஆகாத யூத வயதானவர்கள், எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்டபின், அவர் களின் உயிர்களைப் போக்கிடுவதற்கு அவர்கள் தனி லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பப் படுவார்கள். அவர்களை மனிதநேயமின்றி நடத்திட அவர்களிலேயே உடல் வலிவுள்ளவர்களைத் தேர்வு செய்து, அவர்களை (சிறைச்சாலையில் 'கான்விக்ட் வார்டன்கள்' மற்ற கைதிகளை மேய்ப்பது போல) மேய்ப்பது, கொடுமையான தண்டனைகளை அளித்தல், உணவு கால் வயிற் றுக்கும் குறைவு,  கடுங் குளிர் தாங்கும் போர் வைகளைக் கூட தராமல் தரைகளில் படுக்க வைத்தல், அவர்களிடம் எந்தப் பொருளும் இல் லாதாவாறு அனைத் தையும் பறிமுதல் செய்து சித்ரவதை முகாமுக்கு (Concentration Camp) சென்றவுடன் அத் துணைப் பேர்களும் நிர்வாணமாக்கப்பட்டு, உடைகளைத் தராமல் மொட்டை அடித்து, சிரைத்து விடுவது முதல் வேலையாம்!

இப்படிப்பட்ட கொடு மையான சிறைவாசம் 4லு ஆண்டு காலம் கழிந்தபோதும், தனது வாழ்நாள் லட்சியமான தனது துறையான மன நலத்தில், 'லோகோ தெரப்பி' (Logotherapy) என்ற ஒரு புதுவகை சிகிச்சை பற்றிய ஆய்வு, அதன் கூறுகள், விழுமிய பயன்பற்றி சிந்தித்து, பயனுறு வாழக்கையாக ஆக்கிக் கொள்வது எப்படி என்பதற்கான ஒரு புத்தகத்தை அந்த கொடுஞ்சூழலிலும், குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு எல் லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு - வாழ்ந்தவர் டாக்டர் விக்டர் இ.பிராங்கல் ஆவார்!

'லோகோ' (Logo) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'அர்த்தம்'  'புரிந்து கொள்ளுதல்' என்பதுதான் அதன் பொருள். வாழ்க்கை என்பது வெறும் சூழ்நிலைகளால் மட்டுமே உருவாகக் கூடியது என்று மட்டுமோ அல்லது வாழ்க்கையில் நாம் இன்பத்தைத் தேடி அனுபவிப்பது மட்டுமே அதன் குறிக்கோள் என்றோ கருதக் கூடாது.

வாழ்க்கை என்பது கஷ்ட, நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களின் தொகுப்பும் ஆகும். அதனை ஒரு குறிக்கோளுக்காகவும், துணிவுடன் துன்பங்களை எதிர் கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு, பல்வேறு துன்பங்களை அகற்ற சிகிச்சை முறைகளால் (மனோதத்துவ - அல்லது உளவியல் பூர்வமாக) 'லோகோ தெரப்பி' என்ற புதிய ஆய்வு தத்துவத்தைப் பற்றி இவர் எழுதிய நூல்கள் பிறகு பிரபலமாகியுள்ளன!

அவர் சித்ரவதை முகாம்களில் பட்ட துன்பத்தைவிட, எதிர் கொண்ட மனோதிடம், நம்பிக்கை இவை ஒரு புது வெளிச்சத்தை நமக்குக் கற்றுக் கொடுப்பதாக  இந்த 165 பக்கங்கள் கொண்ட ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் 100 பதிப்புகளுக்கு மேல் (ஆங்கிலப் பதிப்புகள் மட்டுமே) வெளியாகி உள்ளது. 30 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

1959இல் இதன் முதல் பதிப்பு வெளியாகியது. 15 லட்சம் (யூத) மக்கள் அந்த Holocaust இல் கொல்லப் பட்டனர்.

மேலும் 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது! 120 லட்சம் - ஒரு கோடியே  இருபது லட்சம் மொத்தம் விற்பனையாகி உள்ளது.

1902இல் பிறந்த டாக்டர் விக்டர் இ. பிராங்கல் அவர்கள் 1994இல் இறந்தார்!  'நெருக்கடி கால' - மிசா கைதியாக (1976) இருந்து சிறைச்சாலை, சித்ரவதை, அடியைத் தாங்கி, அவமானச் சொற்களைச் செரிமானம் செய்து, சிறையில் எப்படிப்பட்ட ஒரு பயங்கொள்ளித்தன சூழ்நிலை அலைகளால் அடிக்கடி அடித்துச் சென்று, லட்சிய நம்பிக்கையில் மீண்ட எம்மைப் போன்றவர்கள் அனுபவித்த கொடுமை எனும் துன்பம் பத்தாயிரத்தில் ஒன்று அல்ல அந்த யூத சித்ரவதை உயிர்க் கொல்லி முகாம் நிலைகளோடு ஒப்பிடும்போது!

வாழ்க்கை என்பதை துன்பத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு, போராடி வெற்றி கொள்ளும் களம் என்ற திடசித்தத்துடன், போராடியும், சகித்தும், துன்ப, துயரங்கள் ஏற்றுப் பழகி, 'காப்புக் காய்ந்த' அனுபவத்தைச் சுவைத்தால், துன்பம் எவ்வளவு பெரிதாக நம்மைத் தாக்கினாலும், மாமலையும் ஓர் கடுகாகி விடும் என்பதைக் கற்றுத் தரும் நல்லதோர் வாழ்க்கைப் பாட நூல் இது!

'கற்க அந்நூலை; நிற்க அதற்குத் தக!'

- விடுதலை நாளேடு, 24.4.18

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தோழர் பாண்டியன் படைத்த அமுது!



நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்டியன் அவர்கள் எழுதி முடித்து இம்மாத வெளி யீடாக வந்துள்ள "பெரியார் என்னும் இயக்கம்" என்ற நூலைக் கொடுத்தார். அவர்தான் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்! அணிந்துரை, மிகவும் சுருக்கமாகவும் செறிவானதாகவும் அமைந் துள்ளது.

நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி)லிட் வெளியிட்டுள்ள இந்நூல் 92 பக்கங்கள் கொண்டது, விலையும் குறைவு 80 ரூபாய்தான்.

நேற்று இரவே இதனைப் படிக்க எடுத்து முழுவ தையும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடித்தேன். சுவைத்தேன் - கொம்புத்தேன் போன்று சுவைத்தேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. என்றாலும் மிகவும் தனித்த சுவையுடனும், கருத்தாழத் துடன், பெரியார் பற்றிய நுனிப்புல் மேயும் பலதரப்பட்ட விமர்சகர்களுக்கும் தக்க பதிலுரைகளும் அடங்கிய, இன்றைய இளைஞர்கள் படித்து முடித்து அசை போட்டுச் சிந்திக்க வைக்கும் அற்புத அறிவுக் கருவூலம்.

ஒரு மாறுபட்ட அணுகுமுறையில் அய்யாவை பல் வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு, அவர் எப்படி ஒரு தனித்த சாதனை செய்த புரட்சியாளர் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் என்பதை அவர் தொகுத்துச் சொல்லும் முறை - எடுத்த நூலை கீழே வைக்கவே மனமின்றி தொடர்ந்து படித்து வைக்கின்ற ஈர்ப்பினை உருவாக்குகிறது!

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகிய பின், தந்தை பெரியார்தம் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திருச்சியில் கலந்து கொண்டு - 18 ஆண்டு பிரிவுக்குப் பின் ஒரே சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தகாலை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்த வாய்மைப் பேருரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆங்கிலத்தில் 'Putting Centuries into a capsule' பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகை மருந்துபோல, உள்ளடக் கியது தந்தை பெரியாரின் தன்னிகரற்ற தொண்டு" என்றார்.

அதுபோல 95 ஆண்டு காலம் வாழ்ந்து, எதிர் நீச்ச லடித்து, அவரது லட்சிய வெற்றிக் கனிகளை அவரே சுவைத்த ஒரு வீர காவியமான  "தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்" என்றவர் அவரது தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா.

'மண்டைச் சுரப்பை உலகு தொழும் ' ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்பற்றி தோழர் பாண்டியன் படைத்துள்ள இந்நூல் ஒரு புதுமை படைப்பு, சீர்மை நிறைந்த சிற்றிலக்கியம் ஆகும். எட்டு வடிவம் என்பதுபோல எட்டு அத்தியாயப் (Octagonal) பரிமாணத்தில் பெரியார் பற்றிய ஓர் உயிரோவியமான கருத்தோவியம் இது!

தோழர் பாண்டியனின் பேச்சு சிறந்ததா? எழுத்து மிகுந்ததா என்ற தலைப்பிட்டு வாதிட்டால் இரண்டும் தான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு அரிய கருத்து முத்து இதோ

"...அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முழுவதிலும், அவரைப் பலரும் சந்தித்து மடக்கிக் கேள்வி கேட்டு, அவரை பதில் கூற முடியாது தடுக்க முயல பார்த்தனர். ஆனால் கேள்விகளைக் கேட்கத் துண்டியே பதில் கூறும் வகையில், பாடமே கற்பித்து வந்த பேராசான்தான் தந்தை பெரியார். அவரது மறைவுக்குப் பின் அவரது குரல் கேட்பது இல்லை ஆனால், அவருக்குப் பதிலாக விஞ்ஞானிகள் அவர் கூறிய அரியக் கருத்துக்களை நிறுவிக் காட்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் மனிதனை வளர்க்கும் பாதை ஆகும். ஏற்றுக் கொள்பவர்களை, விஞ்ஞானம் வளரும்போது அவர்களையும் வளர்க்கும். அதை ஏற்காவிட்டால், விஞ்ஞானம் அத்தகையோரை உதறித் தள்ளி விட்டு, முன்னேறிச் செல்லும்.

எதிர்த்து நிற்போரை, விஞ்ஞானம் மிதித்து நசுக்கி விட்டு அது தன் வழியே செல்லும். ஏனெனில், விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது.  அந்த விஞ்ஞானத்தைத் தன் அறிவுக்கான கைத்தடியாய் பிடித்தவர் பெரியார்.

எனவே கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து, பெரியார் தோற்றுவிட்டார் எனும் சிந்திக்க மறுக்கும் சிறியரை மன்னிப்பதே நமக்கு வேலையாகிவிட்டது...."

... என்னே கருத்து. 'Liberation is the record of best thoughts' என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

'இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் உயர்ந்த ஆவணம்' என்றார்.

தோழர் பாண்டியன் படைத்த தக்கதோர் அமுது ஓர் இலக்கிய ஆவணம் ஆகும். படியுங்கள், பயன் பெறுங்கள்!

- விடுதலை நாளேடு, 6.4.18

புதன், 28 மார்ச், 2018

மரங்கள் போதிக்கும் மகத்தான பாடம்!



நடைப்பயிற்சியை நாள்தோறும் வீட்டின் சுற்றுப்பகுதிகளில் மேற்கொள்ளும் போது, சுற்றிப் பூத்துக் குலுங்கும் செடிகளைப் பார்த்தவுடன் மனதிற்கு ஒருவகை மகிழ்ச்சி - எனது வாழ்விணையரும், மருமகளும்  அச்செடிக் கொடிகளை அனுதினமும் - குழந்தைகளைப் பராமரிப்பதுபோல காத்து வருவது அவர்களுக்கு ஒரு தனி இன்பம் தரும் - மகிழ்ச்சி தரும் மகத்தான பணி!

தனியே நடைப்பயிற்சியின் போது; பலவகை சிந்தனை ஓட்டங்கள் - கருத்துக்கள் மனவானில் பளிச்சென மின்னும், நினைவு மேகங்கள் கூடும் - கருத்துருவாக்கம் என்ற மழையைப் பொழிந்து வறண்டுள்ள வாழ்க்கையை ஈரமாக்கும். லட்சிய வயலில் எப்படி எதிர்ப்புகள் எவ்வளவு இழிந்தவைகளாயினும் அவை உரமாகி பயிர் செழிப்பதற்கு உதவிடுகின்றனவோ அது போல! எண்ணங்கள் - ஆக்கப் பூர்வ சிந்தனைகள் - ஆற்றிட வேண்டிய கடமைகள், எதிர்கொண்ட ஏளனங்கள் இவைபற்றியெல்லாம் யோசித்துக் கொண்டே நடப்பேன்.

வீட்டின் செடிகள் தான் எவ்வளவு கடமை தவறாதவை என்பதை தவறாமல் பூப்பது, பருவம் தவறாது பூத்துக் காய்ப்பது -கனிகளைத் தருவது மூலம் எவ்வளவு செம்மையாகச் செய்கின்றன. பூக்கும் பருவம்; காய்க்கும் காலம்; கனியாகிச் சுவைதரும் - கைமாறு கருதாத பணி - இவைகளை எண்ணி கருத்துக்கள் சுழன்றோடிக் கொண்டிருந்த போது, ஏன் ஆறறிவு பகுத்தறிவு படைத்த மனிதன் மாத்திரம் வார்த்தை தவறுகிறான்; கடமை தவறுகிறான் - எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே ஏமாறுகிறான்? நன்றி காட்டுவதை நஞ்சாகக் கருதுகிறான்?

தாவரங்கள் எதையும் எதிர்பார்க்காமல், ஆண்டுதோறும் பருவம் தவறாமல் - புயலால் சாய்க்கப்படும் வரை - அல்லது முதுமையால் இற்று வீழும் வரை விதையூன்றியவரின் வீட்டிற்கு எத்தகைய சேவகம் செய்கின்றன!

மனிதர்கள் அவர்களுக்குச் செய்கின்ற செய்நன்றி, வெட்டி எறிவதுதானா?

என்னே இச்சகம்? என்னே கொடுமை! பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என எத்தனை தலைமுறைகளுக்கும் கனி தரும் மரங்கள் பூச்சிக் கொல்லிகளால் பாழாகும் வரை பயன்தரும் பூச்செடிகள் - இவைகளிலிருந்து மனிதர்கள் ஏன் பாடம் கற்கவில்லை?

பகுத்தறிவுள்ள மனிதன் என்ற அகந்தைதான் அதற்குக் காரணமோ ? ஜாதி பார்க்காது பூக்கும் மல்லிகைக்குக் கூட, நமது மனித குலத்தவர் ஜாதி மல்லிகை என்று பெயர் சூட்டி - (ஜாதி கெட்ட மல்லிகை என்றும் உண்டோ?) மகிழ்கின்றனரே!

புரட்சிக்கவிஞரின் காதல் நினைவுகள், அதில் ஒரு சில கவிதை வரிகள்:

முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி

முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற

பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?

- என காதலி காதலன் வருகைக் காலதாமதம் ஆவதற்கு மனஉளைச்சல் கொள்ளும் காலத்தைக் கூட சிரிக்க வைக்க,  தென்றலை அனுபவித்து சொக்கி நிற்கும் என்று வர்ணிக்க முல்லைச் சிரிப்பு என்று தானே வெள்ளை உள்ளத்து  - வெள்ளைப்  பற்கள் கொண்ட சிரிப்பை உருவகப்படுத்து கின்றன!  எனவே நிறபேதம், முதல் எதுவும் பார்க்காது கடமையாற்றும் தாவரங்களைப் பாருங்கள் - மனிதர்களே - கடமை தவறாமையைப் பிறழாது, தவறாது கடைப்பிடித்து ஒழுகுங்கள்!

 

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு, 28.3.18

திங்கள், 26 மார்ச், 2018

நன்றியை எதிர்பார்க்காதீர்!

வாழ்க்கையை தனக்காக மட்டும் வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து, தொண்டறத்தின் தூய்மையின் எல்லைக்குச் சென்ற  - செல்லும் எவரும் நன்றியை எதிர்பார்க்க மாட்டார்கள், எதிர்பார்த்து ஏமாறவும் தேவையில்லை.

1933இல் 'குடிஅரசு' தலையங்கம் ஒன்றில் - தந்தை பெரியார் எழுதிய சில வரிகள் - காலத்தாலும் அழிக்கப்பட முடியாத கருத்துரைப் பெட்டகமாகும்!

"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!" - தந்தை பெரியார்

அதை தனது இயக்கத்திற்கான நடைமுறைக் கோட்பாடாகவே தந்தை  பெரியார் அவர்கள் ஆக்கி, நமது இயக்கம் நன்றியை எதிர்பார்க்காத தொடர் பணி Thankless Job - என்ற தத்துவத்தை உட்கொண்டு இயங்குவது என்று  கூறினார்.

இது இன்றும் உண்மை என்பதற்கு ஒரு சாதாரண  இரண்டு எடுத்துக்காட்டுகள்!

1.  தந்தை பெரியார் அவர்களால் 83 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்ற பகுத்தறிவு சுயமரியாதை நாளேடு  'விடுதலை!' "உலகின் பகுத்தறிவு நாளேடு 'விடுதலை'தான்" என்று உலக மனிதநேயர் அமைப்பின் தலைவராக இருந்த, நார்வே நாட்டினைச் சேர்ந்த லெவிபிராகல்  அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டாரே!

அந்நாளேடு இன்று பல லட்சக்கணக்கில் அச்சிட்டு செல்ல வேண்டும் - தமிழர்களுக்கு நன்றி உணர்வு இருந்தால்!

'தமிழன் இல்லம்' என்பதற்கு அடையாளம் 'விடுதலை' அந்த வீட்டில் இருப்பதே என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் முன்பு!

'விடுதலை'யால் - பெரியாரால் -இயக்கத்தால் நேரிடைப் பயன் அடைந்தவர்கள் மட்டும் வாங்கி னால்கூட, இந்நேரம் அது பல லட்சம் பிரதிகள் - இப்போது இருப்பதுபோல 'பல ஆயிரங்கள்' என்ற நிலை மாறி உயர்ந்திருக்குமே!

அதுபோலவே பெரியார் இயக்கத்தினால், தொண்டறத்தால் பயன் பெற்றவர்கள், மாதா மாதம் ஒரு சிறு சதவிகிதம் - ஒன்றிலிருந்து மூன்று சதவிகிதம் நன்கொடை அளித்து வந்தாலே, அதன் நட்டத்தை ஈடு செய்ய முடியுமே!

பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவதுபோல - பயனடைவதுபோல - வந்து, நோய் குணமானதும்  'பறந்தே' விடுவர்!

சுய காரியப் புலிகள், இருப்பதை நிலைக்க வைத்த வர்கள் முக்கியமல்ல; பறப்பதற்குக் குறி வைக்கும் பரம பத ஏணிகள் தான் முக்கியம் என்பவர்களே உலகில் எங்கும்!

தேடித் தேடிப் பார்த்தாலும் 'ஒயாசிஸ்' போல நன்றி சொல்வோர், படர்ந்துள்ள பாலையில் சிலருண்டு!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு                           குறள்-110

2. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு - 'பிஞ்சு களுக்கு' அய்ந்து ஆங்கிலச் சொற்களை கட்டாயம் மிகச் சிறு வயதிலேயே - மொழிப் பாடத் துவக்கம் போல சொல்லிக் கொடுப்பதில் 'ஜிலீணீஸீளீ' - 'நன்றி' என்று எப்போதும் தவறாது சொல்ல வேண்டும் யார்உ.தவி செய்தாலும் என்பதாகும்.

குழந்தைப் பருவப் பாடங்கள் - - Good Morning 
தொடங்கி Thanksவரை முக்கிய சொற்கள்!

பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளில்கூட நான் கூர்ந்து கவனித்த ஒன்று;  பரிசு பெறும் இருபாலருள்ளும்  'நன்றி' என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் வெகுக் குறைவு!

நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு! என்றும் சொன்ன பெரியார் மக்களை எப்படித் தன் அறிவுத் தராசில் சரியாக எடை போட்டுள்ளார், பார்த்தீர்களா!

 - கி.வீரமணி

- விடுதலை நாளேடு, 26.3.18

நன்றியை எதிர்பார்க்காதீர்!

வாழ்க்கையை தனக்காக மட்டும் வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து, தொண்டறத்தின் தூய்மையின் எல்லைக்குச் சென்ற  - செல்லும் எவரும் நன்றியை எதிர்பார்க்க மாட்டார்கள், எதிர்பார்த்து ஏமாறவும் தேவையில்லை.

1933இல் 'குடிஅரசு' தலையங்கம் ஒன்றில் - தந்தை பெரியார் எழுதிய சில வரிகள் - காலத்தாலும் அழிக்கப்பட முடியாத கருத்துரைப் பெட்டகமாகும்!

"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!" - தந்தை பெரியார்

அதை தனது இயக்கத்திற்கான நடைமுறைக் கோட்பாடாகவே தந்தை  பெரியார் அவர்கள் ஆக்கி, நமது இயக்கம் நன்றியை எதிர்பார்க்காத தொடர் பணி Thankless Job - என்ற தத்துவத்தை உட்கொண்டு இயங்குவது என்று  கூறினார்.

இது இன்றும் உண்மை என்பதற்கு ஒரு சாதாரண  இரண்டு எடுத்துக்காட்டுகள்!

1.  தந்தை பெரியார் அவர்களால் 83 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்ற பகுத்தறிவு சுயமரியாதை நாளேடு  'விடுதலை!' "உலகின் பகுத்தறிவு நாளேடு 'விடுதலை'தான்" என்று உலக மனிதநேயர் அமைப்பின் தலைவராக இருந்த, நார்வே நாட்டினைச் சேர்ந்த லெவிபிராகல்  அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டாரே!

அந்நாளேடு இன்று பல லட்சக்கணக்கில் அச்சிட்டு செல்ல வேண்டும் - தமிழர்களுக்கு நன்றி உணர்வு இருந்தால்!

'தமிழன் இல்லம்' என்பதற்கு அடையாளம் 'விடுதலை' அந்த வீட்டில் இருப்பதே என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் முன்பு!

'விடுதலை'யால் - பெரியாரால் -இயக்கத்தால் நேரிடைப் பயன் அடைந்தவர்கள் மட்டும் வாங்கி னால்கூட, இந்நேரம் அது பல லட்சம் பிரதிகள் - இப்போது இருப்பதுபோல 'பல ஆயிரங்கள்' என்ற நிலை மாறி உயர்ந்திருக்குமே!

அதுபோலவே பெரியார் இயக்கத்தினால், தொண்டறத்தால் பயன் பெற்றவர்கள், மாதா மாதம் ஒரு சிறு சதவிகிதம் - ஒன்றிலிருந்து மூன்று சதவிகிதம் நன்கொடை அளித்து வந்தாலே, அதன் நட்டத்தை ஈடு செய்ய முடியுமே!

பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவதுபோல - பயனடைவதுபோல - வந்து, நோய் குணமானதும்  'பறந்தே' விடுவர்!

சுய காரியப் புலிகள், இருப்பதை நிலைக்க வைத்த வர்கள் முக்கியமல்ல; பறப்பதற்குக் குறி வைக்கும் பரம பத ஏணிகள் தான் முக்கியம் என்பவர்களே உலகில் எங்கும்!

தேடித் தேடிப் பார்த்தாலும் 'ஒயாசிஸ்' போல நன்றி சொல்வோர், படர்ந்துள்ள பாலையில் சிலருண்டு!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு                           குறள்-110

2. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு - 'பிஞ்சு களுக்கு' அய்ந்து ஆங்கிலச் சொற்களை கட்டாயம் மிகச் சிறு வயதிலேயே - மொழிப் பாடத் துவக்கம் போல சொல்லிக் கொடுப்பதில் 'ஜிலீணீஸீளீ' - 'நன்றி' என்று எப்போதும் தவறாது சொல்ல வேண்டும் யார்உ.தவி செய்தாலும் என்பதாகும்.

குழந்தைப் பருவப் பாடங்கள் - - Good Morning 
தொடங்கி Thanksவரை முக்கிய சொற்கள்!

பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளில்கூட நான் கூர்ந்து கவனித்த ஒன்று;  பரிசு பெறும் இருபாலருள்ளும்  'நன்றி' என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் வெகுக் குறைவு!

நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு! என்றும் சொன்ன பெரியார் மக்களை எப்படித் தன் அறிவுத் தராசில் சரியாக எடை போட்டுள்ளார், பார்த்தீர்களா!

 - கி.வீரமணி

- விடுதலை நாளேடு, 26.3.18

வெள்ளி, 23 மார்ச், 2018

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புது வெளிச்சம்?



சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடம்பில் நாள்தோறும் உள்ள ரத்த சர்க்கரை (Blood Sugar) 
அளவு, காலையில் வெறும் வயிற்றில் எழுந்தவுடன் உள்ள அளவு(Fasting) 80லிருந்து 110க்குள் இருக்க வேண்டும் என்றும், சாப்பிட்ட பின்பு, 110 முதல் 140 வரை இருப்பது நலம் Post Prandial (PP) எனவும் உள்ள அளவு அது!

இது மட்டுமே உடலின் ரத்தச் சர்க்கரை அளவை சரியாகக் கணக்காணிக்கும் முறையாகும். மூன்று மாதங்களில் அந்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது; எப்படி இருக்கிறது என்பதைக் கண் காணித்துப் பார்த்து, அதற்கேற்ப மருந்து மாத்திரைகளையோ அல்லது இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோர்களுக்கு டாக்டர்கள் அளவை நிர்ணயிப்பதற்கு இந்த மூன்று மாத அளவு கோல் பயன்படும் என்பது முக்கியம்.

HbA1c  என்ற இந்த அளவு 3லிருந்து 6க்குள் இருந்தால் சர்க்கரை  இல்லை (Good Control),, 6 முதல் 7 வரை நியாயமான கண் காணிப்புடன்கூடி அளவு  (Fair Control),  7-8 மோசமான உடல் அளவு  (Bad Control)    என்று உலக அளவில் மருத்துவர்களால் கூறப்பட்டு கடைப் பிடிக்கப்படும் நியதியாக இருக்கிறது!

இதுபற்றி 'தமிழ் இந்து' நாளேட்டில் டாக்டர் கு.கணேசன் அவர்கள் எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரை (22.3.2018 பக்கம் 8 ) வந்துள்ளது!

அதனை அப்படியே 'விடுதலை'யின்  பிறிதொரு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம் (6ஆம் பக்கம் காண்க).

அதில் அமெரிக்க மருந்து கம்பெனி களின் பங்கும், கருத்தோட்ட தாக்கமும் தான் இப்படி அடிக்கடி ரத்த அழுத்தம் பற்றி 140/90 என்பதைக்கூட மாற்றி குறைத்து 130/80 என கூறி யுள்ளார்கள். அதுவே இரத்தச் சர்க்கரை அளவு HbA1c என்பதில் 6,7 என்பது 8 என்றால் பயமுறுத்தும் அளவுக்கும் கூறுவது பன்னாட்டு மருந்து கம்பெனி யர்களின் திட்டமிட்ட ஒரு செயல், ஏற்பாடோ என்ற விவாதங்கள் நடை பெற்று வருகின்றன!

அதில் அறவே உண்மையில்லை என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது!

தற்போது துரித உணவுகள் (Fast Foods)    என்ற நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமை யாகியுள்ள நமது இருபால் இளைஞர்கள், வீட்டில் சுகாதார முறை யில் சமைத்த உணவுகளை உண்ணாது புறந்தள்ளி, இந்த துரித உணவகங் களுக்குப் படையெடுத்து காசைச் செலவழித்து நோய்க்கு அழைப்பு விடுத்து, வெறும் நாக்கு ருசியை மய்யப்படுத்தி உண்ணுவதால், 25-30 வயது இளைஞர்கள் 'கிட்னி' - சிறுநீரகம் கெட்டுப் போகும் அளவுக்கு இவர்கள் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்ப வங்கள் ஏராளம் அன்றாடச் செய்திகளாக  ஏடுகளில், ஊடகங்களில் வருகின்றன.  மூன்று மாத அளவு 8க்குள் இருக்கலாம் என்றால் நோயாளி உயிரிழப்புகளும்கூட அதி கரிக்கும் வாய்ப்பும் உண்டு!

ஆனால் மருத்துவ ரீதியாக பல பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்களின் 'லாபி' சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. அமெரிக்காவில் மட்டுமல்ல; அய்ரோப்பா கண்ட நாடுகளில்கூட இந்த உண்மை பொருந்தும்!



மூன்று மாத சர்க்கரை அளவைக் கணிக்கும்போது நோயாளிகளின் முதுமை, வயது - இவைகளுடன் இணைத்துப் பார்ப்பதே முக்கியம் என்று பொது மருத்துவ வல்லுநர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் (General Physician & Diabatology அறிவுரையாளர்), பிரபல Diabetologist சர்க்கரை நோய் மருத்துவர் (ஆஸ்திரேலியாவில் இத்துறையில் படிப்பு - பயிற்சி பெற்று வந்து இப்போது சென்னையில் உள்ள) டாக்டர் நல்லபெருமாள் போன்றவர்கள் நோய் நாடி நோய் முதல் நாடிடும் மருத்துவ  முறையை அறி வுறுத்துவர்.

50 வயது சர்க்கரை நோயாளிக்கும், 80-85 வயதுள்ள சர்க்கரை நோயாளிக்கும் எப்படி ஒரே அளவுகோலை HbA1c மூன்று மாத அளவுகோலை பார்ப்பது என்று கூறி இப்போது கூறும் 75-80-85 வயது சர்க்கரை 7க்குள் இருக்க வேண்டும் என்று கூற வேண்டாம்; அவர்களை பயமுறுத்தத் தேவையில்லை என்பர்!

மருந்துகள் உயிர்க் காக்கின்றன!

மருத்துவர்கள் நோயாளிகளை நன்கு குணப் படுத்துவர் ஆனால் மருந்து தயாரிப்பாளர்கள் பன் னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணப் பெட்டியை பதப்படுத்துகின்றன!

என்னே விசித்திரம்!

- விடுதலை நாளேடு, 23.3.18