பக்கங்கள்

சனி, 5 செப்டம்பர், 2015

இங்கர்சாலின் இன்ப வாழ்வியல் - இதோ! (2)

அறிவுலக மேதை இங்கர்சால் ஒரு தலைசிறந்த மனிதநேயர் - காரணம் அவர் சுதந்திர சிந்தனையாளர் - பகுத்தறிவுவாதி. உண்மையான பகுத்தறிவுவாதியின் அடையாளம் மனிதநேயமே!
பகுத்தறிவுள்ளவர்கள் அதைத் தங்கு தடையின்றிப் பயன்படுத்தி னால் அவர்களைவிட மாமனிதர்கள் வேறு எவரும் இல்லை!
மனித சமூகத்தில் இருபாலரும் (ஆண் - பெண்) சமமானவர்கள் என்று கருதுவதே- நடப்பதே - மனித நேயத்தின் முதல் அடையாளம்.
எங்கே மனித சமத்துவம் பேணப் படுகிறதோ எங்கே மற்றவருக்கும் சுயமரியாதை உணர்வு உண்டு என்று கருதுகிறார்களோ அங்கேதான் மாமனிதம் பளிச்சிடுகிறது.
இதோ இங்கர்சால் பேசுகிறார், கேட்போம்:
எனது கருத்தில் பெண் புருஷ னுக்குச் சமமானவள். ஆணுக்குள்ள உரிமைகள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டு என்பது மட்டுமன்றி, பெண் ணுக்கு அதிகப்படியாக ஓர் உரிமை யுண்டு. அதாவது பெண்களைக் காப் பாற்ற வேண்டியது புருஷன் கடமை. இது எனது உறுதியான கருத்து.
நீ திருமணம் செய்திருந்தால், உன் காதலுக்கு மனைவியைக் காப்பாற்ற உன்னாலான முயற்சிகள் எல்லாம் செய். அவள் எப்பொழுதும் சந் தோஷமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள். சுயநன்மைக்காக விவாகம் செய்கிறவன் பெரிய தவறு செய்கி றான். என் மனைவியின் மகிழ்ச் சியே என் மகிழ்ச்சி என்று சொல் கிறவன் வீரன்; யோக்கியன். அது போலவே, என் கணவன் இன்பமே, என் இன்பம் என்று கூறுபவளே உத்தமி. இன்பத்துக்கு ஒரே ஒரு வழிதானுண்டு. அதாவது இருவரும் இன்பம் அனுபவிக்கும்படி நடந்து கொள்வதே. மற்றவருக்குத் துன்பம் செய்து உன்னால் இன்பம் அனுப விக்க முடியாது.
நானே குடும்பத்துக்குத் தலை வன்; வீட்டுக்கு முதலாளி என்று கூறுபவனை நான் அறவே வெறுக் கிறேன். நானே தலைவன்; நானே அதிகாரி எனக் கூற ஒருவனுக்கு என்ன உரிமை?
சிடுமூஞ்சியையும் நான் அறவே வெறுக்கிறேன். கடுகடுப்பாகப் பேசி வாழ்க்கை இன்பத்தைக் கொலை செய்ய எவருக்கும் உரிமையில்லை.
வீட்டுக்குச் செல்லும்போது, மலர்ந்த முகத்துடன் போ, உன் முகமலர்ச்சியினால், இரவும் பகலாக வேண்டும்; இருட்டறையும் ஒளிமய மாக வேண்டும்.
சிலர் தாமே மேதாவிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் களாம். தேர்தலில் அவனை ஆதரிப்பதா, இவனை ஆதரிப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்தார் களாம். பெரிய பெரிய அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும், வியா பார விஷயங்களைப்பற்றியும் வாதா டிக் கொண்டிருந்தார்களாம். ஆகவே, அவர்களது மூளை குழம்பிப் போயிற்றாம்; களைத்துப் போயிற்றாம். எனவே, அவர்கள் வீடு சென்றதும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதும், மகிழ்ச்சியூட்ட வேண் டியதும் மனைவியர் கடமையாம். நாலைந்து குழந்தைகளுக்குத் தாயாகி, நோயுற்ற குழந்தைகளுக்கு மருந்தூட்டிப் பராமரித்து, குடும்பக் காரியங்களைக் கவனித்துச் சதா உழன்று கொண்டிருக்கும் மனைவி அலுத்து வீட்டுக்கு வரும் கண வனுக்கு ஆறுதல் கூற வேண்டுமாம்! மகிழ்ச்சியூட்ட வேண்டுமாம்! அவ ளுக்குக் களைப்பில்லையா? சோர் வில்லையா? அவளுக்கு ஆறுதல் கூறுவது யார்? மகிழ்ச்சியூட்டுவது யார்?
வேறொரு விஷயம். கஞ்சனையும் நான் வெறுக்கிறேன். உலகத்திலே கோடி கோடிப்பேர் பட்டினிக் கிடக் கையில் - உடுக்கத் துணியும் இருக்க இடமும் இன்றித் தவிக்கையில், கோடிக்கணக்காகச் சம்பாதிக்கவும், சேமித்து வைக்கவும் ஒருவனுக்கு என்ன உரிமை? தேவைக்கு அதிக மாகச் சம்பாதிக்கவும் சேர்த்து வைக் கவும் ஒருவருக்கும் உரிமை கிடை யாது.
மனைவிமாரையும் நம்பாத பல கஞ்சன்களை நான் பார்த்திருக் கிறேன். அவர்களுக்கு மனைவியை விடப் பணமே முக்கியம். தினந் தோறும் ஒரு ரூபாய் வேண்டும், இரண்டு ரூபாய் வேண்டும் என்று மனைவி பிச்சை கேட்பதை நீ விரும்புகிறாயா? உலோபிகளான கணவன்மாரைப் பார்க்கவும் மனைவிமார் அஞ்சுகிறார்கள். குடும்பச் செலவுக்குப் பணங்கேட்க நடுங்குகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது! பயங்கரமானது! வெறுக்கத்தக்கது!
கணவன்மாருக்கு உபதேசம்
உன் கையில் ஒரு ரூபாயிருந் தால், இராஜா மாதிரி அதைச் செலவுசெய். ரூபாயை மண்ணென, சருகென மதி; அலட்சியமாகச் செலவு செய். இதுவே செலவு செய்ய வேண்டிய முறை. அரசானயிருந்து பிச்சைக்காரனைப்போல் செலவு செய்வதை விட, பிச்சைக்காரனா யிருந்து அரசனைப் போலச் செலவு செய்வதையே நான் விரும்புவேன்.
செலவு செய்ய வேண்டியதைத் தயங்காமல் செலவு செய்துவிடு.
முடிந்தவரையில் நல்ல சாமான் களையே உன் குடும்பத்துக்கு வாங்கு. இயன்றவரை அழகாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் உடுத்திக் கொள். மணம் பேசிச் சென்றபோது, நீ எவ்வளவு அழகாக - நேர்த்தியாக - சுத்தமாக உடுத்திக் கொண்டு சென்றாய்! கண்கள் பிர காசித்தனவே!
முகம் மலர்ந்திருந் ததே! ஒரு இராஜகுமாரனைப்போல் விளங்கினாயே! அவ்வண்ணம் காதலியைச் சந்தித்த நீ - அவளது காதலைப் பெற்ற நீ-அலங்கோல மாக - அசிரத்தையாக - மோசமாக உடுத்திக் கொண்டால், உன் காதலி உன்னைச் சந்தோஷமாக வரவேற் பாள் என்று நீ நினைக்கிறாயா? இது சாத்தியமா? சாத்தியமானவரை, நேர்மையாகவும், யோக்கியப் பொறுப்பாகவும் நீ நடந்துகொண்டால், எந்த நல்ல பெண்ணும் உன்னை மதியாமல் - நேசியாமல் இருக்கவே மாட்டாள்.
காதல், மணம், மனைவி, குடும்பம் முதலியவைகளைப்பற்றி நீர் கூறும் கருத்துகள் பணக்காரருக்குத்தான் பொருந்தும்; ஏழைகளுக்குப் பொருந் தவே செய்யாது என்று சிலர் என்னிடம் கூறுகிறார்கள்.
ஆனால், உண்மை நிலை என்ன? பணக்காரர் மாளிகையைவிட ஏழை கள் குடிசையிலே உண்மைக் காதல் நிலவுகிறது.
உண்மைக்காதல் நிறைந்த குடிசை பெரிய மாளிகையினும் புனிதமானது; பிரபுக்கள், மன்னர்கள், தேவர்கள் வசிப்பதற்கு உகந்தது. இதுவே எனது கொள்கை. பிறருக்குச் சிறு உதவியும் செய்ய முடியாத அளவுக்கு நீ அவ் வளவு வறியவனாயிருக்க முடியாது. உலகத்திலே நற்குணத்தைப்போல் மிகவும் மலிவான சரக்கு வேறில் லவே இல்லை. கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் 100-க்கு 10 வட்டி கொடுக்கக்கூடியது அன்பு ஒன்றே. சீமானாக விரும்புவதாய் என்னிடம் சொல்லாதே. செல்வம் பெருமைக்குக் காரணமென மக்கள் தப்பாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
உலகத்தில் பிறந்தால் ஒன்று பணக்காரனாக இருக்கவேண்டும்; அல்லது நல்ல வழியிலோ தீய வழி யிலோ பெயரெடுத்தவனாக இருக்க வேண்டும்; உலக மக்கள் எல்லாம் பாராட்டவேண்டும்; அவனே பெரிய வன் என்று சாதாரண ஜனங்கள் நம்புகிறார்கள். இது தவறானது. மனச்சாந்திக்குப் பணக்காரனாக இருக்கவோ, அதிகாரமுடையவ னாக இருக்கவோ, பெரியவனாக இருக்கவோ தேவையில்லை. வாழ்க் கையில் வெற்றியடைந்தவனே பெரியவன்; மனச்சாந்தி பெற்றவன்.
இன்ப வாழ்வுக்கு இங்கர்சால் கூறும் இவை போதுமே - இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக