பக்கங்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

இன்றைய உலகப் புத்தக நாள் சிந்தனை


இன்று உலகப் புத்தக நாள்! (23 ஏப்ரல், 2015).
ஆண்டுதோறும் இது உலகெங்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு உலக அமைப்புகளின் முடிவுக்கேற்ப, கொண் டாடப்படுகிறது!
அண்மைக்காலத்தில் இளைஞர்கள், முதியோர்கள், மகளிர் அனைவரிடமும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், வழக்கமாக மாறி வருகிறது. இது ஒரு விரும்பத்தக்க ஆரோக்கியமான வளர்ச்சி!
நம் மக்களில் பலர், கண்ட உணவை எல்லாம் குறிப்பாக, வேக உணவுகள் (Fast Foods)
என்ற பெயரால் கூறப்படும், உடல்நலத்திற்குக் கேடு செய்யும் உணவுகளையெல்லாம், சுவை கருதி - சுகாதாரத்தைப் புறக்கணித்தும் கூட, உண்ணும் கேடான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதைப்போல,
மலிவான, உணர்ச்சிகளைத் தூண் டும், தரமற்ற, அறிவுக்குக் கேடு விளை விக்கக்கூடிய பல நூல்களை - அவை களுக்கான அபார விளம்பரங்களால் மயங்கி - காசு கொடுத்து வாங்கிப் படித்து, தங்கள் அறிவைப் பாழ்படுத்திக் கொள்ளும் அவலமும், மற்றொரு புறம் இருக்கவே செய்கின்றது என்பது வேதனைக்குரியதாகும்!
ஒரு காலத்தில் புத்தகங்கள் என் பவைகூட மிகப்பெரிய நிலையில் உள்ள அரசர்கள், செல்வந்தர்கள், மேட்டுக்குடியினர் - (இந்தியாவில்) உயர்ஜாதியினர் - இப்படிப்பட்ட பல தரப்பட்டவர்களின் ஏகபோக உரிமை யாக இருந்தவையே! புத்தக வாசிப்பு - பிறகுதான், கல்வி அறிவு பரவ, பரவ, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது உரிமையாக ஆகியது!
இன்று உலகெங்கும் புத்தகங்கள் அறிவு பரப்பும் பண்ணைகளாகவும், சமுதாயப் புரட்சிக்கான அடிநாதமாக வும் அமைந்துவிட்டன!
பிற்காலத்தில் பல நாடுகளில் வாழ்ந்த சர்வாதிகாரிகள்- ஆட்சியாளர் கள் நூலகங்களைத் தங்களின் கடும் எதிரிகளாகக் கருதி எரித்து அழிக்கத் தொடங்கினார்கள்!
அதுமட்டுமா?
நம் நாட்டிலேயே தங்களுக்குப் பிடிக்காத, தங்கள் கொள்கைகளை எதிர்க்கக்கூடியவர்களின் புத்தகங் களை முழுமையாக அழித்து - அக் கருத்துகளே வெளியே தெரிய விடாமல், வரவிடாமல் ஆக்கினார்கள். காரணம், அப்போது அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படவே இல்லை. வெறும் ஓலைச் சுவடிகள்தானே கருத்தாக்கங் களின் தொகுப்புகளாக இருந்தன.
எடுத்துக்காட்டாக, வேத மதத்தை எதிர்த்த சார்வாகர்கள் (Charwakars) என்பவர்களின் கருத்தாக்கப் புத்தகங் கள்பற்றி எந்தச் செய்தியும் அறிய முடியாதபடி அழிக்கப்பட்டு விட்டன!
அதுமட்டுமா?
தந்தை பெரியார் அவர்கள் கூட்டங் களில் பேசும்போது ஒன்றைக் கூறு வார்கள்.
இந்த நாட்டில், பல வீடுகளில் இருந்த பழைய புத்தகங்களைக்கூட ஆடிப்பெருக்கு - பதினெட்டாம் பெருக்கு என்ற ஆற்று வெள்ளத்தில்  அது அடித்துச் சென்றால், புண்ணியம் என்ற மூடநம்பிக்கை பழக்கவழக்கம் - நமக்குரிய அரிய பல நூல்களைக்கூட அழித்தன என்று கூறுவார்கள்.
அச்சு இயந்திரம் கண்டுபிடித்த ஜெர்மன் தொழில்நுட்ப அறிஞர் ஜான் னஸ் கூட்டன்பர்க் (Johannes Guten berg) அவர்களுக்கு உலகமும், கால மும் என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.
புத்தகங்கள் இன்றைய காலகட்டத் தில் அறிவியல், மின்னணுவியல் தொழில்நுட்பத்தினால், கற்பனைக்கெட் டாத அளவு வளர்ந்தோங்கி, ஒரு சிலேட் அளவுக்குள் பல லட்சக்கணக் கில் புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டு படிக்கும் கிண்டில் (Kindle) போன்ற சாதனங்கள் பெருகிவிட்டதால், படிப் போர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
-விடுதலை,23.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக