பக்கங்கள்

சனி, 13 பிப்ரவரி, 2016

அலை அலையாய் மனிதநேய உதவிகள் - ஒரு சிறு நிகழ்வு



அமெரிக்காவிலிருந்து திருமதி அருள் - பாலு அவர்கள் அனுப்பிய ஒரு நெகிழ்வான நிகழ்வு, இணையத் தில் கிடைத்தது! படித்ததைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மனிதநேயம் உலகெங்கும் பீறிட்டுக் கிளம்ப வேண்டிய நேரத்தில் தானே கிளம்பவே செய்கிறது! உதவிகள் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் - குளத்தில் வீசிய கற்களால் அலை அலைகள் வருவதுபோல!
கடும் மழை, தொடர் வெள்ளம் - தேக்கம் - அவதி  - காரணமாக இன்னமும் துயர் நீங்கும் படலத்தை எட்ட முடியாத நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவிகள் - பல வகையிலும் பலவிடங்களிலிருந்து குவியவே செய்கின்றன. அதுபோல அமெரிக்காவில் நிகழ்ந்த ஒன்று, கருணை பொங்கும் மனிதநேய மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு பெண்மணி ATM-க்குச் சென்று பணம் எடுக்க தனது கார்டை இயந்திரத்திற்குள் நுழைக்கும்போது, அங்கே 500 டாலர் நோட்டுகள் அப்படியே இருப்பதைக் கண்ணுற்று அதை எடுத்துக் கொண்டு அந்த வங்கிக்குச் சென்று பொறுப்பாளர் ஆகிய வங்கி மேலாளரிடம் கூறி, 500 டாலரைத் திருப்பிக் கொடுத்தார். இது யாருடைய பணம் என்பதைக் கண்டறியுங்கள்; நான் இதை எடுத்துக் கொள்ளாமல் உரியவர்களிடம் நீங்கள் சேர்ப்பதற்கு உதவிட வேண்டு கிறேன் என்று கூறினார்!
அந்த நிர்வாகி அவரது எண்ணையும், பெயரையும் குறித்துக் கொண்டு அனுப்பி விட்டார். திடீரென்று அந்த வங்கியிலி ருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; மூன்று பேர்கள் பேசும் இணைப்பாக அது அமைந்தது!
அந்த 500 டாலருக்கு யார் உரிமையாளரோ அவரும் பேசினார். எடித் என்பது அவரது பெயர் என்றும், அவ ருக்கு 92 வயது என்றும், அந்த 500 டாலரை அவரது வீட்டு வாடகை தருவ தற்கு 480 டாலர் எடுத்துக் கொண்டு, எஞ்சியுள்ள 20 டாலரை, இதைத் திருப்பிக் கொடுத்த பெண்மணிக்கே ஒரு பரிசு போல தருவதாகவும் கூறினார் அந்த வயதான மூதாட்டி!
உடனே இவர் அதை மறுத்து, அவரது உணர்வுக்கு நன்றி தெரிவித்து விட்டார்; அதுபற்றியே நினைத்துக் கொண்டு வந்தவர் வங்கிமேலாளரிடம் கூறினார். அந்த 92 வயது மூதாட்டிக்கு அந்த மிச்சமுள்ள 20 டாலர்தான் எஞ்சிய மாத வீட்டுச் செலவுக்கு என்று அறிந்த நிலையில், தனது கணக்கிலிருந்து 200 டாலரைப் போட்டு அவருக்கு உதவிட எண்ணுவதாக அறிவித்தார்!!
இதைக் கேட்டு அந்த மேலாளர் அந்த மூதாட்டி கணக்கில் தானும் ஒரு 100 டால ரையும் போடுவதாகக் கூறி மகிழ்ந்தார்!
அதன் பின் அந்தவங்கி மேலாளரிட மிருந்து இவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு இந்த நன்கொடை 200 அளிக்கச் சொன்ன அம்மையாருக்கு வந்தது. அதை அங்கிருந்தவர்களிடம் கூறி மகிழ்ந்தாக குறிப்பிட்டார். அவர்கள் எல்லாம் தங்கள் பங் களிப்புக்காக மேலும் 300 டாலருக்குமேல் அளித்தனர்!!!
ஒருவர் செய்த உதவி அந்த 92 வயது மூதாட்டிக்கு தொடர் அலைமேல் அலையாக மிஞ்சிய 20 டாலரில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் (திண்டாடும்) நிலை மாறி, உண்மை யாக அவருக்கு இந்த மனிதநேய அலைஅலைபோல் பாய்ந்த காரணத் தால் கிறிஸ்துமஸ் Merry Christmas  மகிழ்ச்சி நிறைந்த விழாவாக ஆகி விட்டது என்று அந்த இணையச் செய்தி கூறியது!
வாடிய மனிதர்கள் - மகிழும் வண்ணம் உதவிட, நிச்சயம் தீவிர வாதம், கொலைகள் நடுவேயும், இதயத்தால் சிறந்து அன்பால், பண்பால் மனிதத்தை வெளிப்படுத்தும் உண்மை மனிதர்களுக்கு உலகத்தில் பஞ்சமே இல்லை என்பதும் உண்மை தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக