பக்கங்கள்

புதன், 29 மே, 2019

தூக்கம் - ஒரு அறிவியல் பார்வை! 1&2



நமது முக்கிய தேவைகளில் ஒன்று - உடல் நலத்திற்கும் நோயற்ற வாழ்வின் தேவைக் குமாக - தூக்கம்.

தூக்கத்தை அலட்சியப்படுத் தாதீர்கள்; கோழி கூவும் வரை விழித்து, பிறகு முற்பகல் வரை தூங்கி எழுவதுதான் தனது வாடிக்கை என்பதாக பழகியுள்ள நம் நண்பர்கள் இந்த அறிவியல் உண்மைபற்றிய ஆராய்ச்சியா ளரின் கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்பட்ட பின்பு வழக் கத்தை எப்படி மாற்றிட முடியும் என்று கேட்காதீர்கள்.

வழக்கம்  என்பதில் ஒழுக்கம் இன்றேல், அவ்வழக்கத்திற்கு அடித்தளமாகிய பழக்கத்தைக் கைவிடுதல் அவசியம் என்பார் நம் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்!

கைலெஸ்ஸினர் (Guy Leschziner) என்ற நரம்பியல் ஆலோசகர் ஆன மருத்துவ நிபுணர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள "The Nocturnal Brain; Tales of Nightmares  and Neuroscience" என்ற புத்தகத்தில் மிக அருமையான ஆய்வு முடிவுகள் - தகவல்கள் வெளி வந்துள்ளன.

இங்கிலாந்து பகுத்தறிவாளர் அமைப்புச் சார்பாக லண்டனிலிருந்து வெளிவரும் (காலாண்டு ஆங்கில இதழ்)  'New Humanist' என்ற ஏட்டில் இந்நூல் பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாகி யுள்ளது. அதிலிருந்து திரட்டப்பட்ட தகவல் களின் தொகுப்புதான் இந்த வாழ்வியல்!

தூக்கம் என்பது நமது மூளை - உடல் - இரண்டின் புத்தாக்கத்திற்கு - மீள் பணிக்கு ஆயத்தமாகும் ஒரு அரிய வாய்ப்பு ஆகும்!

நமது மூளையும், வீடுகளில் எப்படி ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு வேலைகளும், நட வடிக்கைகளும், துப்புரவும் நடைபெறுகிறதோ அப்படித்தான் நம் மூளைக்குள்ளும் பல்வேறு தனித் தனிப் பணிகளும் முறையாக நடைபெற்று வருகின்றன.

நமது நினைவுக்கானது, கற்றல், உடலின் மற்ற உறுப்புகளுக்கு உத்தரவு போட்டு பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற தொடர் பணிகள் தொய்வின்றி நடந்துகொண்டே உள்ளன!

விஞ்ஞான ஆய்வுக்கூட முடிவுகளும் மனி தர்களின் உலக யதார்த்த நடவடிக்கைகளுக்குமே சிற் சில நேரங்களில் முரண்படும் நிலையும் உண்டு.

தூக்கத்தைப் பொறுத்தவரை இது பலருக்கு அளவிலும், தன்மையிலும் (Quantity and Quality)  மாறுபடவே செய்கிறது - பல நேரங்களில்

மருத்துவரைப் பார்த்துப் பலரும் கேட்கும் வழமையான கேள்வி. "டாக்டர் எனக்கு எத்தனை மணி நேர தூக்கம் தேவை?" என்பதேயாகும்.

இதற்கு சரியான பதில் என்ன தெரியுமா? "நீங்கள் விழத்தெழும்போது, சோர்வு நீங்கி புத்துணர்வுடன் எழுந்து - அயர்வின்றி உழைக்கும் நேரம் -  எத்தனை மணி நேரம் என்பதையே அளவுகோலாகக் கொள்ளுங்கள்; அதன் மூலம்தான் நீங்கள் மேலும் விழித்திருந்து, பல பணிகளை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதே!

பணியாற்றிக் கொண்டே இருந்து எப்போது நீங்கள் களைப்பு அடைந்து உறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது தான் உங்கள் தூக்கத்தின் அளவும், தன்மையும் ஆகும்!

தூக்கம் வராமலிருப்பது வேறு; தூக்கமின்மை என்ற நோய் Deprivation Sleep வேறு;  Insomnia - தூக்கமின்மை வேறு.

(நாளையும் விழித்திருக்க!)

- விடுதலை நாளேடு 27. 5. 2019

தூக்கம் என்பது தேவையான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் நலம் உறுதிப் படுத்தப்படும்.

தூக்கம்பற்றி பலரும் அடிக்கடி கூறுவது 'நான் நேற்று இரவு 2 மணி முதல் விடியற் காலை 5.30 மணி வரை விழித்துக் கொண்டே இருந்தேன் - தூக்கமே வரவில்லை' என்பது.

இதுபற்றி , தூக்கம் பற்றிய ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், இது சரியான கருத்து  அல்ல; அவர்கள் பலரும் 30 வினாடிகளோ, 2 மணித்  துளிகள் என்கிற விகிதத்திலோ  தூங்கித்தான் இருப்பார்கள். 5.30  மணி வரை இடையே இது நிகழாமல் இருக்காது. தொடர் விழிப்பு என்பது சரியான உண்மை அல்ல.

இத்தகைய விழிப்புக்குரிய காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும்; இது  மனம் சம்பந்தப் பட்டது - மன அழுத்தம், துக்கம், துயரம், வருத்தம், ஏமாற்றம் ஆகியவை இதற்கு  அடிப்படையாக இருக்கக் கூடும்.

அல்லது உடல் உபாதைகள், வலிகள் இம்மாதிரி தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே  உரிய அளவுக்கு தூக்கத்தை வர வழைக்கும் வழிமுறை களையும் ஆராயலாம்!

இவர் படுத்தவுடன் தூங்கி விடுவார்; என்னே அரிய "வரம்" பெற்றவர் என்று சொல்வார்கள்!

மனச் சுமை இல்லாது, ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, எதிர்மறை எண்ணங்களுக்கும்  (Negative thoughts பொறாமை போன்ற, மன நோய்க்கும்) இடம் தராதவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் தானே வந்து விடும்.

சராசரி மனிதர்களின் இயல்பு  பயத்தாலும், கவலையாலும் அலைக் கழிக்கப்படுவதே!

கவலைப்படுவதனால், எந்த பிரச்சினையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதற்குப் பதில் மூளையை மேலும் "உலைக்களமாக்கி", என்ன செய்தால் இந்த இக்கட்டிலிருந்து விடுபடலாம் என்று ஆக்கப்பூர்வ பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் பிரச்சினைகளும் தீரும் - மூளையும் சாணை தீட்டப்பட்ட கத்திபோல சரியான பயன்பாட்டுக்குரிய கருவியாகி,  மனிதர்களைக் காப்பாற்ற எந்நாளும் பயன்படும்.

வரலாற்றுப் பூர்வமாகவே ஆழ்ந்த தூக்கத் திற்கு மனிதகுலம் போதிய முக்கியத்துவம் தருவதே இல்லை; முன்னுரிமை கொடுப்பது மில்லை!

தூக்கத்தினைப் பற்றி ஆராய்ந்து,  'குறட்டை'  முதற் கொண்டு ஆய்வு செய்வதற்கு என ஏராளமான மருத்துவ நிலையங்கள் அண்மைக் காலத்தில் - கருத்தரிப்பு உருவாக்க மய்யங்கள் புற்றீசல் போல் உருவாகும் அளவுக்கு, தூக்க ஆய்வு மய்யங்கள் வராவிட்டாலும்கூட முக்கிய பெரு நகரங்களில் வந்துள்ளன.  அரசின் பெரு மருத்துவமனை களில் இதற்கென தனித் துறை உருவாக்கப்படுதல் நல்லது.

தூக்கம் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன  - அத்தகைய  மருத்துவ ஆய்வுக் கூடங்களில் என்றாலும்கூட, மனித மூளையின் மேற்பரப்புப் பற்றி மட்டும் ஆய்வுகள் நடைபெறும் நிலை உள்ளது. உள்பகுதிபற்றி இன்னமும் இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர்.

TED உரைகள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி 13 நிமிடங்களில் நிகழ்த்தும் இணையத்தில் அனைவரும் எந்த பொருள் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

அதில் 'அல்ஷைமர்ஸ்' என்ற 'நினைவு இழத்தல்' நோய் பற்றிய உரை  ஒன்றைக் கேட்டேன்.

அதில் தூக்கமிழப்பு ஒரு முக்கிய காரணம் - அந்த நோய்க்கு; அதிலும் 12 மணி முதல் இரவு 2  அல்லது  3 மணி வரை உள்ள  நேரத்தில்தான்  அந்த நோய்க்கான சுரப்பி உச்சக் கட்டத்தில் இருந்து, பாசி குளங்களில் படிவது போல அது மூளையை அக்கறை    அடைவதோடு  - அடைப்பதாகவும் அமைந்து விடுகின்றது. எனவே, இரவு கண் விழிப்போர் அருள்கூர்ந்து 12 மணிக்கு மேல்  - 2 மணி தாண்டியும் விழிக்காமல்,  12 மணிக்குள்ளாவது உங்கள் படிப்பு, பணி முதலியவற்றை முடித்து, நோய்க்கு இடந்தர மாட்டோம் என்று  கூறலாமே!

தூக்கம், உணவு, நடைப்பயிற்சி, இளைஞர் களின் விளையாட்டு, மருந்துகளை முதியோர் தவறாமல் எடுத்தல் எல்லாம் வரிசைப்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைக் காப்புறுதிகள் - மறவாதீர்!

- விடுதலை நாளேடு 28. 5. 2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக