வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

ஞாயிறு, 22 மே, 2022

இதோ ஒரு புத்தகத் தேன் கூடு! - 2



  February 15, 2022 • Viduthalai

மீனாட்சி: வ.உ.சி.யின் வாழ்க்கைத் துணை

"மீனாட்சி அம்மாள் வாழ்க்கைப்பட்டது இன் றைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் வாழ்ந்த பாரம்பரியமான நிலவுடைமைக் குடும்பத்தில். வக்கீல் உலகநாத பிள்ளைக்கு மகனாகப் பிறந்த வ.உ.சி.யும் 1894இல் வக்கீல் சன்னது பெற்றுத் தூத்துக்குடி நகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொழில் பார்த்ததில் அதிலும் நல்ல வருமானம். 1906ஆம் ஆண்டில் சுதேசிய வேகம் ஆட்கொண்ட பிறகு வக்கீல் தொழிலை அவர் பார்க்க முடியவில்லை . ஒரு புதிய கம்பெனியை, அதுவும் அரசாங்கத்திற்கு எதிராகக் கட்டியெழுப்புவதென்பது சாதாரணமா? ஓய்வில்லாப் பயணமும் அரசியல் கூட்டங்களும் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளல்ல. தேசியத்தைவிட வணிகத்தையே முக்கியமாகக் கருதிய மிதவாதிகளின் கையே சுதேசிக் கப்பல் கம்பெனியில் ஓங்கியிருந்த நிலையில் அவர் களையும் சமாளிக்க வேண்டிய நிலை. இந்தச் சூழ்நிலையில்தான் வ.உ.சி. சிறை சென்றார்.

பதின்மூன்று வயதில் அடியெடுத்துவைத்ததும் மீனாட்சிக்குத் திருமணம். இரண்டாம் தாரம். முறையான கல்விக்கு வாய்ப்பில்லை. கணவர் சிறைக்குச் சென்ற காலத்தில் மீனாட்சி அம்மா ளுக்கு வயது பத்தொன்பதுகூட இல்லை. நண்டும் சுண்டுமாக உலகநாதன், ஆறுமுகம் என இரு மகன்கள். வயதான மாமனார், மாமியார். அண்ணனுக்குக் கொடிய தண்டனை என்று கேட்டதும் பித்தரான கொழுந்தன். புகுந்த வீட்டின் மதினிமார், நாத்திமாரோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம். சிறைக் கைதியின் மனைவி என்ற சாமானியரின் ஏளனம். முன்னுதாரணமற்ற வகையில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.யின் நண்பர்கள் பலருக்கும் கிலியூட்டி, அவருடைய குடும்பத்தினரை விட்டு ஒதுங்கச் செய்தது. 1911 ஜூனில் நடந்த ஆஷ் கொலை இந்த அச்ச நெருப்புக்கு நெய் வார்த்தது. எவரும் நிலை குலைந்துபோயிருப்பார்கள், மீனாட்சி அம்மாள் துவளவில்லை.

வ.உ.சி. அடைக்கப்பட்டது கோவைச் சிறையில். குடும்பமோ தூத்துக்குடி வாடகை வீட்டில்..... இரும்புப் பெட்டி முதலியனவும் புத்தகங்களும் தூத்துக்குடி வீட்டின் சொந்தக் காரர்களுக்குச் செல்ல வேண்டிய வாடகை முதலியவற்றுக்கு ஈடுபோல் இருக்கின்றன' என்ற நிலையில், கணவர் சிறைப்பட்டிருந்த கோவைக்கு அடிக்கடி சென்றதோடு, சில காலம் அங்கேயே வசிக்கவும் செய்தார் மீனாட்சி அம்மாள். 1910 கடைசியில் வ.உ.சி. கண்ணனூர் (இன்றையக் கேரளத்தின் வடகோடியிலுள்ள கண்ணூர்) மத்தியச் சிறைக்கு மாற்றலான பின்னர் ஓராண்டுக்கும் மேல் மொழி தெரியாத தேசத்தில் வாடகைக்கு வீடமர்த்தித் தங்கினார். சிறை அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். அரசாங்கத் திற்கு விண்ணப்பங்கள் தயாரித்தார். கணவரின் அரசியல் நண்பர்களுடனும் தனி நண்பர்களு டனும் குடும்பத் தினருடனும் வக்கீல்களுடனும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டார். வாங்கிய பணத்துக்கு வழக்கும் நடத்தாமல், கணக்கும் காட்டாத வக்கீல்கள் சிலரின் தொல்லை. வ.உ.சி. சிறைசென்றதையே வாய்ப் பாகக் கருதி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத சில நல்லவர்கள். இந்த நிலையில், 'என்னுடையவும் குழந்தைகளுடையவும் காலக்ஷேபத்திற்கு எவ்வகையிலும் பொருள் வருவாயில்லை' என்று கலங்கிய மீனாட்சி அம்மாள், தனது 'பர்த்தா அவர்கள் வந்து சேரும் வரை' தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்குப்பட்ட துன்பம் சொல்லில் அடங்காது.

‘‘என்னிடமிருந்த சிறிய பொருளும் நகைகளும் ஊரார் எங்களுக்குத் தந்தனவும் எனது பர்த்தா அவர்களின் கேஸ்களுக்கும் அப்பீல்களுக்கும் எங்கள் சாப்பாட்டுக்குமாகத் தீர்ந்துபோய் விட்டன. எங்கள் உற்றாரும் உறவி னரும் மேலும் மேலும் எங்களுக்குக் கொடுத்துச் சலித்துப்போனார்கள்' என்று நொந்து கொண்ட மீனாட்சி அம்மாள், 'இனிமேல் அவர்களைக் கேட்பது, கசக்கி மலரை முகர்ந்ததோடொக்கும்' என்று அமைதிகொண்டார்.' '... எங்கள் தற்கால நிலைக்குத் தக்கபடி மிக எளிய சாப்பாடு செய்து கொண்டு வந்தும் எங்கள் சாப்பாட்டுச் செலவு வீட்டு வாடகை முதலிய செலவுகளும் எனது பர்த்தா அவர்கள் விடுதலைக்காக யான் செய்யும் முயற்சி சம்பந்தமான செலவுகளும் சேர்ந்து' தாங்க முடியாத செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை.' 'எனது நகைகளை அடகு வைத்து வாங்கி அனுப்பிய ரூபா இருநூறும் செலவாகிவிட்டது' என்ற நிலையில் 'தாங்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை என் பர்த்தா அவர்கள் வந்த பின் நியாயமான வட்டியுடன் திரும்பச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று பலரிடம் மீனாட்சி அம்மாள் இறைஞ்சினார். நகைகளை விற்றுவிட்ட நிலையில், வ.உ.சி.யின் தாயாருக்கு அனுபவ பாத்தியதை யுள்ள அசையாச் சொத்துகளை அடமானம் வைக்கவும் அவர் தயாராக இருந்தார். சில சமயங்களில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்ட நிலையில் அவமானப்படும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் "நான் எனது மானம் கெடாத கூலி வேலைகள் செய் யவும் தயார்" என்று மீனாட்சி அம்மாள் எழுதி யதை யார்தான் கண் கலங்காமல் படிக்க முடியும்?

இவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மீனாட்சி அம்மாள் சிறை அதிகாரிகளுடனும் அரசாங்கத்துடனும் - வழக்குரைஞர் களின் துணையோடும், சில வேளைகளில் துணையில்லா மலும் கூட - கடிதப் போக்குவரத்து மேற்கொண் டார். சட்டரீதியான கடிதங்களைத் தட்டச்சு செய்துகொண்டிருந்த ஒருவர் போலீசுக்கு அஞ்சி, கொடுத்த வேலைகளைச் செய்ய மறுத்ததுபோன்ற சில்லறைத் தொந்தரவுகள் வேறு.

இத்தனைக்கும் இடையில் 'உலகத்தாரின் மதிப்பையாவது அவமதிப்பையாவது சிறிதும் பொருள்படுத்தாமல், 'எனது கடமை எனது பர்த்தா அவர்கள் என்னென்ன உத்தரவுகள் கொடுக்கிறார்களோ அவ்வுத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தலே' என்று சொற்றிறம்பாமல்' மனவுறுதியுடன் மரபார்ந்த இல்லற நெறிப்படி வாழ்ந்த மீனாட்சி அம்மாள் தம் கணவரின் பொதுவாழ்வின்மீதும் கொண்டிருந்த மதிப்புக் கும் குறைவில்லை.

அடியாளது பர்த்தா அவர்கள் பலவுயர்ந்த தமிழ் நூல்கள், இங்கிலீஷ் நூல்களும் இயற்றி யுள்ளார்கள்..

அவர் கல்வியும் அவர்கள் தவமும் அவர்கள் பெருமையும் அடியாளால் சொல்லும் திறத்தன வல்ல. அவர்கள் இப்பொழுது இவ்வுலகம் முழுவதையும் நீதியுடன் அரசாளும்படியான திறமையையும் மெய்ஞ்ஞானத்தை இவ்வுலகம் முழுவதற்கும் உபதேசிக்கும்படியான திறமை யையும் அடைந்துள்ளார்கள்.

என்று தம் மாமனாருக்கு ஆறுதல் கூறி, 'ஆதலால்... அவர்கள் சிறைப்பட்டார்கள் என்று நினையாது, கடவுள் ஞானத்தையும் மற்றைய உலக ஞானங்களையும் அடைவதற்குரிய தவச் சாலைக்கும் கல்விச்சாலைக்கும் சென்றிருந் தார்கள் என்று நினைத்துப் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருக்கும்படி' அவரைத் தேற்றினார்.

'தற்காத்து, தற்கொண்டானைப் பேணி, தகைசான்ற சொல்லைக் காத்துச் சோர்விலாத ஆளுமையாக' நின்றிருக்கிறார் மீனாட்சி அம்மாள் என்று தயங்காமல் சொல்லலாம்."

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:06 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: வ.உ.சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ▼  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ▼  மே (5)
      • முதுமையாளர்களான" நண்பர்களுக்கு...! (1&2)
      • இதோ ஒரு புத்தகத் தேன் கூடு! - 2
      • 'முரசொலி'யின் முத்துக்குவியல்!
      • "மனித குல வரலாறு" - இதோ ஒரு புதிய வெளிச்சம்!
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (16)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (51)
    • ►  டிசம்பர் (13)
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.