பக்கங்கள்

சனி, 13 பிப்ரவரி, 2016

நம் அக எதிரிகளிடம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!



நம்முடைய புற எதிரிகளைப் பற்றியே நம்மில் பலர் கண்காணிப் புடனும், கவலையுடனும் இருக்கி றோமே தவிர, நம்முள்ளிருந்து கிளம்பிப் போரிடும், நம்மைக் கெடுத் துப் பாழாக்கும் அக எதிரிகளைப் பற்றி எத்துணைப் பேர்  ஆழ்ந்து சிந்திக்கின்றோம், சீர்பெற முயலுகி றோம் என்பது கேள்விக்குறியாகும்.
திடீரென்று வெடித்துக் கிளம்ப ஆயத்தமாகும் ஓர் அகத்திலுள்ள மிகப் பெரிய எதிரி கோபம் - ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ ஆகும்!
கோபம் அதிகமாக வந்தால் அது உள்ளத்திற்கும், நமது புற வாழ்வுக்கான புகழுக்கும் மட்டுமா கெடுதி செய் கிறது?
நம் உடலையும் - உடல் நலத்தை யும் வெகுவாகப் பாதிக்கிறதல்லவா?
ரத்தக் கொதிப்பு, இதயத் துடிப்பு மிக வேகமாகி மாரடைப்பை நோக்கிப் பயண ஆயத்தம் போன்ற பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக அல்லவா இந்த பொல்லாத கோபம் அமைந்து விடுகிறது!
‘கோபம் இருக்கும் இடம் குணம் இருக்கும்’ என்பதெல்லாம் ஏதோ சமாதானமாக இருக்கலாமே தவிர, உண்மையில் நம் உடல் நலத்தையோ, உள்ள நலத்தையோ பாதுகாக்க அது ஒருபோதும் உதவவே உதவாது என்பது அனைவரும் நன்கறிந்த உண்மை!
அந்தக் கண நேரக் கோபம் பலரைக் கொலைகாரர்களாக்கிய கொடுமையை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
சிறையில் கைதிகளாக  உள்ள குறிப்பாக - தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனைக் கைதிகள் - இவர்களிடத்தில் சற்றுப் பேசிப் பாருங்கள். அவர் என்ன குற்றம் செய்ததற்காக சிறையில் இத் தண்டனையில் வதிகிறார் என்று அறிந்தால் மேலே கூறிய கூற்று சரியென விளங்கக் கூடும் உங்களுக்கு!
கோப ஆராய்ச்சியைவிட, கோபம் பீறிட்டுக் கிளம்பினால் அதைத் தடுத்து, நிறுத்தி, அதனிடம் நாம் தோற்றுப் போகாமல், அது நம்மிடம் தோற்றோடும் வழி வகை அறிந்து கொள்ள வேண்டாமா?
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை   (குறள் - 310)
அளவு கடந்த சினத்தைக் கொண்டவர், உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண் மையில் செத்துப் போனவரைப் போன்றே கருதப்படுவார் என்கிறார் வள்ளுவர்.
சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தார்க்கு ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர் -  என்பதே இதன் பொரு ளாகும்.
அளவு கடந்த சினங் கொண்டவரை வள்ளுவர் செத்தாருள் - வைத்துக் காட்டுகிறார்! மனித உருவில் நடமாடி னாலும் உண்மையில் பிணத்தை நாம் உடனே புதைக்க, எரிக்க முயலுகிறோமே தவிர, எவ்வளவு பெரிய மனிதராகிலும் அவர்கள் பிணமாகி விட்டால் அவர்கள் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டிய வர்தான் என்பதைத்தான் இப்படி  ‘இறந்தார் இறந்தார் அனையர்’ என்பதன் உண்மைப் பொருளாக ‘பளிச்’ சென்று நமக்கு மின்னுகிறது!
இதனைப் போக்க பற்பல நூல்கள், பலவித ‘சிகிச்சைகளை’  தடுப்பு முறை களை, தப்பும் விதங்களைக் கூறவே செய்கின்றன!
அண்மையில் படித்த ஒரு நூலில் உள்ள கருத்து. இதை நான் மட்டும் அறிந்தால் போதுமா? எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதால் அக்கருத் துக்களை உங்களுடன் பரிமாறிக் கொள்ள எண்ணுகிறேன், வாழ்வியல் வாசக நேயர்களே!
கோபப்படுதல் என்பது யாருக்கும் எளிது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, அதற்கு பலியாகி விடாமல் அதிலிருந்து வெளியே வருதல் எப்படி என்பதை அறிந்தவர்களே மிகவும் சரியான வாழும் மனிதர்கள் ஆவார்கள்!
இதற்கு மூன்று கதவு அடைப்புகளைக் காட்டுகிறார் அந்நூலாசிரியர்!
கோபத்தைக் கட்டுப்படுத்த  பதில் சொல்லுமுன் - (எதிர்வினையாக) - ஒன்று, இரண்டு, மூன்று என்று மனதிற்குள் 100 எண்ணுங்கள் - அதன்பின் அது தானே குறையும் பதிலுக்குப் பதில் - அல்லது அதற்கு மேலாக நாம் இணைந்து சொல்ல வேண்டிய நிலையை அதுவே பெரிதும் தடுத்து விடும்.
மூன்று கதவுகளில் முதல் கதவு பதில் சொல்லுமுன் - கோபப்படுமுன் - மூன்று வகைக் கேள்விகளை உங்களுக்குள் ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்.
(1) இவை உண்மையானதுதானா?
(2) இவை தேவைதானா?
(3) இவை இதமான சொற்களா?
என்று மூன்று கதவுகள் திறப்பின் மூலம் விடை காண முயலுங்கள். எதிரி நம்மைக் கோபப்படுத்த முயன்றாலும் அதை நாம்  பொறுமை காட்டி, உடனே பதிலடி தர வேண்டும் என்று கருதாம லிருந்தால் நாம் வெற்றி பெற்று விட்டோம்; எதிரி தோற்று விட்டார் என்று பொருள் - இல்லையா?
(ராபின் சர்மா எழுதிய நூல்  ‘நீ இறந்தால் உனக்காக அழுவது யார்?’)
வாழ்வின் சம்பவம் ஒன்று, புத்தர் பற்றி கூறப்படுவதுண்டு.
பிச்சை கேட்டுச் செல்லும்போது பிற மதத்தவன் போட மறுத்ததுடன், அவரை பல வசைமாறிப் பொழிந்த நிலையில், புத்தர் அமைதி இழக்காமல் புன்னகை பூத்த வண்ணம் நிர்மலமான முகத்துடன் இருந்து விட்டு, அய்யனே, நீவிர் கொடுக்கும் பிச்சையை நான் ஏற்க மறுத்து விட்டுச் சென்றால் அது யாரிடம் இருக்கும்? யாரைச் சார்ந்த தாகும்? தங்களுடன்தானே; அது போலத்தான் தங்களது வசை மொழி களும் என்று கூறிவிட்டுச் சென்ற போதுதான், இதை எண்ணிப் பார்த்து வசைமாரி பொழிந்தவன் வெட்கப் பட்டானாம்!
இதைவிட நல்ல நிகழ்வு - அது தத்துவ ரீதியாக வேறு தேவையில்லை!
எனவே கோபத்தைத் தவிர்ப்பீர்! 1925இல் தந்தை பெரியார் ஆரம்பித்த பச்சை அட்டை குடிஅரசு தலையங்கத் தின் மேலே.
அனைத்துயிர் ஒன்று என்று எண்ணி என்று துவங்கும் கவிதை வரிகளில்,
‘சினத்தையும், தவிர்ப்பாகில் செய் தவம் வேறு உண்டா?’ என்று சுட்டிக் காட்டினார் வைக்கம் வீரர் பெரியார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக