பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வளர்த்த கிளியும், பெற்ற கிளியும்!


மனிதர்களின் ஆறாம் அறிவு காரணமாக பாசமும், பகுத்தறிவும் அவர்களுக்கு இயல்பானது!
அய்ந்தறிவுள்ள மிருகங்களுக்கோ, அதைவிடக் குறைந்த அறிவுள்ள பட்சி பறவைகளுக்கோ பாசம் இல்லையா? அதன் குஞ்சுகளை வளர்க்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை.
அவை தம் குஞ்சுக்கு மட்டுமே கூடு கட்டும், இறக்கை முளைத்ததும் தானே பறந்து விடும் பிறகு நீயாரோ நான் யாரோ தான் (பெரியார் படப் பாட்டு மாதிரி).
ஆனால், மனிதர்களின் உறவு பாசம் - அப்படிப்பட்டதல்ல! பகை வந்த போதிலும் மனதுக்குள் புகையாய் இருக்கவே செய்யும். எளிதில் மறந்து போகாது.
பாசத்தைச் செலுத்த தங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள் மனிதர்கள்! வைதிக மனப்பான்மையும், மன இறுக்கமும் கொண்ட குடும்பத்தவர்கள் பலர் குழந்தைபெற்றுக் கொள்ளாத பெண்களைக் கரித்துக் கொட்டி வறுத்து எடுக்கும் வன்கொடுமையையும் வாழ்த்து மடலாக வாசிக்கத் தவறுவதே இல்லை பல குடும்பங்களில்.
இதற்காகவே இப்போது மழை காலத்துக் காளான்களைப் போல ஆங்காங்கு குழந்தைப் பண்ணை விளைநிலத்தைப் பக்குவப்படுத்தும் மருத்துவ வியாபாரங்கள் ஓங்கி வளர்ந்து வருகின்றன!
தந்தை பெரியார் அவர்கள் ஒரு முறை அழகாகக் கூறினார். மனிதன் தனக்கே குழந்தை பிறக்கு வேண்டு மென்று பிடிவாதமாக இருப்பது, தனியார் சொத்துரிமைக் கருத்து ஆட்சி செய்த பிறகே தான். பாசம் காட்ட குழந்தைதான் வேண்டுமென்றால் வேறு ஒரு குழந்தை - அதிகம் பெற்று காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்களே அப்படிப்பட்ட ஒரு குழந்தையை தத்து - வளர்ப்புக் குழந்தையாக்கி பாசம் காட்டி மகிழலாமே! அதுகூட வேண்டாம்; பலர் நாய், பூனை, கிளி போன்ற பல்வேறு வகை மிருகங்கள் பட்சிகளையும்கூட வளர்த்து பாசம் காட்டி, மகிழ்ச்சியை அடைகிறார்களே அது போல செய்யலாமே என்பார்!
சிங்கப்பூரில் நான் தங்கியிருக்கும் கவிதாமாறன் இல்லத்திற்குச் செல்லும் மின்தூக்கி (லிவீயீ) ஒன்றில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது!
பக்கத்து பிளாக்கில் வசிக்கும் ஒருவர் வளர்த்த கிளி திடீரென காணாமற் போய் விட்டிருக்கிறது. அக்கிளிக்கு இவர் சிகிச்சை தந்து கொண்டிருந்தார். அந் நிலையில் காணாமற் போன அக்கிளியைக் கண்டுபிடித்து  தந்தால் அந்த நபருக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
நம்ம இந்திய பணத்திற்கு இது சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் 2,40,000 ரூபாய் ஆகிறது! அவரது பாசமும், பரிவும் தான் எத்தகையது! அக்கிளி பற்றிய வர்ணனை அதை வளர்த்துள்ளவர்களின் மனிதநேயத்தையும் - பாசத்தையும் உறவையும்கூட காட்டும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்துக் கொண் டுள்ளோம். பல மருந்துகளைத் தந்து குணப்படுத்தும் நிலையும் உள்ளது என்று சோகத்தையும் கொட்டியுள்ளார் அந்த அறிவிப்பில்:
அந்த படம் (தனியே காண்க).
பொதுவாக அமெ ரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் மனிதனாகப் பிறப்பதற்குப் பதிலாக நாயாக, பூனையாக, பிறந்தால்  (றிமீ கிஸீவீனீணீறீ) பெரிய வாய்ப்பு!
அவனைத் திட்டி னால்கூட அலட்சியம் செய்து விடுவான்; ஆனால், அவர்களு டைய நாயை, பூனையைத் திட்டினால் படுகோபத்துடன் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள்!
இவைகளுக்கு என்னே சொகுசு -வாய்ப்பு! சில நாள் களுக்கு முன் ஆந்திரா வில் மூன்றாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது என்று வெறுப்படைந்த கணவர் தனியார் மருத் துவமனைக்கு வரவே இல்லை என்றும், மருத் துவமனை பணம்(பில்) கட்ட 25 ஆயிரம் ரூபாய்க்கு அந்தக் குழந் தையை யாரோ ஒருவருக்கு விற்று விட்டு, இந்தப் பெண் வீடு திரும்பி அழு திருக்கிறாள்!
வளர்த்த கிளிக்கு வருத்தம் அங்கு!
பெற்ற கிளியையே விற்ற கொடூரம் இங்கு!
இதுதான் நம்நாட்டில் பாசம் படும்பாடு!
-vsodlnr,29.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக