பக்கங்கள்

வியாழன், 14 ஜூன், 2018

சிங்கப்பூர் பற்றிய ஒரு சிறந்த தேன் கூடு இதோ!

கடந்த 68 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் மூத்த பத்திரிக்கையாளர் - மூத்த எழுத்தாளர் - இலக்கியவாதி - திரை கலைத்துறை விமர்சகர் 80 வயதினைத் தாண்டிய மதிப்பிற்குரிய அய்யா ஏ.பி.ராமன் அவர்கள்.

எல்லாப் பொது நிகழ்ச்சிகளின் அழைப்பை ஏற்று, பார்வையாளராக இருந்து, அது பற்றிய சுருக்கமான செய்தியையும் விருப்பு வெறுப்புக்கு இடந்தராமல் எழுதிடுவார் இணையத்தில்!

இவ்வளவு பரந்த அனுபவமும், சிறந்த ஞானமும் உடைய திரு. ஏ.பி.இராமன் அய்யா அவர்கள் 'சிங்கையில் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் எழுதிய நூலின் பிரதியை சிங்கப்பூர் கவிதா மாறன் மூலம் அனுப்பினார். நன்றியுடன் பெற்றோம்.

படித்தேன் - சுவைத்தேன் - இந்நூல் ஒரு கொம் புத்தேன் என ஆற்றொழுக்கான நடையில், எடுத்தவுடன் கீழே வைக்க இயலாது ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!

இந்நூலுக்கு இவருக்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் ஆவார்கள்.

சிங்கப்பூரின் அறிஞர்கள் திருவாளர்கள் கேசவ பாணி (தலைவர், சிங்கப்பூர் இந்தியர் சங்கம்), ஆர்.இராஜாராம் (தலைவர், சிங்கப்பூர் வளர் தமிழ் இலக்கியம்), அவ்விருவரின் முகவுரைகளும், சிங் கையில் தமிழ் மணம் என்ற தலைப்பில் சிறந்ததோர் பீடிகை உரையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (N.U.S.) - பின் சிம் (SIM) பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், முனைவர் சுப.திண்ணப்பன் அவரின் அரிய கட்டுரையும் இந்நூலுக்கு அணி சேர்த்து ஒளி வீசச் செய்கின்றன.

என்னுரை என்ற தலைப்பில் புத்தக ஆசிரியரின் மிக அருமையான கருத்தோட்டம் பளிச்'சிடுகிறது.

இது ஓர் ஆய்வு நூல் அல்ல. நானும் ஓர் ஆய்வாளன் அல்லன்.

சிறந்த ஆய்வாளர்களின் நூல்கள் பலவற்றைப் படித்த பின் எழுதப்பட்ட நூல் இது.

1950லிருந்து சிங்கப்பூரில் வளர்ந்து வாழும் என் நேரிடை வாழ்வனுபவங்களைப் பின்னிப் பிணைந்த  சம்பவங்களும், அதனை சுற்றிச் சூழும் விவரங் களும் இதன் பொருளடக்கம்.

ஒரு கிராமம் எப்படி உலகம் புகழும் நகரமாகி யது? ஆள் அரவமில்லாத சதுப்புக்காடு உலகத் தொழில்மயபூமியாக ஏன் விளங்குகிறது? இந்தியாவின் தென்கோடித் தமிழரும், அவர்களின் உயிர் மூச்சான தமிழும் சிறப்பாக இங்கே எப்படி விளங்க முடிகிறது? இதை விளக்க முயற்சிப்பது என் நோக்கம்.

இதுதான் ஒருவிதத்தில் என் ஆய்வுப் பொருளும் கூட!

தமிழின் ஊற்றகம் தமிழ் நாடு. அங்கே ஊறிய தமிழ்தான், தமிழன் வாழும் பூமியெல்லாம் பீறிட்டுப் பாய்ந்து ஓடுகிறது. அந்த வற்றாத நீர் ஊற்றிலிருந்து நனைந்து புறப்பட்ட தமிழ் இனம், இன்று தாம் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழைக் கொண்டு போய் சேர்க்கபடாத பாடுபடுகிறது.

சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்த வரலாறு சுவையானது. சீனர், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த மெ ழி தமிழ்! இது, மற்ற பெரும்பான்மையினர் மனமுவந்து நமக்குத் தந்த மிகப் பெரிய சலுகையும்கூட.

இன்று நாம் தமிழைப் போற்றுகிறோம். தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கிறோம். அதிகாரத்துவ மொழியாக விளங்கும் தமிழை, அடுத்த தலை முறையினருக்கும் உரிமையாக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். அதற்கு நமக்கு இன்று முன்னின்று உதவுவது நம் அரசாங்கம்!

- இவ்வாறு சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பாதுகாப்புக்கும் பெரிதும் அரசு துணை நிற்கிறது! தூண்டுகோலாக இருந்து துணை புரிந் துள்ளது.

நவீன சிங்கப்பூரின் தந்தையாக போற்றப்படும் மேனாள் பிரதமர் மதியுரை மந்திரி (Mentor Minister) ஆக நீண்டகாலமிருந்து வழிகாட்டி இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களையும் உற்பத்தி செய்து சிங்கப்பூர் ஒரு உலக மய்யம் எல்லாவற்றிற்கும் என்ற நற்பெயர் ஈட்டியுள்ள சிங்கப்பூர் வளர்ச்சி அபாரமான ஒன்று என்பது உலகம் அறிந்ததோடு, பாராட்டி, அதனைப் பின் பற்றவும் முயலுகின்றன.

லீக் குவான்யூ (Lee Kuan Yew) அவர்கள் 70 விழுக் காட்டிற்கு மேற்பட்டோரின் சீன மொழியையும் தேசிய மொழி - ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று பலரும் யோசனை கூறியதோடு பெரும் அழுத்தத்தையும் தந் தனர். லீக்குவான்யூ அவர்கள் அதற்கு இணங்காமல் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வணக்கம் ஆரம் பித்து ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, வானொலி எல்லாவற்றிலும் 4 மொழிகளில் வணக்கம் கூறிடும் நிலை அங்கே உண்டு.



நாடாளுமன்றத்தில் 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் (Simultaneous Translation) மொழி பெயர்ப்பு வசதிகளைச் செய்து தந்துள்ளனர்.

லீக் குவான்யூ அவர்கள் தான் எழுதிய "இரு மொழிக் கொள்கைகள்" பற்றிய நூலில்,

சீன மொழி பேசுவோர் பெரும்பான்மை என்பதால் அதை ஆட்சி மொழியாக்கிட பலரும் சொன்ன யோசனையை நான் ஏற்கவில்லை; காரணம் பெரும்பான்மை - சிறுபான்மை பிரச் சினை வந்துவிடும்.

ஆங்கிலம் ஆட்சி மொழியானால், அதனால் ஏற்படும் வசதிக்குறைவு, மற்ற அத்தனை மொழி பேசுவோருக்கும் சம ஈவு அளவில் பிரித்துக் கொடுக்கப்படும் வாய்ப்பு உண்டாகுமே என்ற தொலைநோக்குடன் எழுதியுள்ளார்!

தமிழர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதம்தான் என்றாலும், 70 சதவிகித சீனர்களுடன் சமஉரிமை யைப் பெற்று பிரச்சினைக்கு இடமன்றி வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.

சிங்கப்பூர் பற்றி 19 தலைப்புகளில் அரிய தகவல் களஞ்சியமாக, ஆவணமாக பதிவு ஆகி உள்ளது. நவில்தோறும் நூல் நயம் - பயில்தொறும் பண் புடையாளரால் எழுதப்பட்டுள்ளது!

ஆய்வு நூல் அல்ல என்பது ஓரளவு உண்மை தான் - அத்தகுதி இதில் உள்ளது? அதேநேரத்தில் ஒரு "சாய்வு நூலும்" அல்ல?

- விடுதலை நாளேடு, 13.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக